Tuesday, 7 April 2015

காணாமல் போன 5

காணாமல் போன

 இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
 டாக்டர்.ராமச்சந்திர குஹா
 தமிழில்: செ.நடேசன்
 முன்னாள் பொதுச்செயலாளர்
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
                                                                ஐந்து
    2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒருதிருப்புமுனையாக அமைந்ததைச் சற்று கவனிக்க முடிந்தது. இப்போது முதன்முறையாக பி.ஜே.பி. மாநிலசட்டமன்றங்களில் காங்கிரசைவிட அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 2014மேமுதல் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் பெரும்பானமைபலத்தைக் கொண்டுள்ளது. வெகுவிரைவில் அதன் கூட்டணிக்கட்சிகளின் உதவியோடு மாநிலங்களவையிலும் பெரும் பான்மைபலத்தைப் பெற்றுவிடும் என்று தெரிகிறது.

  பி.ஜே.பி.யின் ஆதிக்கம் இடைப்பட்ட காலத்திலும் தொடரும் என்று கூறலாம். அதன் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றது. அப்போதுமுதல் பலமாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டிருக்கிறது. தற்போதைய தலைமையின்கீழ் அந்தக்கட்சி மீண்டுவருவது இயலாததாகவே தெரிகிறது. நேரு. குடுமபத்தின் அதிகாரத்தின்கீழ் இருந்துபழக்கப்பட்டுவிட்ட கட்சிஉறுப்பினர்கள் நேரு-காந்திகளை தூக்கியெறிந்துவிடுவார்கள் என்பதை அடுத்தநிலையில் உள்ள காங்கிரஸகாரர்கள்கூட விரும்ப வில்லை என்று தெரிகிறது. ஒருகாலத்தில் இங்கிலாந்தில்  ஆதிக்கம் செலுத்திய அரசியல் கட்சியான லிபரல்கட்சி தேசத்தின் அரசியல்நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க பங்காற்ற இயலாத அளவுக்குப் பலம்குறைந்து விளங்குகிறது. காங்கிரஸும் அந்த வழியில் செல்லக்கூடும்.

   காங்கிரஸின்நிலை கொடுமையானது : கவலையளிக்க்கூடியது என்றால் கம்யூனிஸ்ட்களின் நிலையோ பேரிழப்பாக உள்ளது.சமீபகாலங்களில் குறிப்பிடத்தக்கவகையில் இருந்த இருபெரிய மாநிலங்களான மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்டார்கள். இருந்தபோதிலும், கேரளாவில் இன்றும் அவர்கள் ஒருசக்தியாக விளங்குகிறார்கள். மேற்குவங்கத்தில் அவர்களது செல்வாக்கு குறைந்துவருகிறது. கம்யூனிஸ்ட்கள் முன்பு  தொழில்நகரங்களான மும்பை, கான்பூர் போன்றவற்றில் பலத்துடன்இருந்தார்கள். இப்போது அந்த செல்வாக்கு மங்கிமறைந்துவிட்டது.

   ஒருகாலத்தில் இந்தியாவில் வடக்கிலும், கிழக்கிலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த சோசலிஸ்ட்கட்சிகளின் அரசியல் எதிர்காலச் சித்திரமும் வண்ணமிழந்து காணப்படுகிறது. லோகியா, மற்றும் நாராயண் கொள்கைகளால் தூண்டுதல்பெற்ற அந்தக்கட்சிகள், இப்போது  தனிமனிதர் அல்லது குடும்பப்பேராசைகளைச் சுமந்துசெல்லும் வாகனங்களாகிவிட்டன பீகாரிலும், உத்திரப்பிரதேசத்திலும் இப்போதுஅவர்கள் ஆட்சியிலிருந்தாலும் இந்தஜனதாபரிவார சோசலிஸ்ட் கட்சிகள் இந்தமாநிலங்களில் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிகக்குறைவாகவே வெற்றிபெற்றுள்ளன. அடுத்துநடைபெறும் சட்டமன்றத்தேர்தல்களில் அதிகாரத்தைத்தக்க வைத்துக்கொள்ள அவர்கள் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும்.

  எனவே, இந்தியாவின் அரசியல்தளத்தில் மாற்றங்கள் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்தவை. நடுஇடதுசாரிகள்-இடதுசாரிகள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். வலதுசாரிகளோ முடிசூடிக் கொண்டிருக்கிறார்கள். இதுஇன்னும்சிறிதுகாலம் தொடரலாம். எப்படியிருந்தாலும், பி.ஜே.பி.யின் எழுச்சி என்பது வலதுசாரி அறிவுஜீவிகளின் அறிவார்ந்த தொடர்ஆய்வுகளின்மூலம் நடைபெற வேண்டிய அரசியல் வண்ணப்பூச்சுக்களோடு சேர்ந்து வளர்ந்ததல்ல.

   அறிவாளிகளின் இயற்கைச்சூழல் ஆதரவில்லாமல் ஒருவலதுசாரிப்பிரிவு அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நவீனகால வரலாற்றில் அறியப்படாத நிகழ்வு அல்ல. இது பரவிவருகிறது. எடுத்துக்காட்டாக சிலநாடுகளில் – போரில் சிக்கியிருந்த ஐரோப்பாவிலும், போருக்குப் பிந்தைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் , மிக அண்மைக்காலத்தில் இலங்கையில் பத்து ஆண்டுகள் நீடித்த மகிந்த ராஜபட்சே ஆட்சியும் உள்ளன.

   இந்தியர்களில் சிலர் நமதுநாடு அர்ஜெண்டைனாவின் ஜுவான் பேரோன் அல்லது இலங்கையின் ராஜபட்சே வழியில் செல்லவேண்டும் என்று விரும்பலாம். இவ்வாறு அடிக்கடி தெரிவிக்கப்படும் விருப்பங்கள் ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சி அல்லது அமெரிக்காவின் குடியரசுக்கட்சியைப்போல, பி.ஜே.பி. என்ற இந்தப் பழமைவாதக்கட்சியை, மாறுதலை விரும்பாமல் பழமைக்குத் திரும்பும் பிற்போக்குக்கட்சியாக ஆகாமல் கொஞ்சம் விலக்கிவைக்க வேண்டும் என்ற நப்பாசையால்தான். பி.ஜே.பி.யை இவ்வாறு சாந்தப்படுத்துவது நிகழவேண்டுமானால் மேற்கு நாடுகளில் இதேபோன்ற கட்சிகளில் உள்ளதைப்போல்  பி.ஜே.பி.யும் ஆழ்ந்த சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும் கண்டறிந்து அவர்களைத் தனது வலதுபக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  இதுஎவ்வாறு நிகழும்? பழமைவாதஅறிவுஜீவிகள் இத்தகைய மறுமலர்ச்சியின் முன் நிபந்தனையாக இந்த நாட்டின் தன்மைப்பன்மையை, (First Person- Plural) நாங்கள் என்பதை மதம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக்க்கொண்டு கட்டமைக்கக்கூடாது. இந்தியச்சூழலுக்கு ஏற்றவாறு ஸ்கர்ட்டனின் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு ‘மத அடிப்படையிலான “ நாங்கள்  என்பதற்குபதிலாக தேசிய அளவிலான “நாங்கள்என்பதைப் பழமைவாத அறிவுஜீவிகள் அங்கீகரிக்க வேண்டும். தாங்கள் விரும்பும் கடவுள் அல்லது கடவுள்களை வணங்குவதற்கும், இதில் அவர்கள் மாறுபட்டிருப்பதற்ம்  இந்துக்கள் அல்லாத மற்றவர்கள் உரிமை படைத்தவர்கள் என்பதை இந்துக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.   முஸ்லீம்கள். கிறிஸ்தவர்கள் அதுபோலவே சைவர்கள், நாத்திகர்கள் ஆகியோர் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளாமலேயே அல்லது ‘இந்து’, ’இந்துயிஸம்,இந்துத்துவாவின் முதன்மைத் தன்மையை அங்கீகரிக்காமலேயே முழு இந்தியக்குடியுரிமை பெறச் சமஉரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இத்தகைய மதம்சாராத பழமைவாதத்தின் வளர்ச்சிக்குப் பெரும்தடையாக இருப்பது அரசியல் தளத்தில் பி.ஜே.பி.யின் மீது ஆர்.எஸ்.எஸ்.பெற்றுள்ள மகத்தான செல்வாக்குதான். இந்தஅமைப்போ எப்போதும் இந்துக்கள் அல்லாதவர்கள்மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.-ன் கருத்தியலை முன்வைத்து இந்தப்பரிவாரங்களின் சர்சங் சாலக்–தலைவராக 1940முதல் 1973வரை இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், “முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகிய மூன்றுகுழுவினரின் ‘பாரதமாதா விசுவாசம்  சந்தேகத்துக்குரியது என்று தொடர்ந்துசொன்னவர். 1949-ல் டெல்லியில் தனதுபேச்சில், ‘இந்துஸ்தானத்தில் உள்ள முஸ்லீம்களை இந்த பூமியில் உள்ள எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்என்றார். 9ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எதைஎதை நாம் நம்புகிறோமோ அவை அனைத்துக்கும் முஸ்லீம்கள் எதிராக உள்ளார்கள். நாம் கோவிலில் வழிபட்டால் அதை அவர்கள் இடிக்கிறார்கள். நாம் பசுவை வழிபட்டால் அதை அவன் உண்ணுகிறான். நாம் பெண்ணைப் புனிதமான தாய்மையின் அடையாளம் என்று போற்றினால் அவன் அவளைக் கற்பழிக்கிறான். மதம், கலாச்சாரம்,சமூகம் முதலான நமது வாழ்வியல்முறைகளின் எல்லா அம்சங்களிலும் தலைமுதல் கால்வரை எதிர்க்கிறான். அவன் இந்தப்பகைமை உணர்வை மிகவும் மையமாக உள்வாங்கியிருக்கிறான்என்று விஷம் கக்கினார்.

   சங் பிரச்சாரகராக இருந்து அழுகிப்போனவரான டி.ஆர்.கோயல் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஒருபுத்தகத்தில் சங் அமைப்பின் கொள்கைகளை மிக அழகாகத் தொகுத்திருக்கிறார்:
  “நினைவுக்குவராத காலங்களிலிருந்தே இந்துக்கள் இந்தியாவில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இங்குள்ள கலாச்சாரங்கள், நாகரிகங்கள், வாழ்வு எல்லாமே அவர்கள் மட்டுமே உருவாக்கியவை. எனவே இந்துக்கள்தான் இந்த தேசம். இந்துக்கள் அல்லாதவர்கள் படையெடுப்பாளர்கள் அல்லது விருந்தினர்கள். அவர்கள் இந்துமரபுகள், கலாச்சாரம் முதலானவற்றை ஏற்றுக்கொள்ளாதவரை அவர்களைச் சமமாகக் கருதமுடியாது. இந்தியாவின் வரலாறு என்பது தங்கள் மதம் மற்றும் கலாச்சாரங்களின்மீது இந்த அன்னியர்கள் தொடுத்த கடும்தாக்குதல்களிலிருந்து காக்கவும், போற்றவும் இந்துக்கள் நடத்திய போராட்டங்களின் வரலாறு ஆகும். இந்த ஆபத்து இன்னும் தொடர்கிறது. ஏனெனில் இந்த நாட்டை இந்துதேசம் என்று நம்பாதவர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருக்கிறது. இவர்கள் தேசிய ஒற்றுமை என்பது இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற சுயநலத்தில் இவ்வாறு பேசுகிறார்கள். அவர்கள் துரோகிகள். இந்துக்களின் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும்தான் இந்த நேரத்தின் அத்தியாவசியமானதேவை. ஏனெனில், எல்லாதிசைகளிலும் எதிரிகள் இந்துக்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, இந்துக்கள் மாபெரும் எதிர்த்தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆற்றலைப்பெற வேண்டும். தாக்குவதுதான் நல்ல பாதுகாப்பு. இந்துக்கள் அனுபவிக்கும் எல்லாச் சிரமங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம்மிடம் ஒற்றுமை இல்லாததுதான். அந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கான தெய்வீகப்பணிக்காகப் பிறந்ததுதான் ‘சங்’.

   1999-ல் இதை எழுதியபோது கோயல், “முரண்பாடுகள் பற்றிய அச்சம் ஏதுமில்லாமல் கடந்த 74 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சாகாக்களில் இதைத்தான் சொல்லிவந்திருக்கிறோம். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை”  என்றார். கடந்த 15 ஆண்டுகளிலும் சாகாக்களில் இதற்குமேல் ஒன்றும் சொல்லப்படவில்லை. அர்.எஸ்.எஸ்-ன் இப்போதைய சர்சங் சாலக்= தலைவர் ‘இந்தியா ஒரு இந்துராஷ்ட்ரம்என்ற அறிக்கையில், “இந்துக்கள் அல்லாதவர்கள் தங்களுடைய மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அல்லது இந்துக்களாக மதம் மாறிவிடுவது அதைவிட நல்லதுஎன்று கூறியுள்ளார். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் பற்றிய கோயலின் சுருக்கமான தொகுப்பு இன்றும் மாறாமல் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுகிறது

      இங்கு விரிந்தபார்வைகொண்ட பழமைவாத அறிவுஜீவிகள்முன் கடுமையான ஆனால் மிகவும் தேவையான கடமை ஒன்று உள்ளது. அது ஆர்.எஸ்.எஸ்.கொள்கைகளிலிருந்து தங்கள் சிந்தனைகளை விடுவித்துகொள்வது. ஏனெனில் சங் மற்றும் அதன் கருத்தாளர்கள் முன்வைப்பது பழமைவாத்த்தை அல்ல. ஆழ்ந்த வெறுப்புணர்வையும், பிற்போக்குத் தனத்தையுமே.
   முஸ்லீம்களுக்கும் ,பிறமத சிறுபான்மையினருக்கும் சம்மான குடியுரிமை அளிக்க ‘கலப்புக் கலாச்சாரம் என்ற சிந்தனையை ஒருவர் விலக்கிக்கொள்ள வேண்டியதில்லை.. ‘Ganga –Jamni tezeep. என்று உச்சரிப்பவர்கள் நம்புவதுபோல் எங்கும், எப்போதும் கலப்பற்ற சுத்தமான கடந்தகாலம் இருந்ததில்லை. 1947-க்குமுன் இந்து – முஸ்லீம் உறவுகள் சில இடங்களில் சிக்கலானதாகவும், சிலஇடங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகவும்.பல நேரங்களில் சமாதானமானதாகவும், சிலகாலகட்டங்களில் கசப்பானதாகவும், முரண்பாடுகளைக் கொண்டதாகவும்தான் இருந்திருக்கின்றன.

   1947-ல் பாகிஸ்தான் ஒரு முஸ்லீம்தாய்நாடாக அமைக்கப்பட்டபிறகு, இந்தியா தனது அரசியல்முறை ஒற்றைமதத்தை அடிப்படையாக்கொண்டதாக அமைவதைத் தேர்ந்தெடுக்க வில்லை. இந்தியாஒரு‘இந்துபாகிஸ்தானாகஇருக்கப்போவதில்லை என்பதால், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் மற்றமதச்சிறுபான்மையினரும் குடிமக்களாவதற்குச் சமஉரிமை பெற்றார்கள். 1947 அக்டோபரில் ஜவஹர்லால் நேரு, “நாம் இங்கு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம் சிறுபான்மையினரைக் கொண்டுள்ளோம்.அவர்கள் விரும்பினாலும்கூட அவர்களால் வேறு எங்கும் செல்லமுடியாது. இதுதான் அடிப்படை உண்மை என்பதால் இதன்மீது எந்த விவாதமும் இருக்கக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்கள்மீது எத்தகைய எரிச்சலூட்டும் நடவடிக்கைகளும், அவமதிப்புக்களும் தூண்டிவிடப்பட்டாலும் நாம்இங்கு முஸ்லீம் சிறுபான்மையினரை நாகரிகமாக நடத்தவேண்டும். நாம் அவர்களுக்குப் பாதுகாப்பும், ஒருஜனநாயக நாட்டில் உள்ளதுபோல் குடியுரிமையையும் கட்டாயம் அளிக்கவேண்டும்.எனக் குறிப்பிட்டுக்கூறினார்.

   நேருவின் தீர்வு –அதில் தவிர்க்க முடியாமல் இரண்டு அர்த்தங்கள் இருந்தாலும் – மிகவும் சரியானது. இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 20கோடி முஸ்லீம்கள் உள்ளார்கள். அதுபோலவே, 7 கோடிப்பேர் இந்துமதம் அல்லாத பிற நம்பிக்கை கொண்டவர்களும் இங்கு இருக்கிறார்கள்.கோல்வால்கர் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அவர்களை இரண்டாம் தரக்குடிமக்களாக – மத்தியகால முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் தலைகுனிந்து  நிற்கவைக்கப்பட்டதுபோல் – நடத்த விரும்புகிறது. இந்த அமைப்பு இன்னும் பிரிவினை காலக்கசப்புக்களைத் தன்னுள் கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் ஒலிக்கும் வலதுசாரிக் குரல்களிலிருந்து காணமுடிகிறது.  அவர்களது சிந்தனைகளை நடைமுறை யதார்த்தங்களோடு இணைக்கப் பழமைவாத அறிவுஜீவிகள் முன்வரவேண்டும். அதற்குமாறாக, அரசியல் விவாதங்களை முந்தைய காலங்களுக்கோ, நூற்றாண்டுகளுக்கோ மீண்டும் கொண்டுசெல்லக்கூடாது. இந்தியக்குடியரசில் மக்கள் மதம், மொழி, இனங்களில் வேறுபட்டி ருப்பதை மாற்றமுடியாது. முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் நாட்டின்மீதான தங்கள் விசுவாசத்தைக் காலமுறை உறுதியேற்புகள்மூலம் உறுதிப்படுத்தவேண்டும் என்று கேட்பதன்மூலம் அமுக்கிவிட முடியாது.

   வெள்ளை ஆங்கிலேயரான ஸ்கர்ட்டனையும், ஆங்கில மனோபாவம்கொண்ட இந்தியரான நேருவையும் போற்றுவதை வலதுசாரியில் உள்ள நாட்டுப்பற்றாளர்கள் அவமதிப்பாக உணரக்கூடும். எனவே அவர்களுக்கு ஓர் உள்ளுர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம். இந்தியப் பழமைவாதிகள் இந்தியவரலாற்றுக்குள்ளேயே ஒருமுன்மாதிரி தேவை என்று கருதினால், அவர்கள் சி.ராஜகோபாலாச்சாரியைப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தெற்குப்பகுதித் தளபதியாக இருந்த ‘ராஜாஜிசுதந்திர இந்தியாவில் மேற்கு வங்க ஆளுநர், கவர்னர் ஜெனரல், உள்துறை அமைச்சர், சென்னை மாகாண முதல்வர் எனப்பல அரசியல் பதவிகளை வகித்தவர். நேருவின் சோசலிசக்கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸைவிட்டு வெளியேறியவர். 1959-ல் ‘சுதந்திராஎன்ற தனது சொந்தக்கட்சியைத் துவக்கியவர். அது பொருளாதாரத்தின்மீது  அரசின் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் குறைக்க வேண்டும் என்பதையும், பிற சமூகப்பிரச்சனைகளையும் வலியுறுத்தியது.

   ராஜாஜி நேருவின்அரசை “லைசென்ஸ், பர்மிட், கோட்டா  ராஜ்என்று சித்தரித்தார். 1959-ல் ஒரு கட்டுரையில், ‘தற்போதைய வளர்ச்சித்திட்டக் கொள்கைகளில் ஒரு பைத்தியக்காரத்தனம் ஊடுருவியிருக்கிறதுஎன்று கடுமையாகத் தாக்கினார். “இப்போது இந்தியாவுக்குத் தேவை மிகப்பெரிய திட்டங்கள் அல்ல. பயன்தரக்கூடிய, பலனளிக்கும் திட்டங்களே. பெரிய அணைகளைக்கட்டுவது நல்லதுதான். ஆனால், அதைவிட முக்கியம் ஆயிரக்கணக்கான சிறிய திட்டங்கள். அவைகளை உள்ளூர் மக்களே உற்சாகத்தோடு செய்துமுடிப்பார்கள். ஏனெனில் அது நேரடியாகவும், விரைவாகவும் அவர்கள் வாழ்வை உயர்த்தும்.என்றார். மேலும் பொதுவாகப் பேசும்போது ‘பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் அளவுக்கு அரசின் பங்கு இருந்தால் போதும். தனி நபர்களையும், நிறுவனங்களையும் அதில் பங்கேற்கச் செய்யவேண்டும்என்றார்.

  ராஜ்ஜியின் பொருளாதரக்கொள்கைகள் காலத்துக்குப் பொருந்தாதவைஎன்றார் நேரு. அதை நிராகரித்தார். ஆனால், அவைதான் வருங்காலத்தின் போக்குகளாக எதிர்பார்க்கப்பட்டன. இதுஒரு காங்கிரஸ் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர் ‘பெர்மிட் ராஜ்–ன் சில அம்சங்களை அகற்றினார். ஆனால் அது சுதந்திரச் சந்தையாளர்களின் நம்பிக்கைக்கேற்றவாறு அமையவில்லை. ராஜாஜியின் சிந்தனைகள் பெருமளவில் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டன. அவரது மற்ற சமூக சிந்தனைகள் மீட்டெடுக்கப்படவும், புதுப்பிக்கப்படவும் காத்திருக்கின்றன. அவர் ஆழமான மதஉணர்வுகொண்ட மனிதர். இராமாயணம், மஹாபாரதம் பற்றிப் புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். 1962-ல் “ நாம் விரும்பும் இந்தியா The India We Want”என்ற கட்டுரையில் “அரசு தனது எல்லைகளையும், செயல்பாடுகளையும் அடக்கத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். மக்களும் தங்களுக்குள்ளிருக்கும் உள்ளார்ந்த மரபுகளால் உணர்வுபூர்வமாக அதை நிறைவேற்ற வேண்டும்என்றார்.

  ராஜாஜி தனது சொந்த சாதி, மற்றும் நம்பிக்கைகளுக்கும் அப்பால் பார்க்க்க்கூடியவர். தீண்டாமைக்கெதிரான இயக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரவளித்த காந்தியின் சீடர் அவர் ஒருவர் மட்டுமே. தான் ஒரு ஐயங்கார் பிராமணராக இருந்தபோதிலும், 1924-ல் புகழ்பெற்ற ‘பஞ்சமர் வழக்கில்–அப்போது சென்னையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள் – வாதாடினார். அவர் ஒருகோவிலுக்கு வழிபடச்சென்றபோது கோவில் பூசாரிகளால் ‘புனிதமான இடத்தைத் தீட்டாக்கிவிட்டதாககூறி  சாதியிலிருந்து நீக்கிவைக்கப்பட்டார்.

   ராஜாஜி ‘மதங்களுக்கிடையிலான ஒற்றுமைஎன்ற காந்தியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர். 1947 செப்டம்பரில் அவர் மேற்குவங்க ஆளுநராக இருந்தபோது கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு ராஜாஜி அனுப்பிய ஒருகுறிப்பில் இந்தியா முழுவதும் பரவிவருகிற மதவெறியைப்பற்றி எச்சரித்தார்.1948-ல் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது ராஜாஜி:
  “ காந்தியின் காயங்களிலிருந்து வழிந்த இரத்தமும், அவரது மறைவைக்கேட்டு எல்லா இடங்களிலும் பெண்களின் கண்களில் பெருகிய கண்ணீரும் 1947-ன் சாபத்தைக் கழுவட்டும். அந்த ஆண்டின் கொடூரமான அந்தத்துயரச்சம்பவம், இன்றைய உணர்வுகளுக்கு வண்ணம் பூசாமல், வரலாற்றில் தூங்கட்டும்

    தனது குருவைப்போலவே ராஜாஜியும் இன்றைய அரசியல்சிந்தனைகளால் எளிதில் முத்திரை குத்தப்படமுடியாதவர்.  ‘லிபரலா?’, ’பழமைவாதியா?’, ‘சோசலிஸ்ட்டா? இதில் ஏதேனும் ஒன்றைத்தேர்வு செய்துதானாக வேண்டும் என்றால் ஒருவர் அவரைப் ‘பழமைவாதி’ (சிறிய எழுத்துக்களில்) என்று கூறலாம்.ஆனால் அவர் ஒருதனிவிதமான ப்ழமைவாதி. அவரை நன்கு அறிந்த ஆஸ்திரேலிய ராஜதந்திரியான வால்டர் குரூக்கர் அவரது ஆளுமைபற்றிய ஒருசிறுகுறிப்பில் தெரிவித்தார்:

  விதிவிலக்காக போலித்தனமில்லாத, ஒளிவுமறைவற்ற மிகவலிமையான விரைந்துமுடிவெ டுக்கும் அபூர்வ சிந்தனைமனமும் இணக்கமான உணர்வும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் கொண்டவர் அவர்.  அவரது இயல்பில் தற்பெருமை என்பதே இல்லை. இந்தியமரபுகளின்மீது அவர் பற்றுக்கொண்டிருந்தார். அதேவேளையில் மேற்கு உலகின் பாங்கையும் அறிந்தவர் அவர். பைபிள், பிளேட்டோ, ஆங்கில இதிகாசங்கள், அதுபோலவே சட்டம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் பொருளாதார வளர்ச்சிப்போக்குகள் பற்றி அறிந்தி ருந்தார். அவர் மதவாதியாகவும், பழமைவாதியாகவும் இருந்தாலும் அவர் எதையும் அனுசரிப்பவர் அல்ல. உண்மையான ப்ழமைவாதியின் குணங்களோடு ‘மனிதனால் உருவாக்கப்பட்டவை மனித இயல்புக்கும், தனிப்பட்ட அமைப்புக்கும் எத்தகைய கேடுகளை விளைவிக்கும்?என்பதைஅறிந்தவர்.இதைசோசலிஸ்ட்கள்சிலசமயங்களில் புள்ளிவிபரங்களோடு அணுகியிருக்கிறார்கள். அவரிடம் நகைச்சுவை உணர்வும் உண்டு- அது வாழ்வைப்புதுப்பிக்கும் அற்புதமான கொடை

   நேருவின் வாழ்வின் கடைசி மாதங்களில் ராஜாஜியின் சுதந்திரமான சிந்தனைமனம் தெரியவந்தது. 1962 சீனப்போருக்குப்பிறகு ‘இந்தியா பதட்டமான இரண்டு எல்லைப்பகுதிகளில் ஒரேநேரத்தில்போரிடமுடியாதுஎன்பதை நேரு உணர்ந்தார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், காஷ்மீர் பிரச்சனைக்குத்தீர்வு காணும் முயற்சியாக பாகிஸ்தானுடன் ஒருகௌரவமான உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ள 1964 ஏப்ரலில் காஷ்மீரின் புகழ்பெற்ற தலைவர் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்தார். அவர் சில்லறைக்குற்றங்களின்பேரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.

   இந்த நடவடிக்கையை ஜனசங்கம் மிகவும் கசப்புடன் கண்டனம் செய்தது. ஆனால் ராஜாஜி இதை ஆதரித்தார். அப்துல்லாவை விடுதலை செய்வது காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதற்கான மனித உரிமையை வழங்க ஒருமுன்னுரையாக அமையும் என ராஜாஜி வாதிட்டார். 1964-ல் வார்த்தைகளில் எழுதியது 2015-ல் உண்மை என்று ஒலிக்கிறது. ராஜாஜி இதன்தேவைபற்றி எழுதினார்: “இபோதைய பிரச்சனையின் அடிப்படையை மீண்டும் சிந்திக்க முயற்சியுங்கள். பாகிஸ்தானுக்கு எதிரான குழுவினரின் பைத்தியக்கார உணர்வுகளுக்கு நாம் இடம்தர வேண்டுமா? இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், ஒருவரை எதிர்த்து ஒருவர் ஆயுதங்களைக் கடன்வாங்கிக்குவிப்பதும் ஏதாவது நம்பிக்கையைஏற்படுத்துகிறதா? நமது இரண்டுவீடுகளையும்  அன்னிய உதவ்களைப்பெற்று  மணலில் கட்டுவது  எதிர்காலக் குருஷேத்திரத்திற்கா? இப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நாம் நம்மையே அழித்துக்கொள்வோம். இந்த ஆயுதப்போரைப் பழைய வக்கிரங்கள், அச்சங்கள், சந்தேகங்களை அடிப்படையாகக்கொண்டு தொடராமல், நம் எதிர்காலத்திலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை கொள்வோம்
   மறக்கப்பட்டுவிட்ட  ராஜாஜியின் இந்த அன்புமுயற்சி அவரது அறிவுக்கூர்மைக்கும், தைரியத்துக்கும் உறுதியான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  மிகப்பெரிய இந்திய – பாகிஸ்தான் சிக்கலைத் தீர்ப்பதற்குக் குறுக்கே ஜனசங்கத்தையும், காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதியையும் கௌவிப்பிடித்துள்ள துரதிர்ஷ்டமான வெறியுணர்வு டெல்லியில் நிலவுகிறது. நேருவின் பொருளாதாரக்கொள்கைகளை எதிர்த்தபோதிலும், மிகமிக முக்கியமான தேசியப்பிரச்சனையில் அவரோடு ஒன்றாகச் சேர்ந்து நின்றார். ‘இந்தியா பாகிஸ்தான் பொறாமை உணர்வைக் குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒப்பிடும்போது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை மிகவும் சிறிய பிரச்சனை. ‘காஷ்மீர் போகட்டும்என்று விட்டுவிட்டால் அது எல்லா இடங்களிலும் பிரிவினையை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பது ஆதாரமற்றதுஎன்று ராஜாஜி பார்த்தார்.

   டெல்லியில் நேருவைச் சந்தித்தபின் அப்துல்லா ராஜாஜியைச் சந்திக்கச் சென்னை வந்தார். அந்த காஷ்மீர் தலைவரிடம், “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கட்டும். ஆசாத் காஷ்மீர் பாகிஸ்தானிடம் இருக்கட்டும். இரண்டையும் இணைக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஐ.நா.வின் உதவியோடு இரண்டு நாடுகளின் நிர்வாகத்தில் இருக்கட்டும்”  என்ற ஒரு முன்மொழிவை அளித்தார்.  ‘ராஜாஜி பார்முலாஎன்ற அந்தத்திட்டத்தை ஷேக் அப்துல்லா நேருவிடம் எடுத்துச் சென்றார். அவரது ஒப்புதலைப் பெற்றபின் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்திக்க எல்லைக்கு அப்பால் சென்றார். அந்த விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே நேரு இறந்துவிட்டார். அவருடன் காஷ்மீர் பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வும் மரணித்துவிட்ட்து.

  காஷ்மீர் மீதான ராஜாஜியின் நிலை இந்தியாவுக்கான அவரது பார்வையின் அடையாளமாக இருந்தது. எம்.எஸ்.கோல்வால்கர் போன்றவர்கள் கொண்டிருந்த மதவெறிக் கசப்புப் பார்வையைவிட விரிந்துபரந்த பார்வையாக இருந்தது. 1968-ல் சுதந்திரா கட்சியை உருவாக்கிய 10 ஆண்டுகளுக்குப்பின் அவர் குறிப்பிட்டார்: ஜனசங்கத்தில் ஓரிரு நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தேவை சகிப்புத்தன்மை அல்ல. பரந்த மனப்பான்மை. முசல்மான்களையும், கிறிஸ்தவர்களையும், பார்ஸிகளையும் மற்ற பிறரையும் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும்  இந்துக்களைப்போலவே கருதும் பரந்த மனப்பான்மை வேண்டும்.

  அரைநூற்றாண்டுக்குப்பிறகும் ஜனசங்கத்தின் இன்றைய வடிவமான பி.ஜே.பி.யும் அதனுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ம் ராஜாஜி நம்பிக்கையோடு எதிர்பார்த்த பரந்த மனப்பான்மையைப் பெறமுடியவில்லை. சங்பரிவாரங்களின் இயல்புநிலைக்கு வெளியே நம்பத்தகுந்த இந்தியாவின் பழமைவாத அறிவுஜீவிகள் மரபு அது உருவாகவேண்டும் – லிபரல்கள், சோசலிஸ்ட்களைக் குறிவைப்பதற்குப்பதிலாக எச்சரிகையோடும், மனச்சாட்சியோடும் இப்போது ஆட்டிப்படைக்கும் பிற்போக்காளர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும். இல்லாவிட்டால் முடிவு தவிர்க்க முடியாதது.  இந்தியா, 1920-களின் இத்தாலியைப்போலவோ, 1950-களின் அர்ஜெண்டைனாவைப்போலவோ அதன்வழியில் சென்று, வலதுசாரிக்கட்சியால் அரசியல் ஆளப்படுவதும், அதன் தலைவராக வலதுசாரிக் கும்பல் தலைவன் தேர்வுபெறுவதும் – பொதுவிவகாரங்கள் அறிஞர்களாலும், சிந்தனையாளர்களாலும் முடிவு செய்யப்படாமல் குண்டர்களாலும், அவர்களின் வெறுப்புணர்வுகளாலும் தீமானிக்கப்படுவதும் நடக்கும்.

நன்றி: பகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர். ராமச்சந்திர குஹா அவர்கள்
      அரசியல் மற்றும் கலாச்சார ஆங்கில மாத இதழ் ‘தி கேரவன்’ 2015 மார்ச்     
   .      


காணாமல் போன 4

 காணாமல் போன
 இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
  டாக்டர்.ராமச்சந்திர குஹா
  தமிழில்: செ.நடேசன்
  முன்னாள் பொதுச்செயலாளர்
  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

                                                               நான்கு

   இப்போது கேட்கலாம்: இந்தியாவில்எங்காவது செல்வாக்குமிக்கபழமைவாத அறிவுஜீவிகள் இருந்திருக்கிறார்களா? இதற்குத் தகுதியான பதில் ‘ஆம்என்பதே.

  மூன்று பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வரலாற்றாளர்கள் ரமேஷ் சந்திர மஜும்தார், ராதா குமுத் முகர்ஜி, மற்றும் சமூகவியலாளர் ஜி.எஸ்.குர்யே. இருபதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்த இந்த அறிஞர்கள் தங்கள் சொல்வன்மையால் தெளிவாக ‘இந்திய தேசியத் தன்மை  இந்து கலாச்சாரத்திலும், அதன் உணர்விலும் வேரூன்றி இருக்கிறதுஎன்ற பார்வையை முன்வைத்தார்கள். இப்போது அவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட போதிலும் அவர்கள் தங்கள் காலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள். அவர்களது தங்கள் செயல்களால் இந்தியாவின் கடந்த, இன்றைய, எதிர்காலங்களில் தாக்கங்களை ஏற்படுத்தினார்கள்.

   1888-ல் பிறந்த ஆர்.சி.மஜும்தார் நீண்டகாலம் துடிப்பாகச் செயலாற்றிய அனுபவம் உள்ளவர். ‘ஒருதேசத்தின் வாழ்வில் கூட்டுறவு உணர்வு மிகவும் முக்கியமானதுஎன்ற தலைப்பில் டாக்டர் பட்டத்துக்கான அவரது ஆய்வுக் கட்டுரை 1918-ல் வெளியிடப்பட்டது. இதில், இன்றைய இந்தியாவில் கலாச்சாரம் என்று குறிப்பிடப்படும் பிரிவு மிகவும் பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் இது முற்றிலும் மாறுபட்டிருந்ததுஎன வாதிட்டார். ‘பண்டைய இந்தியாவில் ஏறத்தாழ எல்லாத்தளங்களின் செயல்பாடுகளிலும் கூட்டுறவு உணர்வு என்பது குறிப்பிட்த்தக்க அம்சமாக விளங்கியது.சமூகம் சார்ந்த, மதம்சார்ந்த, அதேபோல் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்விலும் அது வெளிப்படையாகத் தெரிந்தது.என நிறுவ விரும்பினார். இந்தப்புத்தகம் 1.பண்டைய இந்தியாவின் அரசியல் வாழ்வில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள். 2.அரசியல், சமுதாய மதம் சார்ந்த வாழ்க்கைகளில் ஒருங்கிணைந்த அம்சங்களின் கூறுகள் என்ற இரண்டு அத்தியாயங்களைக் கொண்ட்து.

  மஜும்தார் பண்டைக்கால இந்தியாவின் வரலாற்றுஆசிரியராகப் பயிற்றுவிக்கப்பட்டவர். ‘வேதகாலம், பண்டைக்கால வங்காளத்தின் வரலாறு என்ற நூல்களை எழுதியவர். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலகட்டத்தின்மீதன அவரது சொந்த மதிப்பீடுகள் அவர் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்புக்களிலேயே பிரதிபலிக்கின்றன. அவை: ‘தூரக்கிழக்கில் இந்து காலனிகள்’, ‘தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் சமஸ்கிருதம்- ஓர் ஆய்வு‘. கடல்தாண்டிப்பரவிய இந்துக்கொள்கைகளும், நிறுவனங்களும் அவற்றின் முக்கியத்து வத்துக்கும், செல்வக்குக்குமான சான்றுகள் என அவர் வாதிட்டார்.

  1950-களில் அவர் தனது 70-ஆவது வயதை நெருங்கிய நிலையில் தனது கவனத்தை நவீனகாலத்தின்மீது செலுத்தினார். அதன்பலனாக History of The Freedom Movement in India’ என்றநூல் 1962-ல் வெளிவந்தது. அதன் முன்னுரையில் பண்டைக்கால இந்தியா பற்றிய ஆய்வுகளில் 40 ஆண்டுகளுக்கும்மேலாக ஈடுபட்ட அவர் தனது அந்திமக்காலத்தில்  இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை ஏன் எடுத்துக்கொண்டார் என்பதை விளக்கினார்.  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  “இந்தியா தனது சுதந்திரத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இழந்தது என்ற முன்னுரையுடன் அதிகாரபூர்வ சுதந்திரப்போராட்ட வரலாறு துவங்குகிறது. இதன்படி அன்னிய சக்திகளின்கீழ் அடிமைகளாக இருந்த அனுபவம் இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே என்றாகிறது. ஆனால் மறுபக்கத்தில் உண்மைவரலாறு இந்தியாவின் மிகப்பெரும்பகுதி சுதந்திரத்தை இழந்தது ஐந்து நூற்றாண்டுகளுக்குமுன் என்று அறிவிக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆளுவோர்தான் மாறினார்கள். இதிலிருந்து, ’1947-ல் இந்தியா பிரிவினைக்குள்ளாகப்பட்டதற்கு முக்கியக்காரணம் தேசிய உணர்வைவிட மத உணர்வை முஸ்லீம்கள் எத்தகைய சமாதானத்துக்கும் உட்படாமல் சுதந்திரப் போராட்ட்த்தின்போது முன்வைத்ததுதான்என்று மஜும்தார் குற்றம் சாட்டுகிறார்.

  மஜும்தார் தனது காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர். அவரது எழுத்துக்கள் கல்வியாளர்களுக்கும் அப்பால் நன்கு படிக்கப்பட்டது. 1950-களில் ‘The History and Culture of The Indian People’- என்ற புத்தகவரிசை வெளிவர உதவிசெய்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பண்டைக்காலத்திலேயே இந்தியக்கலாச்சரம் தனது உச்சகட்ட வளர்ச்சியை அடைந்துவிட்டது. அதன் பெருந்தனமையின்மீதும், உயிர்நிலையின்மீதும் முதல் தாக்குதல் முஸ்லீம் படையெடுப்பாளர்களாலும், பின்னர் பிரிட்டிஷாராலும் தொடுக்கப்பட்டது. மீண்டும் சுதந்திரம் பெற்றுள்ள இன்று இந்துக்களின் பண்டைக்கால உயர்ந்த மரபையும், நிறுவனங்க ளையும் மீட்டெடுப்பதுதான் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் மிகமுக்கியமானது.
  -இவ்வாறு எழுதும்போது அவரே குறிப்பிட்டுள்ளதைப்போல சுதந்திரப்போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்கிற பெருத்த நெருக்கடிகளுக்கு எதிராக மஜும்தார் செல்கிறார்.

   காந்தி.  நேரு, தாகூர் போன்ற மற்றவர்களுக்கு இந்திய வரலாற்றின் முக்கிய முறிவு பிரிட்டிஷாரின் வருகையோடு நிகழ்ந்த்து. ஐரோப்பியர்கள் உண்மையிலேயே அன்னியர்கள். ஆனால் முஸ்லீம்கள் இந்தத்துணைக்கண்ட்த்தில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்துவருபவர்கள். அவர்கள் உள்ளூர்மக்களோடு தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டவர்கள். இஸ்லாம் முதன்முதலில் இந்தியாவுக்கு அரபுவணிகர்கள்மூலம் வந்தது. இவ்வாறு கேரளாவின்மாப்பிளா முஸ்லீம்கள்சமுதாயம் குறைந்தபட்சம் எட்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. துருக்கிய மற்றும் மத்திய ஆசியப் படையெடுப்பாளர்கள் பின்னர் வட இந்தியாவுக்கு வந்ததுதான் கொடுமையானது. மத்தியகாலப்பகுதியில் இஸ்லாத்துக்கு மதம் மாறிய இந்துக்கள் மரணத்திற்குப்பயந்தோ அல்லது துன்புறுத்தலிலிருந்து தப்பிக்கவோ மதம் மாறியவர்கள் அல்ல. மதம் மாறுதல்கள் என்பது கீழ்நிலைச் சாதியினரிடமே அடிக்கடி நிகழ்ந்தன. இந்துயிஸத்தின் கெட்டிதட்டிப்போன மதகுருமார்களின் கொடுமைகளை ஒப்பிடும்போது இஸ்லாத்தின் தோழமைஉணர்வு கவர்ச்சிமிக்கதாக இருந்தது. வங்காளம், காஷ்மீர் போன்ற பல இடங்களில் மதமாற்றங்கள்- கொள்ளையிட்ட போர்வீரர்களால் அல்ல- சுபி மதகுருமார்கள் தலைமையிலேயே நடைபெற்றன.


  இந்திய தேசிய உணர்வை வளர்த்தெடுக்க- குறிப்பாக காந்திக்கு – இந்து-முஸ்லீம் ஒற்றுமைதான் அடிப்படையாக இருந்தது. முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகள் அவரது கருத்தைச் செல்லாததாக ஆக்கவில்லை. 1910-ல் ‘Hind Swaraj’ என்ற நூலில் :
  “ இந்தியா ஒற்றைக்கலாச்சார நாடாக மிளிர முடியாது. ஏனெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். வெளிநாட்டினர் இங்கு வந்ததால் இந்த தேசம் அழிந்துவிடவில்லை .மாறாக அவர்கள் இதில் கலந்துவிட்டார்கள். அத்தகைய நிலை உருவாகும்போது ஒருநாடு முழுவதும்தான் ஒரு தேசமாக இருக்கும். இந்தியா எப்போதும் அத்தகைய நாடாகவே இருந்து வருகிறது.

  காந்தி இந்து-முஸ்லீம் முரண்பாட்டை செயற்கையானதாக, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக உருவாகி ஆழப்படுத்தப்பட்டதாகப் பார்த்தார். படையெடுப்பின் முதல் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் பிறதேசியவாதிகள் ‘கலாச்சாரக் கலப்புபற்றிப்பேசும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுசேர்ந்து நாட்டை ஆண்டார்கள். மகத்தான கலைப்படைப்புக்கள், கட்டடக்கலை என எல்லாவற்றிலும்- இந்திய சாஸ்திரிய சங்கீதம் உட்பட- எல்லாவற்றையும் படைத்தார்கள். இந்தப்பண்பாட்டு இணைப்பு வடஇந்தியா முழுவதும் பரவியது. Ganga –Jamni  tehzeeb’ என கங்கை-யமுனை ஆற்றுநீர் பாயும் பூமியெங்கும் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த கலாச்சாரம் மலர்ந்தது.

  இந்தக்கொள்கையின்மீதான மிகவிரிவான அறிக்கை 1940-ல் ராம்கரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுஅமர்வில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை உரையில் இடம்பெற்றது.

   பல்வேறு மனித இன்ங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் இந்தியத்தாய்க்குள் பாய்ந்து அவளது ஆதரவளித்து வரவேற்கும் பூமியில் தங்களுக்கு ஒரு வீட்டைக்கண்டன. பல்வேறு வணிகர்களின் கூட்டங்கள் இங்கே இளைப்பாறின. இதுதான் இந்தியாவின் வரலாற்றின் நிகழ்வு. வரலாறு துவங்குவதற்கு முன்பேகூட இத்தகைய வண்கர்குழாம்கள் இந்தியா வழியாக வந்துசென்றன. அலைஅலையாகப் புதிய மனிதர்கள் வந்தார்கள். இந்தப் பரந்துவிரிந்த செழிப்பானபூமி எல்லாரையும் வரவேற்றது. அவர்களைத் தனது மார்பில் அணைத்துக் கொண்டது. இந்த்த்தடத்தின்வழியாகத் தங்கள் முன்னோரைப் பின்பற்றிக் கடைசியாக வந்த வணிகர்குழுவினர் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். இந்தக்குழு இங்கு வந்தது: இங்கேயே நிலைகொண்டுவிட்டது: எல்லாம் நன்மைக்காக.

  அதற்குப்பிறகு பதினொரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்துயிஸத்தைப்போலவே இந்த இந்தியமண்ணில் இப்போது இஸ்லாத்துக்கும் உரிமை உண்டு. இங்குள்ள மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துயிஸம் ஒருமதமாக இருப்பதைப்போல இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒருமதமாக இருந்துவருகிறது. ஒரு இந்து பெருமையுடன் ‘ நான் ஒரு இந்தியன் என்றும் நான் இந்துமதத்தைப் பின்பற்றுபவன்என்றும் சொல்வதைப்போல நாங்களும்கூடப் பெருமையுடன் சொல்லிகொள்வோம்: “ நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்”. இந்த வட்டத்தை நான் இன்னும் விரிவுபடுத்துகிறேன். இந்தியக்கிறிஸ்தவர்களும் நமக்குச் சமமாக, “ நாங்கள் இந்தியர்கள்: நாங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள்என்று சொல்லிக்கொள்ள உரிமை படைத்தவர்கள்.

  “பதினொரு நூற்றாண்டுகள்கொண்ட பொதுவரலாறு நமது பொதுச்சாதனைகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியிருக்கிறது. நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கி யங்கள், நமதுகலாச்சாரங்கள், நமது கலைகள், நமது ஆடைகள், நமது பாங்குகள், பழக்க வழக்கங்கள், நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் எண்ணற்ற நிகழ்வுகள் – இவை ஒவ்வொன்றும் நமது ஒன்றுபட்ட முயற்சிகளின் முத்திரைகளைத் தாங்கி நிற்கின்றன.

    “இந்தக்கூட்டுச்சொத்து நமது பொதுதேசியத்தன்மையின் மரபுரிமை. நாம் இதை விட்டுவிட்டுக் கூட்டுவாழ்க்கை துவங்கப்படாத பழையகாலத்திற்குத் திரும்பிச்செல்ல விரும்ப வில்லை. இங்கே நம்மிடையே உள்ள ஏதாவது ஒருஇந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்குமுன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக்கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள். அதுபோலவே ஏதாவது ஒருமுஸ்லீம் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்த தங்களது கடந்தகால நாகரிகத்தையும். கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கக்கனவு காண்பாரானால், அவர்களும்கூட விரைவில் விழித்துக்கொள்வது நல்லது

  பி.சி.மஜும்தார் இந்தக்கலப்புக் கலாச்சாரக்கொள்கைகுச் சவால் விடுவதற்கு முன்பே பண்டைய இந்தியாவின் இன்னொரு வங்காள வரலாற்றாளரும் எதிர்பைத்தெரிவித்தார். அவர்தான் ராதா குமுத் முகர்ஜி. பேரரசர்கள் அசோகர், சந்திரகுப்தர் ஆகியோரின் வாழ்க்கைவரலாறுகளையும், மௌரியப் பேரரசின்வரலாற்றையும், பண்டைக்கால இந்தியாவின் கப்பல்போக்குவரத்து, பண்டைக்கால இந்தியாவின் உள்ளூர்ஆட்சி போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனால் இவரது ஆகச்சிறந்த வரலாற்றுஎழுத்துத் தலையீடு என்பது ஒரு சிற்றிதழ் மற்றும் ஒருபுத்தகத்தை மட்டுமே கொண்டு நடத்திய சிறிய ஆய்வு “ The Fundamental Unity of India” என்ற தலைப்பில் 1914-ல் லண்டனிலும், 40-ஆண்டுகளுக்குப்பிறகு திருத்திய இரண்டாம்பதிப்பு பம்பாயிலும் வெளியிடப்பட்டது.

  “ The Fundamental Unity of India” தனது முதல் இலக்காக ‘இந்தியாவில் அரசியல் ஒற்றுமை என்பது பெரும்பாலும் அல்லது முழுக்கமுழுக்க பிரிட்டிஷ் ஆட்சியின் தயாரிப்புஎன்று தாக்குகிறது. அது தனது இரண்டாவது இலக்காக தேசியவாதிகளுக்கிடையே வளர்ந்துவரும் நம்பிக்கையான எதிர்கால இந்திய தேசம் – அரசு – இங்கு அதிகஅளவில் வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களை உள்ளடக்கிய பார்வை, இந்துக்கொள்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டமைக்கப்பட முடியாதுஎன்பதையும் கொண்டுள்ளது.

  முகர்ஜியைப்பொருத்தவரை ‘இந்தியாவின் தேசியத்தன்மைஎன்ற உணர்வு பிரிட்டிஷார் மற்றும் முஸ்லீம்களின் வருகைக்கு முன்பே உருவாகியிருந்தது. ‘பழங்கால ரிஷிகள்இந்தியா முழுவதையும் குறிப்பதற்காக பாரதவர்ஷாஎன்ற பெயரை உருவாக்கினர். இந்தப்பெயர் வரலாற்று நாயகனான பரதா என்பதிலிருந்து வந்தது. ரோம் நாட்டுக்கு ரோமுலஸ் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு பரதன்என்று உரிமைகோருகிறார். பண்டைய இந்திய ஒற்றுமைக்கு கூடுதல் ஆதாரமாக ரிக்வேதத்தின் கீர்த்தனையைக் காட்டுகிறார். அது, இந்தத்துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடும் நதிகளை வணங்குவதன்மூலம் இந்திய நாட்டுமக்களுக்குத் தங்கள் நாட்டின் ஒற்றுமை உணர்வை உணர்த்தியது: தட்டியெழுப்பியது.

  ‘தந்தையர் பூமியின்மீதான இந்த ஆழமான பற்று சமஸ்கிருத இலக்கியம் முழுவதிலும் பூரணமாக வியாபித்திருக்கிறதுஎன்று முகர்ஜி வாதம்செய்கிறார். எனவே பாரதவர்ஷம் என்று அழைக்கப்படுகிற இந்த நாட்டின் பூமிப்பரப்பெங்கும் ஆயிரக்கணக்கான பெயர்களில் அறியப்படுகிற கடவுள்விஷ்ணுவை ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்வழிபடுகிறது. இந்தப் பழமையான தேசிய உணர்வு எட்டாம் நூற்றாண்டில் சங்கரரால் வளர்த்தெடுக்கப்பட்டது. அவர் வடக்கில் கேதார்நாத்-பத்ரிநாத், தெற்கில் ராமேஸ்வரம், மேற்கில் துவாரகா கிழக்கில் பூரி என நான்கு புண்ணியத்தலங்களை ஏற்படுத்தினார். எனவே இந்தநாடு முழுமையும் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது: புனிதபூமியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது’ . ‘இந்தப்புனிதத்தலங்களின் வலைப்பின்னல் ‘இந்தியா ஒருங்கிணைக்கப்படாத வெறும் புவீயியல் சிதற்ல்கள் அல்ல: ஒற்றையான – ஆனால் அளவிடமுடியாத உயிருள்ள தேசம்’ ’இது முடிவிலிருந்து முடிவுவரை ஒருமிக வலிமையான உயிர்த்துடிப்புள்ள மிக்க வாழ்வு என்னும் அலையால் நிரப்ப்ப்பட்டதுஎன்று எண்ணவும் உணரவும் வைக்கிறது

  புனிதப்பயணங்கள் பற்றி முகர்ஜி கூறுகிறார்: ‘மகத்தான தாய்நாட்டின் புவியியல் ஒற்றுமை என்ற கொள்கையில் தலையிட்டு மறிக்கும் குறுகிய பிரதேச உணர்வுகள் வளர அனுமதிப்பதில்லை: ஒருவரின் தாய்நாட்டை உள்ளூர அறிந்துகொள்ளும் புனிதக்கடமையின் வழியில் எதிர்ப்படுகின்ற உடல்ரீதியான வசதி-சுகம் என்ற உணர்வை அனுமதிப்பதில்லை. பழைய உலகத்தில் புனிதப்பயணங்களின்போது ஏற்படும் சிரமங்களைத் தணிக்க- பக்தர்களின் பயணவழித்தடங்களில் குறுகிய இடைவெளிகளில் சிறிதுநேரம் இளைப்பாற- தங்கிச்செல்லும் புனித மடங்கள் ஆங்காங்கே  நிறுவப்பட்டுள்ளன.

  முகர்ஜி மேலும் கூறுகிறார்: “பொதுமதத்துக்கு அப்பால் ‘இந்தியனின் புவியியல் ஒற்றுமைஎன்ற புகழ்மிக்க உணர்வை வளர்ப்பதில் அரசியலும் த்ன்பங்கைச் செலுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் தனது சர்வாதிகாரத்தின்கீழ் வரவேண்டும் என விரும்பி அதில் வெற்றி கண்ட பல அரசர்களின் பெயர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஹர்ஷவர்த்தனர், சமுத்திர குப்தர், அசோகர் ஆகியோர் அத்தகைய ஆட்சியாளர்களுக்கு எடுத்துக்கட்டாக உள்ளனர்என்று அறிவுக்குப் பொருத்தமற்ற வாதத்தை முகர்ஜி முன்வைக்கிறார். அவர் இந்த எடுத்துக்காட்டுக்கள் மற்றும் அவற்றுக்கு அவர் தருகின்ற அழுத்தங்கள் மூலம், ‘ஆரம்பகால இந்தியவரலாறு மிகமிக முற்பட்ட காலத்திலிருந்து மக்கள் பெற்றிருந்த அரசியல் விழிப்புணர்வு இந்தியா முழுமையையும் ஒன்றுபட்டதாக ஏற்கவைத்திருந்தது என்பதைத் தவறில்லாமல் காட்டுகிறதுஎன்று நிறுவ முற்படுகிறார். இதன்மூலம்,ஜாவா, சுமத்ரா, பாலி, சயாம், கம்போடியா போன்றவற்றைக் காலனி நாடுகளாக்கி இந்தியமயப்படுத்தவேண்டும்என்ற தனது ஆலோசனைகளை அழுத்தமாக முன்வைக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

  அவர் கூறுகிறார்: ‘இந்தியனின் சிந்தனைகள் மற்றும் நிறுவனங்களுக்கெதிரான பிரச்சாரங்கள் சந்தேகத்துக்கிடமில்லாமல் பலநூற்றாண்டுகளாக எண்ணற்ற காலனியவாதிகள்,மிஷனரிகளால் செய்யப்பட்டுவருகின்றன. அவர்களது இந்தஆர்வங்களுக்குச் செல்வந்தர்களும், பணக்கார நாடுகளும் உரமூட்டினர்.மேலும்,தனது தனித்தன்மை, புனிதத்தன்மை எல்லாம் தன்னிடமே இருக்கிறது என்று பாராட்டிக்கொள்ளும்தன்மை, அதன்கொள்கைகள், நிறுவனங்கள், ஆகியவற்றால் எழுந்த உற்சாக அலையின் உச்சத்தில் காலனியாதிக்க இயக்கம் இருந்தது.(எபோதும் இருக்கின்றன) என்கிறார் முகர்ஜி.

  முகர்ஜி ஆழ்ந்த வரலாற்று ஆசிரியர். ஆனால் அவரது “ The Fundamental Unity of India” என்ற ஆய்வு நூலில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அறிவுக்குப் பொருத்தமற்றவை. 1914ல் அவர் எழுதிய ‘இந்தியா முழுமையும்என்பது பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடி மற்றும் நேரடியாக இல்லாமல் ஆட்சி நடத்திய அனைத்துப் பிரதேசங்களையும் குறிக்கிறது. இதன்மூலம் மன்னராட்சிப் பிரதேசங்களையும் உள்ளடக்குகிறது. அவர் குறிப்பிடும் பேரரசர்கள் இந்தப்பிரதேசத்தின் தெற்கில் ஆட்சியில் இருந்ததில்லை. அதேபோல மேற்கிலும் பெரும்பாலும் அவர்கள் ஆட்சி இருந்ததில்லை. அவர்கள் அதிகப்பரப்பளவில் ஆண்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டாலும், அவை பின்னர் பல்வேறு மன்னர்கள், குறுநிலமன்னர்கள்  பிடிக்குள் வந்துவிட்டன.கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே அசோகரால் அரசியல் ஒற்றுமை உருவானது: அது பல நூற்றாண்டுகளாக நீடித்ததுஎன்று முகர்ஜி சிந்திப்பது பிச்சைக்காரனின் நம்பிக்கையாக உள்ளது.

  முகர்ஜியின் மொழி கவனிக்கத்தக்கது. ‘இந்து’, ’இந்தியாஎன்பதை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகிறார்.  அவரது கதையில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் காணப்படவில்லை. மேலும் அதிர்ச்சிதரும்வகையில் குலங்கள், மொழிகள், இந்திய நிலப்பரப்பில் குறிப்பிடத் தக்கவகையில் வரலாற்றுரீதியாக நிலவிவந்த மதங்களின்பிரிவுகள் ஆகியவை பற்றியும் ஏதுமில்லை. சமஸ்கிருதம் ஒருசில தலைமைக் குருமார்கள் மட்டுமே தங்களுக்குள் பேசிக்கொண்ட, புரிந்துகொண்ட மொழியாக இருந்தது. தேசிய ஒற்றுமையின் அடையாளமாக முகர்ஜியால் பார்க்கப்பட்ட சமஸ்கிருத கீர்த்தனைகள் இந்தநாட்டின் பெரும்பான்மையான மக்கள் அறியாதவை: பரவலாகத்தெரியாதவை.

   இந்த எளிமைப்படுத்துதல்களும், மறைத்தல்களும் பழமைவாத வரலாற்றாளர்களுக்கு அடிப்படைப்புள்ளியாக உள்ள ‘இந்தியன்தேசியம்என்பது சாராம்சத்தில்  எப்போதும்இந்துவாக இருந்தது: அது கட்டாயம் தேவைஎன்று நிரூபிப்பதற்கு அவசியமாகிறது. முகர்ஜியின் அரசியல் தத்துவார்த்த்த்தில் ‘தன்மைப்பன்மை’ (First Person-Plural)என்பது உறுதியாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும் மதத்தைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது!

   ஓர் அறிஞரின் வெளியிடப்பட்ட புத்தகத்தை அவரது சொந்தவாழ்வின் வெளிச்சத்தில் பார்ப்பது ஆபத்தானது. ஆனால் மஜும்தாரும், முகர்ஜியும் வங்காளி இந்துக்கள் என்பதையும், அவர்கள் இருவரும் தங்கள் மாநிலத்தில் மாபெரும்வலியை ஏற்படுத்திய மதச்சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் பருவ்வயதை அடைந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 1905-ல் வங்காளம் பிரிட்டிஷ் ஆட்சியில் மதஅடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கல்கத்தாவில் உள்ள நடுத்தரவர்க்க இந்துக்களின் பேரெழுச்சியால் ஆறு ஆண்டுகளுக்குப்பின் பிரிவினை கைவிடப்பட்டது. “ The Fundamental Unity of India”வின் முதல்பதிப்பு பிரிவினை நடைபெற்றபோது வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம்பதிப்பு வங்காளத்தின் முஸ்லீம்பெரும்பானமை மாவட்டங்கள் கிழக்குபாகிஸ்தான் எனப்பிரிக்கப் பட்டபோது வெளியிடப்பட்டது. இரண்டு பிரிவினைகளும் முஸ்லீம் அரசியல்வாதிகள்- கட்சிகளின்கட்டளைப்படியே நடைபெற்றது,  கிழக்குபாகிஸ்தானாக இருந்த பகுதியில் பிறந்து சிலஆண்டுகள் டாக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மஜும்தார்மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.1947-க்குப்பிறகு பிரிவினைக்குப்பிந்தைய இந்தியாவில்வாழ்ந்தபோது, அவரை அறிஞராகவும், ஆசிரியராகவும் முதலில் உருவாக்கிய, அவர் பிறந்த மூதாதையரின்   கிராமம் அல்லது நகரத்திற்கு அவரால் பார்வையிடக்கூடச் செல்லமுடியவில்லை.

  காலனியாதிக்கத்தின் கடைசிக்காலகட்ட்த்தில் மூன்றாவது முக்கிய பழமைவாத அறிவுஜீவியாக விளங்கியவர் ஜி.எஸ்.குர்யே. இவர் மஜும்தார் மற்றும் முகர்ஜியைப்போல இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அல்லாமல் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இருந்தவர். அவர் தனது பயிற்சியின்மூலம் வரலாற்றாளராக அல்ல- சமூகவியலாளரானவர். குர்யே பம்பாய் பல்கலைக்கழகத்தில் கற்பித்துவந்தார் அவர் தனது நூல்களை எழுதியபோது பல ஆராய்ச்சி மாணவர்களின் பி.ஹெச்டி., ஆய்வுகளை மேற்பார்வையிட்டுவந்தவர்.

   பிற இந்தியசமூகவியலாளர்கள் நவீனமயமாக்குதலின் விளைவுகளை ஆய்வு செய்துவந்த போது குர்யே அவர்களைப்போன்ற அதேஈடுபாட்டோடு ‘மரபுகளின் விடாப்பிடித்தன்மைகள்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ‘Indian Sadhus’, ‘Costume and Classical Dance’, ‘Comparative Study of Family, Kinship in Indian and European Culture’ ஆகியவை அவரது சிலநூல்கள். இந்த நூல்களை எழுதும்போது சமஸ்கிருதம் பற்றிய பயங்கரமான அறிவை அவர் பெற்றார். அகழ்வாய்வு, மொழியியல், மானுடவியல், கலைகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப்படித்தார். இந்தியர்கள் எவ்வாறு இயல்பாக வாழ்ந்தார்கள்? உணர்ந்தார்கள்? என்பவைபற்றிக் களஆய்வுகளைச் செய்யாமல் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த பொருட்களை அடிப்படையாக்க்கொண்டு ‘புத்தகங்களின் பார்வையில் தனது ஆய்வுகளைச் செய்தார்.

  முகர்ஜியைப்போலவேகுர்யேவும் இந்தியாவில்உள்ளஅனைவருக்கும் ஒற்றைக்கலாச்சாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார் சமூக மானுடவியலாளரான கரோல்உபாத்தியாயா ‘அவரது மையக்கருத்துக்களில் ஒன்றாக ‘இந்திய நாகரிகத்தின் பழமையையும், ஒற்றுமையையும்பற்றி எடுத்துக்காட்டுக்கள்மூலம் தெளிவுபடுத்துவதாக இருந்ததுஎன்று எழுதினார். ‘இந்திய நாகரிகத்தின் ஒற்றுமையின் மையமாக இந்துயிஸம் இருந்தது என்று அவர் நம்பினார். இந்துயிஸத்தின் மையமாக பிராமணீயக்கருத்துகளும், மதிப்பியல்களும் இருந்தன என்றும், அவைதான் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டுக்கு அவசியம்.என்றும் அவர் கருதினார்.

  இது இங்கிலாந்தில்பிறந்த மானுடவியலாளரான வெர்ரியர் எல்வினோடு, ‘இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகளின் அந்தஸ்துபற்றிய தனது கருத்துக்களைக் குர்யே  பரிமாறிக் கொண்டபோது எதிரொலித்தது. 1930-களிலும், 1940-களிலும் எல்வின் எழுதிய ஆய்வுகள் மற்றும் பிரசுரங்களில் ‘மத்திய இந்தியாவின் ஆதிவாசிகள் கலாச்சாரரீதியாக இந்துக்களி லிருந்து வேறுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவர்களது தெய்வங்களின் கூட்டத்தில் அவ்வப்போது இந்துக்கடவுளைச்சேர்த்துக்கொண்டாலும்கூட, அவர்களது சமுதாயம் சாதிய அடுக்குகளைக்கொண்ட்தல்ல. அங்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான மாறுபட்ட மரபுகளை, கலைகளை, இசையை, நடனங்களைக் கொண்டிருந்தார்கள்.

  பழையமாதிரி அறிஞராக குர்யே நூலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, எல்வின் 20 ஆண்டுகள் ஆதிவாசிகளோடு வாழ்ந்து அவர்களைப்பற்றி எழுதினார். அவருடைய ஆய்வு ஆதிவாசிகள் சமுதாயத்தைப்பற்றிய களப்பார்வை கொண்டது. வெவ்வேறுவகைப்பட்ட ஆதிவாசிகளின் சமுதாயங்களில் நிலவிவந்த விவசாயம், கைவினைகள், தொழில்நுட்பம், மத நிறுவனங்கள், குற்றங்கள், பாலுறவுப்பழக்கவழக்கங்கள் ஆகியவைபற்றிய முக்கியமான எழுத்துப்பதிவுகளை எல்வின் வெளியிட்டார். அவரது வளமான அனுபவ ஆய்வுக்கருத்துக்கள் விரிவான, கவர்ச்சிகரமான மொழிநடையில் வெளிவந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானவர்களால் படிக்கப்பட்டன.

   1943-ல்குர்யே எல்வின்மீது தாக்குதல்களைத்தொடுத்து, ‘The Aborigines-So Called- and their Future’என்ற நூலை வெளியிட்டார். இதில் ‘இந்துவைப் பாதுகாக்கும் எல்லா அம்சங்களும் எல்வினைத் தலைகீழாகப் புரட்டிப்போடுகின்றனஎன்று குறிப்பிட்டார். ஆதிவாசிகளுக்கும், இந்துக்களுக்கும் இடையே உள்ள ஒன்றுக்கொன்று சம்மான நம்பிக்கைகளைச் சான்றுகளாக முன்வைத்தார். ஆதிவாசிக்குழுக்களை வேறுபட்ட தன்னாட்சிக்குழுக்களாகப் பார்ப்பதைவிட, அவர்கள் முறையாகஒருங்கிணைக்கப்படாத இந்துசமூகத்தின்பிரிவுகள் என்று பார்க்கவேண்டும் என்று வாதிட்டார். எல்வினோ,‘சுதந்திர இந்தியா ஆதிவாசிகளுக்கு அவர்களது கலாச்சாரம், நிலப்பரப்பு ஆகியவைகளைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குத் தன்னாட்சிஉரிமை வழங்கும்  என்று நம்பினார். ஆனால் குர்யே, ‘தேசத்தைக்கட்டமைக்கும் கடமையில் அவர்களை இந்து மைய நீரோட்ட்த்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரவேண்டும்என்றார்.

   இந்திய தீபகற்பத்தில் 20 ஆண்டுகள் ஆதிவாசிகளோடு வாழ்ந்துகொண்டும், அவர்களைப்பற்றி எழுதிக்கொண்ட்ம் இஎஉந்த எல்வின் 1954-ல் இந்த நாட்டின் வடகிழக்குப்பகுதிக்கு நகர்ந்தார். இப்போது அவர் இந்தியக்குடியுரிமைபெற்ற இந்தியனாக வடகிழக்கு எல்லைப்பகுதி முகமையின்-இன்றையஅருணாச்சலப்பிரதேசம்-  நிர்வாகஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.  1957-ல் அவர் தனது புகழ்பெற்ற ‘A Philosophy of NEFA’ என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல், இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அப்போதைய பிரதமர் நேருவின் பாராட்டுக்களுடன் கூடிய முகவுரையோடு விரிவாக்கப்பட்ட பதிப்பாக வெளிவந்தது. இதில்,ஆதிவாசிகளின் நிலங்கள் மற்றும் வனங்களையும், ஆதிவாசிகளின் கலை மற்றும் கலாச்சார மரபுகளையும் பாதுகாக்க ஆதிவாசிகளுக்குப் பாதுகாப்பு உரிமை வழங்கப்படவேண்டும்என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வாதிட்டார்.

  எல்வின் 1964-ல் இறந்துவிட்டார். அப்போது 87-வயதான குர்யே வடகிழக்குப்பகுதியில் எல்வின் மேற்கொண்ட பணிகள்மீது புதியதாக்குதல்களைத் தொடுத்து ஒருநூலை வெளியிட்டார். ‘அந்தமானுடவியலாளர் எல்வின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலத்தின் பழக்க வழக்கங்கள், ஆடைஅணிமணிகள், மரபுகள் ஆகியவற்றை மீட்டெடுக்கும் நோக்கங்களோடு பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக ஆதரவளித்துவந்தார், என இந்நூலில் எல்வினைக் குற்றப்படுத்தினார்குர்யே. ‘தாய்நாட்டைத் துண்டுதுண்டாகச் சிதறடிக்கும் உள்ளார்ந்த நோக்கத்தோடு ‘பாரதத்தைச் சிறிய ஒன்றுக்கொன்று இணக்கமான பகுதியாக்கும்விருப்பத்தைக் கொண்டவர்களோடு விரும்பியோ, விரும்பாமலோ எல்வின் இணைந்துவிட்டார்என்றார் குர்யே. ‘இந்த ஆதிவாசிகளின் எல்லாவிதமான கலாச்சாரக்கூறுகளையும் மீட்டெடுத்துப் பாதுகாக்க விரும்புகிறார். இந்தக்கலாச்சாரக்கூறுகள் இந்தியாவின் (பாரத்) கலாச்சாரக் கூறுகளோடு மிகவும் மாறுபட்டவைஎன்றார் குர்யே.

  மாறுபாடுகளைக்கொண்டிருப்பது தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் என்று அஞ்சி அவற்றைமூடிமறைக்கவேண்டும்’, என்றுகூப்பாடுபோடுவது பழமைவாதக்கும்பலின் உச்சகட்டக் கோரிக்கையாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ்மொழிபேசும் புலம்பெயர்தவர்கள் மீது அமெரிக்கப்பழமைவாதிகளும், அரபுமொழிபேசும் புலம்பெயர்ந்தவர்கள் மீது ஐரோப்பியப் பழமைவாதிகளும் கொண்டுள்ள சந்தேகங்கள் உள்ளன.

  மஜும்தர், முகர்ஜி, குர்யே ஆகியோர் பயங்கரமான அறிவாளிகள். ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் அழுத்தமான நூல்களை வெளியிட்டுள்ளவர்கள். அவர்கள் பல்கலைக்கழகங்களில் பலபத்தாண்டுகளாகப் பாடம் நட்த்தித் தங்கள் அறிவாற்றலையும், கருத்துக்களையும் தங்கள் மாணவர்களிடம் செலுத்தியவர்கள். வகுப்பறைகளுக்குவெளியே முனைவர்பட்ட ஆய்வுகளை மேற்பார்வையிட்டுத் தங்கள் கருத்துக்கள்மூலம் செழுமைப்படுத்தியவர்கள். ஆனால், இன்றைய சமகாலத்தில் மஜும்தார், முகர்ஜி, குர்யே போன்றவர்களுக்குச் சம்மான செல்வாக்குமிக்க சந்ததியினராக பழமைவாத வரலாற்றாளர்களோ, சமூகவியலாளர்களோ ஒருவருமில்லை. .பலபத்தாண்டுகளாக எவருமில்லை. இது ஒருகேள்வியை எழுப்புகிறது: அன்னியராட்சியில் பிரபலமான பழமைவாத அறிவுஜீவிகளை இந்தியா ஏன் பெற்றிருந்தது? இப்போது ஏன் ஒருசிலர்? (அப்படி யாராவது இருந்தால்)

    ஒருபதில்உண்டு. காலனியாதிக்கத்தின் பிற்பகுதியில் தேசியஇயக்கங்கள் உருவானபோது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அரசியல் கட்சிகளின், அறிஞர்பெருமக்களின் ஆழ்ந்த விவாதங்கள் நடைபெற்றன.சுதந்திர இந்தியாவில் அரசு அமைப்புக்கள் ஒருமதத்தைச் சார்ந்த்தாக, அல்லது பலமதங்களைச் சார்ந்த்தாக அல்லது எந்த மதத்தையும் சாராததாக இருக்க வேண்டுமா? மொழிப்பிரச்சனைகளும், இனப்பிரச்சனைகளும் எவ்வாறு கையாளப்பட வேண்டும்? சுதந்திரத்துக்குப்பிறகு லிபரல்களும், சோசலிஸ்ட்களும் வெற்றிபெற்று இந்த விவாதங்களின் மிகவும் போற்றுதலுக்கும், செல்வாக்குகும் உரிய வழக்கறிஞராக இந்தியாவின் முதல்பிரதமராக- நீண்ட காலம் நீடித்தவராக ஜவஹர்லால் நேரு ஆனபோது முன்கூட்டியே இந்த விவாதங்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன.

  இது, நேருவின் கருத்துக்கள் மேலாதிக்கம் செலுத்தின என்றோ, அவரது கருத்துக்கள் அறிவிஜீவிகளால் எத்தகைய விமர்சன்ங்களுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றோ சொல்ல அல்ல. குறிப்பாக அவரை மிக்க்கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் ஆளும் காங்கிரஸின் இட்துபக்கத்தில் இருந்தார்கள். இவர்களில் சோசலிஸ்ட்கள் ராம்மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண், கம்யூனிஸ்ட் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் ஆகியோர் இருந்தனர். இவர்கள் தங்கள் கட்சிகளால், சிறந்த எழுத்தாளர்களால், அறிஞர்பெருமக்களால் ஈர்க்கப்பட்டி ருந்தார்கள்.  நாட்டின் பொதுஉணர்வுகளும், லிபரல்களுக்கும், சோசலிஸ்ட்களுக்கும் ஆதரவாக இருந்து நேர்மையும், நியாயமும் உள்ள ஒரு புதிய சமுதயத்தைக்கொண்ட புதிய தேசத்தை உருவாக்குவதில் முன்னோக்குப் பார்வைகொண்டு, ஆபத்தான பழமைவாத மரபுகளையும், காலனியச் சிந்தனைகளையும்  பின்னுக்குத் தள்ளின.

--------------------------------------------------- பகுதி 5 தொடர்கிறது -----------------
                
   

       


காணாமல் போன 3

காணாமல் போன
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
 டாக்டர்.ராமச்சந்திர குஹா
 தமிழில்: செ.நடேசன்
 முன்னாள் பொதுச்செயலாளர்
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

                                                               மூன்று

  இந்தியாவில் பழமைவாதஅறிவுஜீவிகள் ஏன் அரிதாகவே உள்ளார்கள்? இதைப்புரிந்து கொள்ள இந்தக்கேள்வியைச் சற்றுமாற்றி, ‘இந்த நாட்டின் அறிவார்ந்த வாழ்வில் லிபரல் மற்றும் சோசலிச மரபுகள் ஏன் மிகவும் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன?என்று பார்ப்போம்.

  19ஆம்நூற்றாண்டில் இந்தியாவின் முதல்நவீனப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அப்போது இந்தத் துணைக்கண்டம் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மேற்கு உலகைப்போல அல்லாமல் சமூக விஞ்ஞான்ங்கள் என்று அறியப்படுபவை காலனிய ஆட்சியின் அனுபவங்களிலிருந்து  உருப்பெற்றன. அதேவேளையில் இந்திய சமுதாயம் இங்கு ஆழமான பொருளாதார அசமத்துவங்கள் நிலவி வந்ததைக் குறித்துக்கொண்டது. அன்னிய ஆட்சியும், முடிவில்லா ஏழ்மையும்  நிலவிவந்த காலகட்டத்தில் இந்திய சமூக விஞ்ஞானிகள் இயல்பாகவே பின்னோக்கிப் பார்ப்பதற்குப்பதிலாக, ‘எங்கள் நாடு எப்போது சுதந்திரம் பெறும்?  இந்தியா சமத்துவமான குடிமக்களைக்கொண்ட ஒரு நாடாக எப்போது எழுந்து நிற்கும்?என்ற காலத்தைத்தேடி முன்னோக்கிச் சிந்தித்தார்கள். மான்ஹீமின் வார்த்தைகளில் சொல்வதானால் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவைப் பழமைவாதத்தைவிட விபரலிஸமும், சோசலிஸமும் மிகவும் கவர்ச்சியாகக் கௌவிப்பிடித்தன.

  காலனிய ஆட்சியிலும், வறுமையிலும் மக்கள் எதைப்பெற்றிருந்தார்களோ அதைப் பாதுகாப்பதைவிட இந்திய அறிவுஜீவிகள் அரசியல் அடிமைத்தனத்திலிருந்தும், சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் விடுதலைபெற்ற ஒருபுதிய உலகத்தைப் படைக்க விரும்பினார்கள். தேசிய அரசியல்வாதிகளால் இந்தக்கருத்துக்கள் பரப்பப்பட்டன. நாட்டுவிடுதலையை நோக்கிய இந்தப்பயணத்தில் இந்தியாவின் பலதலைமுறைகளைச்சார்ந்த சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகசீர்திருத்தவாதிகள் மிகச்சிறந்த அறிவார்ந்த உயர்ந்த படைப்புக்களையும், அரசியல் பகுப்பாய்வுகளையும் எழுதினார்கள்.

  இவர்களில் செல்வாக்குமிக்கவராக மிகச்சிறந்த லிபரல்சிந்தனையாளராக ஜான்ஸ்டூவர்ட்மில், மற்றும் ஜான்மோர்லே ஆகியோர் சிந்தனைமரபில் வளர்ந்த கோபால கிருஷ்ண கோகலே விளங்கினார். ஜான்ஸ்டூவர்ட்டும், ஜான்மோர்லேவும் தங்கள் நாட்டுமக்கள் அனுபவித்துவரும் ஜனநாயக உரிமைகளை இந்தியநாட்டு மக்களுக்கும் அளிக்கவேண்டும் என பிரிட்டிஷ் அரசை வலியுறுத்தினார்கள். ரஷ்யப்புரட்சியாலும், , பிரிட்டிஷ் ஃபோபியன் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்ட  நவீனசோசலிஸ சிந்தனையாளரான ஜவஹர்லால் நேரு, முற்போக்குச் சிந்தனை களின் இருப்பிடமாக விளங்கிய கொலம்பியா பல்கலைக்கழகம்,மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில்படித்த பொருளாதாரநிபுணரும்,சட்டமேதையுமான பி.ஆர்அம்பேத்கர்  பெர்லினில் அரசியல் விஞ்ஞானத்தில் பிஹெச்.டி. பெற்றவரும், நாஜிக்கொடுமைகளை நேரடியாக அனுபவித்து வாழ்நாள் முழுவதும் சோசலிஸ்டாக வாழ்ந்தவருமான ராம்மனோகர் லோகியா, அமெரிக்காவில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்காலத்தில் அங்குபடித்துக்கொண்டு வேலைபார்த்தவருமான இடதுசிந்தனையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் இருந்தனர்.

  கோகலே, நேரு, அம்பேத்கர், லோகியா, நாராயண், ஆகியோர் இந்தியா மற்றும் உலக நடப்புகளைப்பற்றி விமர்சித்து, இந்தியா விடுதலைபெற்றபிறகு அதன் பொருளாதார மற்றும் சமூகசீர்திருத்தங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்ற தங்கள் ஆலோசனைகளைச் சிறப்பான எழுத்துக்கள் மூலம் தந்தவர்கள். இந்தவகையில் லிபரல் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் வரிசையில் அணிவகுக்க ஒரேஒரு பழமைவாதியாக வி.டி.சாவர்க்கர் இருந்தார். அவர் இறப்புக்குப்பிறகு ‘இந்து உரிமையின் அடையாளச்சின்னமாக்கப்பட்டார். ஆனால் அவரது கடைசிக்காலங்கள் இருள்சூழ்ந்த மர்ம்மாகவே இருந்தன.

  காலனிய ஆட்சியின்போது மேற்கத்தைய அரசியல் தாக்கங்களுக்குள் வராதவர்களில் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்கள்- செயல்பாட்டாளர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் ரவீந்திரநாத் தாகூர் – மோகன்தாஸ் காந்தி. நேரு தன்னை சோசலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டார். ஆனால் இந்த இருவரும் அம்பேத்கர் கணிப்பின்படி லிபரல்களோ, சோசலிஸ்ட்களோ அல்ல. இருந்தாலும் இவர்கள் இருவரும் பொதுப்பிரச்சனைகள்பற்றி விரிவாக எழுதினார்கள். அவை மிகக்கவனமாக இந்திய இளைஞர்களால் படிக்கப்பட்டன. தேசியவாதம் பற்றிய தாகூரின் கடுமையான விமர்சனங்கள் இந்திய அறிவுஜீவிகளை – உலகத்துடனான அவர்களது அணுகுமுறைகளில் அன்னிய நாட்டினர்மீதான வெறுப்பைத் தணியச்செய்தன.. அந்தக் கவிஞரைப்போல உலகின் எந்த மூலையிலிருந்து ஒளி பிறந்தாலும் அதைப்போற்றவேண்டும் என நம்பத்துவங்கினார்கள். அதேவேளையில் தீண்டாமைக்கு எதிரான காந்தியின் பிரச்சாரங்களும், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக வாழ்நாள் முழுதும் அவர் நட்த்திய போராட்டங்களும் இந்தியாவின் தன்மைப்பன்மையில் – First Person –Plural-  சாதிய இந்துக்களைமட்டுமல்ல மற்றவர்களையும் அணைத்துச்செல்ல வேண்டும் என அறிவ்ஜீவிகளை உற்சாகப்படுத்திச் சிந்திக்கவைத்தது.

  இந்தவகையில் பிந்தைய காலனி ஆட்சியில் இந்தியாவின் தீர்மானகரமான அரசியல்போக்கு புகழ்பெற்ற அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல: அறிவுஜீவிகளிடமும் லிபரல் மற்றும் சோசலிஸ சிந்தனைகள் பரவி உற்சாகப்படுத்தியது. இந்தக்கருத்துக்கள் பின்னர் நிறுவன வடிவமாக உருவெடுத்தன. 1930-ல் கோகலேயின் விசுவாசியும், அம்பேத்கரின் நண்பருமான டாக்டர்.காட்கில் ‘கோகலே இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எக்கனாமிக்ஸ்என்ற இந்தியாவின் முதல் அரசியல் விஞ்ஞான ஆய்வு மையத்தை நிறுவினார். ஓராண்டுக்குப்பிறகு தாகூர் மற்றும் நேருவின் நெருங்கிய சகாவான பி.சி.மகனலோபிஸ் ‘இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்ட்டிட்யூட்ஐ நிறுவினார். இது சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டங்களை வரைய ஒத்துழைத்தது. 1949-ல் காந்தியையும் நேருவையும் போற்றிய, கேம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்ற வி.கே.ஆர்.வி.ராவ் ‘டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்என்ற இந்தியாவின் முதன்மையான பொருளாதார ஆய்வு மற்றும் கற்பித்தல் அமைப்பை ஏற்படுத்தினார். (1959-ல் சமூகவியல்துறையை அமைத்ததன்மூலம் இந்த டெல்லிப் பள்ளி இந்தத்துறையில் இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்கியது) 1963-ல் ஜெயப்பிரகாஷ் நாராயணின் நண்பர் ரஜினி கோத்தாரி ‘சமுதாய வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தைநிறுவினார்.  அப்போதிருந்தே இந்த மையம் அரசியல் விஞ்ஞானத்தில் இந்த நாட்டின் முதன்மை ஆய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்ட்து.

  1950களிலும் 1960களிலும் மார்க்சீயத்தின் தாக்கம் இந்திய அறிவுஜீவிகள் மத்தியில் உறுதியாக வளர்ச்சி பெற்றது. சோவியத் நாட்டின் தொழில்மயமாக்கலால் தெளிவாகத் தெரியவந்த சாதனைகளும், இவை ஜெர்மானியர்களைப்போரில் வீழ்த்தியதும், விண்வெளி ஆய்வில் அமெரிக்கர்களுடன்போட்டியிட்டு முன்னிலை பெற்றதும் – அண்டை நாடான சீனாவில் விவசாயிகளின் தலைமையிலான புரட்சியின் வெற்றியும், மார்க்ஸ் தனது பொருளாதார சமூகவியல் எழுத்துக்கள்மூலம் விடுத்த கிளர்ச்சியூட்டும் அழைப்பும் – இந்தியாவில் நிலவிவந்த வர்க்கவேறுபாடுகளும் , கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளும்  இதில் பெரும்பங்கு வகித்தன. வரலாற்றுத்தளத்தில் மார்க்க்சியத்தின் செல்வாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பல்வேறு துறைகளில் வழிகாட்டும் எழுத்துக்களும், ‘பழங்கால இந்தியாபற்றி அறிஞர் டி.டி.கோசாம்பி இயந்திர கதியில் அல்லாமல் விமர்சனப்பார்வையோடு வகுத்த ‘மார்க்சீயப் பகுப்பாய்வுமுறையும் இதைச்செழுமைப்படுத்தியது.

  சுதந்திர இந்தியாவின் அறிவுடைமையின் வரலாற்றை, இதில் இடமும் செல்வாக்கும் பெறுவதற்காக லிபரல்களுக்கும்,இடதுசாரிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருபோராட்டமாகப் பெரிதுபடுத்தி ஒருவர் சித்தரிக்க முயலலாம். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் போன்ற சில மையங்கள் லிபரல்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பிற மையங்கள் மார்க்சிஸ்ட்களின் செல்வாக்கின்கீழ் இருந்தன. லிபரல்களுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் நடுவில் – மார்க்ஸ் அல்லது லெனினைவிட- லோகியா மற்றும் நாராயணின் செல்வாக்கின்கீழ் சோசலிஸ்ட்கள் இருந்தார்கள். சோசலிஸ்ட் அறிவுஜீவிகள் தனி நபர்களையோ அல்லது மாநிலத்தையோ சாராமல் சமுதாய இனப்பிரிவுகளில் நிலைகொண்டார்கள். இதன்படி அவர்கள் சாதியை அடிப்படையாகக்கொண்டு மிகவும்பெரிய உடன்பாடான நடவடிக்கைகளை வேண்டினார்கள். பொருளாதார வளர்ச்சியில் கிராம சமுதாயம் ஒரு மையப்புள்ளியாக ஆக்கப்படவேண்டும் என்றார்கள்.

   இந்த மூன்று முக்கிய முகாம்களுக்கிடையே நடைபெற்ற விவாதங்கள் அடிக்கடி நடவடிக்கைகளுக்குத் தூண்டுபவைகளாகவும், கூர்மையாகவும் நடைபெற்றன. லிபரல்கள் காலனியாதிக்கம் இந்தியாவுக்கு நல்லது, கெட்டது என இரண்டுமாக இருந்த்து என்று சிந்தித்தார்கள்.  சோசலிஸ்ட்களும், மார்க்சிஸ்ட்களும் பிரிட்டிஷ் ஆட்சியை இருண்டது என வர்ணித்தார்கள். லிபரல்கள் அரசு தனது அதிகாரத்தை மட்டுப்படுத்திக்கொண்டு தனிநபர்களின் குடியாட்சி உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். மார்க்சிஸ்ட்கள் பொருளாதாரம் மற்றும் சமூகவாழ்வில் அரசு தலையிட்டுச் செயல்படவேண்டும் என விரும்பினார்கள். லிபரல்கள் இந்தியா மேற்கு உலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்தார்கள். மார்க்சிஸ்ட்கள் சோவியத் ஆதரவு வெளியுறவுக்கொள்கை வேண்டும் என்றார்கள்.  மார்க்சிஸ்ட்கள் வர்க்கங்களின் முதனமையை வலியுறுத்தினார்கள்.  சோசலிஸ்ட்கள் சாதியை முதன்மைப்படுத்தினார்கள். லிபரல்களோ தனிநபர்களை முன்னிறுத்தினார்கள்.

  ஒட்டுமொத்தமாக இந்த விவாதங்களில் காணாமல்போன குரல்கள் பழமைவாதி களுடையதாக இருந்தன. லிபரல்களும், மார்க்சிஸ்ட்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவிட்டாலும் இந்தியாவின் அறிவார்ந்த வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் மிகவும் செல்வாக்குமிக்க பல்கலைக்கழகங்களின் துறைகளையும், ஆய்வுமையங் களையும், அரசு நிதிஉதவியில் செயல்பட்ட ‘இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக்கழகம்’, ‘இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம்ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த அறிஞர்கள் சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் முக்கியத்துவம் பெற்றார்கள்.  லிபரல்கள் மற்றும் சோசலிஸ்ட்கள் இளையதலைமுறையினருக்குப் பயிற்சி அளித்து வளர்த்தார்கள். இது கொள்கைகளை வெறுமனே கற்பித்த்து மட்டுமல்ல: அந்தக் காலகட்டத்தின் உணர்வுகளைப் பாதுகாத்ததுமாகும். காலனிய நுகத்தடியிலிருந்து விடுபட்ட இந்தியாவும், இந்தியர்களும் ஓய்வின்றி இந்தியாவை நவீனமயமாக்க, தொழில்மயமாக்க,  பகுத்தறிவுக்கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரப்ப, சமுதாயத்தின் பிற்பட்ட நிலையைக் குறைக்க – குறிப்பாக கேடுவிளைவிக்கும் சாதியத் தப்பெண்ணங்களைப் போக்க, ஏழ்மைக்கு-குறிப்பாக –கிராமப்புற ஏழ்மைக்கு முடிவுகட்ட  உறுதி மேற்கொண்டார்கள். எதிர்காலம் சமிக்கைகளைக் காட்டியது: இறந்த காலமோ வழிமறைத்து நின்றது.

      எனது சிலதனிப்பட்ட அனுபவங்கள் இங்கு பொருத்தமாக இருக்கும். 1974ல் பி.ஏ., பட்டம்பெற நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 10 ஆண்டுகளுக்குப்பிறகு எனது ஆய்வை முடித்து டாக்டர் பட்டம் பெற்றேன். இந்திய அறிஞர்களோடு கடந்த 40 ஆண்டுகளாக நான் வாழ்ந்தபோதும், வேலைசெய்தபோதும் நூற்றுக்கணக்கான சமூகவிஞ்ஞானிகள், வரலாற்று அறிஞர்களை நான் சந்தித்தேன். அவர்களோடு பேசினேன்.  அவர்களைப் படித்தேன். இவற்றின் மூலம் நான் உருவானேன். இவர்களில் ஏராளமானோர் இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மார்க்சிஸ்ட்கள், மாவோயிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், லோகியாவிஸ்ட்கள், உடனிருந்த லிபரல்கள், உயர்நிலை லிபரல்கள், நேருவிஸ்ட்கள், காந்தியிஸ்ட்கள் - ஆனால் எந்த ஒருவகுப்பறையிலும், கூட்ட அரங்குகளிலும்  தன்னை வலதுசாரி என அடையாளப்படுத்திக் கொண்ட அல்லது அந்தக்கருத்துக்கு உடன்பாடு தெரிவித்த எந்த ஒருவரையும் சந்தித்ததை என்னால் நினைவுகூர முடியவில்லை. இதுதான்  இன்றுவரை இந்தியக்கல்வி அமைப்பில் லிபரல் மற்றும் இட்துசாரி சிந்தனைகள் முழுஆளுமை கொண்டிருந்த நிலை.

  இந்த நூற்றாண்டின்முடிவில், அல்லது எனக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளில் தங்களது அறிவுத்திறனாலும், படைப்புக்களாலும் சிறந்து விளங்கிய வரலாற்று அறிஞர்களில்- இர்பான் ஹபீஃப், ஆர்.எஸ்.சர்மா, ரணஜித் குஹா, ரொமிலா தாபர், பிபின் சந்திரா, அமலேந்து குஹா, சுமித் சர்க்கார் மற்றும் சவ்யஷாஷி பட்டாச்சார்யா ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிறிய அல்லது பெரிய அளவில் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அசின்தாஸ் குப்தா, தர்மகுமார், பார்த்தசாரதி குப்தா , அமலேஷ் திருபாதி, ரஜத் காந்த ராய், மஸ்ரூல்ஹாசன் மற்றும் தபன்ராய் சௌத்திரி ஆகியோர் லிபரல்கள். தலைசிறந்த அரசியல் விஞ்ஞானிகளில் லிபரல்களான ரஜினி கோத்தாரி, பஸிருத்தீன் அஹமது, ரமேஷ்ரே ராய்,, மார்க்சிஸ்ட்களான ஜாவேத் ஆலம், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் தாகூர்-காந்தியின் புகழ் பாடுபவராக- மரபுசார்ந்த பிரிவுகளால் வகைப்படுத்தப்படுவதை மறுத்த ஆஷிஷ் நந்தி லிபரல்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட புகழ்பெற்ற சமூகவியலாளர்களான எம்.என்.சீனிவாஸ், ஆந்த்ரே பட்டெய்லி, குடும்பம், குடும்ப உறவுகள், மதம் போன்ற பழமைவாதக்கொள்கைகளை ஆய்வுசெய்திருந்தாலும் தன்னைஒரு லிபரல் என்ற டி.என். மதன், 1960-1970களில் மிகவும் அறியப்பட்ட புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களான கே.என்.ராஜ், அமார்த்திய சென், வி.எம்.தாண்டேகர், அமித் பாதுரி, கிருஷ்ண பரத்வாஜ், பிரணாப் பர்தான், பிரபாத் மற்றும் உஷா பட்நாயக், அசோக் ருத்ரா ஆகியோர் இட்துசாரிக் கொள்கைகளின்பக்கம் நிற்பவர்கள்.

   ரோஜர் ஸ்கர்ட்டன் தனது ‘How to be a Conservative?’ நூலில் ‘பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் 70% கல்வியாளர்கள் – அறிஞர்கள் தங்களை இடது சார்பாளர்என இனம் கண்டுகொள்கிறார்கள்என்கிறார். இந்த நாடுகளில் கற்பித்த எனது சொந்த அனுபவம் இந்தக்கருத்தை ஆதரிக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவன்ங்களில் உள்ள பழமைவாத அறிஞர்கள் தாங்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். இந்தியாவில் உள்ள சிறந்த ஆய்வுமையங்களில்  நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இங்கு பழமைவாதிகள் மிகவும் சிறுபான்மையினராக, ஆதரவற்ரவர்களாக உள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைதவர்கள் மட்டுமல்ல: அடிக்கடி காணாமல் போனவர்களும்கூட.

--------------------------------------------------- பகுதி 4 தொடர்கிறது -----------------