ஆர்.எஸ்.எஸ். மதவெறி
அடியாள் அசீமானந்தாவின்
ஒப்புதல்
வாக்குமூலம்
நம்பிக்கையாளர் அசீமானந்தா -------------------------------------------------------- லீனாகீதாரெகுநாத்
நம்பிக்கையாளர் அசீமானந்தா -------------------------------------------------------- லீனாகீதாரெகுநாத்
தி
கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர்குழு மேலாளர்
தமிழில்: செ.நடேசன்
‘சுவாமிஜியை அழைத்துவாருங்கள்’-ஜெயிலர்
உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் ஜெயலரின் அலுவலகத்தை விட்டுவிரைந்து, சிறையின்
தரைத்தளத்திற்குச் சென்றனர் சுவர்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒரேநேரத்தில் அலறுவது
போன்ற, காதுகளைச் செவிடாக்கும் சத்தம் அறைகளினூடே எதிரொலித்த்து.
அடுத்த
சில நிமிடங்களில் இந்து கலவரவாதியும், 2006 முதல் 2008க்கு இடையே நாடுமுழுவதும்
பொதுமக்களைக் குறிவைத்துப் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம்
தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சுவாமி அசீமானந்தா ஜெயிலரின்
அறைக்குள் காலடி எடுத்துவைத்தார்.
அவர் ஒருகாவி வேட்டியையும்,காவிகுர்தாவையும் முழங்கால்வரை தொங்குமாறு அணிந்திருந்தார். அவரது துணிகள் புத்தம்புதியதாகச் சலவைத் தேய்ப்பு செய்யப்பட்டிருந்தன. உல்லன் மங்கி கேப் அவரது நெற்றிக்குக்கீழ் இழுக்கப்பட்டிருக்க, அவரது கழுத்தைச்சுற்றி ஒரு சால்வை போர்த்தப்பட்டிருந்தது. அவர் என்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். நாங்கள் இருவரும் ‘நமஸ்தே’ பரிமாறிக் கொண்டோம். பின்னர் அவர் என்னை அடுத்திருந்த ஓர் அறைக்கு இட்டுச்சென்றார். அங்கே வெள்ளை வேட்டி, குர்தா அணிந்திருந்த எழுத்தர்கள் தடிமனான பதிவேடுகளில் மூழ்கியிருந்தனர். அவர் கதவுக்குப்பின் இருந்த ஒருபெரிய மரப்பெட்டியின்மீது அமர்ந்து, அருகில் இருந்த டெஸ்க்கிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு நல்ல உபசரிப்பாளராக விளங்கிய அவர், எனது வருகையைப்பற்றி விசாரித்தார். ’உங்கள் கதையை யாராவது ஒருவர் சொல்லவேண்டுமே’ என்றேன் நான்.
அவர் ஒருகாவி வேட்டியையும்,காவிகுர்தாவையும் முழங்கால்வரை தொங்குமாறு அணிந்திருந்தார். அவரது துணிகள் புத்தம்புதியதாகச் சலவைத் தேய்ப்பு செய்யப்பட்டிருந்தன. உல்லன் மங்கி கேப் அவரது நெற்றிக்குக்கீழ் இழுக்கப்பட்டிருக்க, அவரது கழுத்தைச்சுற்றி ஒரு சால்வை போர்த்தப்பட்டிருந்தது. அவர் என்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். நாங்கள் இருவரும் ‘நமஸ்தே’ பரிமாறிக் கொண்டோம். பின்னர் அவர் என்னை அடுத்திருந்த ஓர் அறைக்கு இட்டுச்சென்றார். அங்கே வெள்ளை வேட்டி, குர்தா அணிந்திருந்த எழுத்தர்கள் தடிமனான பதிவேடுகளில் மூழ்கியிருந்தனர். அவர் கதவுக்குப்பின் இருந்த ஒருபெரிய மரப்பெட்டியின்மீது அமர்ந்து, அருகில் இருந்த டெஸ்க்கிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு நல்ல உபசரிப்பாளராக விளங்கிய அவர், எனது வருகையைப்பற்றி விசாரித்தார். ’உங்கள் கதையை யாராவது ஒருவர் சொல்லவேண்டுமே’ என்றேன் நான்.
இரண்டு ஆண்டுகளுக்குமேல் அசீமானந்தாவிடம் நான்
நடத்திய நான்கு நேர்காணல்களில் முதலாவதின் தொடக்கம் இவ்வாறு இருந்தது. தற்போது
அவர் குறைந்தபட்சம் 82பேர்களைக் கொன்ற 3 குண்டுவெடிப்புக்கள் தொடர்பான கொலை,
கொலைமுயற்சி, சதித்திட்டம் தீட்டியது, கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களின்
கீழ் விசாரணையில் இருந்துவருகிறார். அவர் மேலும் இரண்டு குண்டு வெடிப்புவழக்குகளில்
விசாரிக்கப்படஉள்ளார்: ஆனால், அவற்றின்மீது முறையான குற்றச்சாட்டுக்கள் இன்னும்
சாட்டப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 5 தாக்குதல் கள், 119 பேரைக் கொன்றது மற்றும் இந்தியசமுதாயத்தை
அரிப்பவராக வேலைசெய்தது ஆகியவற்றுக்காகத் தண்டனை அளிக்கப்பட்டால் அவர் மரணதண்டனையை
எதிர்கொள்ள வேண்டும்.
எங்களது உரையாடல்கள் நடைபெற்றபோது அசீமானந்தா
மெல்லமெல்ல உற்சாகம் அடைந்து மனம்திறந்து பேசினார். அவரது வாழ்க்கையைப்பற்றி
அவர்கூறிய கதை குறிப்பிடத்தக்கது. இந்தக்காலகட்டங்களில் பெரும்பாலானநேரம்
‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்’கின் ஆதிவாசிகள்
பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்’(வி.கே.ஏ) என்ற
அமைப்பின்கீழ் சங்பரிவாரத்தின் ‘ஹிந்துத்வா’வையும்
அதன்நோக்கமான ‘ஹிந்துராஷ்ட்ர’த் தையும் அவர் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார். இப்போது
வயது 60களின் துவக்கத்தில் உள்ள அசீமானந்தா ஒருபோதும் தனது ஆழ்ந்த
நம்பிக்கைகளிலிருந்து தளர்வோ, நெகிழ்வோ அடைந்ததில்லை.
மோகன்தாஸ் காந்தியின் கொலைக்குப்பிறகு
நாதுராம்கோட்சேவும்,அவர் கூட்டாளி நாராயண் ஆப்தே-வும் 1949ல் அம்பாலா சிறையில்
தூக்கிலிடப்பட்டு, எரியூட்டப்பட்டார்கள்.அவர்களது கூட்டுச்சதிகாரரான கோட்சேயின்
சகோதரர் கோபால்கோட்சே 18ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். “கோபால்கோட்சே
இருந்த அதே ’செல்’ (அறை) லில் நான்
வைக்கப் பட்டுள்ளேன்” என்று அசீமானந்தா
பெருமைபொங்க என்னிடம் கூறினார். இன்று ‘இந்துதீவிரவாத வன்முறையின் மிகமுக்கியமான
(முகம்) அடையாளமாக’ அசீமானந்தா விளங்குகிறார். குண்டுவெடிப்புக்களின்முன்
அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர்கள், அசீமானந்தாவை அசாதாரணமான கொடூரனாக,
பொறுத்துக்கொள்ளவே முடியாத மனிதனாக என்னிடம் விவரித்தார்கள். அந்தச்சிறையின்
இருளடைந்த ஆவணக்காப்பறையில் நான் கண்ட மனிதன் சிறைவாசத்தால் தளர்ந்துபோனவராக, ஆனால்
செய்த தவறுகளுக்காக வருத்தப் படாதவராகவும் இருந்தார். “எனக்கு எது நேர்ந்தாலும்
அது இந்துக்களுக்கு நல்லது. அது மக்களிடையே ஹிந்துத்வா உணர்வைக் கிளறிவிடும்” என்று அவர் என்னிடம் கூறினார். (லோகோன் மே ஹிந்துத்வா கோ
பாவ் ஆவே கா)
2007
பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் அதன்
வழக்கமான பிளாட்பாரம் 18ல் இருந்து புறப்பட்டது. இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்குமிடையே உள்ள இரண்டு ரயில்வண்டித் தடங்களில் ஓடும் ஒரேஒரு எக்ஸ்பிரஸ்
‘ஃப்ரண்ட்ஷிப்எக்ஸ்பிரஸ்’ என்று
அழைக்கப்படும் ‘சம்ஜுதா எக்ஸ்பிரஸ்’. அந்த இரவில் 750
பயணிகளில் ஏறத்தாழ முக்கால்பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்
பாகிஸ்தானியர்கள். அந்த எக்ஸ்பிரஸ் தனது பயணத்தைத் தொடங்கிய ஒருமணி
நேரத்திற்குப்பின்-நல்லிரவுக்குச் சில நிமிடங்கள்முன்-முன்பதிவு இல்லாத 16ஆவது பெட்டியின்
இரண்டு கம்பார்ட்மெண்ட்களில் தீவிர வெடிப்புத் திறன்கொண்ட குண்டுகள்(ஐ.ஈ.டி)
வெடித்தன. அந்த இரவில் சீறிவெடித்த குண்டுகளால் ரயிலில் தீப்பிடித்தது. பயணிகள்
உள்ளே இருந்து வெளியே செல்லவிடாமல் தடுக்கும்வகையில் குண்டுவெடிப்பால் வெளியேறும்
வாயில்கள் அடைக்கப்பட்டன.
‘அது மிகவும் பயங்கரமாக இருந்தது’ என ரயில்பாதை ஆய்வாளர் ஒருவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழிடம் தெரிவித்தார். அந்தப்பெட்டி எங்கிலும் முழுவதும் எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் வெடிக்காத குண்டுகள் (ஐ.இ.டி) பிஇடிஎன், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய இரசாயனங்களின் கலவைகளாக இருந்தன. இந்தத் தாக்குதலில் 68 பேர் இறந்தனர்.
‘அது மிகவும் பயங்கரமாக இருந்தது’ என ரயில்பாதை ஆய்வாளர் ஒருவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழிடம் தெரிவித்தார். அந்தப்பெட்டி எங்கிலும் முழுவதும் எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் வெடிக்காத குண்டுகள் (ஐ.இ.டி) பிஇடிஎன், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய இரசாயனங்களின் கலவைகளாக இருந்தன. இந்தத் தாக்குதலில் 68 பேர் இறந்தனர்.
அசீமானந்தா சம்பந்தப்பட்ட ஐந்து தாக்குதல்களில்
இதுதான் இரண்டாவதும், மிகப்பயங்கரமானதும் ஆகும். இப்போது அவர் சம்ஜுதா ரயில்குண்டு
வெடிப்பில் முதல் குற்றவாளியாகவும், மே 2007ல் 11பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா
மசூதி குண்டுவெடிப்பில் மூன்றாவது குற்றவாளியாகவும், அக்டோபர் 2007ல் 3பேரைக் கொன்ற
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்தர்கா குண்டுவெடிப்பில் ஆறாவது குற்றவாளியாகவும்
உள்ளார். மேலும், செப்டம்பர் 2006ல் மற்றும் செப்டம்பர் 2008ல் 37 உயிர்களைப்
பறித்த மஹாராஷ்ட்ரா மாலேகான் தாக்குதலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இன்னும்
குற்றச்சாட்டு அளிக்கப்படவில்லை.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை பல்வேறு
காலகட்டங்களில், மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான்
தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு, மத்தியப் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ) மற்றும்
தேசியப் புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) உள்ளிட்ட பல்வேறு குழுக்களால் புலனாய்வு
செய்யப்பட்டன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தபட்சம் அரை டஜன்
குற்றக்குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள
31பேர்களில் அசீமானந்தாவுடன் இணைந்து செயல்பட்டவர்களில் பா.ஜ.க.வின் மாணவர் அணியான
ஏ.பி.வி.பி யின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரயக்சிங் தாகுர் மற்றும் இந்தூர்
மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுனில்ஜோஷி ஆகியோர் அடங்குவர். எல்லாப்
புலனாய்வுக்குழுக்களும் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அசீமானந்தா மையப்
பாத்திரத்தை வகித்தவர் என உறுதிப்படுத்தியுள்ளன. அசீமானந்தா தனது சொந்தக் கணக்கில்
சதித்திட்டக்கூட்டங்கள் நடத்தினார். தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத்
தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை
வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.
2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரியில் டெல்லி
மற்றும் ஹரியானாவில் உள்ள நீதிமன்றங்களில் அசீமானந்தா இரண்டு ஒப்புதல்
வாக்குமூலங்களை அளித்தார். அவற்றில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதை
ஒப்புக்கொண்டார். அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது தமக்குச் ‘சட்டபூர்வ
உதவிகள் தேவை இல்லை’ என அவற்றை மறுத்தார். அவர் நீதிமன்றக்காவலில் 48மணிநேரம்
இருந்தார். புலனாய்வுக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்மீது ஒவ்வொரு
வாக்குமூலத்தையும் பதிவுசெய்வதற்குமுன் அவர் தனதுமனதை மாற்றிக் கொள்வதற்கான
வாய்ப்புக்கள் தரப்பட்டன. அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் உறுதியாக
இருந்தார். அவரது வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டன. அவரது
ஒப்புதல் வாக்குமூலமும், அவரது கூட்டுச்சதிகாரர்களான இரண்டுபேரின்
வாக்குமூலங்களும் ”அந்தத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த
தலைவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது தெரிந்தே வகுக்கப்பட்டன’ என்றன.
2011 மார்ச் 28அன்று அசீமானந்தா சட்ட உதவியை
ஏற்றுக்கொண்டார்.ஆனால், மறுநாளே முன்னர் அவர் ஒப்புக்கொண்ட அனைத்தையும் ‘சித்ரவதை
செய்து பலவந்தமாக வாங்கப் பட்டவை’ எனப் பின்வாங்கினார்.
விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தில் ‘அசீமானந்தாவின் ஒப்புதல்
வாக்குமூலங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும்,
ஆழ்ந்த கவனத்துடன் செய்யப்பட்டதாகவும் உள்ளது. இது அரசியலாக்குவதாகவும், வழக்கு நடத்துவதாகப்
பாசாங்கு செய்வதாகவும், ஊடகங்கள்மூலம் ஒருமுடிவை உருவாக்குவதாகவும், அதன்மூலம் உலக
அளவில் இந்து தீவிரவாதம்பற்றி ஒரு முன்னோட்டத்தை உருவாக்குவதாகவும் ஆளும்கட்சியின்
நோக்கங் களுக்காகத் திட்டமிட்டதன் ஒருபகுதியாகவும் உள்ளது’ எனக்குறிப்பிடப்பட்டது. அசீமானந்தாவுக்காக
சம்ஜுதா வழக்கில் ஆஜராகி வாதாடும் பலவழக்கறிஞர்களும்,’எல்லா வழக்கறிஞர்களும் சங் அமைப்பின் உறுப்பினர்கள்தான்’ என்றும்,ஆர்.எஸ்.எஸ்.-ன் சட்டப் பிரிவான ‘அகில பாரதிய அதிவக்தா பரிஷத்’ன் கூட்டங்களில் முடிவெடுத்து இந்த வழக்குகளை நட்த்துகிறோம்’ என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்.
நான் அசீமானந்தாவைப் பேட்டிகண்டபோது அவர்
சித்ரவதை செய்யப்பட்டதை மறுத்தார். அத்துடன் அவரது வாக்குமூலங்கள் வற்புறுத்திப்
பலவந்தமாகப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டுவெடிப்புக்களுக்காக அவர்
சி.பி.ஐ.ஆல் கைதுசெய்யப்பட்டபோது ‘அதுதான் எல்லாவற்றையும் சொல்வதற்கேற்ற நல்லநேரம்’ என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார். ’எனக்குத் தெரியும், நான் தூக்கிலிடப்படுவேன் என்று. ஆனால்
நான் ஏற்கனவே கிழவனாகி விட்டேன்’
எங்களது தொடர் உரையாடல்களின்போது, அவர்
சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தின் விவரங்கள் முழுமையாக வெளிவந்தன. மூன்றாம் மற்றும்
நான்காம் நேர்காணல்களில் அவரது தீவிரவாதச் செயல்பாடுகள் அனைத்தும் இப்போது
ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராக, அப்போது பொதுச்செயலாளராக இருந்த மோகன்பகவத்வரை ஒப்புதல்
அளிக்கப்பட்டவையே என்று தெரிவித்தார். வன்முறைத்
தாக்குதல்கள்பற்றி பகவத் என்னிடம் சொன்னார்:. நீங்கள் இதில் வேலை செய்யலாம்’. இந்திரேஷ்குமார் தொடர்ந்தார்: நீங்கள் இதில்
சுனில்ஜோஷியடன் இணைந்து வேலை செய்யுங்கள். ஆனால் இதில் நாங்கள் தொடர்பு
படுத்தப்படக்கூடாது. நீங்கள் இதைச்செய்தால் நாங்களும் உங்களுடன் இருப்பதாக்க்
கருதலாம்,”
ஜூலை2005ல் நடைபெற்றதாகக்
கூறப்பட்டஒருகூட்டத்தைப்பற்றி என்னிடம் கூறினார். சூரத் நகரில் நடைபெற்ற
ஆர்.எஸ்.எஸ். உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டத்தின்பின் மூத்த சங் தலைவர்களான
பகவத், அந்த அமைப்பில் அதிகாரம் படைத்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேரில்
ஒருவரான இந்திரேஷ்குமார் உள்ளிட்டோர் குஜராத்-ல்,டேங்க்ஸ்ல் உள்ள ஒருகோவிலுக்குப்
புறப்பட்டார்கள். அந்தக் கோவிலிலிருந்து இரண்டுமணி நேரக் கார் பயணத்தில்
அடையக்கூடிய ஆற்றங்கரையில் உள்ள ஒரு கூடாரத்தில் அசீமானந்தா வசித்து வந்தார். மோகன்பகவத்,
இந்திரேஷ்குமார் இருவரும் அசீமானந்தாவையும் அவரது கூட்டாளி யான சுனில்ஜோஷியையும்
சந்தித்தனர். ஜோஷி, பகவத்திடம் ‘இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் இலக்குகளைத்
தாக்குவதற்கான திட்டங்களை’ விவரித்தார்.
அசீமானந்தாவின் கூற்றுப்படி அந்த இருதலைவர்களும் அந்தத் திட்டங்களை ஏற்று
அங்கீகரித்தார்கள். இந்திரேஷ் அசீமானந்தாவிடம் ‘நீங்கள் இந்தத் திட்டத்தில்
சுனிலுடன் இணைந்து செயல்படுங்கள். நாங்கள் இதில் சம்பந்தப்படமாட்டோம். ஆனால்,
நீங்கள் செய்தால் நாங்கள் உங்களுடனேயே இருப்பதாகக் கருதலாம்” என்றுகூறினார்.
அசீமானந்தா தொடர்ந்து கூறினார்:’ சுவாமிஜீ! நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று
இளைப்பாறுவோம்.எந்தத் தவறும் அதன்பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை
நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச்
செய்தோம்’ என்று மக்கள் கூறமாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு
இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச்
செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு’ என்றார் மோகன்பகவத்
புலனாய்வுக்குழுக்களின் குற்றக்குறிப்புக்கள் இந்திரேஷ்குமார்
சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார்
எனக்குறிப்பிட்டுள்ளன. ஆனால், மோகன்பகவத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவரையும்
தொடர்புபடுத்தவில்லை. சிபிஐயால் இந்திரேஷ்குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டபின்
இந்தவழக்கு தேசியப்புலனாய்வுக்குழுவால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அசீமானநதா மற்றும்
பிரக்யாசிங் ஆகியோரைத்தாண்டி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பரிசீலிக்கவில்லை.
(இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை, யார்யாரெல்லாம் குண்டுகளை வைத்தார்களோ
அவர்களை எல்லாம் இணைக்கும் சரடாக இருந்த சுனில்ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.)
இந்தத்தாக்குதல்களில் இந்திரேஷ்குமாருக்குப் பங்கு உண்டு என்று 2010ன்
பிற்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்ததுமுதல் ஆர்.எஸ்.எஸ். அவரைச் சுற்றியிருந்த
தொடர்புகளை மூடி மறைத்தது. மோகன்பகவத் -ஒரு சர்சங் சாலக் முன்எப்போதும்
மேற்கொள்ளாத நடவடிக்கையாக- குமார்மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கும் தர்ணாவில்
பங்கேற்றார். பி.ஜே.பி.யின் ஆதரவும் அவருக்கு இருந்தது. பி.ஜே.பி.யின் தேசிய
செய்தித் தொடர்பாளரான மீனாட்சி லேகி குற்றச்சாட்டில் இந்திரேஷ்குமார் பெயர்
இடம்பெற்றிருந்தது முதலே அவரது வழக்கறிஞராக இருந்தார். குற்றம்
சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரின் வழக்கறிஞர், ‘இந்திரேஷ்குமார் மிகவும் பதவி
ஆசை கொண்டவர்’ என்றும், ‘அவர் சர்சங் சாலக் ஆவதற்காகக் காத்திருப்பவர்’ என்றும் என்னிடம் கூறினார்.
உள்துறை அமைச்சகத்துக்குச் (MHA) சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையை
ஆய்வுசெய்ய புலனாய்வுக்குழுக்களின் அதிகாரி ஒருவர் (தனது பெயர் தெரியக்கூடாது என்ற
நிபந்தனை யின்பேரில்) எனக்கு அனுமதி தந்தார். அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தை ஆர்.எஸ்.எஸ்.
தலைமைக்கு அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதால் அந்த அமைப்பை ஏன்
தடைசெய்யக்கூடாது? என விளக்கம் கேட்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், உள்துறை
அமைச்சகம் அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
1948ல்
காந்தியின் படுகொலைக்குப் பின்னும், 1975ல் அவசரநிலைக் காலத்திலும், 1992ல் பாபர்
மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டதுபோல் மீண்டும் தடை வந்துவிடுமோ என்ற
அச்சம் ஆர்.எஸ்.எஸ்.தலைமைக்கு ஏற்பட்டது. எப்பொழுதெல்லாம் தீவிரவாத வன்முறைக் குற்றச்சாட்டுக்கள்
தனதுஉறுப்பினர்கள்மீது சுமத்தப்படுகிறதோ, அப்பொழுதெல் லாம் – நாதுராம் கோட்சே
விஷயத்தில் மேற்கொண்ட தந்திரத்தைப்போல் – ‘அவர்கள் எல்லாம் சங் அமைப்பிலிருந்து
முன்பே விலகிவிட்டார்கள் அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் அல்லது
வன்முறையைத் தழுவியதால் தனிமைப்பட்டு விட்டார்கள் .என்வே, அவர்கள் அமைப்பின்
உறுப்பினர்களா? இல்லையா? என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று கூறும்
தந்திரத்தைக் கையாண்டு வந்த்து.
அசீமானந்தா இந்தவிஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் க்கு ஒருதீவிரப் பிரச்சனை ஆனார்.
1952ல் வன்வாசி கல்யாண் ஆசிரமம் துவங்கியதிலிருந்து அது சங் குடும்பத்தின்
உட்கருவாக விளங்கி வந்துள்ளது. அசீமானந்தா தனது இளமைக்காலம் முழுவதையும் இந்த
அமைப்புக்கு அர்ப்பணித் திருந்தார். அவர் தாக்குதல்களைத் திட்டமிட்ட நேரத்தில்
அவருக்காகவே உருவாக்கப்பட்ட மதச்செயல்பாடுகளுக்கான இன்னொரு பிரிவான ‘வன்வாசி
கல்யாண் ஆசிரம’த்தின் தலைமைப் பொறுப்பில் பத்தாண்டுகளாக இருந்து வந்தார். தீவிரவாதத்
தாக்குதல் திட்டங்கள் துவங்குவதற்கு முன்பேகூட வன்முறைக்கலவரங்கள்,-ஒருங்கிணைந்த
மதக்கலவரங்கள் ஆகிய அனைத்தும் அவரது நன்கறியப்பட்ட வழிமுறையின் பகுதிகளாக இருந்தன.
2005ன்
மத்தியில் நிகழ்ந்த சதித்திட்டங்களில் அசீமானந்தாவின் ஈடுபாட்டை மோகன்பகவத்
மற்றும் இந்திரேஷ்குமார் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். அசீமானந்தா அந்த அமைப்பிலிருந்து
நீக்கப்பட வில்லை. அந்த ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். வாரஇதழான ‘ஆர்கனைசர்’ல் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி அசீமான்ந்தா ஆர்.எஸ்.எஸ்.-ன் மரியாதைக்குரிய
தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும்வகையில் ரூ.1,00,00
நிதி அளித்துக் கௌரவிக்கப்பட்டார். பி.ஜே.பி.யின் முக்கிய முன்னாள் தலைவரான
முரளிமனோகர் ஜோஷி அந்த விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திரேஷ்குமார்
தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களின்மீது முழுவிசாரணைக்கு உட்பட்டி ருந்தபோதும்,
அசீமானந்தாவுடன் இந்திரேஷ்குமாருக்கு இருந்த உறவை ஆர்.எஸ்.எஸ். மிகசௌகரியமாகக்
கேள்விக்கிடமின்றி மறுத்தது.
புகழ்பெற்ற இந்துசீர்திருத்தவாதியான சுவாமி அக்னிவேஷ், கடந்த பத்தாண்டுகளாக
சங் அமைப்பின் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டனம்
செய்ததோடு என்னிடம், ’ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்து சமூகத்திலுள்ள மற்றவர் களையும்,
தங்களையும் தீவிர இந்துத்வா மூலம் துன்புறுத்துகிறார்கள்.இது கண்டனத் திற்குரியது’ என்று கூறினார். இந்துத்வா பற்றி மூன்று புத்தகங்களை
எழுதிய அரசியல் அறிவியலாளர் ஜோதிர்மயா சர்மா ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமான
மற்றும், வெளிப்படையான செயல்பாடுகளில் தன்னை முழுவதுமாக
ஈடுபடுத்திக்கொள்கிறது. சிவாஜியின் குருவான ராம்தாஸ் முன்வைத்த ‘தாக்கிவிட்டு
ஓடிவிடும்’ கொரில்லா போர்முறை ஆர்.எஸ்.எஸ்.-ன் மையப்புள்ளியாக இருக்கிறது. ஆனால் இங்கு
உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்துமதத்தின் பெயரில் மிகவும் தைரியமாக
மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கக்கூடிய வலுவான அரசியல் கட்சிகளோ,
பலம்வாய்ந்த பத்திரிக்கைகளோ நம்நாட்டில் போதுமான அளவு இல்லை என்பதே’ என்கிறார்.
1948ல்
நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவம் முதல் இத்தகைய கண்டனங்களுக் கிடையேயும் சங் அமைப்பு
நீண்டதூரம் வந்துவிட்டது. ஆட்களைத் தயார்செய்வதும், இந்துராஷ்ட்ரத்தை
உருவாக்குவதுமான தங்கள் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் இணைப்பு அமைப்புக்களும்
– குறிப்பாக பா.ஜ.க.வும் இப்போது இந்திய சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு
பெரியசக்தியாகத்தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அசீமானந்தாவும்கூடப்
பல்வேறுவகை களில் இந்தமுயற்சியின் தயாரிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களைப்
பூதாகரமான அளவில் பகிர்ந்துகொள்கிறார். ‘உலகளாவிய இந்துராஷ்ட்ராதான் தனது நோக்கம்’ என்று அவர் என்னிடம் கூறினார்.
(தொடர்கிறது-பகுதி இரண்டு)





