Saturday, 19 December 2015

உள்களும் வெளிகளும் : மோடி மாறவேஇல்லை

ஏ.ஜி.நூரானி
உள்களும் வெளிகளும் : மோடி மாறவேஇல்லை
இந்தியா ‘இந்து தலிபானால்ஆளப்படுகிறது?
தமிழில்: செ.நடேசன்

ஓ தெய்வங்களே,
இது வியப்பில் ஆழ்த்துகிறது என்னை.
நம்பமுடியாத எரிச்சலூட்டுபவனாக
இத்தகைய ஒருமனிதனா?
 ஆக்குங்கள் இந்தப்பெருமித உலகை
புல்மரங்களை மட்டுமே
தாங்குவதாக.
-ஷேகஸ்பியர், ஜூலியஸ் சீஸர்
பிரதமர் நரேந்திரமோடி அறநெறிபிறழ்ந்த சில்லறைப்பேர்வழிகளுக்குக் கடிவாளமிடுவார் என எதிர்பார்ப்பது வீண்முயற்சி. ஏனெனில் அவர்கள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின் மையமாக அமைந்துள்ளார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த அவரால் முடியாது: அதை அவர் விரும்பவும் மாட்டார்.



 2014 மே 26ல் இந்தியாவின் பிரதமராகிய ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் இந்தியமக்கள் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் குணாம்சக்குறைபாடுகளைக் கண்டறியத் துவங்கி உள்ளார்கள்.அவரும் ஜவஹர்லால் நேரு ஒருகாலத்தில் வீற்றிருந்த இருக்கையில் அமர தான் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

நேரு நாட்டை ஒன்றுபடுத்தினார்: மோடி பிளவுவாத்த்தின் முழுமையானசின்னம். அவர் பிரதமராவதற்கு முன்பே தனது வண்ணங்களை அனைவரும் பார்க்கும்வகையில் தனது பாய்மரத்தில் பூசிக்கொண்டார். அதை நிகழ்த்தியமுறை திகைப்படையவைக்கும்.இந்த தேசமும் இந்துக்களும் ஒன்று. இந்துக்கள் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும். இந்துக்களின் ஒற்றுமை இந்தநாட்டை வலிமைப்படுத்தும்.” -இதை அவர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்-ன்தலைவர் மோகன்பகவத் முன்னிலையில் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஜம்சோட்சவாவில்கூறினார்.குஜராத்தில் ஒருசாதாரண ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக் (மோடி தன்னைக்குறிப்பிடுகிறார்) குஜராத்தை இந்தநாட்டின் முதல்மாநிலமாக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.அவர் மேலும் கூறினார்:அவர் தனதுமுழுவாழ்வையும் இந்து சமாஜத்துக்காகவே செலவிட்டதாக” (ஆர்கனைசர் 2007 பிப்ரவரி 11)

குஜராத்தில்அவரதுபதவிக்கான முன்னுரிமை மூடப்பட்டபோது, ராய்ட்டரின் ஒரு நேர்காணலில் “நீங்கள் 2002ல் சரியானதைத்தான் செய்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?என்று கேடகப்பட்டார்.(இனப்படுகொலைகளில்) அவர் பதிலளித்தார்:நிச்சயமாக”. அவர் மேலும்கேடகப்பட்டார்: “மக்கள் உண்மையான மோடி யார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்துதேசியத் தலைவரா? அல்லது வணிகத்துக்கு ஆதரவான முதல்வரா?”. மோடி மிகவும் விளக்கமாகப் பதிலளித்தார்: “ நான் ஒருதேசியவாதி: நான் தேசப்பற்று உள்ளவன். தவறு ஏதும் இல்லை. நான் ஒரு பிறவி இந்து. தவறு இல்லை. ஆகவே நான் இந்துதேசியவாதி. இதனால் நீங்கள் கூறலாம், நான் ஒருஇந்துதேசியவாதி என்று. ஏனெனில் நான் ஒருபிறவி இந்து.” (இந்தியன் எக்ஸ்பிரஸ் 2013 ஜூலை 3)
 யார்தனதுநம்பிக்கைகளை மோடியின்மீதுவைத்து அவரை “வழங்குபவர்என்று கூறினார்களோ அவர்களால் மோடி வாரிஇறைத்த உறுதிமொழிகளை அவ்வாறு வழங்குவதற்கான சிறிய அடையாளத்தைக்கூடக் காணமுடியவில்லை. அவரால் உறுதியளிக்கப்பட்ட ‘அச்சே தின்’ (நல்ல நாள்’) ஏமாற்றும் கானல்நீராக மாறிவிட்டது. ‘பூரே தின்’ (கெட்ட நாள்) இப்போது நம்மீது மிகுந்த ஆற்றலோடு மதவாத அறிவிப்புக்களாகவும், குற்றச்சாட்டுக்களாகவும், திட்டமிட்ட வெளியேற்றுதல்களாகவும், கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள்மீது பாய்கிறது. கொலை செய்தல், கூட்டுக்கொலை போன்றவை இந்தநாட்டின் தலைமை நிர்வாகியால் கண்டனம் ஏதும் இன்றி நடக்கின்றன. அர்த்தமுள்ள அவரது தொடர்ந்த மௌனத்தை சாதகமான ஓர் அடையாள
சமிக்ஞை என்று சிலர் புரிந்துகொண்டுள்ளார்கள். இந்த சில்லறைப்பேர்வழிகளை, வெறுப்பை விதைப்பவர்களை மோடி கட்டுப்படுத்துவார்: உரத்துக்கண்டிப்பார்: எந்தத்தகுதியுமின்றிக் கொலைகளைச் செய்பவர்களை, சகிப்புத்தனமை இல்லாதவர்களை தடுப்பார் என்று அவரது புகழ்பாடிகள் விரக்தியுடன் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் மோடி அசையவேயில்லை. ஏனெனில் இந்தப்பேர்வழிகள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின் மையமாக, முத்கெலும்பாக இருப்பவர்கள். முழுவதுமாக ஆய்வுசெய்யப்பட்ட ஆவணப்பதிவுகள் இன்று அவரது தலைக்கு மேல் என்ன உள்ளது என்ற ஏராளமானஎச்சரிக்கைகளைத் தருகின்றன.

அமெரிக்கத்தூதரின் கணிப்பு

இந்தநாட்டுக்கு தனது பிரதமரைத் துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் அவரது நாட்களில் பலரைவெளியேற்றிய முதல்வர் மோடியிலிருந்து இன்றைய பிரதமர் மோடி ஒருதுளியும் மாறவே இல்லை. அவரது கண்காணிப்பில் நடந்த கொடூரப் படுகொலைகள் மிகவும் மோசமானவை. இப்போதும்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அவரது இரக்கமற்றநடத்தை இன்றும் நீடிக்கிறது. இந்தமனிதரைப்பற்றிய அதிர்ச்சி தரத்தக்க ஒருமதிப்பீட்டைப் பத்தாண்டுகளுக்கு முன்பே ஒருதூதர் செய்திருந்தார். பத்திரிக்கைப் பத்தி எழுத்தாளர்கள். தொலைக்காட்சி நங்கூரங்கள், வணிக நிறுவன்ங்கள் போன்றோரின் கட்டுப்பாடற்ற, உணர்ச்சியூட்டும் கைதட்டல்களிலிருந்து விலகி நின்று, அறிவார்ந்தமுறையில், ஆழமான பார்வைகொண்ட அவரது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்: “ மோடி தன்னை ஊழலற்றவராக, திறமைமிக்க நிர்வாகியாக, ஆழ்ந்த வணிகக்கலாச்சாரம் கொண்டவராக, வியாபாரிகளுக்கு உகந்தவராக, முட்டாள்தனமான சட்டம்-ஒழுங்கு அரசியல்வாதி அல்லாதவராக, இந்தியப்பெரும்பான்மையினரின் நலன்காப்பவராகத் தன்னை வெற்றிகரமாக அடையாளப்படுத்திக்கொண்டார். பா.ஜ.க.விலுள்ள மோடியின் ஆதரவாளர்கள் இந்தசாதகமான அம்சங்கள்மூலம் மோடி நாடுமுழுவதுமுள்ள வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பார் என்று தங்கள் கட்சித்தலைவர்களை ஒப்புக்கொள்ளவைக்கமுடியும் என்று நம்புகிறார்கள். சிலவாக்காளர்கள் மோடியின்பிறதகுதிகளைப் பாராட்டக்கற்றுக்கொள்ளும்போது,இரத்தம்சிந்திய 2002ல் மோடியின் பங்குபற்றி மன்னித்து மறந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

“பொதுஇடங்களில் தோன்றுவதில் மோடி கவர்ச்சிகரமானவராகவும், விரும்பத்தக்கவராகவும் உள்ளார். எப்படிஇருந்தபோதிலும், எல்லாக்கணக்குகளின்படியும் மோடி பிறருடைய கருத்துக் களுக்கு மதிப்பளிக்காதவர், ஆர்வம்காட்டாத குறுகிய மனப்பான்மை கொண்டவர். ஒருசிறிய ஆலோசனைக்குழுவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் யாரையும் நம்பாத ஒருமனிதர். இந்தச்சிறிய உள்வட்டம் அமைச்சர்களுக்கும், கட்சிக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான மோதல்களைக் குறைக்கும் அமைப்பாகச் செயல்பட்டது. அவரது ஆட்சி எல்லாரையும் உள்ளடக்கியதாக, கருத்தொற்றுமை கொண்ட்தாக இருக்கவில்லை: அச்சஉணர்வை ஊட்டுதல், மிரட்டித் தனது விருப்பத்தை ஏற்கவைத்தல் மூலமாக நடைபெற்றது. முரட்டுத்தனமாக, தான் தான் உயர்ந்தவர்என்று நடந்துகொள்ளும்போக்கு உயர்நிலையில் உள்ள கட்சி மற்றும்அரசு அலுவலர்களிடமும் செல்லுபடியாக்கப்பட்டது. அவர் எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் குவித்துக்கொண்டார். முடிவெடுக்கும்போது அடிக்கடி தனது அமைச்சர்களை உறை நிலையில் வைத்திருந்தார். அது அந்த அமைச்சர்களின் துறைகளைப் பாதித்தன.

-இதை எழுதியவர் மும்பையில் உள்ள அமெரிக்க கவுன்சில்ஜெனரல் மைக்கேல் எஸ்.ஓவன். இவரது வரம்புக்குள் குஜராத் இருந்தது  அவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்க, புதுமையான 2850 வார்த்தைகள்கொண்ட 2006 நவம்பர் 2 நாளிட்ட கம்பிவடச் செய்தியாக (கேபிள்)வடிவமைக்கப்பட்டிருந்தது. அதுஅரசுத்துறைக்கு அனுப்ப்படுவதற்குமுன் புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் தூதரால் ஏற்றுக்கொள்ளப்படட்து.  அந்த அறிக்கை அவ்வளவு கவனமாக தூதராலும் அவரது சகஅலுவலர்களாலும் ஆழ்ந்துபரிசீலிக்கப்பட்டது  சுரேஷ் நம்பத் பொருத்தமாகக் குறிப்பிடுகிறார், இந்தப்பகுதி அரசியலில் எம்.ஏ., படிப்புக்கான கோட்பாடுகளின் மையப்பகுதியாக அமைகிறது”  ”மோடியின் பி1/பி2 விசாவுக்கான 2005ன் தடை விரைவில் நீக்கப்படவேண்டும்:  அப்படியின்றி மோடி தேசியஅளவில் முக்கியத்துவம்பெறும்போது நீக்கப்பட்டால் அது அமெரிக்காவின் சந்தர்ப்பவாதம் என்று பழிக்கப்படும் என்று ஓவன் கவலைப்பட்டார். மோடியுடன் நேரடித்தொடர்புகளை மேற்கொண்டால், அமெரிக்கா, ‘குஜராத்தில் மனித உரிமைமீறல்கள் பற்றியும், மதசுதந்திரம் பற்றியும் தெளிவான செய்திகளை அவருக்குத் தரமுடியும்இந்தக்கம்பிவடச்செய்தி விக்கிலீக்ஸ்-ல் இடம்பெற்று, ‘தி இந்துவில் 20011 மார்ச் 22ல் வெளியிடப்பட்டது.

  மோடி பிரதமராக வந்தபின் குஜராத் மாடல்”  என்ற தனது கனவைத் தேசியஅளவில் துல்லியமாக நடைமுறைப்படுத்த முயன்றபோது இந்தக்கம்பிவடச்செய்தி மீண்டும்மிகநன்றாக விரைவில் எழுதப்பட்டது. மோடி மத்திய அமைச்சரவைமுறையை குஜராத்தில் போலவே வலுவிழக்கச்செய்தார். அமைச்சர்களின் தரம் குறைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மேலுக்கு வந்தார்கள். அமித்ஷா பா.ஜ.க.வின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியின்பிடி முழுவதும் கைக்குள் வந்தது. குஜராத்தில் நடந்ததுபோலவே கட்சிக்குள் இருந்த எதிராளிகள் ஓரம்கட்டப் பட்டார்கள். (மேலும் விளக்கமாக அறிய “ஜனநாயகத்தை மோடிமயமாக்குதல்என்ற ஏ.ஜி. நூரணியின்கட்டுரை ‘ஃப்ரண்ட்லைன்’ 2015 ஜூலை 11 இதழ்)

  முன்னாள் கப்பல்படைத்தளபதி அருண்பிரகாஷ் 2015 நவம்பர் 12ல்   குறிப்பிட்டார்: “ கடந்த ஆறுமாதங்களாக மக்கள்பணி-இராணுவப்பணி உறவுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவோ, பாகிஸ்தானோ எதையாவதுசெய்தால்  நாங்கள் எதையும் தொடங்கும் நிலையிலோ, அல்லது எதிர்க்கும் நிலையிலோ இல்லை.”(ஜோஸி ஜோசப்: ‘தி இந்து2015 நவம்பர் 13) அயலுறவுச் செயலாளர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளையும், அதுபோலவே தேசியப்பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுவார்த்தைகளையும் மோடி கிடப்பில்வைத்ததால் பாகிஸ்தானுடனான உறவு மிகவும் தாழ்வுநிலையை அடைந்துவிட்டது.  நேபாளம் சீனாவின் உதவியைநாடத் தள்ளப்பட்டுவிட்டது.. ஏனெனில் மோடி அந்தநாட்டுடனான உறவுகளை எதிர்பாராதவகையில் ஆபத்தானதாக்கிவிட்டார். பிரதமரின் 2014 மே பதவியேற்பு  நிகழ்ச்சிக்கு தெற்குஆசிய அணடைநாடுகளுக்கு விடுத்த அழைப்பு, பின்நோக்குப்பார்வையில் ‘ஐந்தாம் ஜார்ஜ் தர்பார்போலஉள்நாட்டுப்பிரமுகர்களும் ஒன்றாகக்கொண்டுவரப்பட்டு “பேர்ரசரைப்பாராட்டுவது போல இருந்தது. இந்தியாவின் நீண்டகால நண்பரான கனக்மணி தீக்‌ஷித் விமர்சனங்கள் இவையெல்லாவற்றையும் கூறுகின்றன. அவர் மேலும் கூறுகிறார்: “....இந்தியாவின் அயலுறவுக்கொள்கை நரேந்திரமோடியின் தனிப்பட்டபொதுஉறவு ‘சிலுவைப்போராகமோடியால் வளர்க்கப்பட்டதாகத்தெரிகிறது.....இந்தியாவின் அண்டைநாடான, மிகநீண்டகாலமாக நட்புநாடாக இருந்தநாட்டுக்குத் தடைவிதிப்பதில் தவறு இல்லை என்று அவர் நினைக்கிறார். –உதவியற்ற நேபாளம். (தி இந்து 2015 நவம்பர் 18)

   படிப்படியாகத் தேய்ந்து மறையும்கொள்கை நடைமுறையில் உள்ளது. குஜராத் ‘வெற்றியின் பாடங்களை அயலுறவுக்கொள்கைகளைக் கையாள்வதற்குப் பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக இந்த அயலுறவுத்தளத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத மோடியால், ஒருவலுவான கொள்கைஇல்லாததை வெற்றுமுழக்கங்கள், எல்லார்க்கும்பொது  என்று அறிவிப்புக்கள்மூலம் மூடிமறைக்கமுடியாது.

லண்டனிலிருந்து வந்த செய்தி

  மிகவும்பொருத்தமான இன்னொருபாடம் குஜராத்திலிருந்து வருகிறது. அதைக்கற்றுக்கொள்ள மோடி மறுத்துவருகிறார் கடந்த மாதம் லண்டனில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர் கள்  மோடிக்கு ஒருசெய்தியைத் தந்தார்கள். “2002ல் குஜராத்படுகொலைகளில் அவரது பங்கை மறந்துவிடவோ, மன்னிக்கவோ இல்லை” (மேலும் விளக்கங்களுக்கு ஏ.ஜி. நூரணி கட்டுரை: மோடியின் கடமைப்பாடுஃப்ரண்ட்லைன் 2014 ஜூன் 25) அவரது இரண்டு நோக்கங்கள் செயலாற்றல் மிக்கவை. ஒன்று:அங்கு மறுவாழ்வுப்பணிகள் அதன்பெயருக்கு ஏற்றவகையில் ஏதும் நடக்கவில்லை இரண்டு:. புதுடெல்லியில்உள்ள இங்கிலாந்தின் உயர்நிலைக்குழுவின் முதன்மைச்செயலாளர் பீட்டர் ஹாலண்ட் கண்டறிந்தது: “அந்த வன்முறைகள் திட்டமிடப்பட்ட ஒன்று..... மாநில அரசின் ஆதரவுடன்”  இதன்நோக்கம் இந்து பகுதிகளிலிருந்துமுஸ்லீம்களை வெளியேற்றுவதே. அந்தஅறிக்கை மேலும்கூறுகிறது: “இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது இந்த முதலமைச்சர் (மோடி) அதிகாரத்திலிருக்கும்வரை சாத்தியமில்லை.”  அதனால்தான் அங்கு மறுவாழ்வுப்பணிகள் நடக்கவில்லை. இதை டாக்டர், சஞ்சீவினி பாடிகர் லோக்ஹண்டே தனது “மதவெறி வன்முறைகள்- கட்டாயப்படுத்தப்பட்ட குடிபெயர்வுகளும், அரசும்என்றநூலில் (கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடி பிரஸ் 2015) நிலைநாட்டி னார். அவரது கவனம் 2002 நிகழ்வுகளுக்குப் பிந்தையவை பற்றியதாக இருந்தது. ஐரோப்பிய யூனியனின் வரைவுஅறிக்கை தலையில் ஆணிஅடிப்பதைப்போல “குஜராத்தில் நடந்த கொன்று குவித்தல் நடவடிக்கை பல்வேறு இனமக்களைத் தனித்தனியாகப் பிரித்து வாழச்செய்த ஒருவகையான தென்ஆப்பிரிக்க அரசின் கொள்கை ஆகும் என்றது.

   இந்தப்படுகொலைகள் நடந்துமுடிந்த வெறும் ஆறுமாதகாலத்துக்குள் 2002 செப்டம்பர் 9ல் பெச்சாரண்-ல் மோடிகூறினார்: “குஜராத்தின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலாக இருந்த எல்லாத் தீயசக்திகளையும் முத்திரைபதித்து அவர்களை நாம்  அழிக்கமுடிவுசெய்தோம்.... எங்கள்மீது இங்கே குற்றச்சாட்டுக்கள். நாங்கள் இந்துத்துவாவாதிகளாம்! ஓ, சகோதர்ர்களே, பெச்சராஜி கோவிலின் வளர்ச்சிக்காக நமதுஅரசு ரூ.8 கோடியை ஒதுக்கியது.iஇது நாங்கள் செய்தகுற்றமா? அவர்கள் கூறுகிறார்கள், இந்த நரேந்திரபாய் நர்மதா தண்ணீரை சபர்மதி ஆற்றுக்குக் கொண்டுவந்தார்: இந்தமனிதர் மிகவும்புத்திசாலியாக சரவணமாதத்தில் (இந்துக்களின் புனித மாதம்) தண்ணீரைக் கொண்டுவந்தார்என்று. இங்கே நாங்கள்(பா.ஜ.க.என்றபெருமை) இருப்பதால தண்ணீரைச் சரவணமாதத்தில் கொண்டுவந்தோம். நீங்கள் அங்கே இருந்தால் அதை ரம்தான்மாதத்தில் (முஸ்லீம்களின்புனிதமாதம்) கொண்டுவரலாம்....என்ன சகோதரர்களே நாம் நிவாரணமுகாம்களை நட்த்தலாமா? நான் இங்கு குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்களை (இந்த நிவாரணமுகாம்களில்) ஆரம்பிக்கவேண்டுமா? நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மிகத்திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தி வளர்ச்சியை அடைய விரும்புகிறோம். நாம் ஐந்துபேர். நம்முடையவர்களோ 25பேர்.(அமே பாஞ்ச். அமாரா பச்சிஸ் –முஸ்லீம்களின் பலதாரத் திருமணங்களைக் குறிப்பிடுகிறார்) இத்தகைய வளர்ச்சி யாருடைய பெயரால் தொடர்கிறது? யாருடைய தயக்கம் நமது பாதையில் குறுக்கிடுகிறது? எந்த மதப்பிரிவு நமது வழியில் வருகிறது?

  “ நாம் கட்ச் (மாவட்ட) மதரஸாக்களிலிருந்து உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்.... நாம் குஜராத்தில் மரணவியாபாரிகளைச் சுதந்திரமாகச்செயல்பட அனுமதிக்கமுடியாது. .குஜராத்தை அழிக்கவும், அப்பாவிகளுக்குத் தீங்கு விளைவிக்கவும் இந்தச்சதிகாரர்களை அவர்களது திட்டங்களைச் செயல்படுத்தவும் நான் அனுமதிக்கமாட்டேன். இந்தஇத்தாலியின் மகள் (சோனியா) நாம் மகாத்மாகாந்தியின், சர்தார்படேலின் புனிதபூமியை அவமதித்துவிட்டோம் என்று வெளிப்படையாகவே சான்றிதழை நம்க்குத் தருகிறார். இந்த விஷயத்தில் நான் உங்களுடைய பதிலை வேண்டுகிறேன். ... நீங்கள் மரணவியாபாரிகளைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால் நாம் சர்தார் படேலின் பாதையைப் பின்பற்றவேண்டும். நமது இலட்சியம் சர்தார்படேலின் பாதையைப் பின்பற்றுவதுதான்.”...”நாம் ஐந்துகோடி குஜராத்தியர்களின் சுயமரியாதையையும், ஒழுக்கநெறிகளையும் உயர்த்திப்பிடித்தால் இந்த அலிகள். மலிகள், ஜமாலிகள் (முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறார்) நமக்கு எந்தவித தீமைகளையும் செய்வதில் வெற்றிபற முடியாது.முரட்டுத் தனமான, பிறரைப் பழிக்கிற, மதவெறியைத் தூண்டும் பகட்டான, வெறியூட்டும் பேச்சுக்கள் நரேந்திரமோடியின் தனித்துவமாக 2014லிலும், அண்மையில் பீகாரிலும் வெளிப்பட்டன.

   குஜராத்தில் நிவாரணமுகாம்கள் முன்கூட்டியே 2002 மே மாத்த்தில் மூடப்பட்டன. தன்மீதான விமர்சனங்களுக்கு தாக்குதல் தொடுப்பதையே அவர் தொடர்ந்துமேற்கொண்டார். ‘கௌரவ யாத்திரைஎன்று அழைக்கப்பட்ட  ஒருபிரச்சாரத்தை அவர் துவக்கினார். அந்த கௌரவயாத்திரையின் சாலையோரநிகழ்வுகளில் அவர் கிராமமக்களிடம் ‘ஒருரயில்வண்டியில் 60 இராமபக்தர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டீர்களா? என்று கேட்டார். கூட்ட்த்தினருடன் சேர்ந்துபேசும் தனது மகத்தான ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களை இது போன்ற கேள்விகளுக்குப் பதில்கூறத் தூண்டினார்.

நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எவரையாவது கத்தியால் குத்தினீர்களா?
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எவருடைய தலையையாவது துண்டித்தீர்களா?
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எந்த ஒரு சகோதரி/ மகளின் பெருமையைக்
              குலைத்தீர்களா? (கற்பழித்தீர்களா?)
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: இருந்தபோதிலும் குஜராத்தின் எதிரிகள் கிராமத்திலிருந்து கிராம்மாக அங்கே தீ பற்றியெரிகிறது: கிராமத்திலிருந்து கிராம்மாக மக்கள் கொல்லப்படுகிறார்கள்: கிராமத்திலிருந்து கிராம்மாக மக்கள் தலைகள் உருள்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குஜராத்தை அவமதித்துவிட்டார்கள். அவர்கள் எல்லாருக்கும் பதிலளிக்கவே நான் இந்த கௌரவயாத்திரையை மேற்கொண்டுள்ளேன்.

யாத்திரையில் இன்னொரு பேச்சில் அவர் சொன்னார்:
“ நான் இந்த கௌரவயாத்திரையில் ஈடுபட்டுள்ளபோது எனது காங்கிரஸ் நண்பர்கள் ‘என்ன கௌரவம்?என்கிறார்கள்.
   “அவர்கள் சொல்கிறார்கள், நமது குஜராத்தில் கலக்க்காரர்கள் இருக்கிறார்கள் என்று. நமது குஜராத்தில் மக்களிடம் கத்தி இருக்கிறது: நமது குஜராத்தில் மக்கள் கொலைகாரர்கள் என்று. இது குஜராத்தின் பெருமையை முடித்துக்கட்டும் ஒரு உறுதியான முயற்சி. எனவே அதை எதிர்த்துப்போராட பா.ஜ.க. உறுதிகொண்டுள்ளது. அவர்கள் இலட்சக்கணக்கானமுறை குஜராத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஆனால் நான் குஜராத்தின் உண்மைநிலையை வெளிக் கொண்டுவர தைரியமாக முடிவெடுத்துவிட்டேன்” (லோக்ஹாந்தே-பக்கம் 162)

   தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் பத்திரிக்கையாளர்களிடம் 2012ஜூலையில் ஒருநேர்காணலில் மோடி கேட்டார்: “இப்போது மன்னிப்புக் கேட்பதில் என்ன இருக்கிறது? அந்த நேரத்தில் என்ன நடந்ததோ அதற்கு நான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தேன். 2002ல் கலவரங்களுக்குப்பின்னர் நான் என்ன சொன்னேன் என்பதைத்தயவுசெய்து பரிசோதித்துப்பாருங்கள். நீங்கள்(ஊடகங்கள்)எனக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக அநீதி இழைத்துவிட்டீர்கள் என்று இப்போது எழுதவேண்டும். நீங்கள் மோடியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்

   ஆனால், குஜராத் படுகொலைகளை மோடியாலோ அல்லது அவரது புகழ்பாடிகளாலோ மறைக்கமுடியாது. களத்தில் உள்ள நிலவரங்கள் அவை இன்னும் தொடர்கின்றன என்பதை அங்குஎழும் கூக்குரல்கள் வெளிப்படுத்துகின்றன. இரண்டு கேள்விகள் பெருந்தன்மையோடு எதிர்கொள்ளப்படவேண்டும். முதலாவதாக, ‘இத்தகைய பின்னணிகொண்ட ஒருமனிதனிடம் அவரது விசுவாசிகள் ஏன் கண்களை மூடிக்கொள்கிறார்கள்? இரண்டாவதாக, இத்தகைய பெரும்சுமைகளைக்கொண்ட ஒருமனிதனால் மதசார்பற்ற நாட்டின் பிரதமராகப் பணியாற்ற முடியுமா?

  இங்கேதான் ஒருமனிதனின் குணாம்சங்கள்மீதான மதிப்பீடு வருகிறது. “உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொள்ளாத ஓர் உயர்ந்த மனிதர், பொதுப்பிரச்சினைகளில் உறுதியான பிடிப்பு இல்லாதவர், எதிலும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர், வள்ளல்தன்மைகொண்டவர், நட்பிணக்கம் கொண்டவர், ஆனால், எந்தஒன்றுக்கும் ஆபத்தான எதிரியாக இல்லாதவர், இனியமனிதர் யாரோ, அவர் எத்தகைய அலுவலகத் தகுதிகளுமின்றி அமெரிக்கஜனாதிபதியாக வரவிரும்பினார்.”  கொண்டுவரப்பட்டார். 40ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் இறக்கும்வரை நண்பர் களோ, எதிரிகளோ, 1932ல் ஃப்ராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் ஜனாதிபதி பதவிக்கு வால்டர் லிப்மேனால் தவறாக உயர்த்தப்பட்டதை மறக்கவில்லை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் ரூஸ்வெல்ட்-உடனான விரிவானசந்திப்புக்குப்பிறகு ஞானிஆலிவர்வெண்டல் ஹோல்ம்ஸ், ரூஸ்வெல்ட் ஐப் பற்றி ஒரு மதிப்பீட்டை வழங்கினார். அது காலத்தின் சோதனையைத்தாண்டி நிலைத்து நிற்கிறது. :இரண்டாம்தர அறிவாளி: ஆனால் உணர்ச்சிவசப்படுவதில் முதல்தரமானவர்.

லிப்மேனிடம் இல்லாத, ஹோல்ம்ஸ்இடம் இருந்தது எது? அது உருதுமொழியில் “மர்தும் ஷனாஸிஎன்று அறியப்படும் ஒருவரது குணவியல்பை மதிப்பீடு செய்யும் கலை. இது ஒருசிலரிடம் மட்டுமே ஒருபரிசாக அமைந்துவிடுகிறது. மக்கள் குறிப்பாக அந்த ஆற்றலைப்பெற ஆர்வம் காட்டுவதில்லை ஏனெனில் அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிவிடும். இங்கு இன்னொரு ஆறுதலானநம்பிக்கை பெற்றோர்களிடம் இருக்கிறது! ஊதாரியான மகனைத் திருமணம் பக்குவப்படுத்திவிடும்’. ஆகவே இந்த நம்பிக்கையில் ரிச்சர்ட் நிக்ஸன், மொரார்ஜிதேசாய் அதிகாரத்தின் உச்சிக்கு இதமாக வந்தார்கள்: இந்திராகாந்தியும் கூட 1980க்குப்பின். ஆனால் அவர்களால் முடியவில்லை. பக்குவப்படவில்லை!
மோடி மாறவே இல்லை!
  நரேந்திரமோடி பிரதமராக வந்ததிலிருந்து உள்ள பதிவுகள் மோடி ஒருசிறிதளவுகூட மாறவில்லை என்பதைக் காட்டுகின்றன. இருந்தாலும் அவரது ரசிகர்கள் அடிக்கடி உள்ளார்வத்தோடு அவர் சில்லறைப்பேர்வழிகளைக் கட்டுப்படுத்தவேண்டுமென்று பிரார்த்திக் கிறார்கள். மோடியின் உண்மையான பார்வையை வெளிப்படுத்த அவரது வெளிநாட்டுப்பயணப் பேச்சுக்கள் போதுமானவையாக உள்ளன.

1.        2014 செப்டம்பர் 2ல் ஜப்பான் பேர்ரசருக்கு மோடி ஸ்ரீமத் பகவத் கீதையின் பிரதியைப் உள்நாட்டிலுள்ள விமர்சகர்களை நோக்கிக் கைகளை முறுக்குவதற்காகப் பரிசளித்தார்.. “இதற்குப்பிறகு இந்தியாவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அங்கே இதைப்பற்றி ஒருதொலைக்காட்சி விவாதம் நடைபெறலாம். நமது மதசார்பற்ற நண்பர்கள் ஒருபுயலைக் கிளப்பலாம். ‘மோடி தன்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் தன்னுடன் ஒருகீதையைக் கொண்டுசென்றி ருக்கிறார். அதன்பொருள் இதையும் அவர் மதமயமாகிவிட்டார்

மோடி ஆதாரமின்றிப் பழிசுமத்திக்கொண்டேபோகிறார்.

“எப்படியோ அவர்கள் (ஊடகங்கள்) தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்வார்கள். நான் அங்கு இல்லாவிட்டால் அவர்கள் எப்படித்தான் தங்கள் வாழ்வுக்கானதைச் சம்பாதிக்கமுடியும்? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 2014 செப்டம்பர் 3) இத்தகைய உள் நோக்கம் கொண்ட தாக்குதல்களைத் தொடுப்பது அவரது இயல்பு!

2.        2015 ஆகஸ்ட் 31ல் புதுடெல்லியில் மோடி கூறினார்: “இன்று யாராவது ‘ஓம்என்று உச்சரித்தால் ஒருவாரத்துக்கு ‘எப்படி ‘ஓம்உச்சரிக்கப்படலாம்? என்ற சர்ச்சை கடும் கோபத்தொடு வெளிப்படும். (ஆசியன் ஏஜ் 2015 செப்டம்பர் 1)

3.        செப்டம்பர் 23ல் டப்ளினில் இந்தோ-ஐரிஷ் மாணவர்களை சமஸ்கிருத மந்திரங்களை ஓதியதற்காகப் பாராட்டினார். ஆனால், அவரால் ஒருபோதும் கழற்றிவிடப்படாத கபடத்தன்மையோடு, “ இந்த மகிழ்ச்சிக்குரிய விஷயத்தை அவர்கள் அயர்லாந்தில் செய்யலாம். ஆனால் இது இந்தியாவில் செய்யப்பட்டால், அது மதசார்பின்மை பற்றியகேள்விகளை எழுப்பும்” (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2015 செப்டம்பர் 24)

4.        நவம்பர் 12ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மோடி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தனது உரையில் இந்தியாவின் ‘பன்முகத்தன்மையைப் போற்றிப் புகழ்ந்தார். ஆனால் அதற்கு மறுநாளே இந்தப்பழைய ஆதாம்தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டு டெம்ப்ளே விளையாட்டு அரங்கில் முன்தயாரிப்பு இன்றி எதிர்பாத்தவகையில் பேசினார்: பயங்கர வாதம் என்ற பெயரால் இன்று உலகில் நிகழ்ந்துவருவதுபற்றி சிலநேரங்களில் நான் உணர்கிறேன். சுபி மரபு பலம்பெற்றுவிட்ட்தா? இஸ்லாத்தின்மீது அதன் செல்வாக்கு வளர்ந்துவிட்டதா? அது எப்போதும் துப்பாக்கியை எடுத்துக்கொள்வதுபற்றி ஒருபோதும் சிந்திக்காதுஎன்று யாராவது புரிந்துகொள்வார்களா?” ( தி டெலிகிராஃப் 2015செப்டம்பர் 14)
மெக்காமெக்கா மசூதி அல்லது மாலேகான் பயங்கரவாத்த் தாக்குதல்களைச் செய்தது எது? அல்லது யார் பொறுப்பு? இதற்கு மோடியின் பதிலென்ன?
மோடியைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேசினார்.பேச்சு பயங்கரவாதத்தைக் கண்டித்தது. ஆனால் எந்த மதத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அவருக்கு மோடியிடம இருந்த  ‘இஸ்லாமோஃபோபியா நோய் பீடிக்கவில்லை!
பிரிட்டிஷ்காரார்கள் மோடியால் ஈர்க்கப்படவில்லை. நவம்பர் 13 ‘தி கார்டியன்ஆங்கிலஇதழின் தலைப்புச்செய்தி “இந்தியா இந்து தாலிபானால் ஆளப்படுகிறதுஎன்றது. ‘தி கார்டியன் இதழின் எழுத்தாளர் ஆதித்ய சக்ரவர்த்தி மோடியைப்பற்றி, “இந்தப்புவிக்கோளத்தின் மிகவும் ஆபத்தான அரசியல்வாதிகளில் ஒருவர்:  நல்லது. கற்பனை செய்துபாருங்கள். எந்த ஒரு தேசியத்தலைவ ராவது – க்மரூன், மார்கெல், ஒபாமா – தனது வாழ்வின் பெரும்பகுதியை மதவெறி பாசிஸ்டு களுக்காகச் செலவிட்டுள்ளார்களா? புகழ்பெற்றகல்வியாளர்களில் ஒருவரையாவது ‘இஸ்லாமிக் ஸ்டேட்உடன் தொடர்பிடமுடியுமா? மதவாதாடிப்படையில் எதிர்ப்புணர்வைத் தூண்டிவிட்ட, தனது நீண்டசொந்த வரலாற்றில் மதஉணர்வில்தோய்ந்த, பெரும்வர்த்தகங்களுடன் சொகுசான உறவுகொண்ட, எதிராளிகள்மீது ஈவுஇரக்கமற்ற வன்செயல்களில் ஈடுபட்டவ்ர் என்று மதிப்பீடு செய்யப்படும் ஒருவர் –இந்துத்தீவிரவாதி இப்போது இந்த அணுஆயுத ஆற்றல்கொண்ட அரசின் பொறுப்பாளர்! இன்னும் வருந்தவில்லையா?என்று மோடியைக் கேலிசெய்கிறார்.

உங்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு மோடியுடன் கைகுலுக்குங்கள்என இந்தத்தலைப்புச் செய்தியைத் தாங்கிவந்த இதழில் குறிப்பிட்டார் கே.பி.நாயர்.

                                               நன்றி: ஃப்ரண்ட்லைன் 2015 டிசம்பர் 25 இதழ்







Monday, 30 November 2015

இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மகாராஷ்ட்ர முன்னாள் காவல்துறைத் தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில இதழில்
– தமிழில் செ. நடேசன்

முன்னாள் மகாராஷ்ட்ர காவல்துறைத் தலைவர் (ஐ,ஜி) எஸ்.எம்.முஷ்ரிஃப் 26.11.2015 வியாழன் அன்று கொல்கத்தாவில் மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் தலைவர் கர்கரே நினைவு நிகழ்வில் பேசியபோது, “ இந்தியாவில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட 13 பயங்கரவாத வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுக் கள் பிறப்பிக்கப்பட்டுள்ளனஎன்றார்.

 ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளைப் பயன்படுத்திய குறைந்தபட்சம் 13 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள்மீது குற்றப்பத்திரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்தகைய வழக்குகள் 17ஆக உயரும் என முஷ்ரிஃப் தெரிவித்தார்.
 ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை என்ற முஷ்ரிஃப், 2007ல் ஹைதராபாத்தில் மெக்காமஜ்ஜித் குண்டு வெடிப்பு, 2006 மற்றும் 2008ல் மகாராஷ்ட்ராவில் மாலேகான் குண்டுவெடிப்பு, 2007


சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு ஆகியவை இவற்றுள் அடங்கும் என்றார்.

 எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ‘காவி பயங்கரம்நடைபெறுகிறது என்பதை முஷ்ரிஃப் உறுதிப்படுத்தினார். ஒரு பயங்கரவாத அமைப்பு என்றவகையில் ஆர்.எஸ்.எஸ். அரசியல் அதிகாரத்தில் எதுவும் செய்வதற்கில்லை. அதற்கு எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது ஒருபொருட்டல்ல. அதில் செயல்படும் அமைப்புமுறை ‘பிராமணீய அமைப்புமுறை ஆகும். இங்குநான் ‘பிராமணீயம்என்று சொல்லும்போது பிராமணர் என்பது அதன்பொருள் அல்ல. அது ஒருமனப்போக்கு. ஆளுகை செய்யவும், அடக்கி ஒடுக்குவதற்குமான ஒரு நடத்தைமுறைஎன்றார் அவர்.

அண்மைக்காலங்களில் சகிப்புத்தன்மை இன்மை வளர்ந்துவருகிறது என்ற பார்வையை முஷ்ரிஃப் ஏற்றுக்கொள்ளவில்லை, சகிப்பினமை மிகநீண்டகாலமாகவே இருந்து வருகிறது.மிகசும் தீவிரமான பெரிய பல நிகழ்வுகள் முன்பு நடைபெற்றுள்ளன. இப்போது ஏன் அவைகள் உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லைஎன அவர் கேட்டார்.

 “2008 மும்பை தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடைபெற்றபோது, இதில் இந்து அடிப்படைவாதி களின் பங்குபற்றி விசாரனை செய்த ஹேமந்த் கர்கரேவின் கொலையில் புலனாய்வுத் துறையே திட்டமிட்டுத் தந்ததற்கான திடுக்கிடும் ஆதாரங்கள் இருந்தன.ஆனால், அவற்றை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. மும்பை தீவிரவாத எதிர்புப் படையின் தலைவரைக் கொன்றதற்குப் பின்புலத்தில் இருந்த உண்மைகளை நிலைநாட்ட மாபெரும் மக்களியக்கம் தேவைஎன்றார்.

“புலனாய்வுத்துறை இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நிலைநாட்டுவதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ‘ஒரு சுதந்திரமான விசாரணை தேவைஎனக்கோரிய எங்கள் எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. ஒருமாபெரும் மக்கள் இயக்கம் இல்லாவிட்டால் அதை எப்போதும் நிலைநாட்டவே முடியாதுஎன்னும் முஷ்ரிஃப் “கர்கரேயைக் கொன்றது யார்?என்ற தனது நூலில் தனது உணர்வுபூர்வமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் தேசியவிருதுபெற்ற இசைஅமைப்பாளரும், முன்னாள் திருணாமுல்  நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் சுமனுடன் கலந்துகொண்ட  மகாராஷ்ட்ராவின்முன்னாள் ஐ.ஜி. முஷ்ரிஃப் ஆர்.எஸ்.எஸ்.-ன் உண்மை சொரூபத்தை அம்பலப்படுத்தினார்.


Saturday, 28 November 2015

உண்மையைப் பேசிய அமீர்கான் – ஷாருக்கானுக்கு நன்றி!-பிருந்தா காரத்

உண்மையைப் பேசிய  அமீர்கான் – ஷாருக்கானுக்கு நன்றி!
தன்னை விமர்சிப்பவர்களுக்கு ‘இந்தியா ஒரு சகிப்புத்தன்மைமிக்க நாடுஎன்று சொற்பொழி வாற்ற வேண்டியது அவசியம் என பா,ஜ,க, ஏன் கருதுகிறது?
என்ன சொல்லப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது இந்துத்துவா பரிவாரங்கள்-பற்றிய விமர்சனங்களை அவர்கள் இந்தியாபற்றிய விமர்சனங்களாக சமப்படுத்தும் அவர்களது ஆணவத்தால்  மேலும், இந்தியாவில் வளர்ந்துவரும் சகிப்பின்மை பற்றிய கவலைகளை அவர்கள் ‘தேச விரோதச் செயல்என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

 நாட்டின் குடிமக்கள், சகிப்பின்மை வளர்ந்துவரும் சூழல் பற்றிக் கவலை தெரிவிப்பது இந்தியாவைக் குறைகூறுவதற்காக அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு நரம்பணுவையும் சகிப்புத்தன்மையற்ற, சர்வாதிகார, மதச்சார்புநாடாக மாற்றமுயலும் சக்திகளிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்காக.

இந்தியாவின் சிந்தனைப்போக்கு எவ்வாறு உள்ளது என்பதற்கும், சிலர் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பதற்கும் இடையே உள்ளுணர்வுகளில் ஒருவிரிந்த வேறுபாடு உள்ளது. இந்தியாவின் சிந்தனை மரபு என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பகிர்ந்துகொண்ட வரலாறுகள், வெவ்வேறு மொழிகள், வாழ்க்கைமுறைகள், உணவுமுறைகள், ஆடைஅணிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட ச்கிப்புத்தன்மை கொண்டது இந்த உண்மையான இலக்குகள் வலிமையான, மதசார்பற்ற, சமத்துவ அரசியலுக்கு அடிப்படை யாகும்.

இந்தச்சிந்தனை ஒட்டுமொத்தமாக நடைமுறையில் உள்ளதா என்பதை இன்னும் நாம் பார்க்க வேண்டும்  இந்தச் சிந்தனைப்போக்குகளுக்குத்தான், பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், பிரிட்டிஷ் பத்திரிக்கைகளிலும் பேசியபோது பிரதமர் உரிமைகொண்டாடி, ‘இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட்து என்று சொன்னார்.

ஆம். பிரதமர் அவர்களே, இந்தியா சகிப்புத்தன்மை மிக்கது. ஆனால், நீங்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவின் பெயரில் செயல்படும்.பரிவாரங்களும், ஆட்சி அதிகாரத்தின் ஆதரவைப் பெற்றுள்ளவர்களும், ஒவ்வொரு நாளும் வெறுப்பை விதைப்ப வர்களும் ச்கிப்புத்தன்மை உள்ளவர்கள் அல்ல.

இந்துத்துவா பரிவாரங்களின் மிக அண்மைக்கால தாக்குதல் இலக்காக அமீர்கான் உள்ளார். தனது மற்றும் தனக்கு இணையான ஆற்றல்கொண்ட வாழ்க்கைத்துணைவி கிரண் ராவ் ஆகிய இருவரின் இதயத்தைத் திறந்து பேசினார். அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளை நடைமுறைப் படுத்துபவர்களா என்பது அவர்களது தனிப்பட்ட விஷயம். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர் களாக இருப்பது பொதுவெளியில் ஒருவரைஒருவர் காதலிப்பதையும், திருமணம் செய்துகொண்ட்தையும் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அமீர்கான் அளவுக்கு வெற்றிபெற்ற ஒருவர் தனது கவலைகளை, சந்தேகங்களை, தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய அச்சங்களை வெளிப்படுத்தும்போது, அதைத் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், அரசு சார்பில் பேசுகிறவர்கள் அதை, வீண்பீதியை உண்டாக்குதல்அல்லது, ‘ தனது ரசிகர்களுக்கு நன்றியின்மையாக அழைக்கிறார்கள்.

அரசின், ஆளும்கட்சியின் பேச்சாளர்களின் புறக்கணிக்கப்பட வேண்டிய இந்த முரட்டுத்தனம் அவர்களுடைய தள்ளுவண்டிகளால் ஆதரிக்கப்பட்டு, ஊடகங்களில் விஷமத்தனமாக வெளிப் படுகின்றன. இது புகழ்பெற்ற இந்தியக்குடிமக்கள் சகிப்புத்தன்மையற்ற போக்குகள் வளர்ந்து வருவதுபற்றி எச்சரிக்கத்துவங்கியதிலிருந்தே அவர்களின் தனிப்பண்புகளாக, தரக்குறியீடுகளாக ஆகியுள்ளன.

 நயன்தாரா சேகல் எதிர்த்தபோது அவர் ‘பாரம்பரியம்என்று புறம்தள்ளப்பட்டார். மிகவும் புகழ்பெற்ற சில  எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தபோது அவர்கள் ‘பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள்என்று முத்திரை குத்தப்பட்டார்கள். மிகவும் ஆற்றல்மிக்க 107 விஞ்ஞானிகள் அரசுக்கு ஒரு திறந்த கடித்த்தை அனுப்பியபோது அவர்கள்கூட வசைமாரி பொழியப்பட்டார்கள். வரலாற்றாளர்கள் தங்கள் குரலை எழுப்பியபோது அவர்கள் ‘கம்யூனிஸ்டுகள்என அழைக்கப்பட்டார்கள். வேறுவார்த்தைகளில் சொன்னால், அரசும், ஆளும்கட்சியும் இந்த அறிவுஜீவிகளுக்கு எதிராக அணிதிரளும்போது, அவர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண மறுத்துவிடுகிறார்கள்.

இன்று இது ஒரு உண்மையான பிரச்சனையாக உள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பும் இளம் இணைகளில் ஒருவர் இந்துவாகவும், இன்னொருவர் முஸ்லீம் ஆகவும் இருந்தால் ‘லவ்ஜிகாத்என்ற பெயரில் வெறுப்பைப் பரப்புபவர்களால் கூட்டுக்கொலை செய்யப்படும் அச்சத்தில் உள்ளனர். அனுபம் கெர் போன்ற அரசின் ஆதரவாளர்களும், மற்றவர்களும் இத்தகையவர்களை ‘சில்லரைகள்என்று கூறுகின்றனர். இத்தகைய உறவுகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும், மிகவும் எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடும் அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘சில்லரைகள்அல்லர். ஆளும்கட்சியிலும், அரசிலும் முக்கியப் பொறுப்புக்களை வகிக்கும் அவர்கள்தான் மையமானவர்கள்.

ஒரு பசுவை வதைத்ததாகவும், தனது வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருந்ததாகவும் ‘தயார் செய்யப்பட்ட வதந்தியின் பேரில்கூட்டுக்கொலை செய்யப்பட்டது ஒரு உண்மையான பிரச்சனை. ஆனால், பீகார் தேர்தலுக்கு முன்தினம் மாலையில் எல்லாநாளேடுகளிலும் பா.ஜ.க. விளம்பரப்படுத்திய செய்தி என்ன? ‘இந்துக்களின் பெருமையாக விளங்கும் பசுவை அவமதிக்கலாமா?- இது தெரியாமல் செய்ததல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு வாக்குகளை உறுதிப்படுத்துவதற்காகச் செய்தது. பசுவதைக்கு எதிரான பிரச்சாரங்கள் முஸ்லீம்களைக் குறிவைத்து மிகவும் மோசமான முறையில் தொடர்கின்றன.

அறிவுஜீவிகள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதியபோது இந்துத்துவா பரிவாரங்களால் குறிவைக்கப்பட்டார்கள். இது ஒரு உண்மையான பிரச்சனை. தோழர் பன்சாரே காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டபோது, கல்புர்கி கோழைத்தனமாக்க் கொலை செய்யப்பட்டபோது, பெருமாள்முருகன் குறிவைக்கப் பட்டபோது, திப்பு சுல்தான் வரலாற்றில் ஒரு வித்தியாசமான பார்வையை வெளிப்படுத் தியதற்காக கிரீஷ் கர்நாட் அச்சுறுத்தப்பட்டபோது – அவை உண்மையான பிரச்சனைகள் இன்னும் பிரச்சனைகளாக உள்ளன.

தேவைப்படுவதெல்லாம் ஆட்சியிலும்,தனது கட்சியிலும் பிரதமர் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி மேலிருந்து நடவடிக்கைகளை எடுத்து சங்பரிவாரங்களோடு தொடர்புகொண்டுள்ள வர்களின் அச்சுறுத்தல்களையும், வசைபாடல்களையும், வன்முறைகளையும் தடுத்து நிறுத்துவதுதான்.

இதற்கிடையில் தங்களுடைய சொந்த இழப்புக்களைப்பற்றிக் கருதாமல் உண்மைகளைப் பேசிய அமீர்கான் –அதற்கு முன்னதாக ஷாருக்கான் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவோம்.

பிருந்தா காரத்
அரசிய தலைமைக்குழு உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி



தமிழில்: செ. நடேசன்