Tuesday, 11 November 2014

நேரு மாமா

                                       நேரு மாமா

வி.பாரதி வர்ஷினி,
எட்டாம்வகுப்பு ‘அ 
கொங்குமெட்ரிகுலேஷன்மேல் நிலைப்பள்ளி, 
ஊத்துக்குளி

 டிமைப்பட்டிருந்த நாடுகளின்விடுதலைக்காகவும், அந்தநாட்டுமக்களின் நல்வாழ்வுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மகாத்மாகாந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின்லூதர்கிங்,     லெனின்,   மாவோ,   ஹோசிமின், நாசர் போன்ற தலைவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். இவர்களின்   வார்ப்பாக, மகாத்மாவின்   வாரிசாக விளங்குபவர்தான் நேருமாமா.
குடும்பம்
   அலகாபாத்தில்   மோதிலால்நேரு – சொரூபராணி தம்பதியினர் 1889 நவம்பர்14அன்று பிறந்த தங்கள்மூத்தகுழந்தைக்கு “ஜவகர்லால் எனப்பெயரிட்டனர். ஆம். இந்தியத்தாயை அலங்கரித்த ‘சிவப்பு நகைதான் நேருமாமா. விஜயலட்சுமிபண்டிட், கிருஷ்ணா  நேருவின் சகோதரிகள். இங்கிலாந்தின்   கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில்   ‘இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.  லண்டன் இன்னர் டெம்பிளில் சட்டக்கல்வியும் பயின்றார். 1916 பிப்ரவரி7ல் கமலாகௌல்-ஐத் திருமணம் செய்துகொண்டார். 1917 நவம்பர்19ல் இவர்களது ஒரேமகள் இந்திராபிரியதர்ஷினி பிறந்தார்.
அரசியல்
   1916ல்லக்னோவில்தந்தையுடன்மகாத்மாகாந்தியைச் சந்தித்தார். 1919ல் ஜாலியன்வாலாபாக்கில் 379பேரைக்கொன்று, 1200பேரைப்படுகாயப்படுத்திய ஜெனரல்டயரின் கொடூரச்செயல் நேருவின் வாழ்க்கைப்பாதையை மாற்றியது. வெள்ளையர்களை எதிர்த்துப்போராட உறுதியேற்றார். மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமைஇயக்கத்தில் பங்கேற்று 1921ல் முதன்முதலாகச் சிறைசென்றார்.   தனதுவாழ்நாளில் 9ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் கழித்தார். இடதுசாரிக்கொள்கைகளின்மீது இயல்பாகவே ஈர்ப்புக்கொண்டிருந்த நேரு, சிறையில் மார்க்ஸிசம் படித்தார். இது அவரது பொருளாதாரச் சிந்தனைகளை இந்தியநிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உதவியது. சிறையில் நேருமாமா உலகவரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
  1928ல் நேரு காங்கிரஸ்தலைவரானபோது இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.  1929ல் லாகூர்மாநாட்டில்‘பூரணசுதந்திரம் எனத்தீர்மானமிட்டார்.1931ல்தந்தையின் மறைவுக்குப்பின் காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டு மகாத்மாகாந்திக்கு   நெருக்கமானார். 1931ல் காந்தி-இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுநிறைவேறாதபோது 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய காந்தியுடன் சிறையிலடைக்கப்பட்டார். மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுமுடிவுப்படி 1935ல் சுயாட்சிஅதிகாரம்கொண்ட மாநிலஅரசுகள் அமைந்தபோது இந்தியமக்கள் நேருவை  காந்தியின்வாரிசு என்றனர். 1941 ஜனவரியில் மகாத்மாகாந்தி ‘எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் உண்டு. இருந்தாலும் ஜவகர்லால்தான் எனதுவாரிசு எனஅறிவித்தார். 1939செப்டம்பரில் இரண்டாம்உலகபோரிலும், 1942ல் ஜப்பான் எதிர்ப்பிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஈடுபடுத்தியபோது, ‘சுதந்திரத்தைத்தவிர வேறுஎதையும் ஏற்கமாட்டோம் என்றகாந்தியுடன், நேருவும்,    சிறையிலடைக்கப்பட்டார்.

பிரதமர்
 1947ஆகஸ்ட்15. இந்தியாவின் முதல்பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவஹர்லால்நேரு “நடுநிசிநேரத்தில் உலகம் உறங்கும்போது, இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்போடு விழித்துக்கொண்டிருக்கிறது. .இந்தப்புனிதமானநேரத்தில் இந்தியாவுக்கும், அதன்மக்களுக்கும் சேவைசெய்வதற்கு நம்மைநாம் அர்ப்பணிக்க உறுதியேற்போம் என்றார்.
   உலகஅரங்கில் இந்தியாவைச் சமாதானப்புறாவாக்கினார். பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்.அணிசேராக்கொள்கையை வகுத்து ஏகாதிபத்தியங்களுக்குக் கடிவாளமிட்டார். விடுதலைக்காகப்போராடும் நாடுகளுக்குக் குரல்கொடுத்தார். கல்விதான் ஒருநாட்டின் வளர்ச்சிக்குஅடித்தளம்என்று உலகநாடுகளின் எல்லாக்குழந்தைகளிடமும் அன்புசெலுத்தி ‘நேருமாமா எனக்கொண்டாடப்பட்டார்.
   பிரதமராக 17ஆண்டுகளில் “நவீனஇந்தியாவை உருவாக்கியசிற்பியானார். அணைக்கட்டுகளே நாட்டின்கோவில்கள்என விவசாயத்திற்கு முதன்மையளித்தார். நிலங்களை மறுபங்கீடு செய்யவைத்தார். கனரகத்தொழில்களை அரசேநடத்தித் தனியார்கொள்ளையைத்தடுத்தார்.மதசார்பின்மை,மதநல்லிணக்கம்மக்களின் பண்புகளாயின. தொழிற்கல்வியை,.அறிவியல் பார்வையை வலியுறுத்தினார். 
இன்றோ கல்வியும்,அரசியலும் வணிகமாகிறது. மதமயமாகிறது.
மறைவு
   1964மே27ல் அவர் மறைந்தார். ஆனால் இன்று அவரது தேவையை உணர்கிறோம்.
          “எங்கள் மாமா நேருவே  எங்கே நீங்கள் சென்றீர்கள்?
           உங்கள் அன்பைத் தேடுகிறோம். உலகம் எங்கும் ஓடுகிறோம்.
          ஒற்றை ரோஜா எங்கேயோ? ஓங்கிடும் அன்பும் எங்கேயோ?
          மற்றும் ஒருமுறை வாருங்கள்! மாமா எங்களைப் பாருங்கள்!!



 

  

Wednesday, 5 November 2014

நான் சந்தோஷ்

      நான்  சந்தோஷ்
    பெங்களூருவிலிருந்து ஒருகுழந்தையின் குரல்
                                         ஆங்கிலத்தில்: ஜி.மமதா
                                         தமிழில்: செ.நடேசன்

    என்பேரு சந்தோஷ். எனக்கு எட்டு வயசு ஆகுது .நான் பெங்களூருவில் ஜெயநகர்ல இருக்கிறேன். நான் எங்கே இருக்கிறேன்னு சொன்னப்போ அவரு ஏன் என்னை அடிச்சாருன்னு எனக்குத் தெரியல. இன்னிக்கு நீங்க எல்லாருமே ஏன் எங்கிட்ட வர்றீங்கன்னும் எனக்குப் புரியல. இதெல்லாம் நான் எந்த எடத்துல இருக்கிறேங்கறதோட சம்பந்தப்பட்டதா? இது என்னன்னு எனக்குச் சொல்லுங்க. என்னால எதையுமே புரிஞ்சுக்க முடியல.






   கோயிலுக்குப் பக்கத்துல நான் விளையாடப்போன அந்த ஞாயித்துகெழ்மை அன்னிக்குத் தான் இதெல்லாம் ஆரம்பிச்சுது. பக்கத்துல இருந்த கோயில்ல பூசாரி எல்லாருக்கும் பிரசாதம் தந்துகிட்டிருந்ததை என்சினேகிதங்க்ளோட சந்தோஷமா விளையாடிட்டிருந்த நாங்க பாத்தோம். நாங்க எல்லாரும் குழந்தைங்க. அதிகமா விளையாடுனதால பசிச்சுது. அதனால், நாங்க எல்லாரும் பூசாரிகிட்டப்போயி பிரசாதத்துக்காக நின்னோம். விளையாடிட்டு வந்ததால எங்க துணியெல்லாம் அழுக்கா இருந்துது. இல்லாட்டியும்கூட, எங்க துணியொண்ணும் சுத்தமா இருக்காது. ஏன்னா, எங்கஅப்பா போனஒருவருசமா எனக்குப் புதுத்துணியே வாங்கல. இந்த தசராவுக்குக்கூட அவர் புதுத்துணி வாங்கல.
   நாங்க அழுக்கா இருக்கறதைப்பாத்து பூசாரி எங்கிருந்து வர்றீங்க?னு கேட்டாரு. நாங்க பக்கத்துல இருக்குற ஜெயநகர் காலனியிலிருந்து வர்றோம்னு சொன்னோம். உடனே அவரு எங்களத் திட்டிட்டு வெளியேபோக ஆரம்பிச்சாரு. அவரு ஏன் எங்களப்பாத்துச் சத்தம் போட்டாருன்னு எனக்குத் தெரியல. அதனால, நான் எனக்குப் பசியா இருந்ததால பிரசாதம் கேட்டு அவருபின்னால போனேன். அவரு திடீர்னு அடிக்கஆரம்பிச்சாரு. அவரு என்தலையைப் புடிச்சுக் கோயில் தூண்ல வேகமா இடிச்சாரு. என்தலையில ரொம்ப வலிச்சுது. என்னால கொஞ்சநேரம் எதையும் பாக்கமுடியல. நான் அழஆரம்பிச்சேன். நான் அடிபடுறதப் பாத்ததும் எங்கவீட்டுக்குப்போயிப் பெரியவங்களைக் கூட்டிட்டு வந்ததாக என்சினேகிதங்க சொன்னாங்க. நான் எவ்வளவு நேரம் தூங்கினேன்னு எனக்குத் தெரியல. ஆனா, நான் முழிச்சப்போ ஆஸ்பத்திரியில இருந்தேன். என் அம்மா அழுதங்க. என் அப்பா கோபமா இருந்தாரு. அவரும் என்னை அடிப்பாருன்னு நெனச்சேன். ஆனா, அவரு அன்னைக்கு அடிக்கல. கோபமா இருந்தாரு.
   டாக்டருக என்தலையில ஒருகட்டுப்போட்டுட்டு கொஞ்சம் டெஸ்ட்டு எடுத்திட்டுவரச் சொன்னாங்க. என்தலை கொஞ்சம் கனமா இருந்தது. அம்மா ஏன் அழறாங்கன்னு எனக்குத் தெரியல. டாக்டருக என் தலையப் போட்டோ எடுக்கணுமின்னு சொன்னதாகவும், அதுக்கு ரொம்பச்செலவு ஆகுமின்னும் அம்மா சொன்னாங்க. அவ்வளவுபணம் அம்மாகிட்ட இல்ல. எங்க அப்பா போலீசுகிட்டப் பேசலாம்னு சொன்னாரு. என் தலையப் போட்டோ எடுக்க போலீசு உதவுவாங்களான்னு எனக்குத் தெரியாது. நாங்க எல்லாரும் போலீஸ்டேசனுக்குப் போனோம். என் தலையப்பத்தியும், அடிபட்டதைப்பத்தியும் போலீசுகிட்ட எங்க அப்பா சொன்னாரு. போலீசு என்கிட்ட நெறையக் கேள்வி கேட்டாங்க. நான் ஏன் கோயிலுக்கிட்ட விளையாடப்போனேன் னும், பிரசாதம் சாப்பிட ஏன் ஆசைப்பட்டேன்னும் கேட்டு அவங்க என்னையும், அப்பாவையும் திட்டுனாங்க.  என்னை அடிச்சதால பூசாரியைக் கொண்டுவரச்சொல்லி எங்க அப்பா அவங்க கிட்டக் கேட்டாரு. ஆனா, போலீசு அதைக்கேட்டுக்கவே இல்ல. அவங்க,‘நாங்க எல்லாம் பொய் சொல்றவங்கன்னும், பூசாரி ரொம்பநல்லவருன்னும் சொன்னாங்க. போலீசுஏன் எங்களப் பொய் சொல்றவங்கன்னு சொல்லித் திட்டறாங்கன்னு எனக்கு புரியல. நான் உண்மையப் பேசினேன்: என் தலையில கட்டுப்போட்டிருக்குது. ஆனா, இதையெல்லாம் அவுங்க கவனிக்கல.
   நாங்க வீட்டுக்குப் போனோம். என் தலையில போட்டோ எடுக்க இன்னும் 3000 ரூபா வேணும்னு எங்க அம்மா அழுதிட்டே இருந்தாங்க. அவ்வளவு பணம் எங்ககிட்ட இல்லைனு எனக்குத்தெரியும். எங்க காலனியிலிருந்து சில அண்ணன்களும், அக்காக்களும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. அவங்க பையன்களும் நானும் சினேகிதங்க. அவங்க என்கிட்டயும், அப்பா அம்மா கிட்டயும்‘எல்லாரும் ஒன்னாச்சேர்ந்து போலீஸ்டேஷனுக்குப்போயி அவங்ககிட்டப்பேசலாமானு கேட்டாங்க. அவங்க எல்லாரும் போனாங்க. ஆனா,அவங்க சொன்னதப் போலீஸ் கேட்கல. சில அண்ணன்க டி.வி.க்காரங்ககிட்ட சொன்னாங்க. கொஞ்சம்பேரு எங்க காலனிக்குக் கொடியோட வந்தாங்க. கொடிபிடிச்சுட்டுவந்த அண்ணன்களும், அக்காக்களும் என்ன நடந்ததுன்னு என்கிட்ட கேட்டாங்க. டி.வி.க்காரங்களும்வந்து என்கிட்டக் கேட்டாங்க. அப்பஇருந்து ஒவ்வொருத்தரும் வந்துட்டும், என்ன நடந்ததுன்னு கேட்டுகிட்டும் இருந்தாங்க. பலபேரு என்னைப் போட்டோ எடுத்தாங்க. எங்க அம்மாகிட்ட அந்தப்போட்டோ போதுமான்னு கேட்டேன். ஆனா, இல்லைனு அம்மா சொன்னாங்க.
   என்ன நடக்குது? ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு நான் யோசிச்சுப்பாக்கிறேன். முதல்ல பூசாரி எனக்கு ஏன் பிரசாதம் கொடுக்கல? அதைகேட்டது என் தப்பா? ஆனா, எல்லாருக்கும் கொடுக்கிற அவரு எனக்கு ஏன் கொடுக்கல? நான் எங்கிருந்து வர்றேன்னு அவரு கேட்டது  ஞாபகம் வருது. ஆமா. நான் எங்கிருந்து வர்றேன்னு சொன்னதும் அவருக்குக் கோபம் வந்தது. அப்படீன்னா என்னோட காலனியில என்ன தப்பு? நாங்களும்கூட மனுசங்க தானே? உங்களப் போலவே மனுசங்க. எங்களுக்கும் ரெண்டுகைகள், ரெண்டுகால்கள், ஒருதலையும் இருக்குதே. நாங்க ஏழைக: அழுக்கா இருக்கிறோம். ஆனா, எங்க அப்பா காலையில நேரத்துல வேலைக்குப் போயி, ராத்திரியில நேரங்கழிச்சு வர்றாரு. அவரு வேலைசெஞ்சபிறகு ரொம்பக்களைப்பா ஆயிடறாரு. அவரு கடுமையா வேலை செய்யறது எனக்குத் தெரியும். எங்க அம்மாகூட நெறையவேலை செய்யறாங்க. சமைக்கிறாங்க: துணிதுவைக்கிறாங்க: என்னைத் தயார்பண்ணி பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டுப் போறாங்க. அதோட பலவீடுகளுக்குப்போயி வேலைசெஞ்சு சாயந்திரம் வர்றாங்க. இருந்தாலும் நாங்க ஏழையாவே இருக்கிறோம். ஏன்னு எனக்குப் புரியல. நாங்க அழுக்கா இருக்கிறோம்: ஏன்னா, நாங்க ஏழைங்க. நான் என்ன செய்யமுடியும்?
   எங்க பள்ளிக்கூடத்துல ஒவ்வொருநாள் காலையிலும் நாங்க, “இந்தியா எனது தாய்நாடு: இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள்...னு உறுதுமொழி எடுத்துக்கொள்கிறோம். என்னோட புத்தகங்கள், ‘எல்லா இந்தியர்களும் சமம்னு சொல்லுது. ஆனா, இது தப்புன்னு எனக்குத் தெரியும். இங்கே பணக்காரங்களும், ஏழைங்களும் இருக்கறாங்க- சுத்தமாவும், அழுக்காகவும். நான் குளிச்சாலும், புதுத்துணி போட்டுக்கிட்டாலும் நான் அழுக்காகவே தெரிகிறேன். நான் எப்பவுமே அழுக்காகவே இருப்பேன்னு தோணுது. என்னை அடிக்கும்போது பூசாரி இப்படித்தான் சத்தம் போட்டாரு. என்ன இந்த அழுக்கு?  என்னன்னு புரிஞ்சுக்கவே முடியல.
   எனக்குக் கொஞ்சம் பெரிய சினேகிதர்களும் இருக்காங்க. அவங்க பிறகு சொன்னாங்க: நாம எல்லாரும் அழுக்கானவங்க. ஏன்னா, நாம தாழ்த்தப்பட்டவங்கங்கறதால. நான் அவங்களக் கேட்டேன், இந்தப் பூசாரி என்ன?ன்னு அவங்க சொன்னாங்க,அவரு பிராமணர்னு. ‘அவரு நம்ம எல்லாத்துக்கும் மேலேன்னு. “நாம கீழேன்னு. இந்த “மேலேன்னா என்ன? ‘கீழேன்னா என்ன? எனக்குத் தெரியல. ஆனா, அவங்க சொன்னாங்க, “நாம பூசாரியத் தொடக்கூடாது. ஏன்னா அவரு பிராமணரு. நாம கோயிலுக்குப் போகக்கூடாது. மேலே இருக்கிற யாராவது வந்தா நாம எழுந்து நிக்கணும்: நாம தனியாத்தான் உக்காரணும்னு. இதப்போல என்னென்னவோ சொன்னாங்க. நான் அவங்களக் கேட்டேன்,ஏன்?னு. அவங்க சொன்னாங்க, ‘இது இப்படியே பல வருசங்களா இருக்குதுனு. அவங்க அப்பாக்களும், அவங்க அப்பாக்கள் காலத்திலிருந்தே இப்படிமட்டும்தான் இருக்குதுன்னு சொன்னாங்களாம். இது ஏன் இப்படி இருக்குதுன்னு நான் நெனச்சுப்பாக்குறேன். ‘இது ஏன் இப்படி இருக்குது? கடவுள் இதை விரும்பறாரா? கொஞ்சம்பேரு சுத்தமானவங்க: கொஞ்சம்பேரு அழுக்கானவங்க. கொஞ்சம்பேரு பணக்காரங்க: கொஞ்சம்பேரு ஏழைங்க. கொஞ்சம்பேரு ‘மேலே: கொஞ்சம்பேரு ‘கீழேன்னு. இப்படிச் சொன்னா அவரு கடவுளா இருக்கமுடியாதுன்னு நான் நெனைக்கிறேன்
   இதுக்குநடுவில எங்க அப்பா மூணுநாளா போலீஸ்டேசனுக்குப்போயி பூசாரியக் கொண்டு வரச்சொல்லி அவங்களக்கேட்டாரு. ஆனா, டி.வி.க்காரங்களும், கொடிபிடிச்ச அண்ணன்களும் வந்ததுக்கப்பறம், ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வெள்ளைக்காருல எங்க வீட்டுக்கு வந்தாரு. என்ன நடந்ததுன்னு அவரு கேட்டாரு.  நான் அவருகிட்டச் சொன்னேன். அவரு சொன்னாரு, “நான் பூசாரியக் கொண்டுவருவேன்ன்னு. வெளியே நெறைய டி.வி.க்காரங்க இந்தப்போலீஸ்காரர்கிட்ட பல கேள்விகளக் கேட்டாங்க. அவரு, அவங்ககிட்ட,பூசாரியக் கொண்டுவந்து ஜெயில்ல போடுவேன்ன்னு சொன்னாரு. அதுமட்டுமில்ல: இதுவரைக்கும் பூசாரியக் கொண்டுவராத போலீஸ்காரங்ககிட்டயும் பேசுவேன்னாரு. என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயி போட்டோ எடுக்கறதாவும் சொன்னாரு. அவரு இன்னும் என்னென்ன வெல்லாமோ செஞ்சு, இனிமே யாரும் என்னைப்போலக் குழந்தைகள அடிக்கறதை அனுமதிக்க மாட்டேன்னும் சொன்னாரு.
   என்கிட்டச் சிலபேரு சொன்னாங்க, ‘நான்தான் தப்புன்னு. சிலபேரு ‘பூசாரிதான் தப்புன்னு. இன்னும் சிலபேரு, ‘பூசாரியும், போலீஸ்காரங்களும்தான் தப்புன்னு. இன்னும் கொஞ்சம்பேரு, ‘பூசாரியும், போலீஸ்காரங்களும், ‘மேலே இருக்குற பலமனுசங்களும், பணக்காரங்களும்தான் தப்புன்னு சொன்னாங்க. நான் நெனச்சுப்பாக்குறேன்: ‘போலீஸ்காரங்க எங்க வீட்டுக்கு வந்தப்பறம் பூசாரி ஓடிப்போயிட்டாருன்னு என்சினேகிதங்க சொன்னாங்க. அதனால போலீஸ் அவரைக் கொண்டுவரமுடியாது. அவரு பயந்து ஓடிட்டாரு. அவரு தப்பு செய்யலைன்னா அவரு ஏன் ஓடிப்போகணும்? நான் ஓடிப்போகலே. எனக்குப் பசியா இருந்துது: அதனால பிரசாதம் கேட்டேன்.  நான் தப்புப் பண்ணலை. ‘தப்புன்னா என்ன? ‘சரின்னா என்ன? என்ன பண்ணறது?
   காந்திஜியைப்பத்தி ஒருபாடப்புத்தகத்தில இருந்து என்னோட ஆசிரியர் சொல்லுற கதைய நெனச்சுப்பாக்குறேன். காந்திஜியை எனக்கு நல்லாத்தெரியும். ஏன்னா, அவரு ரோட்டு நடுவுல ஒருமேடையில கையில ஒருகுச்சியைப் பிடிச்சுகிட்டு நிக்கிறாரு. அவரை சுத்தி நாங்க விளையாடுவோம். அவரு பளுப்பு நிறமா இருந்ததால ரயில்ல இருந்து தள்ளிவிடப் பட்டாருன்னும், அதனால அவரு கோபப்பட்டு அவங்கள எதுத்துச் சண்டைபோட எல்லா மக்களையும் கூப்பிட்டாருன்னும் எங்க ஆசிரியர் சொன்னாரு. அதுக்குப் பின்னால வெள்ளக்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க. ஏன்னா, காந்திஜி எல்லா ஜனங்களையும் இந்தப் போராட்டத்துல ஒண்ணுசேத்தாரு. நான் இதை நெனைச்சுப்பாத்தேன். காந்திஜி பளுப்பு நிறமா இருந்தாரு. அதனால வெளியே தள்ளப்பட்டாரு. அது வெள்ளைக்காரங்களால. நான் அழுக்கானவன்: நான் தாழ்த்தப்பட்டவன்: நான் அடிக்கப்பட்டேன்: இது இந்தியர்களால. ஆனா, ரெண்டும் தப்பு. காந்திஜியால் சண்டைபோட முடியும்னா, நானும் சண்டை போடுவேன்.
   கோட்டுப்போட்ட, கையில புத்தகத்தோட, ஒருவிரலை எங்க வீடுகளப் பாத்து  நீட்டீட்டு இருக்கற ஒருத்தரை என்சினேகிதங்க எனக்குக் காட்டுனாங்க. அவரும்கூட எங்களப்போல அழுக்கா இருந்தமாதிரி தெரிஞ்சுது. அவரு தன்னோட கையில இருந்த புத்தகத்துல எழுதினாரு: அதை நாடுமுழுக்கக் கொண்டாடுது. அவருகூட அடிக்கப்பட்டாரு. ஆனா, நெறைய மக்களைச் சேத்துகிட்டுச் சண்டை போட்டாரு: பெரிய மனுசரா ஆனாரு.
   கொடிபிடிக்கிற அண்ணன்களும், அக்காக்களும் இதுமாதிரிப் போராடற பலபேர் படங்கள வச்சிருக்கிறாங்க. அவங்க சொன்னாங்க, ‘ரொம்ப மோசமான கெட்டவங்களோட சண்டை போட்டு ஒருபள்ளிக்கூடம் ஒருபெரிய பரிசை வாங்கியிருக்குதுன்னு. அதுக்குப்பின்னால ஒவ்வொருத்தரும் சொன்னாங்களாம், “நான் மலாலா, நான் மலாலான்னு. அவங்க சொன்னாங்க, அவங்களைப்போல நீயும் வாழணுமின்னா நீயும் போராடணும்னு. நான் யோசிச்சுப்பாக்குறேன்: “நான் சந்தோஷ், நான் சந்தோஷ்னு சொல்லிகிட்டே மக்கள் வெளியே வருவாங்களா?

                                நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி – அக்டோபர் 27,  2014  
      



Monday, 3 November 2014

பா.ஜ.க. எதை நோக்கி...?

                   பா... எதை நோக்கி...?      
             மதவெறி அத்துமீறல்களில்
                                     வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்
                                               தமிழில்: செ.நடேசன்
 நரேந்திரமோடியை ‘வளர்ச்சிக்கான மனிதன் என்று உயர்த்திப்பிடித்துப் பெற்றுள்ள அரசியல்ஆதாயங்களால் ஊக்கமடைந்துள்ள ‘சங்பரிவாரம் தனதுபிரித்தாளும் தந்திரங் களைக்கொண்டு, சமூகத்தளத்தில் மதவெறி ஊட்டிடவும், தனது ஆதாயங்களை ஒருங் கிணைக்கவுமான அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளது.



  நாடாளுமன்றத்தேர்தலின் மிகப்பெரிய வெற்றிக்குப்பின், அடுத்த பெரியதிட்டமாக நாட்டின் அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் ஒட்டுமொத்த இந்துத்துவா ஆதிக்கத்தை நிலைநாட்ட சங்பரிவாரம் தயாராகிவருகிறது. நாடுமுழுவதும் அதிகரித்துவரும் மதப்பதற்றங்கள் இதைத் தெரிவிக்கின்றன.
  2014 செப்டம்பர் 11 ல் பிரதமரின் அலுவலகம் 1893 செப்டம்பர் 11 ல் சிக்காகோவில், உலக சமயங்களின் மாநாட்டில் சுவாமிவிவேகானந்தர் ஆன்மாவைஉலுக்கும்வகையில் உரையாற்றிய செய்தியானஉலகசகோதரத்துவத்தைநரேந்திரமோடிநினைவுகூர்ந்தார்எனஒருசெய்திஅறிக்கையை வெளியிட்டது. அந்தஅறிக்கை, பிரதமர், நாம் சுவாமிஜியின்செய்தியைப் பின்பற்றியிருந்திருப் போமானால் அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 ல் நடைபெற்ற முரட்டுத்தனமான, இழிந்த நடவடிக்கைகளை வரலாறுஒருபோதும் சந்தித்திருக்காது.. “சுவாமிவிவேகானந்தரின் வார்த்தை களை நாம் நினைவுகூர்ந்து ‘ஒற்றுமை, சகோதரத்துவம், உலகஅமைதியை முன்னெடுத்துச் செல்ல நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்வோம் என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.

















   அந்த அறிக்கை தயாராகிக்கொண்டிருந்தபோதே பல்வேறு சங்பரிவார அமைப்புக்களிலிருந்த மோடியின் சீடர்கள், விவேகானந்தரின் செய்தியான ‘ஒற்றுமை, சகோதரத்துவம், உலக அமைதி ஆகியவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தனர். பீகாரில் எளிதில் மத உணர்ச்சிவயப்படும் பாஹல்பூர் மாவட்டத்தில் சங்பரிவாரங்களின் தத்துவார்த்தப் போர்வாள் எனறு ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தீவிரத்தொண்டர்கள் கடை வீதிகளை அழித்தல், வாகனங்கள்மீது கற்களைவீசிச் சேதப்படுத்துதல்,இரயில்பாதை மற்றும் சாலைகளை மறித்தல் ஆகிய நடவடிக்கைகளில் சிறுபான்மை முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கினர். ‘இந்து மைனர்பெண் முஸ்லீம் மைனர்பையனோடு ஓடிவிட்டாள் என்ற வதந்தியைக்கிளப்பி அவர்கள் இந்தச்செயல்களில் ஈடுபட்டனர். இதை வி.ஹெச்.பி.யும் அதன் இந்துத்துவா குழுவினரான பஜ்ரங்தள், பாரதிய ஜனதா கட்சியினரும் ‘லவ் ஜிகாத்தை முன் கொண்டுசெல்லும் ஒரு சதித்திட்டம் என்றனர். ஆனால், காவல்துறையின் புலனாய்வு விசாரணைகள் இதை ‘பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒருகற்பனையின் உச்சகட்டம் என்று தெரிவித்தது.
  மோடியின் செய்தியைப் பிரதமர் அலுவலகம் வெளியிடுவதற்கு ஒருநாள்முன்பு, உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான ல்க்னோவில் ‘ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றை முன்னெடுத்துச்செல்ல சங்அமைப்புக்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒருநாடகத்தைக் கண்டது. 





   இந்த நிகழ்ச்சி பா.ஜ.க. தலைவரான அமித்ஷா வால் செப்டம்பர் 13 ல் நடைபெற்ற 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரச்சாரத்தைத் தலைமையேற்று நடத்துபவர் என்று அறிவிக்கப்பட்ட கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யோகிஆதித்யநாத் தலைமையில், சங்பரிவாரங்களில் உள்ள அமைப்புக் களாலும், தீவிரத் தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேர்தல் பிரச்சாரத்தின் ஓர்அங்கமாக லக்னோ கிழக்குத்தொகுதி வேட்பாளரான அசுத்தோஷ்கோபால் டாண்டனை அறிமுகப்படுத்துவதற்காக நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சில் பெரும்பகுதி முஸ்லீம்களையும், அவர்கள் சார்ந்த அமைப்புக்களையும் திட்டி வசைபாடுவதாகவே இருந்தது. ‘லவ்ஜிகாத் போன்ற அடைமொழிகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் மக்கள்தொகை உயர்வதற்கும், மக்கள் ஏழ்மை நிலையில் வாழ்வதற்கும் முஸ்லீம்களே காரணம் என்றுவசைபாடப்பட்டனர்.
   கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாகக் கோபத்தைத்தூண்டும் கோஷங்களை உரத்து முழங்கிஊர்வலம் சென்றனர். ஒருகோஷம், “யோகி ஆதித்யநாத் ஓர் அணுகுண்டு. அவருக்குச் சவாலாய்  எவனுண்டு? தைரியம் மிக்கவன் இங்குண்டா?என முழங்கியது. இடைத்தேர்தல் நடைபெற்ற இதரதொகுதிகளிலிருந்து வந்த செய்திகளும்கூட ஆதித்யாநாத்தின் பிரச்சாரப் பேச்சுக்கள் இந்து – முஸ்லீம் பகை உணர்வை ஏற்படுத்துவதாகவும், மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும் இருந்ததாகத் தெரிவித்தன. எனவே, தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ‘மதக்கலவரங்களைத் தூண்டிவிட முயற்சிப்பதாக முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு மாநிலஅரசுக்கு அறிவுறுத்தியது. தீவிரஇந்துத்துவா வன்முறைவெறியாட்டங்களையும்,  , அச்சுறுத்தல்களையும்  நடைமுறைபடுத்தியவர் என்ற இவரது பழைய வரலாற்றுப் பின்னணிதான் இந்த இடைத் தேர்தலிலும் அவற்றைப்பயன்படுத்தி மக்களைப்பிளவுபடுத்தும்நோக்கில் ஆதித்யநாத்தை தலைமைத் தேர்தல் பிரச்சாரகராகத் தேர்வுசெய்யவைத்தது.
   ஆனால், இந்துத்துவா சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதக்கலவரங்களும், வெறுப்புப் பிரச்சாரங்களும் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலும் அல்லது பாஹல்பூரிலும் மட்டும் நடைபெற்றவை அல்ல. ஊடகங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட செய்திகள் ‘கடந்த மூன்றுமாதங்களில் ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் திட்டமிட்ட வகையில் மதவெறிக் கலவரங்களையும், மதச்சிறுபான்மையினரை ஓரம்கட்டும்செயல்களையும் அரங்கேற்றத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, என்பதைத் தெரிவித்தன. பல்வேறு மாநிலங்களில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தன்மைக்கேற்ற ஒருதெளிவான வழிமுறையைக் கொண்டி ருந்ததைப் புலப்படுத்தின. ‘லவ்ஜிகாத் வதந்திகளும், ஒருகுறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்: கோவில்களையும், மதப்புண்ணிய ஸ்தலங்களையும் தாக்குகிறார்கள்: இந்துக்களின் சொத்துக்களைப் பறிக்கிறார்கள் என்பன போன்ற கட்டுக்கதைகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லீம்தீவிரவாதிகளும் மதமாற்றங்களைச் செய்கிறார்கள் என்ற கற்பனைகளும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் தந்திரங்களின் ஒருபகுதியாகவே அமைந்தன. இதன் ஒட்டுமொத்த விளைவு மதச்சிறுபான்மையினருக்குக் குறிப்பிடத்தக்கவகையில் சமூகத்தில் ஓரம்கட்டப்படும் நிலையை யும், பொருள் இழப்பையுமே ஏற்படுத்தின.
   சங்பரிவாரங்களுக்குள் இருப்பவர்கள் இதை வார்த்தைகளில் ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ஆனால், டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகாரில் உள்ள சிலரோடு பேசியபோதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்துத்துவாவோடு இணைந்த அமைப்புக்களைக் கூர்ந்து கவனிக்கும் உற்றுநோக்கர்கள் பலரும் தெரிவிக்கும் தகவல்களும் கீழ்மட்டங்களில் வளர்ந்துவரும் வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோடியால் மேற்கொள்ளப்பட்டுவரும் குறிக்கோளும் நாட்டின் அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் இந்துத்துவா மேலாதிக்கத்தை நிலைநாட்ட சங்பரிவாரம் கையாண்டுவரும் நடைமுறைத் தந்திரங்களே என்பதை உறுதிப் படுத்துகின்றன. பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டபிறகு சங் பரிவாரத்தின் வெளிப்படையான செயல்திட்டம் இதுதான். வேறுவார்த்தைகளில் சொல்வது என்றால் “மோடி அரசின் ஆரம்ப நாட்களின் தந்திரம் இதுதான்.
   உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் – ஆர்.எஸ்.எஸ். ன் மூத்ததொண்டர் ஒருவர், “முதன்மையாக மோடியை ‘வளர்ச்சிக்கான மனிதனாக உயர்த்திப்பிடித்து இந்துத்துவா அரசியலைத் தீர்மானகரமாகப் பின்தொடரவைத்த தேர்தல்உத்தியின்மூலம் வெற்றியை எதிரொலிக்கச்செய்த சங்பரிவாரம், மேலும் புதிய தந்திரோபாயங்கள் மூலம் இந்துத்துவா அரசியலைப் பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுத்துச்செல்ல முயல்வது இயற்கைதான். மோடியை வளர்ச்சிக்கான மனிதனாக உயர்த்திப்பிடித்த துணிச்சலான முயற்சி குஜராத் மாநிலஅரசு, ஒருங்கிணந்த பல்வேறு பகாசுரத் தொழில்குழுமங்கள் மற்றும் உலக அளவிலான விளம்பர மற்றும் தரகுக்குழுமங்கள் ஆகியவை கூட்டாக இணைந்து எடுத்ததாகும்.பல்வேறு வழிமுறைகள்மூலம் இந்துத்துவாஅரசியலைப் பின்தொடர வைப்பது, 2013ல் உத்திரப்பிரதேசம், முஜாபர்நகர் கலவரங்களின்மூலம் துவக்கிய மதசார்பானஅணிதிரட்டல்மூலமும்,  வடஇந்தியா வில் நடத்திய கந்தக நெடிவீசும் பிரச்சாரத்தின் மூலமும் வெறியேற்றி நடத்தப்பட்டது.என்றார். அந்த மூத்ததொண்டர் மேலும் கூறினார்: தேர்தலில்பெற்ற அரசியல் ஆதாயங்களை ஒருங்கிணைத்து, அதை இந்தச்சமுதாயத்தின் அரசியல், சமூகத்தளங்களில் மிகப்பெரும் அளவுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாகவும்கொண்டு புதிய தந்திரங்கள் வகுக்கபடும்
   இந்தப்புதிய தந்திரோபாயத்தின் விரிவான வரையறை 2014 தேர்தலுக்கான உத்திகளி லிருந்து முன்னேறிச்செல்லும்வகையில் புதிய அழுத்தங்களையும், புதிய வண்ணங்களையும் கொண்டதாக அமையும் என்பது சங்பரிவாரத்தின் அமைப்புக்களில் பல்வேறு நிலைகளிலுள்ள தீவிரத்தொண்டர்களுடன் கலந்துரையாடியபோது தெளிவானது. அது மோடியின் தனிமனித ஆளுமையை ஒருபக்கத்திலும், தீவிர இந்துத்துவா அரசியல் தேடலை மறுபக்கத்திலுமாகக் கொண்டு சுழலும். ‘வளர்ச்சிக்கான மனிதர் மோடி என்று உயர்த்திப்பிடித்த தோற்றமும், அதைப் பிரச்சாரப்படுத்திய விதமும் நடுத்தர – குறிப்பாக நடுத்தரப் படித்த-வர்க்கத்தினரிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. “தொலைநோக்குப்பார்வையோடு தேசத்தை மறுகட்டுமாணம் செய்பவர் என்பதே மோடியின் தனிமனித ஆளுமையைக் காட்சிப்படுத்தும் புதிய உத்தியாகும்.
   ‘மானுட மதிப்புக்களுக்கு அழுத்தம்கொடுத்து விவேகானந்தரின் பேச்சை நினைவுகூர்ந்ததும், ஆசிரியர்தினத்தன்று தேசம்தழுவிய தொலைக்காட்சி நேரடிஒளிபரப்பில் குழந்தைகளோடு  கலந்துரையாடியதும்,       முன்தயாரிப்பில்லாமல் ஆற்றிய சுதந்திரதின உரையும் – 














என எல்லாமுமே மோடியைப்பற்றிய ஒருபிம்பத்தை உருவாக்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பகுதிகளே காந்திஜி, நேரு, சர்தார் பட்டேல் ஆகியோரின் ஒருங்கிணந்த கலவைதான் மோடி என்று உயர்த்திப்பிடிக்கப்படுவார். உன்னதமான மதிப்பீடுகளை அளிக்கும்தலைவராக, வளர்ச்சிக் கான பார்வைகொண்டவராக, உறுதிமிக்கவராக, தீர்மானிக்கக்கூடியவராக மோடி தூக்கி நிறுத்தப்படுவார் என லக்னோவில்  நடுத்தரநிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தனது உடலை நெளித்துக்கொண்டு கூறினார்.
   இந்தத்தந்திரத்தின் இரண்டாவது அம்சம்தான் இன்று நாடுமுழுதும் நாம் கண்டுகொண்டி ருக்கும் மதவெறிக் கலவரங்களும், அச்சுறுத்தல்களும். இந்தவழிமுறைகள் வெறும் அரசியலுக்காக மட்டுமல்ல: ஒட்டுமொத்த சமூகத்தின்மீதும் மேலாதிக்கம் செலுத்துவதை நோக்கமாககொண்டது எனச் சங்பரிவாரத்திற்குள் இருப்பவர்கள் கூறுகிறார்கள். 2014 தேர்தல் மூலம்அடைந்த இந்துத்துவா அரசியல்வெற்றியின் பின்தொடர்ச்சி, தேர்தல்கள் நடைபெறவுள்ள மஹாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் மீண்டும் எதிரொலிப்பதில் சிரமம் இல்லை. என்வே, மேலும்பல வெற்றிகள் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை அவர்களே நடத்திய கலந்துரையாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சமூக மேலாதிக்கத்தைக் கொண்டுவருவதில் வெற்றிபெற, அரசியல் ஆதாயங்கள் பெற்ற பகுதிகளிலும், இன்னும் அரசியல்ரீதியாக வெற்றிபெறவேண்டிய பகுதிகளிலும் நீண்ட காலத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
   புதியதந்திரோபாயங்களை முன்னெடுத்துச்செல்வதில் அடைந்துள்ள அரசியல் சமூகவிளைவு களில் சங்பரிவாரத்தலைமை தெளிவான திருப்தி கொண்டுள்ளது. மோடியின் தனிமனித ஆளுமையைத் தூக்கிப்ப்பிடிப்பது, சமூகமேலாதிக்கத்தை அடைவதற்கான இந்துத்துவா பிரச்சாரம் ஆகிய இரண்டும் சங்பரிவாரத்தில் ஏற்கனவே உள்ள புள்ளிவிபரங்களையும், பகுதி வாரியான அடித்தளங்களையும் ஒருங்கிணைக்க உதவியதோடுமட்டுமின்றி, பூகோளரீதியாக தமிழ்நாடு, ஒடிஷா, மேற்குவங்கம், கேரளா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் புதிய சமூகவர்க்கங்களைத் தனது அடித்தளமாக மாற்றுவதற்கான புதிய ஆதரவுத்தளங்களை உருவாக்கியுள்ளது எனவும் இதன் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், ‘தொலை நோக்குப்பார்வையுடன் தேசத்தை மறுகட்டுமாணம் செய்பவர் மோடி என்ற தோற்றத்தால் கவரப்பட்டவர்கள் மெல்ல மெல்ல இந்துத்துவாவோடு இணைந்துள்ள ‘சமூக மேலாதிக்கம் என்ற கருத்தாக்கத்தையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறுவார்கள் என்ற வியாக்கியானத்தையும் முன்வைக்கின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைப்பற்றிய எடுத்துக்காட்டில் “2002ல் சட்டமன்றத்தில் 1 இடம் என்பதிலிருந்து 2008ல் 11 இடம் என்று தனது எண்ணிக்கையை பா.ஜ.க. அடைந்தது எனக்கூறிய மூத்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் “இந்தமுறை மத்தியில் மோடியின்அரசு அமைந்துள்ள சூழலில் இதன்தாக்கமும், புதிய தந்திரோபாயங்களும் இந்த எண்ணிக்கையைச் செல்வாக்குமிக்க சக்தியாக உயர்த்தும், என்கிறார். ‘இது காஷ்மீரில் இந்து ஆதிக்கம் துவங்குவதன் அறிகுறி, என்கிறார் அவர்.
   ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புக்களும் தங்களது வாழ்நாளில் மிகச்சிறந்த காலகட்டம் இது என இன்றைய காலகட்டத்தை ஆதாரங்களோடு மதிப்பிடுகிறார்கள். விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்துவா அரசியலை ‘இந்து அரசியல் அடையாளத்தளத்தை உருவாக்கி வளர்ப்பதற்கான கருத்தாக உருவாக்கினார். பல்வேறு முயற்சிகளுக்கும், பின்னடைவுகளுக்கும் பிறகு இப்போது இந்து அரசியல் அடையாளத்தை உருவாக்குவதில் கிட்டத்தட்ட வெற்றியைப் பெற்றுவிட்டதாக சங்பரிவாரத்தில் இணைந்துள்ளவர்கள் உணருகி றார்கள். “இந்து சமூகத்தில் உள்ள சாதிப்பிரிவினைகள் ‘இந்து அரசியல் அடையாளத்தை உருவாக்குவதற்குத் தடைக்கற்களாக உள்ளன என்ற புரிதல் இந்தக்கருத்தக்கத்தை முன்னெ டுத்துச் செல்பவர்கள் மத்தியில் தெளிவாகக் காணப்படுகிறது. சாவர்க்கர் ஸ்தாபித்த ‘ஹிந்து மஹா சபாவும், அதுபோலவே ஆர்.எஸ்.எஸ்.ஸும் இந்தச்சாதிப்பிரிவுகளைத் தாண்டிச்செல்ல நாட்டின்பல்வேறுபகுதிகளில் எல்லாச்சமூகத்தினரும் பங்கேற்கும் உணவுத்திருவிழாக்களை நடத்தின. ஆனால், அப்போது காங்கிரஸ் பெற்றிருந்த மக்கள்செல்வாக்கைத் தாண்டிச்செல்ல இவை போதுமானதாக இல்லை.
   சுதந்திரத்துக்குப்பின், இந்துத்துவாவாதிகள், ‘பசு பாதுகாப்பு என்பதை இந்துக்களின் உணர்வுகளோடுஇணைத்துத் தீவிரப்பிரச்சாரங்களையும் ,முழக்கங்களையும் பின்பற்றத் துவங்கி னார்கள். இதுவும்கூட  நாடுதழுவிய அளவில் நடைபெறவில்லை: அவர்களுக்கு உதவவு மில்லை. 1975 ல் நெருக்கடிநிலை திணிக்கப்பட்டதும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் 1977 ல் இந்திராகாந்தியைத் தோற்கடித்ததும் நிகழ்ந்தபோது, இந்துத்துவா திட்டம் சிறிதளவு தலைதூக்கியது. வலதுசாரி முதல் இடதுசாரி வரையான கொள்கைகளின் செல்வாக்குமிக்க ‘ஜனதா கட்சியில் ஜனசங்கத்தை இணைக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதித்தது. இருந்தாலும் ஜனதாகட்சிக்குள்ளும் தனது இந்துத்துவா அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆர்,எஸ்.எஸ். விரும்பியது. இந்த முக்கியமான காரணத்தால் ஜனதா பரிசோதனை விரைவில் முடிவுக்கு வந்தது.
   இந்தப்பிரிவு, பாரதிய ஜனதா கட்சியை உருவாக்க வழிவகுத்தது. 1980களின் நடுவிலும், பின்னரும் பா.ஜ.க.வுக்கு ஆதிக்கம் மிகுந்த அரசியல் தளத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். அயோத்தியில் இராமர்கோவில் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது. இது, 1992 ல் பாபர் மசூதியை இடிப்பதற்கு வழிவகுத்தாலும்கூட இந்த இயக்கத்தின்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்திட சங்பரிவாரங்களால் முடியவில்லை. 1977ல் மீண்டும் ஒருசமரசத்திட்டத்தை- இம்முறை அரசியல் கூட்டணியின்மூலம்- முயற்சித்தது. இது 1990களின் பிற்பகுதியில் செயல்பட்டு கட்சித்தலைவர் அடல்பிகாரி வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 1988மூதல் 2004 வரை அமைய உதவியது. இதிலிருந்து 10 ஆண்டுகள் எதிர்க் கட்சி அரசியலும், 2014 ல் மோடியை முன்நிறுத்திப்பெற்ற தனிக்கட்சிப் பெரும்பான்மையும் உண்மையில் ஒருமாபெரும் முன்னோக்கிய பாய்ச்சலாக அமைந்தது. வரலாற்றுப்பூர்வமான இந்தவெற்றி,வெளிப்படையாக சங்பரிவாரத்தின் ஒட்டுமொத்த சமூக,அரசியல் மேலாதிக்கத்தை நோக்கிச்செல்ல உந்தியது.
   சமூக மேலாதிக்கத்தை நோக்கிய முரட்டுத்தனமான உந்துதலையும், சங்பரிவாரத்தின் மதிப்பீடுகளையும்பற்றி லக்னோவில் உள்ள அரசியல் ஆய்வாளரான சுதிர் பன்வார், “ஓரம் கட்டுவதும், பகைமைப்படுத்துவதும் இந்த முரட்டுத்தனமான உந்துதலின் முதன்ம்மையான வெளிப்பாடுகள் ஆகும், என்கிறார். “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு ஒரு சமுதாயத்தை ஓர் இடத்திலிருந்து அல்லது பகுதியிலிருந்து விரட்டியடிக்க உங்களுக்கு வன்முறை தேவைப்படாது. ஏற்கன்வே உணரப்பட்ட வன்முறைச்செயல்களே துன்புறுத்தி ஒருசமுதா யத்தை ஒருபகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற்றி ஓரம்கட்டுவதையும், பகைமைப்படுத்துவதையும் சாதித்துவிடும். இவ்வாறு கூட்டம் கூட்டமாக வெளியேறும் சமுதாயம் எந்த இடத்தில் அல்லது எந்தப்பகுதியில் பலம்வாய்ந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறதோ அங்குபாதுகாப்பான உணர்வைப்பெறும். இது,மறுபுறத்தில் சேரிப்பகுதிகளை உருவாக்கி ஓரம்கட்டப்பட்டவர்களை மேலும் ஓரம்கட்டும்என்கிறார். பன்வார் “2002ல் குஜராத் கலவரங்களிலும்,இப்போதும்கூட மேற்குஉத்திரப்பிரதேசத்திலும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் காணமுடியும் என்கிறார்.
   நாட்டின் பலபகுதிகளிலும் இந்தப்போக்குகள், அளவுகளில் மாறுபட்டிருந்தாலும், திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சத்தீஸ்கரில்50கிராமசபைகள் ‘ இந்துக்கள் அல்லாத தனிநபர்களோ, அமைப்புக்களோ அவர்களது கிராமங்களுக்குள் நுழைவதையோ, மலைவாழ்மக்கள் தங்கள் பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் செய்வதைப்போல் தொழில் செய்வதையோ, இந்துமதத்தைத்தவிர பிறமதங்களைப் பிரச்சாரம் செய்வதையோ, உபதேசிப் பதையோ தடை செய்யும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தக்கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்குப் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வழங்குவதையும் இந்தத் தீர்மானம் தடை செய்கிறது. தனியார் கடைக்காரர்கள் கிறிஸ்தவர் களுக்குப் பொருட்களை விற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவிலும், உத்திரப்பிரதேசத்தின் பலபகுதிகளிலும் சங்பரிவாரங்கள் பல நூற்றாண்டுகளுக்குமுன் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளன.
   இந்துத்துவா சமூக மேலாதிக்கக் கருத்தாக்கத்தின் ஒருபகுதியாக டெல்லியில், உலக வர்த்தகப் பொருட்காட்சிகளும், புத்தகக் கண்காட்சிகளும் நடைபெறும் தலைநகரின் பொருட் காட்சித்திடலான பிரகதி மைதானத்தில் அண்மையில் ஒருமுற்றுகைப் போராட்டத்தை வி,ஹெச்.பி.யும், பஜ்ரங்தள் அமைப்பும் நடத்தின.





   “அலிஷான் பாக்கிஸ்தான் என்ற பெயரில் அங்கு நடைபெறும் வாழ்க்கைத்தேவைக்கான பொருட்காட்சியை தடுக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரேஒரு கோரிக்கை. “அந்தப்பொருட்காட்சி, பாகிஸ்தானையும், அதன் தயாரிப்புக் களையும் புகழ்ந்து கூறுகிறது. இது நமது இந்தியக்குடிமக்களின் உணர்வுகளைக் காயப் படுத்துகிறது என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் வாதம். போராட்டக்காரர்கள், ‘நாட்டில் எல்லாப் பாகிஸ்தான் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும், என அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமா? “வணிகசமூகத்தினர் மாபெரும் தேசபக்த உணர்வோடு பாகிஸ்தான் தயாரிப்புக்களிலிருந்து விலகி நிற்க வேண்டும் என எச்சரித்தனர்.
   தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்புக்கள், போராட்டங்கள், பெருந்திரள் நடவடிக்கைகள் போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் ஏராளமான சங்பரிவாரத் தீவிரத் தொண்டர்களால் அரசியல், தத்துவம், சமூகஅமைப்பு ஆகியதளங்களில் இந்த்த்துவா வரலாற்றுச் சாதனைகளின் துவக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. “இந்துத்துவாவின் பயணத்தில் மத்தியில் ஒருதனிக்கட்சிப் பெரும்பான்மை பெற்றது ஒருவரலாற்றில் ஒருமைல்கல் ஆகும். ஆனால், சாவர்க்கரின் தத்துவ வழிகாட்டலில் துவங்கிய இந்தப்பயணம் இந்துத்துவா ஒட்டுமொத்த சமூக மேலாதிக்கத்தை அடையும்போதுதான் நிறைவடையும். இந்தப்புதிய தோற்றம் இந்துத்துவா மேலாதிக்கத்தை அடைவதை முதன்மை இலக்காகக் கொள்ளும் எங்கிறார் லக்னோவில் உள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளர். இந்த நகர்வுகள் பள்ளிப்பாடநூலகளில் இந்துத்துவாசார்ந்த வரலாற்று நோக்கங்களை உணர்வு பூர்வமாக நுழைப்பதையும் ஒருபகுதியாகக்கொண்டுள்ளன.
   2014 தேர்தல்கள் நடைபெற்றபோது, பாகிஸ்தானின் பெண்ணியக்கவிஞர் ஃபாஹ்மிதா ரியாஸ் இந்தியாவில் இந்துத்துவாவின் எழுச்சியைக்கண்டு பொறுமை இழந்து எழுதிய கவிதை சமூகஊடகத்தளங்களில் சுற்றுக்குவிடப்பட்டது. அந்த உருதுகவிதையின் முதல் சிலவரிகளின் தோராயமான மொழியாக்கம் இவ்வாறு உள்ளது:

     “ நீங்களும் எங்களைப்போலவே ஆகிவிட்டீர்கள்
       கடந்தகாலச் சேற்றில் புரளும் அதேபோன்ற முட்டாள்களாக
       கடைசியில் நீங்களும் அதே வாசலை அடைந்துவிட்டீர்கள்
       உங்களின் மதமான பேய் கோமாளிக்கூத்தாடுகிறது
       என்னவெல்லாம் நீங்கள் செய்கிறீர்களோ அவை தலைகீழ் ஆகும்.

ஃபாஹ்மிதா ரியாஸின் ‘ அதே வாசலை அடைந்துவிட்டீர்கள்,  ‘அதேபோன்ற முட்டாள்களாக  ஆகியகுறியீடுகள் பாகிஸ்தான் என்றநாடு பிறந்ததிலிருந்து நடைபெற்றுவரும் மதஅடிப்படை வாத நிகழ்ச்சிகளோடு வெளிப்படையான ஒப்புமை கொண்டவை ஆகும். அவரது கவிதை, தீவிரப் பிற்போக்குத்தனமான மதம்சார்ந்த பாகிஸ்தானின் அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுபோலவே இந்திய ஜனநாயகமும் ஆகிவருவதில் ஏமாற்றமடைந்த உனர்வுகளின் வெளியீடு எனக்கருதப்பட்டது.
   இந்துத்துவா அணியில் இந்தியா முழுவதும் அரங்கேறிவரும் மதவெறி நிகழ்வுப்போக்குகள் இந்தக்கவித்துவ வெளிப்பாடு நிதர்சனமாகி வருவதைக் காட்டுகிறது.

நன்றி : ஃப்ரண்ட் லைன்  அக்டோபர் 3 – 2014.