Wednesday, 15 October 2014

ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் ஒன்று

        ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் 
                         திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
    தினேஷ் நாராயணன்                               தமிழில்: செ.நடேசன்
                               ஒன்று
   கடந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில் உலகின் பிகப்பெரிய அரசியல்சார்பற்ற தன்னார்வத் தொண்டுநிறுவனம்என்று சொல்லிக்கொண்டு இந்தியாவில் இந்துதேசியவாதத்தின்அடித்தளமாக விளங்கும் ராஷ்ட்ரிய சுயம்சேவக்சங் கொல்கத்தாவில் நடத்திய “இஸ்லாமிய அடிப்படை வாதம்என்றஇரண்டுநாட்கள் கருத்தரங்கில் பத்திரிக்கையாளர்படை திரண்டிருந்தது. பத்திரிக்கை யாளர்களைக் குறிவைத்து அந்த அமைப்புக்குரிய ஜம்மு-காஷ்மீர் அரசியல் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டசாதியினர், வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள்மீது நடத்திய நான்கு தொடர் கருத்தரங்குகளில் முதலாவது இது. சங்அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை மட்டுமே கருத்தரங்கில் அனுமதித்தார்கள். மற்ற மூன்றும் புதுடெல்லி, பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இவற்றில் நாடுமுழுவதிலுமிருந்து 220பேர் கலந்துகொண்டார்கள்.
   கொல்கத்தாவில் பிரச்சார் பிரமுக் அல்லது உயர்நிலைப்படுத்தும் தலைவரும் நிகழ்ச்சியின் தலைமைஒருங்கிணைபாளருமான மோகன்வைத்தியா பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். நிலைபற்றிய உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அதன்மூலம் இந்துதேசியத்தின் பார்வையை நன்குஉயர்த்திப் பிடிக்கவும் ஆர்.எஸ்.எஸ்.ன் அடிப்படை நோக்கங்களை முன்வைத்தார். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் ‘இக்கருத்தரங்கம்பற்றி ஆர்.எஸ்.எஸ்.வட்டத்துக்கு வெளியே எடுத்துரைக்கவோ, பேசவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். உள்ளூர் நாளேட்டில் பணி யாற்றும் பத்திரிக்கையாளரும், சுயம்சேவக் அல்லது ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான ஒருவர் என்னிடம், “நாங்கள் ஒருகாதில்வாங்கியதை மறுகாதில் விட்டுவிடவேண்டுமென்று அறிவிக்கப் பட்டோம் என்றார்.
   ஒருகட்டத்தில்மஹாராஷ்ட்ராவிலிருந்துவந்த ஹோமியோபதிமருத்துவரும், சங்அமைப்பில் இஸ்லாமிய இந்து அறிஞராகச் செயல்படுபவருமான ஸ்ரீரங் காட்போலே, முஸ்லீம் சமுதாயம் உறுதியான ஒரேகட்டமைப்பை உடையதல்ல. இந்துக்கள் சாதி அடிப்படையில் பிளவுபட்டுக் கிடப்பதைப்போல அவர்களும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கிறார்கள் என்று விளக்கினார். மேலும் அவர் ‘சாந்தசொரூபிகள் எனக்கருதப்படும் சுபியிசம் போன்ற பிரிவினர் கடந்தகாலங்களில் வன்முறையாளர்களாக இருந்தார்கள். என வர்ணித்தார். நமது தலைவர் களில் சிலர் வரலாற்றை நன்குபுரிந்துகொள்ளாமல் சுபி துறவிகளுக்குப் புகழாஞ்சலி செலுத்து கிறார்கள் என்றார். அப்போது ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர்தர்ஹாவில் பி.ஜே.பி. தலைவர் எல்.கே.அத்வானி இருந்தபடம் திரையில் காட்டப்பட்டது. அது கருத்தரங்கம் முழுவதும் உடனிருந்த ஆர்.எஸ்.எஸ். சர்சங் சாலக் அல்லது உயர் அதிகாரம்கொண்ட தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட அனைவரிடமும் ஒருபெருத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிரச்சனை என்னவென்றால், இந்துக்கள் தங்களைச் சிறுபான்மையினர் என்று நினைக்கத் துவங்கியதுதான், என்றும், இந்துக்கள் மிகவும் றுதியான தேசியநிலைபாட்டை எடுக்கவேண்டும் என்றும் மோகன்பகவத் பின்னர் அக்குழுவினரிடம் கூறினார்.


                                                                                        
   தேநீர் இடைவேளையின்போது பத்திரிக்கையாளர்கள் பகவத்துடன் உரையாடினார்கள். தவிர்க்கமுடியாமல் பாரதிய ஜனதா கட்சிபற்றியும், இரண்டு மாதங்களுக்குமுன் ஆர்.எஸ்.எஸ். பின்பலத்தோடு பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி பற்றியும் அந்த விவாதம் திரும்பியது. அந்தக்குழுவிடம்,ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் உறுதியாக வேரூன்றி நிற்கும் ஒரேநபர் நரேந்திரமோடி தான் என்றார். பகவத். ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. தலைவர்களிடம், “நீங்கள் நல்ல வேட்பாளர்களைக் கண்டுபிடியுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
   கட்சி,பொதுவாழ்வில் தூய்மை மற்றும் இந்துசமுதாயத்துக்குச் சேவைபுரிதல்ஆகிய மையமான மதிப்பீடுகளைத் தழுவி நிற்கவேண்டும். இல்லாவிட்டால் கட்சி விரைவில் பொருத்தமற்ற ஒன்றாக ஆகிவிடும். நாம் 2014ல் வெற்றிபெற்றுவிட்டால் அடுத்த 25 ஆண்டு களும் அதிகாரத்தில் இருப்போம். இல்லாவிட்டால் நாம் அனைவரும் முயற்சித்தாலும் அடுத்த நூறு ஆண்டுகளில் கட்சியைக்கூடப் பாதுகாக்க முடியாது. என்று பி.ஜே.பி. தலைவர்களிடம் கூறுமாறு மோகன்பகவத் பத்திரிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டார். “அவர் சொன்னவிதம், அநேகமாக பி.ஜே.பி.க்கு ஒருகடைசி வாய்ப்பை அளித்த்தைப்போல நாங்கள் உணர்ந்தோம் என்றார் என்னிடம் அந்தப்பத்திரிக்கையாளர்.
   ன்றைய இந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த வெளிநபர் – ஒருவிவாதத்துக்கு எடுத்துக்கொண்டால், மோகன் பகவத் தான். பொதுவில் ஆர்.எஸ்.எஸ். அரசியலிலிருந்து விலகிநிற்பதாகக் கூறிக்கொண்டாலும், பகவத்தின்அமைப்பு தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் தந்திர வழிகாட்டுதல்களைப் பெருமளவுக்கு அளிப்பதோடு தோராயமாக இந்தியா நெடுகிலும் 36 இணை அமைப்புக்களிலிருந்து பல தலைவர்களையும் அளித்துவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் என்று கூறிக்கொள்ளும் ஒருகோடி உறுப்பினர்களைக்கொண்ட ‘பாரதிய மஜ்தூர் சங், நாட்டின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத். நாட்டின் மிகமுக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஆகியவை இதனுள் அடங்கும். ஒட்டு மொத்தமாக சங் பரிவார், சங் குடும்பம் என அழைக்கப்படும் இதன்பல்வேறு கிளைகளும் நாடு முழுவதும் கல்வி, பழங்குடியினர் நலம், இந்து சம்ய நிகழ்வுகள் என 1,50,000 க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களை நட்த்திவருகின்றன. இந்த ஒட்டுமொத்த இயக்கத்தின் வழிகாட்டியாகவும், த்த்துவ போதகராகவும் சர்சங்சாலக் கருதப்படுகிறார். 2009ல் இந்தப்பொறுப்புக்கு உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து, இந்திராகாந்தி, காங்கிரஸை மகத்தான வெற்றிபெற வைத்துத் தனது அதிகாரத்தை நிலைநாட்டிய 1971 தேர்தலைப்போல பி.ஜே.பி.யை வெற்றிபெற வைக்கவும், அதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்ளவும், போராடவும் ஆர்.எஸ்.எஸ்.ஐயும், அதன் துணை அமைப்புக்களையும் பி.ஜ்.பி.க்கு ஆதரவாக பகவத் அணிதிரளச்செய்தார்.






   கொல்கத்தாவில் பகவத் தெரிவித்த ‘இந்தியாவை இந்துதேசமாக்கும் தொலைநோக்குப் பார்வை சங் பரிவாரங்களைக் கௌவிப்பிடித்து பி.ஜே.பி.யையும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் மிகப்பெரிய ஆற்றல்மிக்க சக்திகளாக வெற்றிபெற வைத்துள்ளது இப்போது தெரிகிறது. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ்.க்கும், பி.ஜே.பி.க்குமிடையே நீண்டகாலமாக நிலவிவந்த முரண்பாடுகளையும் அது எதிரொலித்த்து. உச்சகட்டமான அயோத்தியில் பாபர்மசூதி இடிப்பு- அதைத்தொடர்ந்து அமைந்த பி.ஜே.பி.யின் முதல் அரசு என இருபது ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ்.க்கும், கட்சிக்குமிடையிலான பிளவு விரிவடைந்தே வந்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் முழுநேர உறுப்பினர்கள் தங்களது அமைப்பின் இலட்சியங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்தில் நிலைகொண்டிருந்தார்கள். ஆனால், தொடர்ந்து முரண்பட்ட பி.ஜே.பி. தலைவர்கள் நவீனவசதிகளிலும், அதிகாரங்களிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். கட்சியில் இருந்த பலரும் ஆர்.எஸ்.எஸ். அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என்றே நம்பினார்கள். மூத்த பி.ஜே.பி. தலைவரும், தே.ஜ.கூ அரசின் முன்னாள் அமைச்சருமான ஒருவர் என்னிடம்.கடந்த சில ஆண்டுகளாக் கட்சியில் இந்துத்வா வாதிகள் அதிகரித்துவிட்டார்கள். போதுமான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கட்சிக்குள் நுழைக்கப்பட்டுவிட்டார்கள் என்றார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களோ தங்கள் பங்குக்கு ‘கட்சி தனது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ன் செல்வாக்கிலிருந்து நெடுந்தூரம் விலகிச்சென்றுவிட்ட்துஎன்றார்கள்.
   ஆர்.எஸ்.எஸ்.ம், கட்சியும் வளர்ச்சிபெறவேண்டும் அல்லது ஜீவித்திருக்கவேண்டும் என்றால்கூட ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டும் என்பதே எதார்த்த நிலையாக இருந்தது. பி.ஜே.பி.யின்வெற்றிக்கான வாய்ப்பாக-குவிமையமாக மோடி ஊடகங்களால் உயர்த்திப்பிடிக்கப் பட்டாலும், வேறுஎவரையும்விட பகவத்தான் அக்கட்சியின் எதிர்காலத்தை நிர்வகிப்பார். நாட்டிலுள்ள ஒவ்வொருகட்சியும் பொறாமைப்படும் அளவுக்கு மிகவும் கட்டுப்பாடுகொண்ட தொண்டர்படையை ஆர்.எஸ்.எஸ்.கொண்டுள்ளது. பி.ஜே.பி.யும் இந்தப்படையின் ஆதரவு இல்லாவிட்டால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்பதை உணர்ந்திருந்தது. அதேநேரத் தில் ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள – இந்தியசமுதாயத்தை ஒரு குறிப்பிட்ட இந்துத்வா வழிகளுக்குள் ஈர்த்துக்கொள்ள, பரம் வைபவ் அல்லது இறுதிப்புகழைப் பாரதம் (இவ்வாறுதான் இந்தியாவை அழைக்க அந்த அமைப்பு விரும்புகிறது) எய்திட- விஸ்வ குரு அல்லது உலகின் வழிகாட்டியாக ஆக்க மிகவும் வலிமையான, தன்பால் அனுதாபம் கொண்ட ஓர்அரசு இருந்தாகவேண்டும் என்பதை பகவத்தும் உணர்ந்திருந்தார். இந்தியாவில் எந்தஒரு கட்சியாலும் 40% வாக்குகளைப்பெறவோ, மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை பெறவோ முடியாதநிலையில் நீங்கள் எதையும் செய்துவிடமுடியாது என ஆர்.எஸ்.எஸ்.ன் துணைப்பொதுச்செயலாளர் ஒருவர் கூறினார்.
   கொல்கத்தாவில் பகவத் பி.ஜே.பி.க்கு ஒருஇறுதி வாய்ப்பளிப்பதில் உறுதியாகஇருப்பதுபோல் தோன்றினாலும், ஆர்.எஸ்.எஸ்.ம் தான் தொடர்ந்து நிலைத்திருப்பத்ற்கான மையப் பிரச்சனைகளில் போராடிக்கொண்டிருந்தது. 1925முதல் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடக்ககாலத்தி லிருந்து அதன்மையத்தூணாக விளங்கிவருவது அதன் உள்ளூர்க்கிளைகளின் ‘சாகாக்கள்தான். தன்னார்வத்தொண்டர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆற்றல்மிக்க முழுநேரப்பணியாளர்கள் அல்லது பிரச்சாரக்குகள் நியமிகப்பட்டார்கள். சிலஇளம்சேவக்குகள் தாங்கள் நடக்கப்பழகியபின் சாகாக்களில் பங்குபெறத்துவங்கினார்கள். நாடுதழுவிய அளவில் இத்தகைய ஆற்றல்மிக்க 45,000 கிளைகளை ஆர்.எஸ்.எஸ்.கொண்டிருந்தது. அவற்றில் 2,000 இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உருவாகியுள்ளன. ஆனால், சங்குடும்பத்தில் உள்ள மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர், சுயம்சேவக் உட்படப் பலர், “சமீபகாலங்களில் இந்தக்கிளைகளில் பெரும்பாலான வற்றில் வருகை மிகவும் குறைவாக உள்ளது. குழந்தைத் தன்னார்வத்தொண்டர்களையும், முழுநேர ஊழியர்களையும் கவர்வதில் அமைப்பு திணறுகிறது. தங்கள் வாழ்வின் இளமைக் காலத்தைஅர்ப்பணித்துக்கொள்ளும் இவர்களுக்கு,சங்அமைப்பில், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் படுத்துறங்க ஒருகட்டிலைத்தவிர வேறு எதையும் – குறிப்பாகப் பணிவாய்ப்பில் முன்னேறிச் செல்லவும், வாழ்க்கையை,வசதிவாய்ப்புக்களை அளிப்பதிலும் எந்த உத்தரவாதமும் இல்லை. பரவலாகச்சொல்லப்படும் எடுத்துக்காட்டுகளாக எல்லா ஆர்.எஸ்.எஸ்ஆண்களும், பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளவர்களாகவும், தன்னினச்சேர்க்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.மத உணர்வில் பொறுமையற்றவர்களாகவும், மக்கள்பகுதியிலிருந்து தனிமைப்பட்டவர்களாகவும், தீவிரவாதம் கொண்டவர்க்ளாகவும் உள்ளார்கள் என்று கவலையுடன் கூறுகின்றனர்.
   இந்த அமைப்புக்கு அதிக அச்சுறுத்தலாக உள்ளவை அதன் உறுப்பினர்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமையும், வன்முறையை வளர்த்தெடுப்பதும்தான். அவர்களின் நடவடிக்கைகள் பலமுறை ஆர்.எஸ்.எஸ்..ஐத் தடைசெய்ய வைத்தன. அண்மையில் சங்தலைவர் சுவாமி அசீமானந்தா ‘தி கேரவன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘2006 முதல் 2008வரை தாம்வகுத்த சதித்திட்டங்களுக்கும், 119 பேரைக்கொன்ற தொடர்குண்டுவெடிப்புக்களுக்கும் பகவத் உள்ளீட்ட மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அனுமதி அளித்தனர் என்று தெரிவித்தது ஒருபரந்துபட்ட விவாதத்தை உருவாக்கியது. இந்த அமைப்பு இனித்தொடர்ந்து செயல்பட வழி இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியது. (இதுபற்றி மோகன்பகவத் பேட்டிக்குப் பலமுறை முயன்றும் மோகன்வைத்யா அது சாத்தியமில்லை. ‘தி கேரவன் இதழில்வந்த பேட்டியால் அல்ல. தேர்தல் முடியும்வரை அவர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுவதில்லை என்பதால். என்று என்னிடம் கூறினார்.
   அரசியல் ஆய்வாளரும், ‘யதாவத் என்றஇந்தி வாரஇதழின் ஆசிரியருமான ராம்பஹதூர் நாயக்(இவர்  கே.என்.கோவிந்தாச்சார்யாவுடன் ஆர்.எஸ்.எஸ்.ஆதரவில் நடைபெற்ற ‘பீகார் சத்ர அந்தோலன் போராட்டத்தில் ஒருபிரதிநிதியாக இருந்தவர். (இந்திராகாந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் இலஞ்சஊழலுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டம் அவசர நிலையைப் பிரகடனம் செய்யவைத்தது.) “பகவத்தின்முன் இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று பி.ஜே.பி.யைச் சீர்திருத்துவது, மற்றது சங்அமைப்பைச் சீர்திருத்துவது. என்றார்.
   சங் குடும்பத்திலுள்ள வேறுபாடுகளைக் களைவதை பகவத் மிகப்பெரிய அளவில் துவங்கியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தலைமையேற்ற ஐந்து ஆண்டுகளில் அதிகார மையத்தையும், மதநம்பிக்கையையும் இணைத்துநிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்கவழிமுறையைக் கையாண்டார். பல்வேறு துணை அமைப்புக்களை மீண்டும் ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்தினார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற தீவிரஅமைப்புக்களுக்குக் கடிவாளமிட்டார். ‘சாகாக்கள் நவீனமயமாக்கப்பட்டுப் பயிற்சி வகுப்புக்கள் அதிக வசதிகளோடு அதிக எண்ணிக்கையில் நடைபெறத்துவங்கின. வெளிநாடுகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு இணையதளம் வழியாகப் பயிற்சிவகுப்புக்கள் நடைபெற்றன. அந்த அமைப்பின் ‘பிரசார விபாக் எனும் விளம்பரத்துறை சமூகஊடகங்களில் சக்திமிக்க வகையில் செய்திகளை இடம்பெறச்செய்ய அரும்பாடு பட்டது. பி.ஜே.பி.யின் தலைமையைத் தேர்ந்தெடுப் பதிலும், தேர்தல்களில் சங்ஊழியர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் பங்கேற்க வைப்பதிலும், மோடியை முன்னுக்குக் கொண்டுவருவதிலும் பகவத் பலஉதவிகளைச்செய்து பி.ஜே.பி.க்குள் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கை ஆழப்படுத்தினார்.
   தனது எட்டாம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்த மோடி, அந்த அமைப்பின் தகவல் தொடர்பாளராக பி.ஜே.பி.யில் பணியாற்றினார். இருஅமைப்புக்களிலும் குஜராத் முதல்வர் என்ற தகுதியில்செல்லப்பிள்ளையாகவும், துருவநட்சத்திரமாகவும் ஆனார். மக்களுக்குத் தேவையான வற்றை நிறைவேற்றித்தரும் பொருளாதாரத்திட்டங்களோடு மோவட்டோ கடிகாரம், பல்காரி கண்ணாடி, மாண்ட்டோ பேனா ஆகியவற்றை அணிந்து இந்து ஆண்மையின் பெருமையாக விளங்கினார். அவருள் சமகால இந்தியவாழ்வின் அடிநாதமாகஉள்ள தேவைகளுக்கும், இந்திய மனப்பான்மைக்கும் இடையே உள்ள பதட்டத்தைத் தணிக்கும் அல்லது மறையவைக்கும் வழியை ஆர்.எஸ்.எஸ். கண்டது. அவரும் சங்தொண்டர்களை உற்சாகப்படுத்தி உதவினார்.
   சங்அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஓய்வுபெறும் வயதான 75ஐ அடைய பகவத்துக்கு இன்னும் ஒரு பத்து ஆண்டுகள்மட்டும் உள்ளன. 2025ல் அது சமகால நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டாகவும் அமைகிறது. அதற்காக சங்அமைப்பு இப்போதுமுதல் தனது பணிகளைவிரிவு படுத்த மூன்றுகட்டச்செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் விவரங்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், அந்தக்கட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.ன் முதலாம் சர்சங் சாலக் எம்.டி.பாலாசாஹேப் தேவ்ரஸ் வகுத்த “அமைப்பு, அணிதிரட்டல், செயல் என்பதை நினைவூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். தனது முதலாம்கட்டத்தின் முடிவை நெருங்கிவிட்டது. இப்போது அடுத்த கட்டத்தை  நோக்குகிறது. அதற்கான தளமாக அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கு பகவத் வழியமைத்துள்ளார். அடுத்த ஆண்டில் அமையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக பி.ஜே.பி. வருமானால் சங்என்ற பிரம்மாண்டமான வாகனம் சுற்றிச்சுழன்று தனது பரந்துபட்ட சமுதாய இலக்குகளைப் பூர்த்திசெய்யும். முன்னெப்போதும் இல்லாத செயல்வேகத்துடன் புறப்பட்டுவிடும். தேவ்ரஸ் ஒருமுறை குறிப்பிட்டதுபோல “சங் வெறும் ஒரு அமைப்பாக மட்டும் முடிவில்லாத காலத்துக்கு நீடிக்கமுடியாது.

( தொடரும்...)
நன்றி : த கேரவன் மே 2014 இதழ்


ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் இரண்டு

        ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் 
                        திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
    தினேஷ் நாராயணன்                               தமிழில்: செ.நடேசன்
  
               இரண்டு
  செப்டம்பர்13 வெள்ளியன்று கொல்கத்தா கருத்தரங்கு முடிவடைந்த ஒருமாதத்திற்குப்பின் பி.ஜே.பி.யின் அதிகாரபூர்வபிரதமர்வேட்பாளராக மோடியின்பெயர் அறிவிக்கப்பட்டது.அக்டோபர் துவக்கத்தில் ‘திஹிந்துவில் வித்யாசுப்பிரமணியம் ஒருகருத்துப்பதிவை ‘1949ன் மறக்கப்பட்ட உறுதிமொழி என்றதலைப்பில் எழுதினார். இதில் அவர் “மோடியின் நியமனம் அரசியலைவிட்டு விலகி நிற்பதாகத் தனது அமைப்புவிதிகளில் அளித்திருந்த உத்தரவாதத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துரோகம் இழைத்துவிட்டதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். சிலவாரங்களுக்குப்பின் காங்கிரஸ் அமைச்சர் ப,சிதம்பரம் தமிழ்நாட்டில் ஒருதேர்தல் பொதுக்கூட்டத்தில்,2014 பொதுத்தேர்தல் ஒருமஹாபாரத யுத்தம். காங்கிரசுக்கும், இதுவரை அரசியல் சார்பற்ற அமைப்பு என்று கூறிவந்த – ஆனால் இப்போது தனது அரசியல் முகமான பி.ஜே.பி.யைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.க்கும் நடைபெறப்போகும் ஒரு இதிகாசப்போர் என்று கூறினார்.
   தே ஜ கூ. அரசின் முன்னாள் மத்திய் அமைச்சர் ஒருவருடன் நான் பேசியபோது அவர் என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ்.ஸிடமிருந்து வழிகாட்டுதல் வந்துவிட்டது. இனி யோசிப்பதை நிறுத்திவிடு(சூச்சனா ஆய்: சொச்னா பந்த்) என்று பி.ஜே.பி,க்குள் ஒருபொதுவான பேச்சு உள்ளது என்றார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். எப்போதும் அரசியலும், அரசியல் வேலைகளும் தனது முறையானவேலை அல்ல என்ற நிலைபாட்டையே கூறிவந்தது. ஆனால் அது பி.ஜே.பி.யின் கொள்கைகளை வகுத்துத்தருவது, தேவைப்படும் நேரங்களில் அறிவுரை வழங்குவது , தனது ஊழியர்களை பி.ஜே.பி.க்குப் பணிசெய்யவைப்பது என்ற எதார்த்தங்களை மனமின்றி எரிச்சலுடன் ஒப்புக்கொண்டது. தேசிய செயற்குழு உறுப்பினரும், சங்அமைப்பின் பி.ஜே.பி.யுடனான செய்தித்தொடர்பாளருமான மதன்தாஸ் தேவி உட்படப் பலமூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் என்னிடம் ‘பி.ஜே.பி.யின் உள்விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்தப்பங்கும் இல்லை. பி.ஜே.பி.யின் முடிவுகள் பி.ஜே.பி.யால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றன என்றார்கள். முன்பு ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக இருந்த எல்.கே.அத்வானி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. உறவை மகாத்மா காந்திக்கும், காங்கிரசுக்கும் இடையேயான உறவைப்போன்றது என்று குறிப்பிட்டார்.
   இவை எல்லாம் பி.ஜே.பி.யின் தற்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்.ன் நேரடிப்பங்கேற்பை உறுதிசெய்த மிக முக்கியமான ஆதாரங்களாகவும், ஆர்.எஸ்.எஸ்.ன் வழி மாறிய செயல்களாகவும் அமைந்தன.
   சிதம்பரத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, மஹாராஷ்ட்ராவின் அமராவதியில் 300 ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் திரண்டனர். அந்தக்கூட்டத்தில் விவாதத்திற்கான முக்கியப் பொருள் 2014 பொதுத்தேர்தல்தான். சங்குடும்பம் ஆட்சிஅதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது தெளிவாகக்குறிப்பிடப்பட்டதுடன் ஒருமனதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  சிலநாட்களுக்குப்பின் டெல்லி ஜந்தன்வாலனில் கேசவ்கஞ்ச்சில்உள்ள மாநிலத்தலைமை அலுவலகத்தில் (இதுபோல 12க்கும் மேற்பட்ட மாநில அமைப்புக்களில் உடற்பயிற்சி, ஸ்தாபனம், பதவி நிலைஉயர்த்துதல் ஆகியவை உள்ளிட்ட பலபிரிவுகள் ஆர்.எஸ்.எஸ். வேலைகளைச்செய்துவருகின்றன.) ஆர்.எஸ்.எஸ்.ன் தேசியத்தலைவர்களில் துணைத்தலைவர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் வித்யா சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையைக் கிண்டல் செய்தார். “ஆர்.எஸ்.எஸ்.ன் அமைப்புவிதிகள் என்ன? ஆர்.எஸ்.எஸ்.ல் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அதைப் பார்த்ததே இல்லை. பெரும்பாலான சுயம்சேவக்குகளுக்கு அப்படி ஒரு அமைப்புவிதி உள்ளது என்பதே தெரியாது என நான் உறுதியாகக்க்கூறுகிறேன் என்றார். அதுமட்டுமல்ல: சிதம்பரத்தின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொண்டு ‘இந்தத்தேர்தல் காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையேயான ஒருகொள்கைப் போராட்டம்தான் என்றார். அத்துடன் இன்றைய அரசியல் சூழலை நெருக்கடிநிலைக் காலத்திற்கு முன் இருந்த நிலையோடு ஒப்பிட்டார். நாட்டில் நிலவும் சூழ்நிலை அந்த நாட்களை மிகவும் ஒத்திருக்கிறது. நாங்கள் அதை எதிர்த்துப்போராட ஆயத்தமாகி வருகிறோம் என்றார்.
   அப்போதுமுதல் ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர்களைப் பெருமளவில் அணிதிரட்டியது. அது நெருக்கடிநிலைக்குப் பிறகான அணிதிரட்டலில் மிகவும் பெரியது என்றார் அந்தத்துணைத் தலைவர். பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் களத்தில் இறங்கி வாக்காளர்களைப் பதிவு செய்வது, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, நூறுசதவீத ஓட்டுப்பதிவை உறுதிசெய்வது போன்ற வேலைகளைச்செய்தார்கள். ‘சங் தொண்டர்கள் எந்த ஒருகுறிப்பிட்ட கட்சிக்கும் வாக்கு சேகரிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக்கட்டளை பெரும்பாலும் மீறப்பட்டே செயல்கள் நடந்தன. டெல்லி சரோஜினி நகர் பகுதியில் நான் சந்தித்த ஒரு சுயம் சேவக் தாம் அந்தப்பகுதியில் கிட்டத்தட்ட நானூறு வீடுகளுக்குச் சென்று முக்கியமான பிரச்சனைகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அளித்ததாகவும், அதன் ஒருபக்கத்தில் நகர்ப்புறப் பொருளாதாரப்பிரச்சனைகள், சாலைவசதிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. மறுபக்கத்தில், ஆர்.எஸ்.எஸ்.க்குப்பிடித்த அரசியலான தீவிரவாதம், பாக்கிஸ்தான், ஸ்ரீநகரில் மூவர்ணக்கொடி ஏற்றுதல் உள்ளிட்டவை இருந்தன. அத்துடன் இதை எல்லாம் சாதிக்கப்போவது யார் என்று உங்களுக்குத் தெரியுமா? குஜராத்தில் உள்ள ஒருசாதாரண மனிதன் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது என்றார். அந்தப்பிரசுரத்தைக் கொடுத்தபின்  நாங்கள் மோடிக்கு வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் என்றார் அந்த சுயம்சேவக்.
   1977ல் நெருக்கடிநிலை முடிந்தபின் நான்குபொதுத்தேர்தல்களிலும், 1990களில் பி.ஜே.பி ஆட்சிக்குவந்தபின் மூன்று பொதுத்தேர்தல்களிலும் ஆர்.எஸ்.எஸ்.நேரடியாகப் பங்கேற்றது என்றார் பகவத். அத்துடன் ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டங்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை அவர் ஒப்புக்கொண்டார். 1990 களில்  ஒருவெளியிடப்படாத பேட்டியில் (ஒருவேளை இதுதான் அவரது முதல் பேட்டியாகவும் இருந்திருக்கலாம்) ஆவணப்படத்தயாரிப்பாளர் லலித் வச்சானியிடம், “தேசத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும்வகையில் அரசியல் போக்குகள் பாதகமாக அமையும்போதெல்லாம் சங் அமைப்பு அரசியலில் குதிக்கிறது என்றார். அதுவும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஒருசரியான திசைவழியைக் காட்டவே. அதன்பின் அரசியலிலிருந்து விலகிக்கொள்கிறது என்றார் பகவத்.
   1980ல் பி.ஜே.பி. துவக்கப்பட்டதற்கு முன்பிருந்தே நீண்டபல ஆண்டுகளாக அது தனது விதையைஆர்.எஸ்.எஸ்.ல் கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் நீட்சியாக, அதன் ஒருபிரிவாகவே பி.ஜே.பி. என்றகட்சி உருவானது. இது ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியலோடுகூடிய இரட்டைநிலை ஆகும்.  டாக்டர். கேசவ் பாலிராம் ஹெட்கேவர் “இந்து சமுதாயத்துக்கு வழிகாட்டுவதற்காகக் கட்டுப்பாடுமிக்க, உடல்ரீதியாகத் திடகாத்திரமான, பலமான தலைவர்களை உருவாக்க 1925ல் ஆர்.எஸ்.எஸ்.ஐத் துவக்கினார்.  ஹெட்கேவர் தமது அமைப்பைப் பிரிட்டிஷ் இராணுவத்தை மாதிரியாகக்கொண்டு அதேபோன்ற சீருடை, ஆயுதமேந்திய, ஆயுதமேந்தாத போராட்டங்களில் பயிற்சி தந்தார்.
   ஆர்.எஸ்.எஸ்.ன்இந்திப்பத்திரிக்கையான ‘பாஞ்சஜன்யாவின் முன்னாள் ஆசிரியர் தேவேந்திர சொரூப் என்னிடம், ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டைகுணம் கொண்டிருப்பது ஹெட்கேவரிலி ருந்து துவங்குகிறது. அவர் முழுக்கமுழுக்க ஓர் அரசியல் மனிதர். ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒரு குறிப்பிட்டகாலவரையறை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அது தனது இலட்சியங்களை அடைந்தபின் நீடித்திருக்கவேண்டிய அவசியமில்லை எனக்கருதினார். சொரூப் மேலும், ‘நாட்டின் சுதந்திரம் என்ற இலக்கு ஆர்.எஸ்.எஸ். இல்லாமலேயே அடையப்பட்டுவிட்டதால், சுதந்திரத்துக்குப்பின் ஆர்.எஸ்.எஸ்.ன் இலக்குபற்றிய சர்ச்சை தொடர்ந்தது. இந்தக்கால கட்டத்தில் செல்வாக்குமிக்க தலைமையும், வரலாற்றின் வெள்ளம் போன்ற பிரளயமும் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவதிலிருந்து விலக்கிவைத்தது. மிகவும் மதிக்கப்பட்ட எம்.எஸ்.கோல்வாக்கர் 1940ல் இரண்டாம் சரங் சாலக் ஆகப்பதவி ஏற்றார்.அதைத்தொடர்ந்து “குருஜீ எனப்பக்தியுடன் போற்றப்பட்டார். (ஹெட்கேவர் 1930ல் ஆர்.எஸ்.எஸ்,ஐஎல்.வி.பரஞ்பே யிடம் ஒப்படைத்தர். ஆனால், பரஞ்பே அதன் தலைவர்களில் ஒருவராகக் கணக்கில் கொள்ளப் படுவதில்லை)  கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்.ஐ முதன்மையாக ஒரு சமுதாய, கலாச்சார இன்னும் சொல்லப்போனால் ஆன்மீக அமைப்பாகவே பார்த்தார். அதனால் அது அரசியலைத் தவிர்க்க வேண்டியதாயிற்று. அவர் காலனியாதிக்கத்துக்கு எதிரான ‘வெள்ளையனே, வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காமல் விலகிநிற்க வைத்தார். இந்த அரசியலற்றநிலை 1948ல் அரசு இதன்மீது விதித்திருந்த தடையை நீக்கியபோது உறுதிப்பட்டது. (1948ல் சங் அமைப்பில் இணைந்திருந்த உறுப்பினர்களால் மகாத்மா காந்தி கொலைசெய்யப்பட்டபோது இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.) தடை நீக்கப்பட்டதற்குப் பிரதிபலனாக ஆர்.எஸ்.எஸ். அரசியலிலிருந்து விலகி நிற்பதைத் தனது அமைப்புவிதிகளில் சேர்த்து அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதியளித்தது.
   அப்போதுமுதல்ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஈடுபாடு கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதுபோல –ஆனால், உள்ளூரத் திரைமறைவில் இணக்கமானதாகவும், இதன்பல அமைப்புக்கள்மூலம் ஈடுபாடுகொண்டதாகவும் இருந்துவந்தது. ஏனெனில், 1951ல்துவக்கப்பட்டு இப்போதுசெயலற்றுப் போன ‘பாரதிய ஜனசங் கட்சியின் பின்னர் துவக்கப்பட்டுள்ள பி.ஜே.பி..கட்சியின்  முக்கியமான உயர்மட்டத்தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முதன்மை விசுவாசம் கொண்டவர்களாக இருந்ததுதான்.
   கோல்வாக்கரைப்போல் இல்லாமல் அதன்பின் வந்த சர்சங்சாலக்குகள்- குறிப்பாக 1973ல் இருந்து தொடர்ந்து 30 ஆண்டுகள் கோல்வாக்கரின் வாரிசாகத் தலைவராக இருந்த தேவ்ரஸ், ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள அவசியமான கருவி என அரசியலை ஏற்றுக்கொண்டார். தேவ்ரஸ் உண்மையில் ஓர் அரசியல்வாதியாக , ஆர்.எஸ்.எஸ்.ன் உயர் கட்டுப்பாடுமிக்க தொண்டர்படையின் செயலாற்றலைப் புரிந்துகொண்டவராக, அதனை நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்திடப் பயன்படுத்த விரும்பினார். “அமைப்பு குறிப்பிடத்தக்க வலிமையை அல்லது மக்கள் ஆதரவைப் பெறும்போது அந்தமனித சக்தியைத் தேசிய வாழ்வின் பல்வேறு தளங்களில் செயல்பட வைத்தால், நாம் விரும்பும் மாறுதலை உருவாக்கும் என்று ஒருமுறை அவர் தத்துவ விளக்கம் அளித்தார்.
   கோல்வாக்கர் தலைவராக இருந்தபோது, அமைப்பின் வழிமுறைகள்மீது, சர்சங் சாலக்குடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகக் குறைந்தபட்சம் ஆறுஆண்டுகள் தேவ்ரஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைவிட்டு விலகியிருந்தார். அவர் அதன்பொறுப்பை ஏற்றதும், சங் குடும்பத்தைப் பல்வேறு அரசியல் போராட்டங்களில்  ஈடுபடவைத்தார். அதில் ஒன்று நெருக்கடி நிலைக்கு வழிவகுத்தது.அதன்பின் அரசியல்விஞ்ஞானியான பிரளய்கணுங்கோ தனது “RRSS’S Tryst with Politics என்ற புத்தகத்தில் எழுதுகிறார்,தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தில் நிலைத்திருக்க ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக அரசியலில் இடம்பெறுவதைத் தேர்வு செய்யவேண்டும் என தேவ்ரஸ் அறிந்திருந்தார். சங் அமைப்பின் இந்த உண்மையான அரசியல் நிலைபாடுதான் தனது அரசியல் பிரிவான ஜனசங் கட்சியைக் கொள்கைகளால் வேறுபட்டிருந்த ‘ஜனதா கட்சியுடன் 1977ல் இணையவைத்தது.
   முதலில் அதிகாரம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பதவியிலும், அதன்பின் தலைவராகவும் கடந்த 15 ஆண்டுகளில் மோகன்பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தவும்,  அதற்கும் பி.ஜே.பி.க்கும் இடையிலான பிளவுகளைச் சரிப்படுத்த வும் மிகவும் கடுமையாக உழைத்தார். இப்போது பி.ஜே.பி.கட்சி வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சார்ந்து நிற்பது பகவத்தின் செல்வாக்கின் அடையாளமாக விளங்குகிறது. சங் அமைப்பின் பல்வேறு அனுபவசாலிகள் என்னிடம், “ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினராக இருந்த பகவத் தந்தை மற்றும் பாட்டனாரைப்போல பகவத்தின் அடர்ந்த மீசை ஆச்சரியப்படும்வகையில் ஹெட்கேவரை நினைவுபடுத்துகிறது. அவர் தேவ்ரஸ் விட்டுச்சென்ற இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார் என்றனர்.
   ஆர்.எஸ்.எஸ்.சுயம்சேவக்கான அடல்பிகாரிவாஜ்பேயி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, ‘தேர்தல்அரசியல் ஆர்.எஸ்.எஸ்.க்குத் தேசத்தை மாற்றியமைக்கும் ஒருவாய்ப்பாக அமையும் என்ற தேவ்ரஸ்-ன் நம்பிக்கை 1990களின் பிற்பகுதியில் முதற்கட்டமாகப் பெருத்த சோதனையைச் சந்தித்தது. துரதிர்ஷ்டவசமாக ஆட்சியதிகாரத்தில் பி.ஜே.பி.இருந்த ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்,க்குச் சிரமமான காலங்கள் என நிரூபணமாயின. ஏனெனில் பி.ஜே.பி. தனது பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கைகள் மூலம் பாகிஸ்தானைவிட மேன்மை பெற்றதும், அமெரிக்காவுடன் உறவுகளை மறுசீரமைப்பு செய்துகொண்டதும் கட்சியைத் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஐவிட மேலாக உயரச்செய்தது.
   அதன் தோற்றம் முதலே ஆர்.எஸ்.எஸ்.கொண்டிருந்த வழக்கத்துக்குமாறான இந்துத்வா அழுத்தம் அப்போது தனிச்செல்வாக்கோடு விளங்கிய காங்கிரஸ் உயர்த்திப்பிடித்த மதசார்பின் மையோடு முரண்பாடுகொள்ளவைத்தது. ஜனசங்கம் 1980ல்பி.ஜே.பி.யாக உயிர்த்தெழுந்தபோது மதவாதக்கட்சி என்ற குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ‘இந்திய சோசலி சமே தனது வழிகாட்டும் கொள்கை என வெளிப்படையாக அறிவித்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலில் இரண்டே இடம் என்ற அளவுக்கு பி.ஜே.பி. பலம் குறைந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி.க்காகத் தேர்தல்வேலை செய்யமறுத்துவிட்டது. அத்துடன் காங்கிரஸ்கட்சிக்கு வாக்கு களைப்போட்டது என்றும் சிலர் நம்பினார்கள்.
   அயோத்தியில் இராமர்கோவிலைக் கட்டுவதற்கான இயக்கம் நடைபெற்றபோது, ஆர்.எஸ்.எஸ்.ம். விஸ்வஹிந்து பரிஷத்தும் மக்களிடம் பெற்றிருந்த ஆதரவைக் கண்ட பி.ஜே.பி அடுத்துவந்த ஆண்டுகளில் இந்துத்வா வைத் தழுவிக்கொண்டது. 1989 ஜூன்மாதத்தில் பி.ஜே.பி.யின் தேசியச்செயற்குழு இமாச்சலப்பிரதேசத்தில் பாலம்பூரில் கூடியது. அத்வானியால் எழுதப்பட்ட தீர்மானமான,இராமர்கோவில் கட்டும் இயக்கத்தின் முன்னணிப்படையாகக் கட்சி யை முன்னிறுத்துவது என்பதைநிறைவேற்றியது. இதன்மூலம் தேசப்பிரிவினைக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் உச்சகட்டமாக மதஉணர்வுகளால் பிளவுபட்ட ஒருகாலத்தை உருவாக்க வழிவகுத்தது. அன்றுமுதல் பி.ஜே.பி. சங்அமைப்பின் பல்வேறு போர்க்கப்பல்களில் ஒன்றாக, அதன் கொடியாக மக்கள் சிந்தனையில் உருவானது.


   இராமர்கோவில் இயக்கத்தின்மீது ஆளுமைசெலுத்தி சங்ஊழியர்களை அணிதிரட்டியது. 1996ல் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் நீடித்தது. 1998ல் அது ஒரு கூட்டணிஅரசை உருவாக்கி 13 மாதங்கள் ஆட்சிபுரிந்தது. அணுஆயுதப் பரிசோதனையை நடத்தியது. 1999ல் ஜூன்மாதத்தில் பி.ஜே.பி.யின் தே.ஜ.கூட்டணி ஐந்து ஆண்டுகால அரசை அமைத்தது. அந்தக்காலகட்டத்தில் பாகிஸ்தானோடு ஒருபோரை நடத்தியது. இந்தியாவின் பொருளாதார மற்றும் அயலுறவுக்கொள்கைகளை மாற்றியமைத்தது. இந்த எல்லா அரசுகளிலும் பிரதமராக இருந்த வாஜ்பேயி சங்அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ள இராமர்கோவில் கட்டுவது, ஒரேவிதமான குடியுரிமைச்சட்டம் 370ஆவது சட்டப்பிரிவின்படி காஷ்மீர் தன்னாட்சி அந்தஸ்தை மாற்றுவது ஆகியவற்றைப் புறக்கணித்தார். பிரதமர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு  உரிய மரியாதையை அளித்தார். ஆனால், ஆட்சியின் செயல்பாடுகளைத் தன்னுடையதாக அமைத்துக்கொண்டார் என்று தே.ஜ.கூ.அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் என்னிடம் சொன்னார்.
   வாஜ்பேயி தனது பிரதமர்பதவிக்காலத்தின் துவக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.ஸ்.ன் பிடியில் சிக்காமல் தனது சுதந்திரத்தன்மையை நடைமுறைப்படுத்தினார். 1996 ஆகஸ்ட்6ல் திரிபுராவில் சங்அமைப்பால் நடத்தப்பட்ட மாணவர் விடுதியிலிருந்து நான்கு பிரச்சாரக்குகள் கடத்தப்பட்டு வங்கதேசத்திலுள்ள சிட்டகாங் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். திரிபுரா தேசிய முன்னணி(NNNNLFT)யின் பிரிவினைவாதப்போராளிகளும், கிறிஸ்தவ சர்ச்சுகளும் இதற்குக் காரணம் என்றது. ஆர்.எஸ்.எஸ். வாஜ்பேயிஅரசை எல்லைதாண்டி இராணுவத்தை அனுப்ப வலியுறுத்தியது. ஆனால், வாஜ்பேயியோ, உள்துறை அமைச்சர் அத்வானியோ இதன்மூலம் ஓர் உலகச்சூழலை உருவாக்க விரும்பவில்லை.
   தொடர்ந்து நான்கு பிரச்சாரக்குகளும் கொலைசெய்யப்பட்டார்கள். அந்தச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்.பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபகவத், ‘அவர்கள்கடத்தப்பட்ட நாளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆர்.எஸ்.எஸ்.மிகவும் கடுமையாக முயற்சித்தது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் செயலற்றதன்மை இத்தகைய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கடுமையாகச் சாடினார்.
   இராமர்கோவில் இயக்கம் தொடர்ந்து மெல்ல மெல்ல எரிந்து மிகவும் உச்சகட்டத்தில் தீப் பற்றுவதுபோன்ற முரண்பாடு எழுந்தது. தே.ஜ.கூ. ஆட்சிக்காலத்தில் வாஜ்பேயி இல்லத்தில் நடைபெற்ற ஒருகூட்டத்தில் மதன்தாஸ் தேவி, வாஜ்பேயி, அத்வானி, ஆர்.எஸ்.எஸ். சர்சங்சாலக் ராஜேந்திர சிங் (1944ல் தேவ்ரஸ் இடமிருந்து இப்பொறுப்புக்கு வந்தவர்) ஆர்.எஸ். எஸ். துணைப்பொதுச்செயலாளர் கே.எஸ்.சுதர்சன் (இவர் 2000ல் ராஜேந்திர சிங்கிடமிருந்து இப்பொறுப்புக்கு வந்தவர்) விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் ஆகியோர்கலந்து கொண்டனர். சிங்கால் உண்மையிலேயே அத்வானிமீது ஆத்திரம்கொண்டு சாடினார் என்று என்னிடம் மதன்தாஸ் தேவி சொன்னார். “அயோத்தியில் உள்ளநிலம் வி.ஹெச்.பி.க்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உணர்வாக அது இருந்தது என்றார். தே.ஜ.கூ.அரசு தங்களுடையது என்றும், ஆனால் அவர்கள் தங்கள்  நோக்கத்தைக் கைவிட்டுவிட்டனர். அரசுப்பொறுப்பில் உள்ள சுயம்சேவக்குகளும், பிரச்சாரக்குகளும் தங்கள் கொள்கைகளையும், நோக்கங்களையும்குழிதோண்டிப்புதைத்துவிட்டனர்என்று வி.ஹெச்.பிதலைவர்கள்கருதினார்கள். அரசுப்பொறுப்பிலிருந்த ஒருவர், நாம்ஏன் நம்மை ஒருவித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொள்கிறோம்? நாம் காவிவண்ணம் பூசிய காங்கிரஸ்காரர்கள் என்றுகூறியதாகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கே,என்.கோவிந்தாச்சார்யா என்னிடம் கூறினார்.
   “சர்சங்சாலக் ஆக சுதர்சன் வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ்.ல் உள்ளவர்கள் பி.ஜே.பி.தலைவர்கள் தங்களைவிடப்பெரியவர்களாக உருவாகிவிட்டார்கள்என்று தங்களுக்குள்ளேயே நம்பத்தொடங்கி விட்டார்கள் என்று மராத்தி நாளேடான ‘தருண்பாரத்ன் முன்னாள் ஆசிரியரும், மென்மை யாகப் பேசக்கூடியவருமான சுதிர்பகவத் என்னிடம் கூறினார். பத்தாண்டுகளுக்குமுன் இராமர் கோவில் இயக்கம் அதன் உச்சகட்டத்தில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தலைமை முன்னுரிமை கொண்டமூத்ததாகவும், பி.ஜே.பி.யின்மீது அதிகாரம்செலுத்தக்கூடியதாகவும் இருந்தது. ஆனால் 2000ல் அந்தநிலை நீடிக்கவில்லை. கட்சியில் மிகஉயர்ந்த அதிகாரம்கொண்ட இரண்டாவது தலைவராக அத்வானி விளங்கினார். அப்போதையஆர்.எஸ்.எஸ்.ன்புதியதலைவர் ஆர்.எஸ்.எஸ் முழுநேரஊழியர் ஆவதற்கு நீண்டகாலம் முன்பே அத்வானி முழுநேரஊழியர் ஆனவர். முதன் முறையாக அங்கு யாருக்கு யார் வழிகாட்டுவது என்பதுபற்றிய சண்டை எழுந்தது.
   பி.ஜே.பி.க்குள்ளேயே சுதர்சன் ஒருசர்வாதிகாரியாகவும், சலனசித்தம் உள்ளவராகவும், சங் அமைபை வழிநடத்துவதில் செல்வாக்கு இல்லாதவராகவும் கருதப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.ன் தேசியத்தலைமையகமான நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.குடும்பத்தில் வளர்ந்த, நீண்டகாலமாக சுயம்சேவக்காக விளங்கிய, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடன் நெருங்கிப்பழகிய வர்த்தகர் திலீப் தியோதர் சொன்னார்: “ராஜேந்திர சிங் 1998ல் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுதர்சனைத் தமக்கு அடுத்தபடியாகத் தலைவர் ஆக்குவதாக முதலில் குறிப்பாகத் தெரிவித்தார். வாஜ்பேயி உள்ளிட்ட பி.ஜே.பி.தலைவர்கள் அந்தமுடிவை ஒத்திவைக்குமாறு ராஜேந்திர சிங்கைக் கேட்டுக் கொண்டனர். அப்போதைய பொதுச்செயலாளரான ஹெச்.வி.காமத்திடம் அவர்கள், ‘சுதர்சன் ஆர்.எஸ்.எஸ்.தலைவராகவந்துவிட்டால் அரசைஒருநாள்நடத்துவதுகூடச் சிரமமானதாகிவிடும் என்று கூறியதாக தியோதர் கூறினார்.
   சுதர்சன்ஆர்.எஸ்.எஸ் பொறுப்பை ஏற்றவுடன் பி.ஜே.பி.உள்ளிட்ட அனைத்து சங்அமைப்புகள் மீதும் தனது அதிகாரத்தைச் செலுத்தமுயன்றார். உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிஒருமைதானத்தில் நடந்தது. அது துவங்குமுன் முழங்கைவரை மடிக்கப்பட்டவெள்ளைச் சட்டை, காக்கி அரைக்கால்சட்டை, கறுப்பு காந்திகுள்ளாய் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சீருடை அணியாத எவரும்- பத்திரிக்கையாளர்கள். தே.ஜ.கூ. அமைச்சர்கள் உட்பட- அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக்குறிப்புரை வழங்கினார். பலபத்தாண்டுகளாக சுயம்சேவக்குகளாக விளங்கிய வாஜ்பேயி, அதவானி, கல்விஅமைச்சர் முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சரும் அந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. பி.ஜே.பி.யின் அப்போதைய தலைவரும், மத்தியப் பிரதேசத்தில் சங்அமைப்பைக்கட்டி வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவருமான குஷாபாவ் தாக்கரே சீருடையில் வந்திருந்தார். ஆனால், சீருடையின் ஓர்அங்கமான மூங்கில் கம்பை எடுத்துவர மறந்துவிட்டார். தியோதர் தெரிவித்த தகவலின்படி தாக்கரே திரும்பிச்செல்லுமாறு தெரிவிக்கப்பட்டார்.
   தே,ஜ,கூ. ஆட்சியிலிருந்த பெரும்பாலான காலங்களில் டெல்லிதான் சுதர்சனின் மையமாக இருந்தது. அவர் அடிக்கடி பொதுஇடங்களில் அரசை விமர்சித்துவந்தார். அமைச்சகங்களில் குறுக்கீடு செய்துவந்தார். அவரது குணாதிசயங்களில் ஒருசுவையான நிகழ்ச்சி வருமாறு: சங் அமைப்புக்களின் சக்தியையும், அரசு அதிகாரத்தையும் இணைத்து ஒரு கலாச்சாரத் தணிக்கை அதிகாரம்கொண்டவராகச் செயல்பட்டார். “திரைப்பட இயக்குநர் தீபாமேத்தா வாரணாசியில் தனது ‘வாட்டர் திரைப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்தியபோது, ஆர்.எஸ்.எஸ்-வி.ஹெச்.பி. ஆட்கள் குறுக்கிட்டுப் படப்பிடிப்பு அரங்கைத் தீயிட்டு எரித்தனர். தீபாமேத்தாவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். என தீபாமேத்தாவின் மகள் தேவயாணி சால்ட்ஸ்மன் தனது ‘ஷூட்டிங் வாட்டர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். தீபாமேத்தா தனது படப்பிடிப்பைத் தொடர வேண்டுமானால், ஆர்.எஸ்.எஸ் .தலைவரிடம் அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமையிடத்துக்கு ஒருகுளிர்கால காலைநேரத்தில் தீபாமேத்தா சென்றபோது கனமான சால்வையுடன் தனது முகத்தில் காவி பாலக்வாலா அணிந்து சுதர்சன் அவரைச் சந்தித்தார். தீபாமேத்தாவை நோக்கி நடந்துவந்த அவர் தாந்தேவின் ‘இன்ஃபெர்னோ விலிருந்து ஒருபகுதியை மிகச்சரியான இத்தாலிமொழியில் குற்ப்பிட்டு அவர் அருகில்வந்து அமர்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்.ஐத் தவறாக மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று கூறினார். “கங்கை எங்களுடையது: புனிதமானது என்றார்.
   “நீங்கள் வாட்டர் திரைக்கதையைப் படித்தீர்களா? என்று தீபாமேத்தா அவரிடம் கேட்டார். சுதர்சன் அதன்பிரதியை மேஜைமீது வைத்தார். “இதை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? என்று தீபா அவரிடம் கேட்டார். ஏனெனில், தயாரிப்புக்குழுவுக்கு வெளியே செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறைக்கு மட்டும் ஒரேஒரு பிரதிதான் கொடுக்கப்பட்டிருந்தது. சுதர்சன் சொன்னார்: “அவ்வளவுதானே? எப்படி இருந்தாலும் யாருடைய அமைச்சகம் அது? அவர் தீபாமேத்தாவை ஆர்.எஸ்.எஸ்.ன் வாரஇதழான ‘ஆர்கனைசர் ஆசிரியர் சேஷாத்திரிசாரியைச் சந்தித்துத் திரைக் கதையைத் திருத்திக்கொள்ளுமாறு கூறினார்.
  வீராப்புமிக்கசுதர்சன் ஆர்.எஸ்.எஸ்-ன்தலைமையிலும், தன்னம்பிக்கைமிக்க பி.ஜே.பி. மத்திய ஆட்சியிலும் இருந்ததால் அமைப்புக்கும், கட்சிக்கும் இடையிலான உறவு மேலும்மேலும் மிக இறுக்கமடைந்தது. 2004 கோடையில் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சிமிக்க தோல்வியை பி.ஜே.பி அடைந்திருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தனது பிரச்சாரக்குகளை அதிக அளவில் கட்சிக்குள் நுழைத்து வேலைசெய்யவைத்தது. இக்கசப்புணர்வு இந்தியன்எக்ஸ்பிரஸ்ஆசிரியர் சேகர்குப்தா வின் தொலைக்காட்சி நேர்காணலில் வெளிப்பட்டது. சுதர்சன் வாஜ்பேயியையும், அத்வானியை யும் “அவர்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள்? என்றுகேட்டார். அவர் இந்திராகாந்தியை ‘இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று குறிப்பிட்டார்.
   பி.ஜே.பி.யின் மீதான அதிருப்தி மிகவும் கூர்மை அடைந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஒட்டு மொத்தமாக அந்தக்கட்சியைக் கைகழுவி விடுவதைப்பற்றிச் சிந்தித்தது. மற்ற எல்லாவற்றை யும்விட பி.ஜே.பி. அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி, ஆடம்பரமான வாழ்க்கைமுறைகள், சுயம் சேவக்குகளையும் ஊழல்களில் ஈடுபடவைத்தது, அவர்களில் பலரை சங்வேலைகளைச் செய்வதில் ஆர்வத்தை இழக்கவைத்தது ஆகியவை ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமையைக் கவலைக் குள்ளாக்கியது. 2004 தேர்தலைத் தொடர்ந்து டெல்லியின் வெளிப்பகுதியான ஜின்ஜோலியில் உள்ள ஒருபண்ணை வீட்டில் சுதர்சன், மதன்தாஸ் தேவி, எம்.ஜி.வைத்யா, அவரதுமகன் மன்மோகன் ஆகியோர் அந்த அமைப்பு அரசியலில் பங்கேற்றதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்யக்கூடினர். சுதர்சன் உள்ளிட்ட பலதலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். அரசியலில் மேற்கொண்ட  சோதனை முயற்சிகள் ஒருமுடிவுக்கு வரவேண்டும் என உணர்ந்தனர்.
   2005 ஜூனில் அத்வானி பாகிஸ்தானில் உள்ள முகமதுஅலி ஜின்னா  நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அவரது மதசார்பற்ற தன்மையைப் புகழ்ந்து பேசியபோது, நிலைமை மேலும் மோசமடைந்தது. நடைமுறையில் ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ்.ம் அத்வானியின் தலைக்குக் குறிவைத்தன. கட்சியின் அன்றைய பொதுச்செயலாளரான சஞ்சய் ஜோஷி கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அத்வானி விலக வேண்டும் எனக்கோரினார். அத்வானி டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு வருமாறும், அதன்பின் செய்தியாளர் கூட்டத்தில் தனது பதவி விலகலை அறிவிக்குமாறும் கோரப்பட்டார். ஆனால், அதற்குப் பதிலாக அத்வானி டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்த செய்தியாளர் களிடம் தனது பதவி விலகலை அறிவித்தார். பின்னர் அந்த ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசியசெயற்குழுவில், “அரசியல்தொடர்பாகவோ, கட்சி அமைப்பு தொடர்பாகவோ ஆர்.எஸ்.எஸ்..ஒப்புதலின்றி எந்தத்தீர்மானமும் நிறைவேற்றப்படக்கூடாது என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நாம் கொண்டிருக்கும் இந்தக்கருத்து கட்சிக்கோ, ஆர்.எஸ்.எஸ்.க்கோ எந்தவித நன்மையையும் செய்யாது எனச் சீற்றத்துடன்கூறி அத்வானி வெளியேறினார்.
   நடைமுறையில் எல்லாத்தலைவர்களும் அத்வானிக்கு எதிராக அணிவகுத்தபோது, பகவத், “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அண்டைநாடுகளுடன் நல்ல உறவுகளை மேற்கொள்ளவேண்டும். பி.ஜே.பி.யை உருவாக்கியவர் என்ற முறையில் அத்வானி பி.ஜே.பி.யில் நீடிக்கவேண்டும் என விவாதித்து ஒருசமரசப்போக்கைக் கையாண்டார். அதேநேரத்தில் அமைதியாகக் கட்சிப்பொறுப்பு களை ஏற்க இளைஞர்களை உள்ளே அனுப்பியவண்ணம் இருந்தார். இதை ஆர்.எஸ்.எஸ்.சார்பான பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியர் தெரிவித்தார்.
   அந்தநேரத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.ன் தந்திரோபாயங்களை வகுக்கும் உயர்நிலைக்கூட்டத்தில் எம்,ஜி.வைத்யாவும், மற்றவர்களும் பி.ஜே.பி.யை ஒரேயடியாக உப்புக் கண்டம்போட்டுவ்விட்டு ஒருபுதிய அரசியல் கட்சியைத் துவக்கவேண்டும் என்றனர். வைத்யா, “நாம் இந்துத்வாவாதிகள். நமது கட்சி இதைப்பின்பற்ற வேண்டும். இந்துத்வா வை அடிப்படையாகக்கொண்ட ஒருகட்சியை நான் உருவாக்குகிறேன் என்று பிரகடனம் செய்தார். ஆனால், அதை ஒருவரும் ஏற்கவில்லை என்றார் சுதிர்பாதக். கடைசியில் உள்ளார்ந்த விவாதங்களை முடித்துக்கொள்வதெனவும், பி.ஜே.பி.யுடன் இணைந்திருப்பதெனவும் முடிவு செய்யப்பட்டதாக மதன்தாஸ்தேவி தெரிவித்தார்.
   இந்தமுடிவு புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்ட பி.ஜே.பி.யின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் எளிதாகச் செயல்படுத்தப்பட்டது. ராஜ்நாத்சிங் 1964ல் தனது 13ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்து தனது 24ஆம் வயதில் ஜனசங்கத்தின் மாவட்டத்தலைவரானவர். அவர் கட்சியின் தலைவரானதும் ஆர்.எஸ்.எஸ்,ன்பால் மிகவும் நேசப்பூர்வமான சமிக்கைகளைக் காட்டத் துவங்கினார். 2006ல் பி.ஜே.பி. தனது அமைப்புவிதிகளைத் திருத்தம் செய்து ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை மாவட்ட அளவில் பொறுப்பாளர்களாகப் பதவி வகிக்க அனுமதித்தது. சங்அமைப்புக்குக் கட்சியில் தாராளமாக இடமளித்த கட்சி, மீண்டும் சங்அமைப்புக்குத் திரும்பத்தொடங்கியது.
                                                                            ( தொடரும்...)
                                                       நன்றி :  தி கேரவன் மே 2014 இதழ்   
  
    


  


  

ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் மூன்று

        ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
              திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
    தினேஷ் நாராயணன்                               தமிழில்: செ.நடேசன் 
                             மூன்று                                               

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடமிருந்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்று பி.ஜே.பி. நம்பிக்கைகொண்டிருந்த பொதுத்தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குமுன் 2009 மார்ச்-ல் சுதர்சன் தனது பின்தோன்றலாக அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த மோகன்பகவத்-ஐத் தேர்வுசெய்தபோது ஆர்.எஸ்.எஸ். ஒரு தலைமுறை maaமாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
   நாட்டின் புவியியல்ரீதியான மையமாகக் கருதப்பட்ட நாக்பூரின் ரெஸிம்பாக் வளாகத்தில் மையஅறையில் பாதக் உலவிக்கொண்டிருந்த ஒருநாளில் தலைமை மாற்றம் நிகழ்ந்தது. அப்போது அந்த அறையில் பின்னல்தட்டிகளால் ஆன கதவுகள் இருந்ததால் பாதக் அதன் வழியாக ஆர்.எஸ்.எஸ்.-ன் உயர்மட்ட முடிவுகள் எடுக்கும் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி சபாவின் நடவடிக்கைகளைப் பார்க்க முடிந்தது. பொதுவாக குர்தா, பைஜாமா அணிந்துகொள்ளும் மோகன்பகவத் அன்று வேட்டி அணிந்திருந்தார் என்று நினைவுகூர்ந்தார் பாதக்.ஆர்.எஸ்.எஸ்-ன்பண்பாட்டுவழிமுறைப்படி பட்டம்சூட்டும்நிகழ்ச்சி ஆரவாரமின்றிஇருந்தது. அதன்பிறகு பகவத் அறையிலிருந்து வெளியேவந்தார். ‘சிலநிமிடங்கள் அவர் தன்னை இழந்த வராகக் காணப்பட்டார் என்று பாதக் சொன்னார். அவர் தனது காலணிகளைக்கூடக் கண்டு பிடிக்கமுடியவில்லை. பின்னர் அவர் மன அமைதியைத் திரும்பப்பெற்றார்.
   அதைப்பற்றிப் பின்னர் பாதக் கேட்டபோது பகவத் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பின் பாரத்தைச் சிலகணங்கள் சிந்தித்தபோது தான் பிரமித்துநின்றுவிட்டதாக ஒத்துக்கொண்டார். “அந்தச் சில நிமிடங்கள்  நான் வெறும் மோகன்பகவத் ஆக இருந்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை என்னால் நிறைவேற்றமுடியுமா? என்று நான் சிந்தித்தேன்.
   அந்த அறிவிப்பு திடீரென இருந்தாலும் மொத்தத்தில் எதிர்பாராத ஒன்றுஅல்ல. 1990களி லிருந்தே வயதுமுதிர்ந்த தலைவர்களின் இடத்திற்கு மிகவும் இளையவர்களைக் கொண்டுவரு வதை ஆர்.எஸ்.எஸ். துவக்கிவிட்டது. இது ஒருகுறுகிய காலத்துக்குச் சிரமமானதாக இருக்கு மென்றாலும், பி.ஜே.பி.யுடனான உறவுக்கு நீண்டகால ஆற்றல்மிக்க தலைமையை உருவாக்குவதற்கான முக்கியத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்திருந்தது .66வயதான சுதர்சன் சர்சங்சாலக் ஆக்கப்பட்டபோது அப்போதைய பொதுச்செயலாளர் ஹெச்.வி.சேஷாத்திரி அவரிடம்பொதுச்செயலாளர் பதவிக்குத்தகுதியானவர்கள் இரண்டுபேர்:ஒருவர் மதன்தாஸ்தேவி இன்னொருவர் மோகன்பகவத் என்றார்.
  சேஷாத்திரியும், சுதர்சனும் மதன்தாஸ்தேவியின் பக்கம் சாய்ந்தனர். அவர் அரசியலை நன்குபுரிந்து கொண்டுள்ளவர் என்பதோடு பி.ஜே.பி.யை மேற்பார்வைசெய்யும் அதிகார பூர்வ ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் இருந்தவர். ஆனால் எம்.ஜி.வைத்யா, சுதர்சன் தனது பொறுப்பைப் பகவத்துடன் இணைந்து நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறினார். ஆர்.எஸ்.எஸ்.-ன் அனைத்து முடிவெடுப்புக்களையும்போல் இந்தத்தேர்வு நடைமுறையும் மிகவும் உயர்மட்டக் கலந்தாலோசனையோடு தனிப்பட்டமுறையில் செய்துமுடிக்கப்பட்டது.
   ‘அவர் தலைவராக ஆகும்வரை எங்களில் ஒருவர்கூட அவர்பெயரை அறிந்திருக்கவில்லை. என்றுஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றின் மூத்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது பகவத்துக்கு வயது 55.
   மோகன் மதுக்கர்ராவ் பகவத் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்த அவரது தாய்வழிப்பாட்டனார் அண்ணாஜியின் பிராமணக்குடும்பத்தில், மகாராஷ்ட்ராவில் உள்ள சாங்க்லியில் 1950 செப்டம்பர் 11ல் பிறந்தவர். பகவத்தின் தந்தைவழிப் பாட்டனார் சதாராவில் வழக்கறிஞராக இருந்த நாராயண்பகவத். தனது பெற்றோர் மறைவுக்குப்பின் சந்திராபூருக்குக் குடியேறினார். நாராயண்பகவத் (அல்லது நாணாசாஹேப்) மாநிலக் காங்கிரசில் ஒரு உறுப்பினர். நாக்பூரில் உள்ள நீல்சிடி பள்ளியில் ஹெட்கேவரின் பள்ளித்தோழராக இருந்தவர். இந்தப்பள்ளி பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைத் தோற்றுவித்தவரான ஹெட்கேவரை பிரிட்டிஷ் சட்ட திட்டங்களுக்கு உட்பட மறுத்ததாலும், வந்தேமாதரம் பாடலைப் பாடியதாலும் பள்ளியைவிட்டு வெளியேற்றியது.
   பகவத்தின்தந்தை மதுக்கர்ராவ் 1940ல் ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரகராகி குஜராத்தில் அமைப்பின் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் திருமணம்செய்துகொள்ள ஒத்துக்கொண்டாலும், பகவத் பிறக்கும்வரை ஆர்.எஸ்.எஸ். வேலைகளிலேயே நீடித்துவந்தார். அதன்பின், நாக்பூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். மதுக்கர்ராவுக்கும் அவரது மனைவி மாலதிபாய்க்கும் பிறந்த மூன்று மகன்கள்,ஒருமகள் ஆகியோரில் பகவத்தான் மூத்தவர்.
   இந்தக்குடும்பம் சங்அமைப்பின் நெறிமுறைகளில் ஆழ்ந்தபற்று கொண்டது. பகவத் குடும்பத்தின் மூன்றுதலைமுறைகள் ஆர்.எஸ்.எஸ்.ல் அதிகாரம்மிகுந்த பொறுபுக்களில் இருந்தன. குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்ப்க்குத் தலைமையேற்றுச்செயல்பட்டபின் மதுக்கர் ராவ் தனது தந்தை தனக்குமுன் ஏற்றிருந்த சந்திராபூர் மாவட்டத்தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அவரது மனைவி மாலதிபாய் ஆர்.எஸ்.எஸ்.ன் மகளிர்பிரிவான ‘ராஷ்ட்ர சேவிகா சமிதியின்உறுப்பினராக இருந்து ஜனசங்கட்சியின் மாவட்டப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஆனார்.
   2014 ஜனவரியில் பகவத்தின் இளைய சகோதரரான ரவீந்திர பகவத்தை நான் சந்திராபூரில் சந்தித்தேன். சந்திராபூர் மிகவேகமாக விரிவடைந்துவரும் மகாராஷ்ட்ராவின்நகரங்களில்ஒன்று. அதன்வானம் எப்போதும் அந்தமாநிலத்தின் 2340 மெகாவாட் சூபர்தெர்மல் பவர்ஸ்டேஷனில் இருந்து வெளியாகும் அடர்த்தியான புகைமூட்டங்களால் சூழப்பட்டதாகவே இருந்தது. இன்று ரவீந்திரபகவத்-ன் அலுவலகத்தில்-கடைகளை முன்பக்கத்தில் கொண்டுள்ள, ஓடுவேயப்பட்ட நவீன இரண்டுமாடி வீட்டின் வசிக்கும்அறையில் - ஓவியம் ஒன்று இருந்தது.சுவரில் இருந்த அலமாரியில் பாட்டு மற்றும் நடிப்புப்போட்டிகளில் பகவத் வென்றிருந்த நினைவுப்பரிசுகளும், கோப்பைகளும், வெற்றிச்சின்னங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்கலைகழகத்தில் பட்டம்பெற்றுத் திரும்பியபோது பகவத் ஒருசாக்குப்பை நிறையப் பதக்கங்களையும், வெற்றிச் சின்னங்களையும் கொண்டுவந்தார் என ரவீந்திர பகவத் கூறினார்.
   சந்திராபூரில் இன்றும் வாழ்ந்துவரும் முன்னாள் ஆயுள்காப்பீட்டுக் கழக அலுவலரும், பகவத்தின் குழந்தைப்பருவ நண்பருமான ராஜாபாஹுபொஜாவர் ‘மராத்தியின் வீரசாகசக் கதைகளில்- குறிப்பாக, ‘அக்ரவ அவதார்(பதினொன்றாவது அவதாரம்) ‘சிங்ககர்ஜனா, ‘விஸ்வாமித்ரி பேச்ஜ் முதலான நாவல்களை எழுதிய பாபுராவ் அர்ணால்டின் எழுத்துக்களில் பகவத் தீராத மோகம் கொண்டிருந்தார் என நினைவுகூர்ந்தார்.
   அகோலாவில் இருந்த ‘டாக்டர்.பஞ்சாப்ராவ் தேஷ்முக் க்ருஷிவித்யாபீடத்தில் விலங்கியல் பாடப்பிரிவில்சேர்ந்த பகவத், தனதுபல்வேறுபாடங்கள் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற் றதால், பட்டமுன்வகுப்பு படித்த ஆண்டுகளை நாக்பூரிலேயே கழித்தார். நோய்க்கூறு இயலில் தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார். விலங்கியல்பாட மாணவர்கள் தாங்கள் பட்டம்பெற்றபின் இரண்டு ஆண்டுகள் அரசுசேவையில் ஈடுபடவேண்டும். பகவத் சந்திராபூர் விலங்குகள் மருத்துவமனையில் சிலமாதங்கள் பணியாற்றியபின் 90 கி.மீ.கிழக்கில்உள்ள சமோஷிக்கு விலங்கியல் அலுவலராக மாறுதல் செய்யப்பட்டார்.
   சுதிர் பகவத் 1970ல் மஹாராஷ்ட்ர அரசால் கொண்டாடப்பட்ட ‘அனைத்துலகக் கல்வி ஆண்டுவிழாவுக்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இளைஞர்முகாமை நினைவு கூர்ந்தார். 14 பல்கலைக்கழகங்களிலிருந்து 30 மாணவர்கள்வீதம் 420பேர் அந்த மூன்றுநாட்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பகவத் இரண்டாம் நாளிலேயே ஒருசாகாவைத் துவக்கினார். அன்றுமுதல் அவர் ‘பாரதக்கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கான தலைவராகவிளங்கினார். அங்கே ஆர்.எஸ்.எஸ்.கொடிமட்டுமேஇல்லை. ஆனால் ஒவ்வொன் றும் ‘சாகாவில் நடப்பதுபோலவே நடைபெற்றன. 100 மாணவர்கள் இரண்டு நாட்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டம் பிரச்சனைக்குரியதாக மாறியது. “அரசு ஏற்பாடுசெய்த நிகழ்ச்சியில் எப்படி ஒருசாகா இடம்பெற்றது? என மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் கேள்விக்ள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசோ, ‘சாகா நடைபெற்றதை மறுத்தது.
  உல்லன் ஆடைபோர்த்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டரான சுதிர்பகவத், மற்ற எல்லா மாணவர் களையும் போலவே பகவத் நவீனஉடைகளிலும்,பாலிவுட்டின் புதிய பாடல்களிலும் பேரார்வம் கொண்டிருந்தார். ஒருமுறை பேருந்தில் ஒருபெண், அரே மோகன், நாங்கள் பாட்டுக்கேட்க விரும்புகிறோம், என்றவுடன், அப்போது மிகவும் பிரபலமான ‘படோசான் திரைப்படத்தில் வரும், “மேரே சாம்னே வாலி கிட்கி மே என்றபாடலைப் பாடினார். பகவத் நாடகங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம்கொண்டிருந்தார். ஒருமுறை கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நாக்பூர்பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு மராத்தி நாடோடிக்கலையான ‘பாரூத் என்ற பாட்டும், கதையும் இணைந்த கதாகாலட்சேபத்தை நடத்தினார். அவர் நாடகங்களை இயக்கி நடித்தார். இத்தகைய நிகழ்வுகளில் பகவத் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதனாகத் தோன்றினார்.
   நெருக்கடிநிலை அறிவிக்கப்படுவதற்குச் சற்றுமுன் அகோலாவில் ஆர்.எஸ்.எஸ்.-ன் முழு நேரஊழியர் ஆவதற்காக பகவத் தனது முதுகலைப் பட்டப்படிப்ப்டிப்பிலிருந்து இடைவிலகினார். இந்திராகாந்தியின் சர்வாதிகாரத்தின்போது தலைமறைவானார். அவரது பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதும் சங்அமைப்பில் விரைவாகப் பலபடிகள்முன்னேறினார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார். பின்னர் விதர்ப்பா முழுவதும் பொறுப்பேற்றார். 1980ல் பீகாரில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1991ல் அகில இந்திய உடற்பயிற் சிக்கான தலைவராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அதன்பின் ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் ‘பிரச்சார் பிரமுக்ஆக உயர்ந்தார்.

  1992ஆம்ஆண்டுஇந்தியாவுக்கு ஒருகலவரம்மிக்க ஆண்டாக விளங்கியது. தந்திரம் நிறைந்த பி.வி.நரசிம்மராவ் (இவர்தான் நேருகுடும்பத்திற்கு வெளியே பிரதமரான மூன்றாமவர்.) தலைமையிலான காங்கிரஸ் அரசால் 1991ல்தான் ‘புதியபொருளாதாரக் கொள்கை என்ற (பெரஸ்த்ரோய்கா) பொருளாதார சீர்திருத்தத்தை நாடு அனுபவிக்கத் துவங்கியிருந்தது. அந்த ஆண்டு ஏப்ரலில் அம்பலமான ரூ.4,000/ கோடி பங்குமார்க்கெட் ஊழல், நாடு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பியதன் அறிகுறியாக இருந்தது. இதை எதிர்த்துக் கடுமையான சுனாமியைப் போலக் கண்டனங்கள் எழுந்தன. குளிர்காலம் துவங்கியபோது, சங் குடும்பம் அயோத்தியில் கரசேவைக்குத் தயாராகி இராமர் பிறந்த இடம் என்றுகருதப்பட்ட சரயூ நதிக்கரையில் இராமர் கோவிலைக்கட்டுவதற்கு மிகப்பெருமளவில் தொண்டர்களைத் திரட்டியது.
   அந்தநேரத்தில் திரைப்படத்தயாரிப்பாளர் லலித்வச்சானி ஆர்.எஸ்.எஸ்.பற்றிய ஒருகுறும் படம் தயாரிக்க நாக்பூர் வந்தார். 1990ல் சுதர்சன் துணைப்பொதுச்செயலாளராக இருந்தபோது அவரை வச்சானி அணுகித் தனது குறும்படம்பற்றிக் கூறினார் இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதர்சன் 10 சாகாக்களைகொண்ட கூட்டத்தைக் கூட்டினார். ‘அங்கே டெலிவிஷன் கேமராக்கள் இல்லை. அது வானொலி ஆவணம்தான் என்றுதெரிந்தபோது சுதர்சன் ஏமாற்றம் அடைந்தார், என்று வச்சானி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு படம்தயாரிக்க வச்சானி மீண்டும் வந்தபோது சுதர்சன் மிகவும் உற்சாகம் அடைந்தார். அவரது நடத்தை, ‘இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள், இளைஞர்களே? என்பதுபோல் இருந்தது.
   இரண்டுமாதங்கள் படப்பிடிப்பின்போது வச்சானியும், அவரது படப்பிடிப்புக்குழுவினரும் ஆர்.எஸ்.எஸ் தன்னாரவத்தொண்டர்கள் தங்குவதற்கான விடுதியாகவும், ஆர்.எஸ்.எஸ். அலுவ லகமாகவும் இருந்த ஒருமாளிகையான ‘ஆஷா சதன்-ல் பெரும்பகுதி நேரத்தைக்கழித்தனர். வ்ச்சானி சந்தித்த தலைவர்களில் ஒருவர் பகவத். 1990களில் ஆர்.எஸ்.எஸ்.-ன் உடற்பயிற்சிக் கான அகில இந்தியத்தலைவராக சங் அமைப்பின் ஒழுக்க நடைமுறைகளை உருவாக்கிக் கவனித்துவந்தர்.



   ‘ஆஷா சதன்-ல் இருந்த பையன்கள் பக்தியுடன் அவரை வணங்கினார்கள் என்று வச்சானி ஜெர்மனியிலிருந்து ஸ்கைப் மூலம் என்னிடம் தெரிவித்தார்.அவர் அவர்களுக்குக் கடவுளைப் போன்றவராக இருந்தார். ஒருநாள் அந்தப்பையன்கள் பகவத்தைப் புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட்டனர். அவர்வாசித்தது இசையோடுகொஞ்சமும் பொருந்திவரவில்லை. என்றாலும் எல்லாப் பையன்களும் அவர் ஒருமாபெரும் நிகழ்ச்சியை நடத்தியதைப்போலப் புகழ்ந்தனர்! என வச்சானி நினைவுகூர்ந்தார்.
   வச்சானியின் 27 நிமிட “பாய்ஸ் இன் த பிராஞ்ச் திரைப்படத்தின் இடையே ஆர்.எஸ்.ஏஸ். சாகாக்களில் நடைபெறும் “காஷ்மீர் ஹமாரா ஹை என்ற விளையாட்டின் தர்க்க நியாயங்களை பகவத் விளக்குகிறார். இந்த விளையாட்டில் சிலகுழந்தைகள் ஒருவட்டத்தின் மையப்பகுதியில் நின்றுகொண்டு அதைக்கைப்பற்ற முயற்சிக்கும் மற்றவர்களை வட்டத்திற்கு வெளியே தள்ளுவார்கள்.சாகாதான் ராஷ்ட்ரிய சுயம்சேவக்குகளின் வாழ்க்கை என்று படத்தில் பகவத் கூறுகிறார்.இப்போது அவர்களுக்குக் காஷ்மீர் பிரச்சனை பற்றியோ, 370ஆவது சட்டப் பிரிவுபற்றியோ அதிகமான விவரங்கள் தெரியாது. ஆனால், ‘காஷ்மீர் நம்முடையது: அது பாரதத்திற்குச் சொந்தமானது என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது
   வச்சானி எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, இந்தப்படத்தின் தொடர்ச்சியைத் தயாரிக்க அதே இடங்கள், அதே நபர்களை மீண்டும் சந்தித்தார். ‘த மென் இன் த ட்ரீ என்ற அந்தப்படத்தில் சுதர்சன் இளம்வயதிலேயே சுயம்சேவக்குகளைச் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை மிகவிரிவாகக்  கூறுகிறார். “குழந்தைகள் தங்கள் பழக்கவழக்கங்கள் உருவாகும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் குழந்தைபருவத்தில் தங்கள் சூழல்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சுற்றுச் சூழல்களால் வடிவமைக்கப்படுகிறார்கள். குழந்தைநிலையில் இருந்து சிறுவர்நிலைவரை நீட்டி வளைக்ககூடிய தகடுபோல அவர்களது மனம் நம்வசப்படக்கூடிய பருவம் அது. பழக்கங்கள் பதிவாகும்அந்தப்பருவத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கிறீர்களோ அது அவர்கள்மனங்களில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தும். அதனால்தான் நாங்கள் சிறுவர்களை அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே ‘சாகாக்களில் சேர்த்துவிடுகிறோம்.
   1990-ன்துவக்கத்தில் ‘த மென் இன் த ட்ரீ யில்வரும் மூன்றுமுக்கியக் கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பாக சந்திப் பாதே, புருஷோத்தம், ஸ்ரீபாத் பொரிக்கர் ஆகியமூவரும் 1992 டிசம்பர் 6ல்  அயோத்தியில் பாபர்மசூதியைஇடித்ததில் தங்கள்பங்கு பற்றிப் பெருமைபொங்கப் பேசுகிறார்கள். “நான் பாபர்மசூதியின் கூம்பின்மேல் இருந்தேன். அது ஒருவாழ்நாள் சாதனை. நாங்கள் வரலாற்றை உருவாக்கினோம் என்கிறார் பொரிக்கர்.
  அவர்கள் சொன்னதுபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்ட கரசேவை பாபர்மசூதியை அதன் முழு அமைப்பையும் இடித்துத்தகர்க்க வழிவகுத்தது. சந்தீப் பாதே கூறுகிறான்: கரசேவையின் தயாரிப்புப்பணிகள் முழுவதும் ஆழ்ந்து சிந்தித்து ஒவ்வொரு பையனின் வயது, அவன் எந்தப் புகைவண்டியில்பயணிக்கவேண்டும்? அவன் எந்தக்குழுவின் தலைவரிடம் வந்துசேரவேண்டும்? என அதன்கட்டங்கள் ஒவ்வொன்றும் பதிவுசெய்யப்பட்டன. தாங்களாகவே அயோத்தியில் புகுந்துகொள்பவர்கள்கூட் ஆர்.எஸ்.எஸ்ஊழியர்களிடம் பதிவுசெய்தாக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அனுமதியின்றி எந்தஒருவரும் கோவிலின் தன்னார்வத்தொண்டராக உள்ளே நுழைந்துவிட முடியாது.
   இதோபொரிக்கர்கூறுகிறான்:நாக்பூர் எதையும்சந்திக்கக்கூடிய பத்துப்பேரைத்தேர்ந்தெடுத்தது. அவர்களில் நானும் ஒருவன். எங்கள் கைகளில் இருந்த இரும்புக்கம்பிகள், குச்சிகள், சில நேரங்களில் பாறாங்கற்கள் ஆகியவற்றைக்கொண்டு அந்தக்கூம்பில் இடிக்கும் வேலையைச் செய்தோம். எங்கள் சிந்தனையில் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அது, அந்தக்கட்டுமானத்தை முற்றிலும் தகர்த்து வீழ்த்துவது அவன் மேலும் கூறினான்: முஸ்லீம்கள் நாங்கள் சிந்திக்கும் வகையிலேயே வந்துசேர்வார்கள். அயோத்தி, காசி, மதுரா ஆகியவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை முஸ்லீம்கள் உணரும் சூழ்நிலை மெல்ல மெல்ல உருவாகும். முஸ்லீம்கள் இந்தநாட்டில் வாழவேண்டும் என்றுவிரும்பினால் அவர்கள் மூத்த அண்ணாக்கள் (இந்துக்கள்) சொல்வதைக் கேட்டேதீர வேண்டும்
   பாதே மேலும் சொன்னான்: அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்காவிட்டால், இந்துக்கள் எந்தெந்த வழிகளில் நடந்துகொள்வார்களோ அவற்றை எல்லாம் அவர்கள் சந்தித்தே தீரவேண்டும்.

( தொடரும்...)
நன்றி : த கேரவன் மே 2014 இதழ்