Wednesday, 20 November 2013

                               பரணி
                                              கவிதைகள்
                         மேகங்களின் மேதின வெளியீடு-1973
                                             ஊத்துக்குளி

                                         மாறுதலுக்காக
                                        அல்ல
                                        மாற்றத்திற்காகவே
                                       சிந்திக்கிறோம்.
   முத்துப்பொருநன்         முத்துப்பொருநன்                    முத்துப்பொருநன்
=-----------------------------------------------------------------------------------------------------------
 வேட்கை                                 நிதர்சனம்                                                               நம்பிக்கை
 ஊமையன் கோட்டை       மானம் காப்பதில்                          மேல்திசைக் காற்றின்
 வாயில் அடைத்ததால்      மகத்தான இடம்                                        சீதளப் பெருமை
 உள்ளே                                     பட்டுக்கா?                                நேற்றுப் பெய்த மழையின்
 சப்த ஜாலங்கள்                     பருத்திக்கா?                                                        ஆரவாரிப்பு
 ஓய்வதில்லை.                      பட்டிமண்டபம்!                             கீழ்த்திசை உழவனின்
 கையில் விலங்கு                பார்வையாளர்களோ?               இன்றைய ஏர்ப்பிடிப்பு
 மாட்டப்படுவதால்              கட்டத் துணியில்லா         நாளை இவன் சந்ததிக்குக்
 நெஞ்சில்                                 முற்றும் துறந்த                                                     கைலாகு
 எரியும் நெருப்பு                   நிர்வாணிகள்!
 அணைவதில்லை

 மார்க்சியம்                               திருவிளையாடல்                                                  வீழ்ச்சி
 முரண்பாடான                        ஆண்டவன்                                                         புரண்டன
 சமுதாயத்தின்                         செய்த தவறுக்கு                                               உடல்கள்
 முரண்பாடான                        முன்னோர்                                 திராட்சைரச மயக்கம்
 கேள்விகளுக்கு                      முதுகில் அடிபட்டனர்              நெளிந்தன உடல்கள்
 முரண்பாடில்லாத                 ஆளுகின்றோர்                           ராட்சசப்பசி மயக்கம்
 ஒரே பதில்                               செய்கின்ற தவறுக்கு                      விடிந்தது பொழுது
 பொருளாதாரம்                       நாங்கள்                                                                 வென்றது
                                                        வயிற்றில் அடிபடுகிறோம்.     சிவப்பு முக்கோணம்!

கவிஞர்கள்                                கோழை                                                                   உபதேசம்

 செம்மலரில்                           நாளை                                                                           “கத்தரி
 தேன் உறிஞ்சிப்                     பூரண ஹர்த்தால்                      வெய்யிலில் காய்ந்து
 பாடிப் பறக்கும்                       கோஷமிடுகின்றனர்                                          கார்கால
 வண்டுகளில்                          நண்பர்கள்                                       மழையில் நனைந்து
 சிலவே                                      நான் அப்படிச்                                                       மார்கழிப்
 அயல்மகரந்தச்                       சொல்ல மாட்டேன்                         பனியில் படுத்துப்
 சேர்க்கையில்                         நகரத்தின்                                                      பழகிக் கொள்
 உதவுகின்றன.                        பெரியகடை                                  உடம்பு இரும்பாகும்
                                                       முதலாளி                                                               என்றார்
                                                       எனது அப்பா!                                               குளிர் சாதன
                                                                                                                     அறையில் வாழும்
                                                                                                                                    ஒரு மந்திரி!
                                                                 நீலவண்ணன்
 1. .                                                               2                                            3                                              
பொழுது                             பெண்ணுக்குப் பின்னே ஓடும்    எங்கள் நாட்டவர்               
விடியப் போகிறது         அழகிய கதாநாயகனே                       உள்ளூரில்-பலர்
சீக்கிரம்                               நீ ஒரு கோழை!           நடந்து பிச்சை எடுக்கிறார்கள்
எழுந்திருங்கள்                வீரத்துடன் நெருங்கிவரும்            வெளியூரில்-சிலர்
புரட்சி                                  வில்லன்கள் வருகிறார்கள்                                   பறந்து
வெடிக்கப் போகிறது    விலகிக்கொள்                             பிச்சை எடுக்கிறார்கள்                                                                         
சீக்கிரம்                                -ஆம்                                                                  எல்லாரும்                                                
தூங்குங்கள்                      இது வில்லன்களின் காலம்         இந்நாட்டு மன்னர்கள்
 4                                                             5                                                                            6
நாற்காலிகளில்                         மலடியை                                                    சூரியகாந்திப்
உட்கார்ந்துகொண்டு               மணம் செய்து                                                    பூக்களை
ராஜாங்கம் நடத்தும்                அடுத்த வருடம்                                             அறுவடை 
முடவர்களை நம்பாதீர்கள்    மடியைத்                                செய்யும்பொழுது- சில
வேண்டுமானால்                      தொட்டுப்பார்த்தேன்                 காரிய வாதிகளின்
நாலாபுறமும்                             அதிசயம்                                                           தலைகள்
திரிந்துகொண்டு                       ஆனால்                                                                   ஏனோ
கொள்ளைகளை நடத்தும்     குழந்தை                                                      நினைவுக்கு
மூடர்களை நம்புங்கள்           இருந்த்தே!                                                            வந்தன

   7                                                                     8                                                                 9
மேலே பறக்கும்             சோம்பேறித்தனத்தையும்               ஜன்னலைத் திறந்து
கழுகுகளை                      சொப்பனங்களையும் உண்டாக்கும்                எங்களைப்
சுட்டுக்கொல்லாமல்   தென்றல் காற்று வேண்டாம்                              பாருங்கள்
குப்பைமேட்டை            மரபுவாதிகளையும் –சில                               இல்லையேல்
கோழிக்குஞ்சுக்கு          திரிபுவாதிகளையும்                                  கதவை உடைத்து
சொந்தமாக்கி                  பறக்க வைக்கும்                                                        நாங்களே
என்ன பயன்?                    புயல் காற்றே வா!                                 உள்ளே வருவோம்
  
                                                            கலையரசு
  வட்டம்              .                                வக்கரிப்பு                                             அம்மா தாயே...
 துப்பாக்கிகளை                               தீபச் சுடரைக்                  அண்டப் பெருவெளியின்
 ஆட்சிக்கட்டிலில்                           கற்பூரங்களில்                       அந்தகார சாம்ராஜ்ய
 அமர்த்தியபோதே                          ஆட்சி செலுத்த                   நட்சத்திரப் பிரஜைகள்
 துளைக்கும்                   வைத்துவிட்டதாலேயே    இங்குள்ள சமஸ்தானங்களில்
 உரிமைகளும்                                 வெங்கற்களிலும்             எங்களின் ஜனத்தொகை
 தோட்டாக்களுக்கு                      அதன் ஜ்வாலைகளை             எதேஷ்டம் -ஆளும
 வழங்கப்பட்டு                              ஏற்ற முனையாதீர்கள்                  சூர்யாதிகாரனின்
 விட்டன.                                        ஒளி விடுவதை விடவும்         சுற்றுலாவின் போது                                                   பொடிந்து போவதையே     தென்படவில்லையாலேயே
                                                   அவை விஸ்வாசிக்கின்றன.                                   நாங்கள்
                                                                                                                                 இல்லை என்று
                                                                                                                                     ஆகிவிடுமா?

 “ அட்டைகள் “                                   எட்டப்பார்வை                                        பிரஞ்சகவி
 கால்நூற்றாண்டுகளின்முன்     நிதிமிகுந்தவர்                         கற்பூர வயல்களில்
 எங்கள் ரத்தத்தை                            பொற்குவை தாரீர்                                நெருப்பாறு
 உறிஞ்சியவை                                  அது குறைந்தவர்                                   பாய்வதால்
 ‘மேட் இன் இங்லண்ட்                  காசுகள் தாரீர்                                    பிரளயங்களே
 இப்பொழுது...?                                   திருமால் மருகனின்                               அறுவடை
 சுதேசிகளைத்தவிர                        திருமயில் வாகன                                            ஆகும்.
 வேறு எதனையும்                          முன்விரல் நகங்கள்
 நாங்கள்                                                மூளியாயின
 உபயோகிப்பதில்லை?                 புணருத்தாரணம்.
                                                               செய்பவர்கள் நாங்கள்
                                                       துலாபாரம்
எங்கள்                                                       எங்களது வியர்வைகளும்                     தேவீ!
முன்னோரின் வியர்வைகள்           எங்களது பாடுகளும்                    உனக்களித்து
முதுகொடித்த பாடுகளை                  சிலபேர்கள்தழுவி நின்ற          வரம்வேண்டி
 பின்ஏர்போல் விலகாது                    தனியுடமை ஆனபோது          ன்றிருந்தோம்
பின்பற்றி நிற்றல்களைக்               தனியுடமை                               எங்கள்முன்னே
காடு வயல்களாய்க்                         ஆனபோது                              அந்தச் சிலபேர்கள்
கழனிகளாய் மாற்றியதைத்        “வியர்வைகள விளைவுகளை          வியர்வை
தனியுடமை கொண்டாடித்          துலாபாரம் செய்திடுவாள்                   பாடுகளை
தழுவி நின்றார் சிலபேர்கள்       பாட்டிற்குரியபலன். எம்நரம்பின்முருக்குகளை 
அங்கே                                                 தந்திடுவாள் என்றெண்ணித்          தனியுடமை
அடிவயிற்றின் பசிக்குரலால்    தேவீ!                                          கொண்டசிலபேர்கள்
அடைத்துவிட்டசெவி திறக்க     உன்னடியிற்                         அன்னை உன் மொத்த
முன்னோர்களின் எச்சங்கள்      சரண் புகுந்தோம்;               அருளுக்கும் குத்தகை
ஆம்! நாங்கள்விடிவேளைச்       கை தொழுதோம்.                       பெற்றுவரக்கண்டு
சேவல்களின் கூவல்களைக்   உதயம்,உச்சி,அந்தி,சந்தி                           கழனிகளில் கால்புதைக்கும்   அர்த்தஜாம பூஜைகளும்                                       இனி,
சேற்றின் நடுவிருந்து                 ஐந்தாண்டுக்கொருமுறையாய்
செவிமடுத்தோம்                        கும்பாபிஷேகங்களும்... உதயம்,உச்சி,அந்தி,சந்தி        
-விடிவு வரக்                                ‘வியர்வைகளை                   அர்த்தஜாம பூஜைகளும்
                                                            விளைவுகளைத்                    ஐந்தாண்டுக்கொரு
கவி தொடுத்தோம்.                  துலாபாரம்செய்திடுவாள்                முறையாய்             
ஆனால்....                                    பாட்டிற்குரிய பலன்           கும்பாபிஷேகங்களும்?  
                                                         தந்திடுவாள் என்றெண்ணித்
..................................................................................................................................................................

                                                                     நாங்கள்                                                
                                                                     துலாக்கோலைத்
                                                                     துல்லியமாக்
                                                                    ஏந்தக்கூடிய
                                                                   கரமெது என்னும்
                                                                   ஒரு
                                                                  மறுபரிசீலனையில்.
தொகுப்பு: கலையரசு     1973 மே தினம் வெளியீடு : மேகங்கள், ஊத்துக்குளி



                          தமிழ் நாடன் நினைவு அஞ்சலி
                              பரணி
                                             கவிதைகள்
                        மேகங்களின் மேதின வெளியீடு-1973
                                              ஊத்துக்குளி

                                         மாறுதலுக்காக
                                        அல்ல
                                        மாற்றத்திற்காகவே
                                        சிந்திக்கிறோம்.

                      நெருப்புப் பிஞ்சுகள்
---------------------------------------தமிழ்நாடன்-----------------

  இந்தக் குறுந்தொகுதியை- இளைய வட்டத்தின் சிகப்புச் சினத்தைக் கண்ணுறுகிறபலரும், இவர்கள் இப்படி ஏன் எழுதித் திரியவேண்டும்? வேறுவேலை எதுவும் கிடையாதோ? காசு கொழுத்துக் கிடக்கிறதோ? – அல்லது கவிதை எழுதுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை? என்று எண்ணுவார்கள்.
  இதற்கு விடை கூறிக்கொண்டிருப்பதுதான் வெட்டிவேலை. சமூகத்தைப் பார்ப்பதிலும், அதனில் காணும் அவலங்களைக் களைய முயல்வதிலும் வேறுவேலை அற்றவர் இவர். காசு கொழுத்த அட்டைகளின் எதிரே கூட்டுப் பெருமையை நிறுவ வந்தவர் இவர்.மனுஷராய்ப் பிறந்ததினால், சுத்த மனத்தினராய்ப் பிறந்ததினால் எவர் அருளும் இல்லாமலேயே கவிஞர் ஆனவர் இவர்.
  பகைத்திறம் அறிந்தே ‘பாத்திற வியூகம் எடுத்தவர் இவர். எதிரே ஐந்திலக்கணப் புலிகளும்,உள்ளூர்ப் பணமுதலைகளும், அதிகார வர்க்க யானைகளும், சிங்கங்களும் ஒரே அடியில் வீழ்த்தி இவர்களை இல்லாமல் ஆக்கும் நினைவோடு நின்றிருப்பதும் தெரியும்; தெரிந்தும் போர்க்களத்தில் அஞ்சாமல் நிற்கிற இவர்கள்,எண்ணமேகவிதை எனும் நவீன இலக்கியச் சிறப்பால் படைப்பிலக்கியமே உன்னத இலக்கியம், உண்மை இலக்கியம் என்னும் குறிக்கோளால், எதார்த்தங்களால் எதார்த்த இலக்கியக் கருவியைக் கையேந்த வலிவு தரும் மார்க்ஸீயச் சித்தாந்தத்துத் துணையால் எதிரிகளை நிர்மூலம் ஆக்குவார்கள்.
  ஆயுதப் புரட்சி நம் வர்க்கத்தின் புறநிலை மூலம் என்றாகுமானால் இலக்கியக் கலாச்சாரப் புரட்சி நம்மின் அகநிலை மூலம் ஆகும்: இந்தச் செழுமை இந்தக் கவிதைகளில் மின்னுகின்றன.
  சுடப்பட்டுச் சுடப்பட்டு வீழுகிறார்கள் சொந்தக்குருதியின் சோதரர், ‘அம்மா எனும் ஒருகுரலோடு: அவர்களின் மற்றைய ஆத்தும (அடிமன) கசிவுகள் இந்தக் கவிதைகள்.
  உழைக்கும் வர்க்கம் தன்னைத் திரஸ்கரிக்கும் எல்லாவற்றையும் நிராகரிக்கிறது. அவ்வர்க்கத்தின் குரலான இவ்விலக்கியக் கர்த்தாக்கள், மேல்எழுந்து மூடுண்ட மேகத்தின் உயரே இடியென கர்ஜிக்கிறார்கள்.
  என் நேசத்திற்கு இந்தப் பிரபஞ்சம் போதாது என்றான் என்தோழன் ஒருவன். மனிதன் மனம் அத்தனை விசாலமானதாய் இருக்க வேண்டும்! இங்கே கலையரசு அப்படித்தான். இந்தக்கவிஞன் வானமும், காற்றும் அனைவருக்கும் பொது என்னும் உண்மையோடு இன்னொரு பொது உண்மையையும் – உலகத்தையும் பொதுவாக எடுத்து நிறுவுகிறான்.
  இவர்கள் வாழ்க்கையின் உண்மைகளை அன்றாட நிகழ்வுகளை இலக்கியம் ஆக்கத் துடிக்கிற வாழும் மனிதர்கள். அதனால்தான் ஆளவந்தவர்களின் குற்றங்களினால் தத்தம் உதரங்களில் விழும் வடுக்கள் கண்டு முத்துப்பொருநன்போல் சினமுறுகிறார்கள். ( திருவிளையாடல்)
  மாறுதல் என்பதும், மாற்றம் என்பதும் ஆழப்பொருள் தருவன என்பதைச் சொல்லாராய்ச்சிப் பண்டிதனை விடவும் நயமாய்த் தெளிவு படுத்துகின்றன இவர்களின் வெளிப்பாடுகள். தனிநபர் மாறுதல், பூரணமாற்றம் இரண்டும் நன்கு புரிந்த இவர்கள் ஏழைவர்க்கத்தின் சதையைக் கொத்திக் குதறும் கழுகுகளை முதலில் சுடவருமாறு நீலவண்ணன் போல் அழைப்பு விடுகிறார்கள்.
  இத்தனைக்கும் மேலே இந்தத் தோழன்களிடத்தில் ஒரு இயல்பான உண்மையும், ஆவேசமும் தெளிவுபடுகிறது. இந்த ஒருகருவியே சகல மனுஷருக்கும் சகல சம்பத்துகளையும் கொண்டுவந்து கூட்டும் என்னும் விழிமூட்டமும் இவர்களுக்கு இல்லை.
  இலக்கிய வனிதை ஒரு நிம்போமேனியா. இவர்களிடம் இருந்து இன்னும் அதிகமாய், வேகமானதாய் பேராசையுறுகிறாள்.
  அந்தப் புதிய பலம், புதிதாய் இன்னொருதரம் நிரூபிக்கப்படும்வரை, இந்தக் குட்டிப் ‘பரணியின் எண்ணலங்காரம் நமது தோக்குகள் உள்ளே நிரப்பப் படலாம்: இந்த ரவைகளாலும் நாம் வெற்றியை ஈட்டலாம் – குறியைச் சரியாய் நேர்ப்படுத்தும்போது.
                    சகோதரர்களே –
                    இதனைப் படியுங்கள்:
                    இந்த நெருப்புப் பிஞ்சுகள்
                    உங்கள் உதடுகளைச்
                    சுட்டுவிடாது.                                                                தமிழ்நாடன்

                                                                                                      சேலம்   நாள்:25,4.1973

Friday, 18 October 2013

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
     கல்வியைக் காப்போம்
           பிரச்சாரப் பயணப் பாடல்கள்
       பாடியவர்கள் : என்.நளினி, எஸ்.நாட்ராயன், அங்குசாமி, ஏ.ஓ.நாராயணசாமி
                    இசை: கோபி.ஜே.பி.தியாகராஜன்
                பாடல்கள், உரைவீச்சு, இயக்கம்
---------------------செ.நடேசன் -----------------------------------

பாடல் 1                 பாடியோர்:எஸ்.நாட்ராயன்,என்.நளினி,அங்குசாமி+குழுவினர்

பயணம் இது பயணம்!
பிரச்சாரப்    பயணம்!
கல்விக்கு வந்துள்ள ஆபத் துக்களைக்
கடமை உணர்வுடன் மக்களுக்குச் சொல்லும்
                                        ( பயணம்....)

ஆறு குழுக்களாய்த் தமிழகம் முழுதும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஆறு  முனைகளில் துவக்கிய பயணம்.
ஆப்த்தி லிருந்து  கல்வியைக் காக்க
                                         ( பயணம்....)

கல்வி அளிக்கின்ற அரசியல் சாசனக்
கடமைகளி லிருந்து நழுவிச் செல்லுகிற
மத்திய  மாநில   அரசின் கொள்கைகளை
மக்களிடம் சொல்லிக் கல்வியைக் காத்திடும்
                                          ( பயணம்...)

ஏழை  எளியவர்க்குக் கல்விஇனி இல்லையென
ஏமாற்றும் அரசின்    கொள்கைகளை மாற்றி
வாழையடி  வாழையென வளரும் தலைமுறைக்கு
வற்றாத    கல்வியினை எந்நாளும் வழங்கிட
                                          ( பயணம்... )

உரைவீச்சு

பேரன்புகொண்ட பெற்றோர்களே! மதிப்பிற்குரிய பெரியோர்களே!!
தமிழ்நாட்டின் கல்விநலனில் பெரிதும் அக்கறைகொண்டுள்ள
கல்வியாளர்களே! வணக்கம்!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனான மகாகவி பாரதி,
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
 தேன்வந்து பாயுது காதினிலே என்றான். ஏன்தெரியுமா? –இது
‘கல்வி சிறந்த தமிழ்நாடு! புகழ்கம்பன் பிறந்த தமிழ் நாடு!
 பல்விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு!
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலே இன்று அந்தத் தமிழ்நாட்டின் கல்விக்கே ஆபத்து ஏற்பட்டுவருகிறது. குறிப்பாகக் கிராமப்புற ஏழைக்குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் கல்வியைக் காத்திடவும், கல்வித்தரத்தை மேலும் உயர்த்திடவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெRuறுகின்ற ‘கல்விப்பாதுகாப்புப் பிரச்சாரப் பயணத்தில் உங்களை நாங்கள் சந்திக்க வந்துள்ளோம். ஆரம்பக்கல்வியைக் காத்திட உங்கள் ஆதரவைத் தேடிவந்துள்ளோம்.

பாடல் 2                                   பாடியோர்:எஸ்.நாட்ராயன், என்.நளினி

கூட்டணி
ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
                                 ( கூட்டணி... )

தமிழ்நாட்டின் கல்வியைக் காக்க,
கல்வியின் தரத்தை மேலும்உயர்த்த
இயக்கநிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி
இலட்சியப் பாதையில் பயணம்செல்லும்
                                  ( கூட்டணி... )

எல்லாரும் கல்வி பெற்றிட
ஏழை எளியோர் வாழ்வுமலர்ந்திட
இல்லாமை இல்லாத சமுதாயம் உருவாக்கும்
இலட்சியப் பாதையில் பயணம்செல்லும்
                                  ( கூட்டணி... )

கல்வி சிறந்த தமிழ்நாடு
கம்பன் பிறந்த தமிழ்நாடு
எல்லா வளமும் எல்லா நலமும்
என்றும்பெற்றிடும் இலட்சியம் கொண்ட
                                     ( கூட்டணி... )

உரைவீச்சு

தமிழ்நாட்டின் ஆசிரியப்பேரினமே!
கல்விநலனும், ஆசிரியர்நலனும் ஒன்றோடுஒன்று பின்னிப்பிணைந்தவை.கல்வி இல்லாவிட்டால் ஆசிரியர்களும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவர்கள் நாம்.கடந்த காலங்களில் கல்விக்கு ஆபத்து ஏற்பட்டபோதும், ஆசிரியர் நலன்கள் பாதிக்கப்பட்ட போதும் நமது ஒன்றுபட்ட சக்தியின் மூலமாக அவற்றை முறியடித்து வரலாறு படைத்தவர்கள் நாம். இதுவரை நாம்பெற்ற வெற்றிகளெல்லாம் எவருடைய கருணை யினாலும், தயவினாலும் அல்ல. நமது ஒற்றுமையால்... நமதுபோராட்டத்தால்... நமது தியாகங்களால்...! இன்று தமிழகஅரசின் நடவடிக்கைகளால் ஆரம்பக்கல்விக்கும், ஆசிரியர் நலன்களுக்கும் ஒருசேர ஆபத்துக்கள் உருவாகியுள்ளன.இந்த ஆபத்தான சூழ்நிலையில் இன்று நம்முன் உள்ளகடைமைகள் என்ன? இதோ நேற்றையவரலாறு:

பாடல் 3         பாடியோர்:எஸ்,நாட்ராயன்,என்.நளினி,ஏ.ஓ.நாராயணசாமி+குழுவினர்

பேரணி முழக்கம்:

ஒன்றுபடுவோம், போராடுவோம்
போராடுவோம்,  வெற்றிபெறுவோம்
வெற்றிகிட்டும்வரை போராடுவோம்
இறுதிவெற்றி நமதே!

பாடல்

ஒன்று படுவோம் போரா டுவோம்
போரா டுவோம்  வெற்றி பெறுவோம்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
அறை கூவலிது தோழர்களே!
வீரம் செறிந்த போராட்ட களத்தில்
வெற்றிக் கொடி நாட்ட வாருங்களே!
                                  ( ஒன்று படுவோம்... )

அனைத்து நிலையிலும் பிரிந்து பிரிந்துநாம்
அன்று சந்தித்த தென்னவோ?
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைக்குமே
நேர்ந்த இழப்புக்கள் கொஞ்சமோ?
                                 ( ஒன்று படுவோம்... )

இந்தி யாவிலே குறைந்த ஊதியம்
என்ற அவலநிலை மாற்றினோம்
முன்னுரி மைப்படி வேலை வாய்ப்பெனப்
புதிய சரித்திரம் ஆக்கினோம்.
                                 ( ஒன்று படுவோம்... )

பெற்ற வெற்றிகள் பறிக்கப் படுவதை
மீண்டும் அனுமதிக்க லாகுமா?
உற்ற தோழனே கல்வி காத்திட
உரத்து முழங்கிநீ ஓடிவா!
                                 ( ஒன்று படுவோம்... )

உரைவீச்சு

ஒருசமுதாயத்தின் வாழ்வுக்கும், ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்விதான் அடித்தளமாகும். தொழில்வளர்ச்சியும், உற்பத்திப்பெருக்கமும், வறுமைஒழிப்பும், சமத்துவஉணர்வும் கல்வியினால்தான் சாத்தியமாகும். ஒருநாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகள் அந்தநாட்டு மக்களின் கல்விஅறிவைப் பொருத்தே அமையும். அனைத்துமக்களின் நலன்களையும் காக்கும் ஜனநாயகச் செயல்பாடுகளில் மக்கள் அறிவார்ந்தமுறையிலே பங்கேற்கவும், அவரவர் உரிமையைக் காத்துக்கொள்ளவும், பொதுப்பணியாற்றவும் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இது நிறைவேற வேண்டுமானால்....

பாடல் 4                                   பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

கல்விவெள்ளம் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடணும்
பள்ளியில்லா ஊர்களிங்கே இல்லைஎன்றே ஆகணும்
கர்மவீரர் காமராசர் திட்ட மிட்டாரே
ஊர்கள்தோறும் பள்ளிதிறக்க ஆணையிட்டாரே!
                                           (கல்விவெள்ளம்)

எழுதப்படிக்கத் தெரியாத ஏழைக் குழந்தைக
எல்லாரையும் பள்ளிகூடம் போக வைக்கவே
மதியஉணவுத் திட்டமிங்கே அறிமுக மாச்சு
கதியில்லாத் குழந்தைகளும் கல்வி பெறலாச்சு.
                                           (கல்விவெள்ளம்)

வதவதன்னு குழந்தைக ஒருவகுப்பி லிருந்தா
விதவிதமாப் பாடங்களப் படிக்க முடியுமா?
இருபது பேர்படிப்ப தற்கே ஓரா சிரியர்
இருப்பதுதா பொருத்தமின்னு விதிஉ ருவாச்சு
                                            (கல்விவெள்ளம்)

மாணவர்கள் இருபதுக்கே  ஓ ரா  சிரியர்
முப்பத்தாறு ஐம்பத்தாறு எழுபத் தாறுக்கோ
இரண்டு,மூன்று, நான்கெனவே தொண்ணூத் தாறுக்கு
ஆசிரியர் ஐந்துஎன நியமன மாச்சே!
                                            (கல்விவெள்ளம்)

அறுபதுகளில் துவங்குச்சம்மா கல்விப் புரட்சி
சுறுசுறுப்பாய் நிகழ்ந்ததம்மா கல்வி வளர்ச்சி
மறுமலர்ச்சி தமிழகத்தில் கல்வி யினாலே
உறுதியாக அடித்தளந்தான் உருவா கியதே!
                                            (கல்விவெள்ளம்)

உரைவீச்சு

இந்தியநாடு விடுதலை பெற்றபோது எண்ணற்ற கனவுகளை இதயங்களில் கொண்டி ருந்தோம். அந்தக் கனவுகள் நனவாகக் கல்விதான் நுழைவாயில். நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகள் இதற்கொரு வடிவம் தந்தார்கள். அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குள் ஆறுமுதல்பதினான்கு வயதுவரையுள்ள
அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வியை அளிப்பது மத்திய,மாநில
அரசுகளின் கடமை எனவரையறுத்தார்கள்.
  அரசியல் உறுதியோடு இதை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கைகளில் மத்தியஅரசு பத்து சதவீதமும், மாநிலஅரசு முப்பது சதவீதமும் கல்விக்காக நிதிஒதுக்கி இருக்க வேண்டும்.ஆனால், மத்திய, மாநில அரசுகளோ கல்விக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக்கொண்டே வந்தன.இதனால் சுதந்திரம்பெற்று 53ஆண்டுகள் ஆனபின்னும் இந்தியமக்கள் தொகையில் சரிபாதிப்பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்! இதற்குக் காரணம் என்ன?
  இதோ நோபல்பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்ய சென் கூறுகிறார் :
‘அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆரம்பக்கல்வியைப் புறக்கணித்துவிட்டார்கள்.

பாடல் 5                                        பாடியோர்: அங்குசாமி, என்.நளினி

நிதியில்லை கல்விக்கு நிதியில்லை கல்விக்கு
நித்தமொரு ஒப்பாரியா?
கதியற்ற கிராமத்து ஏழைக்குழந்தைகள்
கல்விக்குத் தடை ஏனையா?
                                              (நிதியில்லை...)
விதைநெல்லை உண்பதா? விபரீதம் அல்லவா?
வீணாகும் எதிர்காலமே!
தற்குறிகள் நாடாகத் தரமற்ற கல்வியால்
தாய்நாடு/தமிழ்நாடு வீணாவதோ?
                                              (நிதியில்லை...)
ஆசிரியர் குறைந்தாலே கல்வித்தரம் சீரழியும்
உங்களுக்குத் தெரியாததா?
சுவையற்ற கல்வியால் மாணவர்கள் சலிப்பாகிப்
பாதியில் நிற்பார்களே!
                                               (நிதியில்லை...)
கட்டாய இலவசக் கல்வியே என்றாலும்
கவர்ச்சிக்கு எங்கே இடம்?
எட்டாத கனியாக ஏழைக்குக் கல்வியை
ஏய்ப்பதே முறையாகுமா?
                                               (நிதியில்லை...)

உரைவீச்சு

  கல்வித்தர உயர்வுக்கும், ஆசிரியர்-மாணவர் விகிதத்திற்கும் ஒருநெருக்கமான தொடர்பு உண்டு. ஆசிரியர்-மாணவர் விகிதம் அதிகமானால் கல்வியின் தரம் குறையும். இதை உணர்ந்துதான் 1964ல் 20மாணவர்களுக்கு 1ஆசிரியர் என்றவிகிதம் உருவாக்கப்பட்டது. 33ஆண்டுகள் நடைமுறையிலிருந்த 1:20என்ற ஆசிரியர்-மாணவர்
விகிதத்தை 1997ல்1:40எனத் தமிழகஅரசு உயர்த்திவிட்டது.தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவருகிறது. இதன்விளைவு என்னவாகும்? கல்வித்தரம் வீழ்ச்சியடையும். வசதிவாய்ப்புள்ளவர்கள் தரமான கல்விக்காகத் தங்கள் குழந்தைகளைக் கட்டணப்பள்ளிகளில் சேர்ப்பார்கள். மாணவர் எண்ணிக்கை குறைந்து கிராமப்புறப் பள்ளிகளே மூடப்படும்.ஏழைஎளிய மாணவர்களுக்கு இனி தரமான கல்வி இல்லையென்ற நிலை உருவாகும்.1:40ன்படி 79மாணவர்வரை ஒரே ஆசிரியர்தான்! 80வது மாணவர் வந்தால்தான் 2ஆசிரியர்!

79மாணவர்வரை 1 ஆசிரியர்தான் என்றால் பள்ளி எப்படி இருக்கும்?

பாடல்6                                    பாடியோர் : எஸ்.நாட்ராயன், என்.நளினி

ஆட்டைப்பட்டியில டைக்கிறாப்புல பள்ளிகூடம் இருந்தாக்க
அங்கேஎப்படிப் பாடம்நடக்கும்? நெனச்சிப்பாருங்க
நாட்டைக்காக்கும் குடிமகனா நாளைஇளைய தலைமுறையை
நாமஎப்பிடி உருவாக்குவோம்? எண்ணிப்பாருங்கோ!
                                                     ( ஆட்டைப்... )
அஞ்சுவகுப்பில் தொண்ணூத்தாறு மாணவர் இருந்தா
அஞ்சுபேரு ஆசிரியர் இருந்த நெலமையெ
இனிநூறு வரைக்கும் ரெண்டுபேரு மட்டுந்தானுன்னு
ஈராசிரியர் பள்ளிகளா குறைப்பதனாலே
                                                    ( ஆட்டைப்... )
அஞ்சுபேரு அஞ்சுவகுப்பில் சொல்லிக் கொடுத்தத
ரெண்டுபேரு மட்டுமினி நடத்தனு மின்னா
கொஞ்சங்கொஞ்ச மாகக்கல்வித் தரம்குறை யாதா?
விஞ்ஞானிகளா மேதைகளா வர முடியாதே!
                                                    ( ஆட்டைப்... )
ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம் உயர்த்தினா
அன்றேகல்வி சீரழியும் என்றார் கலைஞரே!
தொண்ணூத்தஞ்சில் முரசொலியில் கண்டிச்ச தெல்லாம்
தொண்ணூத்தேழில் கலைஞரரசு மறந்திட லாமா?
                                                    ( ஆட்டைப்... )

உரைவீச்சு
40 மாணவர்களுக்கு ஓர்ஆசிரியர் என்று புதியவிகிதம் உயர்த்தப்பட்டபோது அதில் ஏராளமான ஆபத்துக்கள் இருந்தாலும் அந்த525 அரசுஆணையில் ஒரேஒரு நல்ல அம்சமும் இருந்தது.அதுதான் “ஒராசிரியர் பள்ளிகளே இனி இருக்காது  எல்லா ஓராசிரியர் பள்ளிகளும் இனி ஈராசிரியர் பள்ளிகளாக்கப்படும் என்ற அந்த அறிவிப்பு. 1999 ஏப்ரலில் சட்டப்பேரவையில் கல்விஅமைச்சர் பேராசிரியர், ‘ஓராசிரியர்பள்ளிகள் எல்லாம் ஈராசிரியர் பள்ளிகள் ஆக்கப்பட்டுவிட்டன, என்றுதெரிவித்தார். இந்த ஒரே ஒரு நல்ல அம்சமாவது நிறைவேறியிருக்கிறதா? கல்விஅமைச்சர் பேராசிரியர் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலைமை என்ன?

பாடல் 7                                                    பாடியவர்: அங்குசாமி
கவுண்டமணி செந்தில்வாழப் பழக்கதை யாட்டம் – கல்வி
காமெடியா ட்ராஜடியா ஆகிட லாமா?
வளருகிற தலைமுறையின் கல்வி தீபத்த – இங்கே
கண்ணாமூச்சி ஆட்டமாக மாற்றிட லாமா?
                                              ( கவுண்டமணி... )
ஓராசிரியர் பள்ளிகளே இனிஇருக்  காது – அதை
ஈராசிரியர் பள்ளிகளா  ஆக்கி  யாச்சுன்னு
பேராசிரியர் சட்டசபையில் சொன்னபோதுதான் -  நாங்க
பெருமையோட எதிர்பார்த்தோம் ஆனா என்னாச்சு?
                                                ( கவுண்டமணி... )
எங்கஊரு பள்ளியில  ஓராசிரி யர்தான் – அவரு
அஞ்சு  வகுப்பும் நடத்தறாரு இங்கிலீ  சும்தான்.
எங்கே  அந்த இன்னுமொரு ஆசிரியருன்னா – அந்த
இன்னொருவர் தாங்கஇவரு என்றே சொல்றாங்க!
                                                ( கவுண்டமணி... )

உரைவீச்சு
  ஆரம்பக்கல்வியைச் சீரழிக்கும் 1:40 ஆசிரியர் மாணவர் விகிதாச்சார உயர்வை ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கல்வியாளர்களும், அறிஞர்பெருமக்களும், பத்திரிக்கையாளர்களும், அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் கண்டனம் செய்துள்ளார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய ‘1:40 எதிர்ப்புக் கண்டன மாநாட்டில்தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகள் அரசுக்கும், தமிழகமுதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டன.
  வளர்ச்சி எது?முன்னேற்றம் எது? ஓராசிரியர்பள்ளி ஈராசிரியர்பள்ளி, மூன்றாசிரியர்
பள்ளியானால் அது முன்னேற்றம். ஆனால், இங்கு என்ன ஆகிறது? மூன்றுஆசிரியர் பள்ளி ஓராசிரியர் பள்ளியாக மாறுகிறது. ‘தமிழகம் கல்வியில் வளர்ந்துகொண்டிருக் கிறது என்று எவ்வாறு கூறுவது?

பாடல் 8                                    பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

ஒன்று என்பது இரண்டானால்
அதுதான் வளர்ச்சியின் பரிமாணம்
மூன்று நான்கு  ஐந்தானால்
அதுமுன் னேற்றத்தின் அடையாளம்
         ஆனால் கல்வியில் நடப்பதென்ன?
         அதையே வளர்ச்சி என்பதென்ன?
                                        ( ஒன்று என்பது...)
ஐந்தா சிரியர் பள்ளிகளை
ஈரா   சிரியர் ஆக்குவதா?
ஐந்தை இரண்டாய் ஆக்குவது
எதிர்மறை விளைவு ஆகாதா?
          ஏழைகள் கல்வியைக் காத்திடவே
          எங்களின் குரலைக் கேளுங்கள்
                                        ( ஒன்று என்பது... )
தமிழக முதல்வரைச் சந்தித்தோம்
மாநாடுகளும் நடத்தி விட்டோம்
எதுவும் இங்கே மாறவில்லை
ஏனோ  கல்வியைக் காக்கவில்லை.
          முதல்வரின் கவனத்தை ஈர்த்திடவே
           மக்களின் குரல்தான் எழவேண்டும்.
                                        ( ஒன்று என்பது... )
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏழையின் வாழ்வதில் பொன்னாகும்.
கண்களைப் பறிக்கும் செயலாகக்
கல்வியைப் பறிப்பது முறைதானா?
          மக்களின் குரலே எழுந்திடுக!
          மகேசன் குரலாய் ஒலித்திடுக.
                                        ( ஒன்று என்பது...)
உரைவீச்சு

  தமிழக முதல்வர் தனது பிறந்தநாள் செய்தியாக “ வலிமைமிக்க நாடாக இந்தியாவையும், வளம்கொழிக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டையும்  நிலைபெறச் செய்ய என்தொண்டு தொடரும் என அறிவித்துள்ளார். இதற்கு அடித்தளமே கல்வி அல்லவா? கல்வி கண்போன்றது. மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வி. அத்தகைய கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமாக வழங்குவது அரசின் தலையாய கடமை. அதுதான் வலிமைமிக்க இந்தியாவை, வளம்கொழிக்கும் தமிழ் நாட்டை நிலைபெறவைக்கும்.
 
  இதற்குமாறாகப் புதியபொருளாதாரக்கொள்கையின் அடிபடையில் புதியகல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுகிறது. கல்விக்கான நிதி குறைக்கப்படுகிறது. கல்வி சீரழிக்கப்படுகிறது. அதன் ஒருதுவக்கம்தான் 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதாச்சார உயர்வு. ஆசிரியர் மாணவர் விகிதத்தை உய்ர்த்துவது கிராமப்புறக் குழந்தைகளின் கல்வியைச் சீரழிக்கும். உபரி என்ற பெயரால் ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்.

தமிழக முதல்வர்

 இந்த ஆபத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும்.
 1:40 ஐ இரத்து செய்திட வேண்டும்.
 1:20 ஐ தொடர்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.
 இது உடனடியாக நடைபெற



பாடல் 9   பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

மக்கள் சக்தி திரளட்டும்
மறைக்கும் தடைகள் உடையட்டும்.
ஏழைஎளிய மக்கள் வீட்டில்
கல்வி  தீபம் ஒளிரட்டும்.
                            ( மக்கள் சக்தி...)
குற்றமற்ற நிரப   ராதி
தூக்கி  லேற்றப் படுவதா?
காற்றில் உயிரைப் பறித்தபின்பு
கருணை மனுவை ஏற்பதா?
                             ( மக்கள் சக்தி...)
கல்வித் தரத்தைத் தூக்கிலேற்றும்
கல்வித் துறையின் ஆணையை
இல்லையென்று ரத்து செய்யும்
இடி முழக்க மாகவே
                            ( மக்கள் சக்தி...)
வணக்கம்!

( 2000 ஆம் ஆண்டு ‘கல்வியைக் காப்போம் பிரச்சாரப் பயணத்தின் ஒலிப்பேழை )