Tuesday, 30 June 2015

இன்னும் எத்தனை காலம்தான்...?

இன்னும் எத்தனை காலம்தான் ?
------------------செ. நடேசன் ----------------

டெல்லி சட்டப்பேரவையில் ஜூன்23 செவ்வாய்அன்று நிதிநிலைஅறிக்கைக் கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் விஜேந்தர்குப்தா, ஓம்பிரகாஷ் சர்மா, ஜெகதீஷ் பிரதான் ஆகியமூவரும் சட்டப்பேரவைத் தலைவர் ராம்நியாஸ்கோயல் உத்தரவின்படி அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். குண்டுக்கட்டாக பாஜக்வின் சட்டமன்றக்குழுத் தலைவர் விஜேந்திரகுப்தா வெளியேற்றப் பட்டகாட்சி தொலைக்காட்சிகளிலும், அடுத்த நாள்  நாளேடுகளிலும் இடம்பெற்றது.


                        ஜித்தேந்திர தோமர
 பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜித்தேந்திர தோமரின் போலிக்கல்விச்சான்றிதழ் பற்றியது. தோமர் தேர்தல் வேட்புமனுவில் போலிக்கல்விச் சன்றிதழைக் குறிப்பிட்டு, தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராக- அதுவும் சட்ட்த்துறை அமைச்சராக டெல்லி மாநில அமைச்சரவையில் நீடித்தது ஏன்? அவர்மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க டெல்லிமுதல்வர் அரவிந்த்கேஜ்ரிவாலும், ஆம்ஆத்மி கட்சியும் தயங்கியது ஏன்?‘ என்றும், ‘டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பகிரங்கமாக சட்டப்பேரவையில் மன்னிப்புக் கேட்கவேண்டும்என்றும் அவர்கள் முழங்கினர்.

    தோமர் மத்திய அரசின் பொறுப்பில் உள்ள காவல்துறையால்  ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் கேஜ்ரிவால் தோமர் செய்தது தவறு என்று அறிந்ததும் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றியதை எடுத்துக்கூறினார். அரசியலில், பொதுவாழ்வில் தவறு இழத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத்தவறிய அரசும், கட்சியின்தலைவரும் பகிரங்கமன்னிப்புக்கேட்க வேண்டும்”  என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் நியாய உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது.


              ஸ்மிருதி ஜுபின் இரானி
இந்தநிகழ்ச்சிக்கு மறுநாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபைன் இரானியின் பிரச்சனை வெடித்தது. இவர் 2004 மக்களவைத் தேர்தலில் சாந்தினிசௌக் தொகுதியில் போட்டியிட்டபோது தனது வேட்புமனுவில் கல்வித் தகுதியாக டெல்லிப் பல்கலைக்கழகத்தில் 1966ல் பி.ஏ., பட்டம் பெற்றிருந்த தாகக் குறிப்பிட்டிருந்தார். 2011குஜராத் மாநிலத்தி லிருந்து மாநிலங்களவைக்குப்போட்டியிட்ட போது டெல்லிப்பல்கலைக் கழகத்திலிருந்து 1994ல் பி.காம்., பட்டம் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். 2014ல் அமேதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோதோ டெல்லி திறந்தவெளிப் பல்கலைக்கழகத் திலிருந்து பி.காம்., பட்டம்பெறிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மூன்றுதேர்தல் களிலும் மூன்றுவகையான கல்வித் தகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
  இதுதொடர்பாக மத்திய மனிதவள்மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மீது பத்திரிக்கையாளர்அஹ்மர்கான் டெல்லிமெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இதை விசாரணைக்குத் தகுதியான வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆகாஷ்ஜெயின் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28 என்று நாள்குறித்து உத்தரவிட்டுள்ளார்.

                வினோத் தாவ்டே- ராம்சரண் கத்தாரியா பாபன்ராவ் லோனிகர் 


 மகாராஷ்ட்ராமாநிலத்தில் பாஜக–சிவசேனா கூட்டணிஅரசில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளவர் வினோத் தாவ்டே. இவர் அனைத்திந்தியத் தொழில்நுட்பப்பலகலைக் கழகத்தில் அங்கீகாரம்பெறாத –உயர்நீதிமன்றம் தடைவிதித்து அதனால் மூடப்பட்ட பூனாவில் உள்ள தியானேஸ்வர் வித்யாபீடத்தில் மின்னணுவியலில் பொறியாளர் பட்டம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல: ‘அது அங்கீகாரம் பெறாத கல்லூரி என்பது தெரியும்என்றும் ‘என்றாலும் அக்கல்லூரியில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும்கூறியுள்ளார். அங்கீகாரமில்லாத, நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட போலிநிறுவனத்தின் போலிபட்டத்தைத் தனது கல்வித்தகுதியாக எப்படி ஒருவர் குறிப்பிட்டுக்கொள்ளமுடியும்?


ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமனிதவளமேம்பாட்டுத் துறை துணைஅமைச்சராகப் பதவிவகிப்பவர் ராம்சரண்கத்தாரியா. கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம்பெற்ற இவர் தனது பி.ஏ., எம்.ஏ., மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  மகாராஷ்ட்ராவில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பாபன்ராவ் லோனிகர் தனது கல்வித்தகுதியை 2004, 2009 தேர்தல்களில் பி.ஏ., முதலாம் ஆண்டு எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2014ல் நடைபெற்ற தேர்தலில் 5ஆம் வகுப்புமட்டுமே முடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 பாஜகவின் தனியுரிமை?
   ‘ஒருதவறு செய்தால், அதைத்தெரிந்து செய்தால் அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்என்ற பாடலுக்கேற்ப டெல்லி சட்டப்பேரவையில் ஜித்தேந்திரசிங் தோமர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபின்னும், அவர் அமைச்சர்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டபின்னும் முன்கூட்டியே  நடவடிக்கைஎடுக்காதது ஏன்? முதல்வர் கேஜ்ரிவால் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்என்று ஆவேசமாக முழங்கிய, ஆர்ப்பாட்டம்செய்து மெய்சிலிர்க்கவைத்த பாஜகவினர் எங்கே? தங்கள் அமைச்சர்களின் மோசடிச்செயல்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸும் பகிரங்க மன்னிப்புக்கேட்பார்களா? மோசடி அமைச்சர்களைப் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டுக் கைதுசெய்து சிறையில் அடைப்பார்களா?
  நரேந்திரமோடியிடமோ, அமித்ஷாவிடமோ இதை எதிர்பார்க்கமுடியாது ஏனெனில் அவர்கள் தங்கள் குழந்தைப்பருவம் முதலே ஆர்.எஸ்.எஸ்.ன் சாகாக்களில் பய்ற்சியளிக்கப்பட்டவர்கள். சங்பரிவாரங்களைத்தவிர மற்றஎல்லாரும் தவறானவர்கள். மற்றவர்கள் யாரும் மோசடிகளையோ, ஊழல்களையோ செய்ய அனுமதிக்ககூடாது. அது முற்றிலும் சங்பரிவாரங் களின் தனியுடைமை. மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் சுஷ்மாசுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே, மகாராஷ்ட்ர அமைச்சர்கள் பங்கஜாமுண்டே, ரஞ்சித்பட்டீல், சந்திரசேகர்பவான் குலே ஆகியோர்போன்றவர்கள் எத்தகைய ஊழல்களையும் செய்யலாம் .மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,மகாராஷ்டிர அமைச்சர்கள் வினோத் தவ்டே, ராம்சரண் கத்தாரியா, ப்பன்ராவ் லோனிகா ஆகியோர் போன்றவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளில் எத்தகைய மோசடிகளிலும் ஈடுபடலாம். ஏனெனில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பாத்திகளில் பதியமிட்டு வளர்க்கப்பட்ட புனித நாற்றுக்கள்! ஊழலும், மோசடியும் பாஜகவின் தனியுரிமை!! இதில் மற்றவர்களும் ஈடுபடும்போது ஆவேசங்கள் எழுவது இயற்கைதானே?



 வருண்காந்தி - ம்ம்தா பானர்ஜி
  ‘இந்தியா டைம்ஸ்-ல் 5.4.2009ல் மீனாட்சிகுமார் தெரிவித்துள்ள செய்தி இந்திய அரசியல்வாதிகளில் சிலரின் வெளிவேஷங்களை அம்பலமாக்கியுள்ளது. இந்தவாரத்தின் முற்பகுதியில் வருண்காந்தி ம்ம்தாபானர்ஜியைப்போலச் செய்த ஒன்று வெளிவந்துள்ளது. இந்த பாஜகவின் அரசியல்வாதி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(London School of Economics) லிருந்தும், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல அண்ட் ஆஃப்ரிகன் ஸ்டடீஸ்(London School of Oriental and African Studies) லிருந்தும் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளதாகக் கூறினார். அவை உண்மையல்ல! 

 இது வெளிப்பட்டவிதம் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் ம்ம்தா பானர்ஜி கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்திலிருந்து  (East Georgia University  ) டாக்டர் பட்டம் பெற்றதாக மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்டதன் எதிரொலிபோல இருந்தது. கிழக்குஜார்ஜியா பல்கலைக்கழகம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதுஎன்கிறது அந்தச்செய்தி.
 .டாக்டர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறையினர் பலரும் வெளிநாட்டுப்பட்டங்களில் மோகம்கொண்டு அவற்றைப்பெற்றபின் வீணான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அவற்றில் பலவும் போலிப்பட்டங்கள்!  வருண்காந்தியும், ம்ம்தாபானர்ஜியும் இந்திய அரசியலில் மிகவும் தெரிந்த துள்ளிக்குதிக்கும் முகங்கள்  இவ்ர்களுக்கு ஏன் இந்த வெளிநாட்டுப்பட்டங்களின்மீது மோகம்?

                         சமூக விஞ்ஞானிகளின் ஆய்வுகள்
சமூகவிஞ்ஞானியான சிவ்விஸ்வநாதன் இவர்களை நோக்கிச் சிலகேள்விகளை எழுப்புகிறார். “இந்தியர்கள்சாதாரணமாக இத்தகையபோலிப்பட்டங்களுக்காகத் தொங்கிக்கொண்டிருப்பது ஏன்? இது நாம் இத்தகைய போலிகளைத்தான் விரும்புகிறோம் என்பதற்கான சான்றுகளா? அல்லது நாம் போலிகளைக்கொண்டு மோசடியும், வஞ்சகமும் செய்வதில் திறமை கொண்டுள்ளோமா? அன்னியப்பொருள்கள் சுதேசிகளைவிட மேலான அந்தஸ்தும், மதிப்பும் கொண்டுள்ளனவா?சிவ்விஸ்வநாதன் மேலும் கேட்கிறார்:வேறுவகையில் சொல்வதானால், காலனிய அடிமை மனோபாவத்திலிருந்து இன்னும்நாம் சிக்குண்டு அதன்மீதான நமது வாஞ்சையைக் கொண்டுள்ளதன் பிரதிபலிப்பா?
   மிகவும் முக்கியமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர்கள் ‘வளரும் நாடுகளிலுள்ளவர்களிடம் இங்கிலாந்து அல்லது அமெரிக்காவிலிருந்து பெறும் பட்டங்கள் பெரிதும் மதிகப்படுகின்றன. எந்தவொரு விருப்பு வெறுப்பற்ற ஆய்வும் ‘சில உலகப் பலகலைக்கழகங்கள் நமது பல்கலைக்கழகங்களைவிடவும் மேலானதாகவும், அங்குசென்று படிப்பது உதவிகரமானதாகவும் உள்ளன என்பதைக்காட்டுகின்றன. ஆனால், பலருக்கோ இப்பட்டங்கள் அறிவைப்பெறுவதற்காக அல்லாமல், மற்றவர்களிடம்காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக உள்ளனஎன்கிறார்கள்.

                                  மரியாதை தரும் போதை

 மிகஉயர்ந்தகல்வித்தகுதி பெற்றஒருவர், அதைப்பெறாத மற்றவரைவிட சமூகத்தில் மிகஅதிகமான மரியாதைக்கு உரியவராகிறார் இந்தமரியாதை கொடுக்கும் செல்வாக்கும், போதையும் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் பட்டங்களை நாமும் பெறவேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கின்றன. ஆனால்புகழ்பெற்ற சிலஇந்தியர்கள் உண்மையான அல்லது போலிப்பட்டங்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் செய்வது ஆச்சரியமளிக்கிறதுஎன்கிறார் குப்தா. அவர் மேலும் சொல்கிறார்: இது அவர்களது வெளிவேஷத்தை அம்பலப்படுத்துகிறது. தங்களுக்கு முட்டுக்கொடுக்க , உயர்த்திக்கொள்ள அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வெளிநாட்டவர் அல்லது வெளி நாட்டுப்பொருள்கள்தான்!


  ஆனால் ம்ம்தா பானர்ஜியோ மா,.மதி.,மனுஷ்’(தாய், தாய்நாடு, தாய்நாட்டுமக்கள்) என்று சுதேசியகீதத்தைத் தனது தேர்தல் முழக்கமாக முழங்கியவர். (இந்த முழக்கம்கூட அவரது சொந்தக்கண்டுபிடிப்பு அல்ல. வங்கதேசத்தில் தேர்தலில் பேகம்கலிதா ஜியா 1991ல் எழுப்பிய இந்தமுழக்கத்தைக் களவாடியவர்தான் ம்ம்தா). சுதேசிக்கோஷத்தை முழங்கிய ம்ம்தா விதேஷி ‘டாக்டர்பட்டம் பெற்றதாக ஆர்ப்பாட்டங்கள் செய்தது ஏன்? இவர்களது வெளிவேஷங்கள் இன்னும் எத்தனை காலம்தான்....?

Wednesday, 24 June 2015

மோடிகளின் ராஜ்ஜியத்தில் ...!













 மோடிகளின் ராஜ்ஜியத்தில் ...!
  செ. நடேசன்

 மே.26 அன்று தனது ஓராண்டு ஆட்சியின் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அனைத்துமொழி நாளேடுகளிலும் தனதுஆட்சியின் சாதனைபற்றிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.அதில், ஊழலற்ற, வெளிப்படையானதன்மைகொண்ட, கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவைதான் எங்கள் அடிப்படைக்கொள்கைஎன்று பிரகடனப்படுத்தினார். உத்திரப்பிரதேசம், மதுரா மாவட்டம் நாக்லாசந்த்ரபான் கிராமத்தில் ஒருபொதுக்கூட்டத்தில், “கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம். கடந்த 60ஆண்டுகளாக நாட்டைக்கொள்ளையடித்தவர்களுக்கு (அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பா.ஜ.க.வின் 6 ஆண்டுகள் உட்பட?) முடிவு கட்டியுள்ளோம்என்று முழங்கினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தன்பங்குக்கு அதைவழிமொழிந்தார். நிதிஅமைச்சர் அருண்ஜேட்லியோ,கடந்த ஓராண்டில் ஊழலற்ற அரசை அளித்ததே மாபெரும் சாதனை”  என்று பூரித்தார்.
   
  யெச்சூரிபேட்டி : ஊழல்கள் வெளிவரும்
சென்னையில் மே 26 அன்று பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி, கடந்த ஓராண்டில் ஊழல்கள் ஏதும் நடக்கவில்லை என்றுபிரதமர் பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஒன்றை நாட்டுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரும் ஊழல்கள்கூட முதல் ஆண்டில் வெளியாகவில்லை. இரண்டு ஆண்டு களுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தன. அதுபோல இந்த அரசும் ஆட்சியைத் தொடரத்தான் போகிறது. அப்போது முந்தைய ஆட்சியைவிட மிகப்பெரிய ஊழல்கள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்என்றார்.

 சுஸ்மா சுவராஜ்

 யெச்சூரியின் பேட்டி வெளியான இரண்டு வாரங்களுக்குள் ரூ.750கோடி மோசடி ஊழலில் சிக்கி, சட்ட்த்தின் பிடியிலிருந்து தப்பி, லண்டனில் இருக்கும் ல்லித்மோடி யின் கதையும், அதில் அவருக்கு உதவிய பா.ஜ.க.அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாசுவராஜ்-ன் பங்கும் இந்தியாவையே அதிர வைத்தது. ஒருமோசடிப் பேர்வழிக்கு, இந்தியச்சட்டங்களுக்கும், விசாரணைகளுக்கும் அடிபணிய மறுத்து வெளிநாட்டுக்கு ஓடிப்போனகுற்றவாளி ல்லித்மோடிக்கு பயணஅனுமதி வழங்க இங்கிலாந்துஅரசிடம் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா தொடர்புகொண்டு உதவிய மன்னிகமுடியாத குற்றம் வெளிவந்தது. ஒருபொருளாதாரக்குற்றவாளிக்கு சுஸ்மாசுவராஜ் ஓடோடிச்சென்று உதவ்வேண்டிய அவசியம் என்ன? சுஸ்மாவின் மகள் பன்சரி சுவராஜ் ல்லித்மோடியின் வழக்கறிஞர் என்பதாலா? சுஸ்மாவின் கணவர் சுவராஜுக்கு ல்லித்மோடி பலஇலட்சக்கணக்கான  ரூபாய்செலவில் ஆடம்பர ஓட்டல்களில் தங்கவைத்து உபசாரம் செய்ததாலா? பதிலளிக்க முடியாத இந்தக்கேள்விகளுக்கு பா.ஜ.க.வும், அதைஇயக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தரும் ஒரே விளக்கம், “மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்ததைக் கொச்சைப் படுத்தலாமா?என்பதே! இந்த மனிதாபிமான உதவிகள் குற்றவாளிகளுக்கு மட்டுமே செய்யப்படுவது ஏன்? ஏழை,எளிய சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏன் இல்லை?இந்தக்கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை!

வசுந்தரா ராஜே சிந்தியா

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜேசிந்தியா விவகாரமோ இன்னும் ஒருபடிமேல். மோசடிமன்னன் ல்லித்மோடிக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், இந்த உண்மை இந்தியஅரசுக்கோ,அதிகாரிகளுக்கோ தெரியக்கூடாது என்ற எழுத்துப்பூர்வ நிபந்தனை யின்பேரில் ஓடுகாலிக்குற்றவாளியான ல்லித்மோடிக்கு உதவியுள்ளார். இதன் பின்னணியில் வசுந்தராவின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான துஷ்யந்த்க்கு ல்லித்மோடி கோடிக்கணக்கான பணத்தைப் துஷ்யந்த்தின் போலி நிறுவனத்துக்கு அளித்த ஊழல் வர்ணஜாலமாய் எழுந்து நிற்கிறது. சத்தியவந்தரான நமது நிதியமைச்சர் அருண்ஜேட்லியோ, அது அவர்களுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம்”  என்று கூறிவிட்டு இப்போது மழுப்புகிறார்!
  ல்லித்மோடியின் மெகாஊழலில் சிக்கியுள்ள சுஸ்மாவையும், வசுந்தரா ராஜே சிந்தியாவையும் காப்பாற்றியே தீருவோம்என்று பா.ஜ.க.தலைவர் அமித்ஷா முதல் அத்தனை பரிவாரங்களும் களத்தில் இறங்கியுள்ளன. “ஊழலற்ற, வெளிப்படைத் தன்மைகொண்ட ,கொள்கைஅடிப்படையிலான நிர்வாகம்என்று விளம்பரப் படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இதுபற்றி என்ன கூறுகிறார்? அவர் எங்கே? அவரது குரல் எங்கே? மேடைக்கு மேடை,பெஹன் அவுர் பாயியோஎன்று அழைத்த அந்த அழைப்பு எங்கே?
 பங்கஜா முண்டே ஊழல்

 இதோ, அவரைக்கண்டுபிடிக்கும்முன் மகாராஷ்ட்ரத்தில் இன்னும் ஒரு ஊழல். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணிஆட்சியின் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளவர் பங்கஜாமுண்டே. இவர் மறைந்த பா.ஜ.க.தலைவர் கோபிநாத்முண்டேவின் மகள்.' நான் இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தாலும், மக்கள் என்னை முதல்வராகவே பார்க்கிறார்கள்’ என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆம். தன்னை “மக்களின் முதல்வராக” நினைத்துக்கொண்டிருப்பவர்.

இவர் செய்துள்ள ஊழல் ஒரே நாளில்  24 அரசு உத்தரவுகளின் மூலம் வெறும் ரூ.206கோடி மட்டுமே!

 மாகாராஷ்ட்ர அரசில் ஒரு இலட்சம்ரூபாய்க்குமேலான எந்தப்பொருள்களை வாங்குவதானாலும் ஈ-டெண்டர் மூலம் மட்டுமே வாங்கவேண்டும். எந்த நேரடி ஒப்பந்தம் மூலமும் வாங்க்கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதை அம்மாநில நிதியமைச்சர் சுதிர்முங்கன்திவார் உறுதிப்படுத்தியுள்ளார். ரூ.ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட எந்தஒரு பொருள்வாங்கலும் முழுமையாக ஈ-டெண்டர் கோரிப்பெற்றே வாங்கவேண்டும்: நேரடி காண்ட்ராக்ட் மூலம் வாங்க்க்கூடாதுஎன்ற விதியை, எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவை அனைத்தையும் மீறியவர் பங்கஜாமுண்டே! ஏனெனில் அவர்மக்களின் முதல்வர்அல்லவா?
  பங்கஜாமுண்டேவின் ஊழல் எதில் தெரியுமா? குழந்தைகளுக்கு வழங்கும் திண்பண்டங்களில்! தயாரிப்பாளர் யார் என்றே அரசுக்குத் தெரியாத ஒரு அரசுசாரா நிறுவனத்திடம் ரூ.80கோடிக்கு ஆர்டர் வழங்கியுள்ளார். இந்தத்திண்பண்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களுக்கு வாங்கப்பட்டன. இவை அந்த மையங்களுக்கு வந்தபோது அவற்றில் களிமண்ணும், கற்களும் கலக்கப்பட்டுக் குழந்தைகள் உண்ணமுடியாத நிலையில் இருந்தன. அஹமதாபாத் மாவட்ட ஊராட்சித்தலைவர் மஞ்சுஸ்ரீகுண்ட் ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட திண்பண் டங்கள் களிமண்ணும்,கற்களும் கலந்து கெட்டு உண்ணமுடியாதவையாக இருந்ததை ஒருகடிதம் மூலம் தெரிவித்தார். இந்தக்கடிதம்தான் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி அரசின் ரூ.206 கோடி மாபெரும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது
.
  குடிநீர், மருந்து, பாடக்குறிப்பேடுககளிலும்
 குழந்தைகளின், குடிநீர்சுத்திகரிப்புசாதனங்கள், முதலுதவிப்பெட்டிமருந்துகள் பாடக் குறிப்பேடுகள், தேசப்படங்கள்  என பங்கஜாமுண்டேவின் ஊழல் பரவி நிற்கிறது. ஐ.சி.டிஎஸ்.ஆணையர் விநிதாசிங்கால் நாசிக்கில் உள்ள ஒரு தரமான நிறுவனத்தில் குடிநீர்சுத்திகரிப்பு சாதனத்தை ஒன்றுரூ.4,500/வீதம் வாங்கிட ஒப்பந்தம் செய்தார். ஆனால், அமைச்சர் பங்கஜாமுண்டேவோ அதைரத்துசெய்துவிட்டு உற்பத்திக்கூடமே இல்லாத எவரெஸ்ட் நிறுவனத்திடம் ஒன்று ரூ.5200/ என விலையை உயர்த்தி நிர்ணயித்து வாங்கியுள்ளார். காசோலைகள் வழங்கியுள்ளார்.
  குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் மெஷின்களை வாங்க ரூ.6 கோடிக்கும். ரூ.8 கோடிக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒரேவிதமானமெஷின்களை வாங்கக் காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.720/மதிப்புள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டிகளை ரூ.500/என விலைகுறைத்து அதற்கேற்பக் குறைவான மருந்துகளை வழங்குமாறு ஒப்பந்த்தார்ரிடம் பங்கஜாமுண்டே தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் அச்சிட்டுவழங்க டெண்டர் ஏதுமின்றி ரூ.5.6கோடி ரூபாய் காசோலையை ஒருதனி நபருக்கு –அச்சகத்துக்கு அல்ல- பங்கஜாமுண்டே அளித்துள்ளார்.

 பாஜ,க, என்ன செய்யும்?

 எதில்தான் ஊழல்செய்வது என்ற விவஸ்தை பா.ஜ.க.விடம்இல்லைபோலும்! இல்லாவிட்டால் ஏழை எளிய குழந்தைகள் உண்ணும் உணவிலும், குடிநீர்சாதனங்க ளிலும், முதலுதவிப்பெட்டிகளிலும், பாடக்குறிப்பேடுகளிலும் ஊழல்செய்யத் துணிவார் களா? இனி பா.ஜ.க. என்ன செய்யும்? அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க. உயர்மட்டத்தலைவர்கள் கூடுவார்கள். அதற்குமுன் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். தலமையிடம் கீதாபதேசம் பெற்றுவருவார். பின்னர் அவர்கள் சுஸ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியாவை மட்டுமல்ல: மறைந்த மாபெரும் தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசான பங்கஜாமுண்டேவையும் பாதுகாக்க அணிவகுப்பார்கள்.
  “பாவம்: பெண்கள்மீது ஊழல் குற்றம் சாட்டுவது நியாயம் தானா? பெண்மையை இழிவு படுத்தலாமா?
 பெண்களை முன்நிறுத்தி அவர்கள் பெயரில் ஊழல்திருவிளையாடல்களை நிகழ்த்தி அதன்பயன்களை அனுபவிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமோ? உலகின் சாதுரியமான பேச்சாளர் என்று பெயரெடுத்த பிரதமர் நரேந்திரமோடியோ மௌனம் சாதிப்பார். விளம்பரங்களில் “ஊழலற்ற அரசுஎன்று மின்னுவார்!


Friday, 5 June 2015

ஹோ சி மின் 175

ஹோ சி மின் 175 
புரட்சிகர நல்லொழுக்கம்
ஆங்கிலத்தில்: பி.அருண்குமார்
தமிழில்: செ. நடேசன்


காதிபத்தியம், முதலாளித்துவம், தனிமனிதப்போக்கு ஆகியவை மக்களின் முக்கியமான எதிரிகள் என்றார் ஹோசி மின். அவரது 125ஆம் பிறந்த நாள் உலகெங்கும் 2015 மே 19ல் கடைப்பிடிக்கப்பட்டது. ஹோ மாமா(Uncle Ho) என்று மக்களால் மிகவும் நேசத்துடன் அழைக்கப்பட்ட அவர், ஜப்பானியர்களுக்கும், பிரெஞ்சுக்காலனியவாதிகளுக்கும், அமெரிக்கர்களுக்கும் எதிரான வெற்றிகரமான போர்களில் வியட்நாமியர்களின் போராட்டங்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தி னார். அவர் ஒருபுரட்சியாளராகத் தொடர்ந்து மக்களை அணிதிரட்டி அவர்களது வலிமையில், படைப்பாற்றலில், உள்ளார்ந்த செயல்திறனில் ஆழ்ந்த நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கி அணிவகுக்கச்செய்தார்.
  ஹோ சி மின் மற்றும் வியட்நாமியர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள அன்றைய இளைஞர்களிடம் தூண்டுதல்களை ஏற்படுத்தி அவர்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்த்தெழவைத்த அடையாளங்களாக இன்றும் கருதப்படுகின்றன. லெனினின் ‘காலனியக் கருத்தாக்கங்களால்ஈர்க்கப்பட்ட ஹோ சி மின்னும் அதன் வழியில் மார்க்சிய-லெனினியத்தை தழுவினார். போராட்டக்களங்களில் படிப்படியாக மார்க்சியத்தையும்-லெனினியத்தையும் கற்றுக் கொண்டே அதைநடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டு, சோசலிசமும், கம்யூனிசமும் மட்டும்தான், ஒடுக்கப்பட்ட நாடுகளையும், உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்பதை நான் மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன்என்றார் ஹோ.

  தத்துவத்தையும், நடைமுறையையும் ஒருங்கிணைத்து வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, மக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒடுக்குமுறை யாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் வெற்றிபெறச்செய்தார். பயிற்சிபெறும் அலுவலர்களையும், கட்சி உறுப்பினர்களையும் அவர்களது நல்லொழுக்கத்தின் மூலம் அடையாளம்கண்டு அதைப்பின்பற்றுமாறு அழுத்தம் தந்தார். புரட்சிகர நல்லொழுக் கத்தைப் பின்பற்றுமாறும், தங்கள் நாட்டின் பருண்மையான நிலைகளுக்கு ஏற்ப மார்க்சிய-லெனினியத்தை உள்வாங்கி அதைப் பிரயோகிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவர் மிகஎளிமையான மொழியில் வள்மாகவும், வேடிக்கையாகவும், பழமொழிகளை யும், ஒப்பீடுகளையும் நன்குபயன்படுத்தியும் பேசினார்,எழுதினார். அவரது மொழியைப் போலவே அவரும் மிகஎளிமையான சிக்கனமான வாழ்வை மேற்கொண்டார். துன்பங்களைக்கண்டு ஒருபோதும் அஞ்சவோ, தனது இலட்சியங்களைக் காற்றில் விட்டுவிடவோ செய்யாமல் தனது செயல்பாடுகளின் மூலம் தாமேஒரு முன்னுதார ணமாக விளங்கினார்.

புரட்சிகர நல்லொழுக்கம்

ஹோ சி மின் கடும் உழைப்பு, சிக்கனம், நேர்மை, தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து தனது தோழர்களையும் அவ்வாறே வாழுமாறு கற்பித்தார். கட்சி, மக்களோடு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும், அவர்களது கருத்துக்களை மதிப்பதும்,கூட்டுமுடிவுகளுக்கு க்ட்டுப்படுவதும், தனிநபர் போக்குகளை நிராகரிப்பதும் தேவை என அவர் விரும்பினார்.

      நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்றும் எஞ்சியிருக்கின்ற குட்டிமுதலாளித்துவ மனோபாவம் “மூன்றாவதுஎதிரிஎன்ற அவர் ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்து வத்தையும் முதல் இரண்டுஎதிரிகள் என்றார். எதிரிகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் அவர் தனதுசகாக்களிடம் புரட்சிகர நல்லொழுக்கத்தை நடைமுறைப் படுத்தும்வகையில் ‘ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்; போருக்குத்தயார் நிலையில் இருக்கவேண்டும்; சரணடையவோ ஒருவருக்குத் தலைவணங்கவோ உறுதியாக மறுக்க வேண்டும்என்று வலியுறுத்தினார்.

     எந்தஒரு புரட்சியாளனுக்கும் புரட்சிகர ந்ல்லொழுக்கம் இன்றியமையாதது; அந்த புரட்சியாளன். தனது மகத்தான கடமையைச் செய்து முடிக்க புரட்சிகர ந்ல்லொழுக்கத்தை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புரட்சிகர ந்ல்லொழுக்கம் என்பது அவரைப் பொறுத்தவரையில், ‘கட்சியின் விருப்பங்கள், புரட்சி, வர்க்கம், தேசம் மற்றும் மானுடத்திற்காக தடுமாற்றமோ, பின்னடைவோ இல்லாமல் எந்தவகையான சிரமங்களுக்கும், தொல்லை தரும் கொடுமைகளுக்கும் அல்லது, தோல்விகளுக்கும் அஞ்சாமல் இருத்தல்‘ என்பதே.

   ‘எளிமையாகவும் தன்னடக்கத்தோடும் எத்தகைய கொடுமைகளையும் எதிர்க்கத் தயாராக இருப்பதில் க்ம்யூனிஸ்டுகள் ஒரு முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘கம்யூனிஸ்டுகள் மற்றவர்கள் தமக்குமுன் வேலை செய்வதற்காக்க் கவலைப்பட வேண்டும்; மற்றவர்களுக்குப் பின்னரே   மகிழ்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும்’. புரட்சியாளர்கள் தங்களது கடந்தகாலச் சாதனைகளைப் பெரிதுபடுத்தி அதற்காகச் சிறப்பான மரியாதைகளை எதிர்பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்’. அதற்கு பதிலாக நமது கடமைகளை நிறைவேற்றுவதில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் எத்தகைய பரிசுகளையோ, மரியாதை களையோ எதிர்பார்க்காமல் சிந்தியுங்கள்என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாகக் கம்யூனிஸ்ட்கட்சியில் அதிகார மனோபாவம், தற்பெருமை, (பிறருக்குரியதைக்) கவர்ந்துகொள்ளல் போன்ற போக்குகள் இருப்பதற்கு கவலை தெரிவித்தார்.

   ஹோ சி மின் புரட்சிகர ந்ல்லொழுக்கம் என்பதை, “கட்சியின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தல், கட்சியின் நிலைப்பாட்டை நடைமுறைப் படுத்துதல், மக்களுக்காக முழுமனதுடன் பணிபுரிதல், ஒவ்வொரு விதத்திலும் தனித்த முன்மாதிரியாக விளங்குதல், மார்க்சிசம்-லெனினிசத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிப்பதல், அதைத் தொடர்ந்து சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் செய்து ஒருவருடைய தத்துவார்த்தத்தரத்தை உயர்த்திக் கொள்ளுதல், தனிப்பட்ட ஒவ்வொரு பணியில் சகதோழர்களோடு இணைந்து பணியாற்றுவதில் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதல்” , என விளக்கினார்.

  புரட்சிகர நல்லொழுக்கத்தின் மிகமுக்கியமான அம்சம் மக்களுடன் பிரிக்க முடியாத் தொடர்புகளைக் கொண்டிருப்பது. புரட்சிகர ந்ல்லொழுக்கம் மக்களை ஒரே அணியில் இணைப்பதை, அவர்கள்மீது நம்பிக்கை கொள்வதை, அவர்களின் கருத்துக்களைக் கவனித்துக் கேட்பதை உள்ளடக்கியுள்ளது. கட்சியும் அதில் பணியாற்றும் இளம் உறுப்பினர்களும், தோழர்களும் தங்கள் சொல்லாலும் செயலாலும் மக்களின் நம்பிக்கையை வென்று, மரியாதையையையும் அன்பையும் வென்று அவர்களைக் கட்சிக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து அமைப்பாக்கி, அவர்களைக் கல்விபெறச் செய்து அணிதிரட்ட வேண்டும். இதன்மூலம் அவர்கள் உற்சாகத்துடன் கட்சியின் கொள்கைகளையும், முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவார்கள்.

   மக்களைச் சிறுமைப்படுத்துபவர்களை அவர் மிகக்கடுமையாக எச்சரித்தார். ‘ஒவ்வொரு விஷயத்திலும் தன்னைப் புத்திசாலி என்று கருதிக்கொள்வதன் மூலம் அவர்கள் மக்களிடமிருந்து விலகிச்செல்கிறார்கள். மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பவர்களாக மட்டுமே இருக்க விரும்புகிறார்கள். இத்தகையவர்கள் அதிகாரத்துவம், கட்டளை பிறப்பிக்கும் தலைமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மக்களின்முன் நமதுநெற்றியில் ‘கம்யூனிஸ்ட்என்ற சொல்லை வெறுமனே ஒட்டிக் கொள்வதன் மூலம் மட்டுமே மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் வென்றுவிட முடியாது. மக்கள் நல்ல நடத்தையும், நல்லொழுக்கத்தையும் உடையவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தி மதிப்பார்கள்.

தனிநபர் போக்கை எதிர்த்த போராட்டத்தில்...

 தனிநபர்போக்குக்கு எதிரான போராட்ட்த்தில் ஹோ சி மின் மிகஉறுதியாக இருந்தார். அதை ஊழலுக்கு வழிவகுக்கும் மிகமுக்கியமான செல்வாக்குமிக்க ஒன்றுஎன இனம்கண்டார். ‘தனிநபர்போக்கு புரட்சிகர நல்லொழுக்கத்திற்கு எதிராகச் செயல்படக்கூடியது.. அதன் எஞ்சியுள்ள சிறுஅடையாளம்கூட அதற்குக் கிடைக்கும் முதல்வாய்ப்பிலேயே வளர்ச்சிபெற்றுப் புரட்சிகர நல்லொழுக்கத்தை மென்மைப்  படுத்திப் புரட்சிகர இலட்சியத்துக்காக நாம் முழுமனதோடு போராடுவதைத் தடுத்துவிடும்.  தனிநபர் போக்கு என்பது மிகவும் வஞ்சகத்தன்மையும், துரோகமும் கொண்ட ஒன்று. அது மிகுந்த ஆற்றலோடு ஒருவரின் முதுகில்ஏறிக்கொண்டு விடக்கூடிய ஒன்று. 
  தங்களது தனிநபர்போக்கால், சிரமங்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு ஊழலிலும், ஊதாரித்தனத்திலும், படாடோபவாழ்க்கையிலும் மூழ்கிவிடுவார்கள்.அவர்கள் புகழுக்கும், இலாபங்களுக்கும், பதவிகளுக்கும், அதிகாரங் களுக்கும் ஆசைப்படுவார்கள்.அவர்கள் தற்பெருமைக்காரர்களாகவும்,அகந்தைகொண்ட வர்களாகவும் கூட்டுமுயற்சிகளைத் தரக்குறைவாகவும் கருதுவார்கள். மக்களை அவமதிப்பவர்களாகவும், தன்னிச்சையாகவும், கொடூரமாகவும் நடந்துகொள்பவர்களாக ஆகிவிடுவார்கள். அவர்கள் மக்கள்திரளிலிருந்தும், உண்மைநடப்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு, அதிகாரவர்க்கமாகத்தன்மை மற்றும், ஆணைபிறப்பிக்கும் தன்மைகளால் பீடிக்கப்படுபவர்களாகிறார்கள்.தங்களை வளர்த்துக்கொள்ள எந்த முயற்சிகளையும் செய்யமாட்டர்கள் .தங்கள் ஆற்றலைக் கல்வியின்மூலம்       மேம்படுத்திக்கொள்ள எந்தமுயற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கொண்டாட் டங்களையும், ஓய்வையும் வேண்டுவார்கள். தங்கள் அமைப்பினால் தங்களுக்கு அளிகப்படும் கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த வேலைகளை எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உயர்ந்த பதவிகளை விரும்புவார்கள். ஆனால், தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கொள்வார்கள். அவர்களது போராட்ட உணர்வும், ஆற்றலும் மெல்ல மெல்லப் பலவீனப்பட்டுவிடும். அதுபோலவே அவர்களது புரட்சிகர மனஉறுதியும், மேன்மையான நற்பண்புகளும் பலவீனமடைந்துவிடும்.
  “இந்த்த் தனிநபர்போக்குகளிலிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளாமல் சில கட்சிஉறுப்பினர்கள் ‘தாங்கள்கட்சிக்குச்செய்த சேவைகளைப்பெரிதுபடுத்தி அதற்காகக் கட்சி தங்களிடம் நன்றியுடன் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பார்க்ள். அவர்கள் தங்களுக்கான ஆதரவை, பெருமையை, தனிப்பட்ட சலுகைகளை விரும்புவார்கள். அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் கட்சிக்கு எதிராகக் கடும்கோபம்கொண்டு, தங்களுக்கும், தங்கள் தியாகத்துக்கும் கட்சியில் எதிர்காலம் இல்லை என்று குறைகூறுவார்கள். மெல்லமெல்லக் கட்சியிலிருந்து விலகிச் செல்வார்கள். இதைவிட மோசமாக அவர்கள் கட்சியின் கொள்கைகளையும், ஒழுங்கு-கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க முயல்வார்கள்.
  ஹோ சி மின் தனிநபர்போக்கைக் கண்ணின்மணிபோலப் பாதுகாக்கப்பட வேண்டிய  கட்சியின் ஒற்றுமைக்கு எதிரான அச்சுறுத்தலாகப் பார்த்தார். அவர்களுடைய தனி நபர்போக்கால் அவர்கள் ஒற்றுமையின்மையைத் தூண்டுகிறார்கள். கட்சி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவை பற்றிய புரிதலிலும் பின்தங்கி விடுகிறார்கள். அவர்கள் கட்சியின் கொள்கைகளையும், நிலைபாடுகளையும் சரியாக முன்னெடுத்துச் செல்வதில்லை. புரட்சியின் தேவைகளுக்கும், மக்களுக்கும் இடையூறு விளைவிக் கிறார்கள்.
   ஹோ சி மின்-ஐப் பொறுத்தவரை தனிநபர் குணாம்சம் என்பது, “அவர்கள் விமர்சனத்திற்குள்ளாக விரும்புவதில்லை. அவர்கள் சுயவிமர்சனத்தையும் தவிர்க்கிறார்கள். அல்லது தங்கள் நடைமுறையை உண்மைத்தன்மையும், தீவிரமுமின்றி மேற்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முகத்தையும், கௌரவத்தையும் இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் மக்களின் கருத்துக்களில் எவ்விதஅக்கறையும் கொள்ளாமல் கட்சிசாராத தோழர்களிடம் இணக்கம் கொள்கிறார்கள். தங்களது வேலைகளை எந்தத்தவறும் இல்லாமல் செய்வது கடினம்என்று உணரமறுக்கிறார்கள். நாம் நேர்ந்துவிடும் தவறுகளுக்கு அஞ்சுபவர்கள்அல்ல. ஆனால், அந்தத்தவறுகளைச் சரிப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். நமது குறைகளை அகற்ற நாம் மக்களின் விமர்சனங்களைக் கவனிக்க வேண்டும். சுயவிமர்சனங்கள நேர்மையோடு செய்யும் நடைமுறைகளைக் கையாள வேண்டும். இல்லாவிட்டால் நாம் பின்தங்கிப் போய்விடுவோம். அது நம்மை மக்களிடமிருந்து விலக்கிவைத்துவிடும். இது தனி நபர்போக்கின் தவிர்க்கவியலாத அம்சமாகும்.
  ஹோ சி மின் ‘கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற வேண்டுமானால், ஒருவர் தன்னைத் தானே முற்றுமுதலாக மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்என்பதற்கு அழுத்தம் தந்தார். “புரட்சியைச் செய்யவேண்டுமென்றால் ஒருவர் தன்னை முற்றிலும் மறுவார்ப்புச் செய்துகொள்ளவேண்டும். நாம் நமது வேலைமுறைகளைச் சரிசெய்துகொள்ளவேண்டும். அவற்றை எப்போதும், என்றும் அறிவுபூர்வமானதாகவும் தற்காலச்சூழல்களுக்குப் பொருத்தமுடையதாகவும் ஆக்கவேண்டும். சம்பிராயதமான, இயந்திரகதியானவற்றைத் தவிர்க்கவேண்டும்.
   ஹோ சி மின் மார்க்சிஸம் லெனினிஸம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதை, “ஓர் உணர்வாக– ஒருவர் மற்றபொருள்களோடும், மற்றபொதுமக்களோடும், தன்னோடும் கூட- பிரச்சனைகளைக் கையாள்கிற உணர்வாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன்பொருள் உலகுதழுவிய மார்க்சிஸ லெனினிஸ உண்மைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை நமது நாட்டின்  எதார்த்தமான நிலைகளுக்கேற்பப் படைப்பாற்ற லுடன் செயல்படுத்த வேண்டும். நாம் செயலுக்கான பார்வையுடன் கற்கவேண்டும். த்த்துவம் நடைமுறையுடன் இணைந்து செல்லவேண்டும்.எனக்கூறினார்.
   ஹோ சி மின் தனது நாட்டின் பருண்மையான நிலைகள்பற்றிய முழுமையான ஞானத்தைப் பெற்றிருந்தார். தத்துவத்தையும், அமைப்பையும் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். மக்களின்மீது மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந் தார். தன்னுடைய பணிகள்மூலம் “புரட்சி என்பது ஓர் அறிவியல்: அதுபோலவே, அது ஒருகலை என்று அவர் மிகத்தெளிவாகக் காட்டினார். இவ்வாறு அவர் ஒருமுன்னோடியான போராளியாகவும், பிரச்சாரகராகவும், அமைப்பாளராகவும் விளங்கினார். தான் என்ன கற்பித்தாரோ அதைத் தாமும் பின்பற்றிய மாமனிதர் ஹோ சி மின். அவர் வாழ்ந்த வாழ்வைப் பின்பற்றி வாழ்வதே ஹோ மாமாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

                                    நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரஸி  மே 11-17, 2015