Monday, 30 November 2015

இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
மகாராஷ்ட்ர முன்னாள் காவல்துறைத் தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில இதழில்
– தமிழில் செ. நடேசன்

முன்னாள் மகாராஷ்ட்ர காவல்துறைத் தலைவர் (ஐ,ஜி) எஸ்.எம்.முஷ்ரிஃப் 26.11.2015 வியாழன் அன்று கொல்கத்தாவில் மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் தலைவர் கர்கரே நினைவு நிகழ்வில் பேசியபோது, “ இந்தியாவில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட 13 பயங்கரவாத வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுக் கள் பிறப்பிக்கப்பட்டுள்ளனஎன்றார்.

 ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளைப் பயன்படுத்திய குறைந்தபட்சம் 13 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள்மீது குற்றப்பத்திரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்தகைய வழக்குகள் 17ஆக உயரும் என முஷ்ரிஃப் தெரிவித்தார்.
 ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை என்ற முஷ்ரிஃப், 2007ல் ஹைதராபாத்தில் மெக்காமஜ்ஜித் குண்டு வெடிப்பு, 2006 மற்றும் 2008ல் மகாராஷ்ட்ராவில் மாலேகான் குண்டுவெடிப்பு, 2007


சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு ஆகியவை இவற்றுள் அடங்கும் என்றார்.

 எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ‘காவி பயங்கரம்நடைபெறுகிறது என்பதை முஷ்ரிஃப் உறுதிப்படுத்தினார். ஒரு பயங்கரவாத அமைப்பு என்றவகையில் ஆர்.எஸ்.எஸ். அரசியல் அதிகாரத்தில் எதுவும் செய்வதற்கில்லை. அதற்கு எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது ஒருபொருட்டல்ல. அதில் செயல்படும் அமைப்புமுறை ‘பிராமணீய அமைப்புமுறை ஆகும். இங்குநான் ‘பிராமணீயம்என்று சொல்லும்போது பிராமணர் என்பது அதன்பொருள் அல்ல. அது ஒருமனப்போக்கு. ஆளுகை செய்யவும், அடக்கி ஒடுக்குவதற்குமான ஒரு நடத்தைமுறைஎன்றார் அவர்.

அண்மைக்காலங்களில் சகிப்புத்தன்மை இன்மை வளர்ந்துவருகிறது என்ற பார்வையை முஷ்ரிஃப் ஏற்றுக்கொள்ளவில்லை, சகிப்பினமை மிகநீண்டகாலமாகவே இருந்து வருகிறது.மிகசும் தீவிரமான பெரிய பல நிகழ்வுகள் முன்பு நடைபெற்றுள்ளன. இப்போது ஏன் அவைகள் உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லைஎன அவர் கேட்டார்.

 “2008 மும்பை தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடைபெற்றபோது, இதில் இந்து அடிப்படைவாதி களின் பங்குபற்றி விசாரனை செய்த ஹேமந்த் கர்கரேவின் கொலையில் புலனாய்வுத் துறையே திட்டமிட்டுத் தந்ததற்கான திடுக்கிடும் ஆதாரங்கள் இருந்தன.ஆனால், அவற்றை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. மும்பை தீவிரவாத எதிர்புப் படையின் தலைவரைக் கொன்றதற்குப் பின்புலத்தில் இருந்த உண்மைகளை நிலைநாட்ட மாபெரும் மக்களியக்கம் தேவைஎன்றார்.

“புலனாய்வுத்துறை இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நிலைநாட்டுவதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ‘ஒரு சுதந்திரமான விசாரணை தேவைஎனக்கோரிய எங்கள் எல்லா முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. ஒருமாபெரும் மக்கள் இயக்கம் இல்லாவிட்டால் அதை எப்போதும் நிலைநாட்டவே முடியாதுஎன்னும் முஷ்ரிஃப் “கர்கரேயைக் கொன்றது யார்?என்ற தனது நூலில் தனது உணர்வுபூர்வமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் தேசியவிருதுபெற்ற இசைஅமைப்பாளரும், முன்னாள் திருணாமுல்  நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் சுமனுடன் கலந்துகொண்ட  மகாராஷ்ட்ராவின்முன்னாள் ஐ.ஜி. முஷ்ரிஃப் ஆர்.எஸ்.எஸ்.-ன் உண்மை சொரூபத்தை அம்பலப்படுத்தினார்.


Saturday, 28 November 2015

உண்மையைப் பேசிய அமீர்கான் – ஷாருக்கானுக்கு நன்றி!-பிருந்தா காரத்

உண்மையைப் பேசிய  அமீர்கான் – ஷாருக்கானுக்கு நன்றி!
தன்னை விமர்சிப்பவர்களுக்கு ‘இந்தியா ஒரு சகிப்புத்தன்மைமிக்க நாடுஎன்று சொற்பொழி வாற்ற வேண்டியது அவசியம் என பா,ஜ,க, ஏன் கருதுகிறது?
என்ன சொல்லப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது இந்துத்துவா பரிவாரங்கள்-பற்றிய விமர்சனங்களை அவர்கள் இந்தியாபற்றிய விமர்சனங்களாக சமப்படுத்தும் அவர்களது ஆணவத்தால்  மேலும், இந்தியாவில் வளர்ந்துவரும் சகிப்பின்மை பற்றிய கவலைகளை அவர்கள் ‘தேச விரோதச் செயல்என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

 நாட்டின் குடிமக்கள், சகிப்பின்மை வளர்ந்துவரும் சூழல் பற்றிக் கவலை தெரிவிப்பது இந்தியாவைக் குறைகூறுவதற்காக அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு நரம்பணுவையும் சகிப்புத்தன்மையற்ற, சர்வாதிகார, மதச்சார்புநாடாக மாற்றமுயலும் சக்திகளிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்காக.

இந்தியாவின் சிந்தனைப்போக்கு எவ்வாறு உள்ளது என்பதற்கும், சிலர் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பதற்கும் இடையே உள்ளுணர்வுகளில் ஒருவிரிந்த வேறுபாடு உள்ளது. இந்தியாவின் சிந்தனை மரபு என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பகிர்ந்துகொண்ட வரலாறுகள், வெவ்வேறு மொழிகள், வாழ்க்கைமுறைகள், உணவுமுறைகள், ஆடைஅணிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட ச்கிப்புத்தன்மை கொண்டது இந்த உண்மையான இலக்குகள் வலிமையான, மதசார்பற்ற, சமத்துவ அரசியலுக்கு அடிப்படை யாகும்.

இந்தச்சிந்தனை ஒட்டுமொத்தமாக நடைமுறையில் உள்ளதா என்பதை இன்னும் நாம் பார்க்க வேண்டும்  இந்தச் சிந்தனைப்போக்குகளுக்குத்தான், பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், பிரிட்டிஷ் பத்திரிக்கைகளிலும் பேசியபோது பிரதமர் உரிமைகொண்டாடி, ‘இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட்து என்று சொன்னார்.

ஆம். பிரதமர் அவர்களே, இந்தியா சகிப்புத்தன்மை மிக்கது. ஆனால், நீங்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவின் பெயரில் செயல்படும்.பரிவாரங்களும், ஆட்சி அதிகாரத்தின் ஆதரவைப் பெற்றுள்ளவர்களும், ஒவ்வொரு நாளும் வெறுப்பை விதைப்ப வர்களும் ச்கிப்புத்தன்மை உள்ளவர்கள் அல்ல.

இந்துத்துவா பரிவாரங்களின் மிக அண்மைக்கால தாக்குதல் இலக்காக அமீர்கான் உள்ளார். தனது மற்றும் தனக்கு இணையான ஆற்றல்கொண்ட வாழ்க்கைத்துணைவி கிரண் ராவ் ஆகிய இருவரின் இதயத்தைத் திறந்து பேசினார். அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளை நடைமுறைப் படுத்துபவர்களா என்பது அவர்களது தனிப்பட்ட விஷயம். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர் களாக இருப்பது பொதுவெளியில் ஒருவரைஒருவர் காதலிப்பதையும், திருமணம் செய்துகொண்ட்தையும் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அமீர்கான் அளவுக்கு வெற்றிபெற்ற ஒருவர் தனது கவலைகளை, சந்தேகங்களை, தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய அச்சங்களை வெளிப்படுத்தும்போது, அதைத் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், அரசு சார்பில் பேசுகிறவர்கள் அதை, வீண்பீதியை உண்டாக்குதல்அல்லது, ‘ தனது ரசிகர்களுக்கு நன்றியின்மையாக அழைக்கிறார்கள்.

அரசின், ஆளும்கட்சியின் பேச்சாளர்களின் புறக்கணிக்கப்பட வேண்டிய இந்த முரட்டுத்தனம் அவர்களுடைய தள்ளுவண்டிகளால் ஆதரிக்கப்பட்டு, ஊடகங்களில் விஷமத்தனமாக வெளிப் படுகின்றன. இது புகழ்பெற்ற இந்தியக்குடிமக்கள் சகிப்புத்தன்மையற்ற போக்குகள் வளர்ந்து வருவதுபற்றி எச்சரிக்கத்துவங்கியதிலிருந்தே அவர்களின் தனிப்பண்புகளாக, தரக்குறியீடுகளாக ஆகியுள்ளன.

 நயன்தாரா சேகல் எதிர்த்தபோது அவர் ‘பாரம்பரியம்என்று புறம்தள்ளப்பட்டார். மிகவும் புகழ்பெற்ற சில  எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தபோது அவர்கள் ‘பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள்என்று முத்திரை குத்தப்பட்டார்கள். மிகவும் ஆற்றல்மிக்க 107 விஞ்ஞானிகள் அரசுக்கு ஒரு திறந்த கடித்த்தை அனுப்பியபோது அவர்கள்கூட வசைமாரி பொழியப்பட்டார்கள். வரலாற்றாளர்கள் தங்கள் குரலை எழுப்பியபோது அவர்கள் ‘கம்யூனிஸ்டுகள்என அழைக்கப்பட்டார்கள். வேறுவார்த்தைகளில் சொன்னால், அரசும், ஆளும்கட்சியும் இந்த அறிவுஜீவிகளுக்கு எதிராக அணிதிரளும்போது, அவர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண மறுத்துவிடுகிறார்கள்.

இன்று இது ஒரு உண்மையான பிரச்சனையாக உள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பும் இளம் இணைகளில் ஒருவர் இந்துவாகவும், இன்னொருவர் முஸ்லீம் ஆகவும் இருந்தால் ‘லவ்ஜிகாத்என்ற பெயரில் வெறுப்பைப் பரப்புபவர்களால் கூட்டுக்கொலை செய்யப்படும் அச்சத்தில் உள்ளனர். அனுபம் கெர் போன்ற அரசின் ஆதரவாளர்களும், மற்றவர்களும் இத்தகையவர்களை ‘சில்லரைகள்என்று கூறுகின்றனர். இத்தகைய உறவுகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும், மிகவும் எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடும் அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘சில்லரைகள்அல்லர். ஆளும்கட்சியிலும், அரசிலும் முக்கியப் பொறுப்புக்களை வகிக்கும் அவர்கள்தான் மையமானவர்கள்.

ஒரு பசுவை வதைத்ததாகவும், தனது வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருந்ததாகவும் ‘தயார் செய்யப்பட்ட வதந்தியின் பேரில்கூட்டுக்கொலை செய்யப்பட்டது ஒரு உண்மையான பிரச்சனை. ஆனால், பீகார் தேர்தலுக்கு முன்தினம் மாலையில் எல்லாநாளேடுகளிலும் பா.ஜ.க. விளம்பரப்படுத்திய செய்தி என்ன? ‘இந்துக்களின் பெருமையாக விளங்கும் பசுவை அவமதிக்கலாமா?- இது தெரியாமல் செய்ததல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு வாக்குகளை உறுதிப்படுத்துவதற்காகச் செய்தது. பசுவதைக்கு எதிரான பிரச்சாரங்கள் முஸ்லீம்களைக் குறிவைத்து மிகவும் மோசமான முறையில் தொடர்கின்றன.

அறிவுஜீவிகள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதியபோது இந்துத்துவா பரிவாரங்களால் குறிவைக்கப்பட்டார்கள். இது ஒரு உண்மையான பிரச்சனை. தோழர் பன்சாரே காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டபோது, கல்புர்கி கோழைத்தனமாக்க் கொலை செய்யப்பட்டபோது, பெருமாள்முருகன் குறிவைக்கப் பட்டபோது, திப்பு சுல்தான் வரலாற்றில் ஒரு வித்தியாசமான பார்வையை வெளிப்படுத் தியதற்காக கிரீஷ் கர்நாட் அச்சுறுத்தப்பட்டபோது – அவை உண்மையான பிரச்சனைகள் இன்னும் பிரச்சனைகளாக உள்ளன.

தேவைப்படுவதெல்லாம் ஆட்சியிலும்,தனது கட்சியிலும் பிரதமர் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி மேலிருந்து நடவடிக்கைகளை எடுத்து சங்பரிவாரங்களோடு தொடர்புகொண்டுள்ள வர்களின் அச்சுறுத்தல்களையும், வசைபாடல்களையும், வன்முறைகளையும் தடுத்து நிறுத்துவதுதான்.

இதற்கிடையில் தங்களுடைய சொந்த இழப்புக்களைப்பற்றிக் கருதாமல் உண்மைகளைப் பேசிய அமீர்கான் –அதற்கு முன்னதாக ஷாருக்கான் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவோம்.

பிருந்தா காரத்
அரசிய தலைமைக்குழு உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி



தமிழில்: செ. நடேசன் 




Sunday, 22 November 2015

ஜி.சம்பத்  
மோடி அரசின்சகிப்பின்மையும்
அருண்ஜேட்லியின் சுழல்விளையாட்டும்
தமிழில்: செ. நடேசன்


 இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற ஒருசூழல் மூச்சுத்திணற வைக்கிறது என்பதை விளக்கும் வகையில் ஏராளமானவை எழுதப்பட்டுள்ளன. இயான்பெக் ஈவன், சல்மான் ருஷ்டி போன்ற 200 எழுத்தாளர்கள் நரேந்திரமோடியிடம் இந்தப்பிரச்சனையை எழுப்புமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூனுக்கு எழுதிய ஒருதிறந்த மடல் மூலம் பிரதமர் நரேந்திரமோடியை இந்த ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற நச்சரிப்பு தொடர்ந்து வந்தது.

  முடிவுபெறாத ஒருதொடர்நிகழ்வான இந்தச்‘சகிப்புத்தன்மைஇன்மை’-சுருக்கமாக மோடியின் வார்த்தைகளில் சொன்னால்- ‘துரதிர்ஷ்டவச்மான சம்பவங்கள்-எம்.எம்.கல்புர்கியின், மொஹமது இக்லக்கின், டயோட்டாஷோ ரூம்பணியாளர்களின், யாகூப் ஷேய்க்கின், தொடர்ந்து நிகழ்ந்த காஷ்மீர் லாரி டிரைவர்களின், சன்பேத்தில் எரிக்கப்பட்ட இரண்டு தலித் குழந்தைகளின் கொலைகள் எல்லாமே ‘சகிப்புத்தன்மையற்ற நிகழ்வுபற்றிய ஒருவகையான சிறிய கணக்கெடுப்புத்தான் இது.

  உங்களோடு ஒத்துப்போகாதவர்களை இங்கே கொல்வதற்காக இன்று பல்வேறு உத்திகள் வகுக்கப்பட்டு ‘சகிப்புத்தன்மை இன்மைஒருபுதியமுறையில் அவற்றைச் சாத்தியமாக்குகிறது. இங்கு நம்முன்- எடுத்துக்காட்டாக- ஒட்டுமொத்த சங்பரிவாரங்களின் படையும், வன்முறையில் ஈடுபடும் ஆரவாரக்கூட்டமும் – இவர்களில் பலர் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் – வெறுப்புப்பேச்சை நிகழ்த்தி வறுத்தெடுக்கும் நடைமுறையைக் கையாளுகின்றனர் எனத் தோன்றுகிறது. இன்னொரு உத்தியாக, அரசு நிதியளிக்கும் கலாச்சார நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சிமுறையாக இந்துத்வாவின் ஒற்றைக்கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டவர்களைப் பதவிகளில் நியமிப்பது. அதன்பிறகு பெரும்பான்மையினரின் ‘சகிப்புத்தன்மை இன்மையைஅரசு சகித்துக்கொள்ளும்: தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தி அனுப்புவது என்பதை மேற்கொண்டுள்ளது.. அதன் விளைவாக அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வுகள் – புத்தக வெளியீடுகளைத் தடுத்தல், ‘கர் வாபஸி’, ‘லவ் ஜிகாத்போல மேலும் மேலும் பல நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

அதிகப்படியானசகிப்புத்தன்மையின் வகைகள்

 இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ‘சகிப்புத்தன்மை இன்மையின் வகைகளாக அல்ல, மிக அதிகபட்சமான சகிப்புத்த்னமையின் வகைகளாக- வெறுப்பூட்டும் பேச்சுக்கள், குறுங்குழு வன்முறைகள், அரசியல்சாசனத்தில் உறுதியளிக்கப்பட்ட சுதந்திரத்தைச் சீர்குலைப்பது ஆகியவை வெளிப்பட்டன. இவ்வாறு சகித்துக்கொள்ள முடியாதவற்றை அரசு சகித்துக் கொள்வது எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகளை எந்தெந்த வகையில் முடியுமோ – விருதுகளைத் திருப்பிஅனுப்புவது, திறந்த மடல் எழுதுவது போன்ற-  அந்தந்தவகைகளில் எதிர்க்கத்தூண்டியது.

  துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தப்பிரச்சனைகள் வாழ்வா? சாவா? என்ற பிரச்சனையாக உண்மையில் இருப்பதிலிருந்து, ‘சகிப்புத்தன்மை இன்மைகளில்ஒன்றாக வர்ணிப்பதும், ஒரு கலாச்சாரப்போர்போலத் தோன்றவைப்பதும் அரசுக்கு எளிதானதாகிறது.

  ஆகவே, முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த எதிர்ப்பு அலைகளைத் ‘தயாரிக் கப்பட்ட கிளர்ச்சிஎன ஒதுக்கித்தள்ளியது. பின்னர் அந்தக் கிளர்ச்சியாளர்களை ‘காங்கிரஸ் சார்பாளர்கள்என அவப்பெயர் சூட்ட முயன்றது. ஆனால் ‘மூடியின் ஆய்வறிக்கையையோ, அல்லது அமெரிக்காவின் பத்திரிக்கைகளையோ, இந்தியரிசர்வ்பேங்க் ஆளுநரையோ காங்கிரஸ் என்று நிராகரிக்க முடியாது. அருண்ஷோரி தே.ஜ.கூ. அரசை ‘காங்கிரஸ் + பசு என்று அடையா ளப்படுத்துகிறார்.

  அரசின் பிளவுபடுத்தும் சகிப்புத்த்னமைக்கான ஆதாரங்கள் குவிந்தபோது, இவை எல்லா வற்றிலும் பாதிக்கப்பட்டவராகக்காட்ட  மோடியை பா.ஜ.க தனது உறுதியான கடைசிப் புகலிட மாக்கிக்கொண்டது

  அண்மையில் ஊடகங்களில் பெரிதும் எடுத்தாளப்பட்ட ஒருமுகநூல் பதிவில் நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி  ஒருகூர்மையான எதிர்த்தாக்குதலை, ‘2002 முதல் பிரதமர்தான் தத்துவார்த்த சகிப்புத்தன்மை இன்மையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்என்ற கருத்தைத் தெரிவித்தார். அது உண்மையின்மீதான ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற சிந்தனையாகவும், வழக்கத்துக்கு மாறான  ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற கருத்தாக்கத்தின் மீதான ‘சுழல்ஆகவும் இருந்தது. இந்தத் தந்திரம் அவரது எதிராளிகளை வாயடைக்க வைத்தது.

  உண்மைத்தன்மையற்ற, தந்திரமான இந்தக்கருத்து, சிலவற்றை ஆய்ந்துபார்க்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

  முதலாவதாக, ‘சகிப்புத்தன்மை இனமைஎன்ற வார்த்தையின் அர்த்தத்தை ‘விமர்சனம்என்பதாகத் திரிக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது. அது இன்னொருவரின் அரசியல், சமூகசமத்துவம், தனதுகருத்தைவெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றைத் தடுப்பதாகும்.

  வேறுவகையில் சொல்வதானால், அரசு அல்லது அரசுஇயந்திரத்தின் ஆதரவை யார் அனுபவிக்கிறார்களோ, அவர்கள் கைகளில் உள்ள அதிகாரம், அரசால் ஆளப்படும் சமூகத்தின் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுத்தப்படும். ‘த்த்துவார்த்த சகிப்பின்மை என்ற அருண்ஜேட்லியின் மனதில் உள்ள கருத்து இந்த விஷயத்தில் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. அல்லது ஒரு ஆண்டானின் தத்துவத்துக்கு ஓர்அடிமையின் ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்று பொருள்படுகிறது.

  தற்போதைய நிகழ்வில், உண்மையான பிரச்சனை ‘சமூகத்தின் சகிப்புத்தன்மை இன்மைஅல்ல: இந்தச் சமூகம் 18 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஒன்றும் மாறிவிடவில்லை.-ஆனால், அரசின் சகிப்புத்தன்மை தான் மாறியிருக்கிறது. அது தத்துவத்தைப் பற்றியதல்ல. ஆனால், சாதாரண விஷயமாக அறியப்படும் ‘சட்டம்-ஒழுங்கு பற்றியது. அதைப் பராமரிக்கவேண்டியது அரசே. ஒரு செயல்படும்அரசில், அரசுசாராத செயல்பாட்டாளர்கள் சட்டத்துக்குப்புறம்பான வன்முறைகளில் ஈடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது இவற்றைச் செய்வதை தந்திரமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் எப்போது அரசு சகித்துக்கொள்கிறதோ அல்லது உற்சாகப்படுத்துகிறதோ அப்போது இவர்களால் உயிர்க்கொலை முதலான சகிக்கமுடியாத செயல்பாடுகளைச் செய்ய முடியும்.

 இரண்டாவதாக, அருண் ஜேட்லியின் கருத்தில் உள்ளடங்கியிருப்பது –பிரதமர் பாதிக்கப் பட்டிருக்கிறார்எறு சொல்வது, ‘பாதிக்கப்பட்டவராகத் தோன்றுவதற்குரிய செயல்களைச் செய்திருக்கிறார்.என்று தோன்றவைக்கிறது. இந்த நாட்டிலேயே மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒருபதவியை அவ்வாறுபாதிக்கப்பட்டவர்தான் அடையமுடியும் என்றானால், ஏராளமானவர்கள் அதேபோல் பாதிப்புக்குள்ளாகவே விரும்புவார்கள்.

 மூன்றாவதாக,  அருண் ஜேட்லியின் கூற்றை நாம் மெய்யாகவே ஒத்துக்கொண்டால், ‘மோடி எதிர்கொணட தத்துவார்த்தசகிப்புத்தன்மை இன்மையின் உண்மையான தன்மைஎன்ன? இந்தக் கேள்விக்குப் பதில்கூற நாம் அவரது தத்துவம் என்ன என்பதைக்கூறியாக வேண்டும். மோடியின் உண்மையான தத்துவம் என்பது எப்போதுமே வளர்ச்சி என்பதாகத்தான் இருந்திருக் கிறது வளர்ச்சியைத்தவிர வேறொன்றும் இல்லை. இது உலகறிந்த உண்மை. எழுத்தாளர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள் மற்றும் மோடிக்குவிசாதர மறுத்தஅமெரிக்கா ஆகிய எல்லாருமே மோடியின் வளர்ச்சி சார்ந்த தத்துவத்தை மறுத்தவர்கள் என்று அருண் ஜேட்லி கருதுகிறாரா? நல்லது. ஆம். இல்லை. ஒருவேளை இருக்கலாம்!

  இதுதான் அவர் 2002ஐக்குறிப்பிடுவதற்கான மிகப்பெரியவீச்சாக இருக்கிறதா? ஒருநிலையில் அது ஒருவெறும் எண். மோடி பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆண்டின் துவக்கம். ஆனால், அடுத்த நிலையில், 2002ல் அவர் என்ன செய்தார்? அல்லது என்ன செய்யவில்லை? எனபதைப்பற்றி மோடியின் புகழ்பாடுபவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் நாயின் குறைப்பு! இந்த தேசம் 2002ல் இருந்து – அது டீஸ்டா செதல்வாட்டோ அல்லது ரொமிலா தாபரோ – அதிலிருந்து மேலே செல்லவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், மோடியின் அமைச்சரவையில் உள்ள, தாராள சிந்தனை கொண்டவர் எனக் கருதப்படும் ஓர் அமைச்சர், 2015ல் நமக்கு 2002ஐ நினைவுபடுத்துகிறார்!

  சகிப்புத்தன்மை இன்மையால் பாதிக்கப்பட்டவர் மோடி என அப்பாவிபோல அருண் ஜேட்லி கூறுவது, எதிர்காலத்தில் இவ்வாறு நடக்கவேண்டும் என்ற சுயவிருப்பத்தை நிறைவேற்று வதில்தான் முடியும் –அந்தஅர்த்தத்தில் அவர்  சொல்லவில்லை என்றாலும்! இது மோடியின் த்த்துவத்துக்கு எதிராளிகளின் சகிப்புத்தனமை இன்மையால் அல்ல: அவரது சொந்தக்கட்சி உறுப்பினர்களும், சங்பரிவாரத்தில் இணைந்துள்ளவர்களும் அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற பலத்தஅடி இதற்கு ஒரு தவறில்லாத எச்சரிக்கை ஆகும். சங்பரிவாரங்களின் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்துத் தனித்தன்மை கொண்ட ஒவ்வொருவரும் பிரதமரின் அலுவலகத்தைக் குற்றம் சாட்டாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டு மறைந்துபோக வேண்டியவர்களே.

எதிர்ப்பாளர்களை எதிர்ப்பது  

 மோடிபாதிக்கப்பட்டவர்என்ற அடையாளத்துக்கும்அப்பால், எதிர்ப்பாளர்கள்மீது எதிர்த்தாக்குதல்  தொடுக்க இன்னொரு உத்தியாக, அவர்களை சமுதாயத்தின் மேல்தட்டினராக வகைப்படுத்தி, அவர்கள் டெல்லியில் உயர்பீடங்களிலிருந்தும், செல்வாக்குகளிலிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதால் ஊளையிடும் நரிகள் என வண்ணம் பூசுகிறார்கள். இது உண்மையல்ல: உண்மையாகவே ஏற்றுக்கொண்டாலும், தே.ஜ.கூ. ஆட்சியில் தைரியமும், பதவியும் பெற்றவர் களின் சுதந்திரச் சிந்தனைப்படை, மெய்யாகவும், மிகவிரைவாகவும் இதே கதிக்கு உள்ளாகப்படுவார்கள்.

  இவற்றினாலெல்லாம் உண்மையில் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பிரதமரின் ஊடக நிர்வாகிகளும், பத்திரிக்கைகளிலுள்ள அவர்களது ஒலிபெருக்கிகளும்தான். அவர்கள் நேரடியாகச் சிலகேள்விகளுக்குப் பதில்கூறச் சிரம்ப்படுகிறார்கள்.நமது பிரதமர் உறுதியான தலைவரா? அல்லது பலவீனமான தலைவரா? அவர் சுயகட்டுப்பாட்டில்தான் இருக்கிறாரா? அல்லது கட்டுப்பாட்டில் இல்லையா? அவர் வளர்ச்சிக்காக இருக்கிறாரா? அல்லது வளர்ச்சியில் நீடிக்கமாட்டாரா?

  அவர் உறுதியான தலைவராக, கட்டுப்பாடு மிக்கவராக, வளர்ச்சிக்காக இருப்பவர் என்றால் அவர் தனது வளர்ச்சித்திட்டங்களைத் தங்களது பிளவிவாதத் திட்டங்களால் சீர்குலைக்கும் சங் பரிவாரங்களுக்கு எதிராக ஒருவெளிப்படையான பொதுநிலையை எடுக்கமுடியும். ஆனால், இது நாள்வரைக்கும் இருந்ததுபோன்றவர் என்றால், அவர்களுக்கு எதிராக வாய்திறக்க மாட்டார். அப்படியானால் அவர் ஒருபலவீனமான தலைவர். அவர் தனது கட்டுப்பாட்டில் உள்ளவரோ அல்லது வளர்ச்சிக்கானவரோ அல்ல. அப்படியானால், அவர் எந்தவகையானவர்? அரிஸ்டாடில் நீண்டகாலத்துக்குமுன் சுட்டிக்காட்டியதுபோல ஒரேநேரத்தில் ஒருவர் “ஏஆகவும், அதே நேரத்தில் “ஏ அல்லாதவராகவும் இருக்கமுடியாது. பிரதமரின் சுழல்மருத்துவர்களுக்கு மிகக் கடுமையான காலம் முன்னே நிற்கிறது.

                                                                                                                                      நன்றி :The Hindu 19.11.2015
      





Thursday, 19 November 2015

இந்தியா சுத்தமாகட்டும்-திருப்பூர் கவியரங்கக் கவிதை

    உணவும் உரிமையும் -கவியரங்கம்
                 இந்தியா சுத்தமாகட்டும்!

அந்தத்
தொலைக்காட்சி விளம்பரத்தை நீங்களும்பார்த் திருப்பீர்கள்!
திடீரெனக் குதிக்கிறார் பல்விளக்கும் ஒருவர்முன்
,.கையில் மைக்கோடு  காஜல் அகர்வால்.
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?

அப்படி
வீட்டில், உணவகத்தில் சாப்பாட்டு மேஜைமுன்
காவியுடைக் கமண்டலங்கள் திடீரெனத் தோன்றி
“உங்க சாப்பாட்ல பீஃப் இருக்கா?
“உங்க சாப்பாட்ல மாட்டிறைச்சி இருக்கா? - கேட்டால்
எப்படி இருக்கும்? ஒருகணம் யோசியுங்கள்

மாட்டிறைச்சி சாப்பிட்டால் சித்த ராமையா
தலையை வெட்டுவேன்கர்நாடக பா.ஜ.க
தலைவர்சென்ன பசவப்பா மிரட்டியது நினைவுக்கு
வருகிறதா? வருவது கோபமா? அல்லது .........?

மாநிலத்தின் முதல்வருக்கே இந்தகதி என்றானால்
எங்கே சகிப்புணர்வு? எங்கே அஹிம்சைநெறி?
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலை எதற்கு?
காட்டு மிராண்டிகளின்  கொடுமைகளை எதிர்த்திங்கே
எழுத்தாளர், கலைஞர்கள் அறிவியல் விஞ்ஞானிகள்
எதிர்வினையாய் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள்!

என்ன நடக்கிறது இந்தத்திரு நாட்டில்?
எகத்தாளம், ஏகடியும், கொச்சைப்படுத்தல்கள்!
இத்தனையும் செய்கின்ற ஒருகும்பல் யாரிங்கே?

காவியுடை! கைகளிலோ கூரியசூ லாயுதங்கள்!
 கோமாதா  எங்களது முப்பத்து முக்கோடி
தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளுடன்
 கின்னரர்  கிம்புருடர்     குடியிருக்கும் குலமாதா!
நாவினிலே பசிக்காக மாட்டிறைச்சி உண்போரை
 நாடெங்கும் கொன்றிடுவேன்! நடுநடுங்கச் செய்திடுவேன்.
பாவி! இப்படியோர் முகவரியைக் கொண்டிருந்தான்!
 வெறுப்புணர்வை விதைப்பவனை  யாரய்யா நீ?  என்றேன்

நானுமோர் கவிஞன்தான்! எனதுபெயர் ‘இந்துத்வன்
 நாட்டிலுள்ள கவிஞர்போல் எனக்கும்புனை பெயருண்டு
நானெழுதும் கொலைக்கவியில் ராஷ்ட்ரிய சுயம்சேவக்
  நச்சென்று பிறவற்றில் விஹெச்பி, பஜ்ரங்தள்
இன்னும்பல முன்னணிகள்!, எத்தனையோ சேனாக்கள்!
  இந்துராஷ்ட் ரத்தை ஸ்தப்பிப்ப   தென்நோக்கம்!
என்பெயர் வரவுகேட்டே ஏகமாய் ஏகமாய் நடுங்குவோரே
 நானெங்கும் சம்பவிப்பேன்! ஞாலத்தின் தலைவன் நானே!


இப்படியோர் முன்னுரையில் என்னிடத்தில் அவன்வந்தான்.
 இதுவரைக்கும் நீபடைத்த காவியம்ஏ தேனுமுண்டா?
அப்படியோர் கேள்வியிலே அதிர்ச்சிகள் அவனிடத்தில்.
 அடடா! இதுவென்ன? புதுமையாய் இருக்கிறதே!
எப்போதும் கவிதைகளை காவியத்தைப் படைத்தால்தான்
 என்னைக் கவிஞனென ஏற்பீரோ? எனக்கேட்டான்.     ( எதையுமே படைக்காத சுதர்சன்ராவ்
இப்புவியில்அதுதானேஇலக்கணமாய்உள்ளதென்றேன்.(தேசியவரலாற்றாய்வுமையத்தலைவர்)
 இலக்கணத்தை, வரலாற்றை, அறிவியலை அழிப்பதுதான்

என்னுடைய வழிமுறைகள்! புராணங்களே வரலாறு (இராமாயண மகாபாரத)
  எங்களது விநாயகரில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை
என்கின்ற மருத்துவத்தை, புஷ்பகவிமானத்தில்    
 ஏவுகணை ஞானத்தை நீங்கள் அறியீரோ? (மோடி அறிந்துள்ளார்)
 ஒன்றே இந்துஸ்தான்! ஒரு நாடு! ஒருமொழி!
 அதுதான் சமஸ்கிருதம்! ஒரே மதம் இந்துமதம்!
நன்றாக இனியிங்கே  ஒற்றைக்கலாச் சாரம்தான்!
 நாட்டை இதைநோக்கிச்செலுத்துகிற கவிஞன்நான்!

ரிக்,யஜுர் சாம அதர்வண வேதங்கள்
இந்நாட்டில் இனிமேல் அரசியல் சாசனங்கள்!
கோமாதா  எங்களது  குலமாதா! ஆதலினால்
நாவினிலே பசிக்காக மாட்டிறைச்சி உண்போரை
நாடெங்கும் கொன்றிடுவேன்! நடுநடுங்கச் செய்திடுவேன்
போதுமா நானெழுதும் கவிதையும் காவியமும்?

அட்டா! என்ன கம்பீரம்? எத்தனை வாய்ஜாலம்?
ஆச்சரியம் இதிலென்ன? மோடியின் மறுபதிப்பில்?
அவனிடத்தில் முன்வைத்தேன் எனது சிலகேள்விகளை!

வித்தகம் மொத்தமும் சத்தியஞானமும்  நால்வகை வேதங்களே
இத்திரு நாட்டின் அரசியல்சாசனம் இனியெனச் சொன்னவனே,
புத்திளம் பசுவின் கன்றின்கறியே பிராமணன் நல்லுணவு
முத்தென நத்திய ரிக்கெனும் வேதம் சொல்லுவதறியாயோ?
‘தத்தாத்ரேய பிராமண நூலின் சுலோகம் சொல்வதென்ன?
‘அதே மன்னம் வியா கவ் ‘அதே மன்னம் வியா கவ்

பசுதான் உண்மையில் பிராமணனுக்கு மெய்யான உணவு’!
  வேதமும் சுலோகமும் சொல்வதைமறுத்து வெறியேன் உன்னிடத்தில்?


அவன் சொன்னான்:
-அதெல்லாம் தெரியாது, ஆரெஸ்ஸெஸ் வையும்! (திட்டும்)
 மாட்டிறைச்சி சாப்பிட்டா எல்லாரையும் கொல்லோனும்

சத்திய புத்திரன் தருமனும்கூடமாபா ரதத்திலே
பத்தினி திரௌபதி, தம்பியர் நால்வர், பார்ப்பனரோடுண்ண
வனபர்வத்தில் வேட்டைகளாடி இறைச்சிகள் குவித்தானே?
பிராமணன் உணவில் பசுவின் கறியும் இருந்ததை அறியாயோ?
தத்துவ வித்தகர் மெத்தவுரைத்திடும் தசரத புத்திரனும்
பத்தினி சீதை,இலக்குவனோடு கானகம் மீள்கையிலே,
யமுனைக்கரையில் ஆயிரம்பசுக்களின் விருந்தினை வைத்தானே!
வால்மீகமுனிவன் இராமாயணத்தில் எழுதிய பொருளென்ன?

இத்தரைமீதில் வரலாறென்றால் இனிஇவை என்றாயே
அவ்வரலாற்றை நீயேமறுத்தல் இங்கே முறைதானா?

                                         (அதெல்லம் தெரியாது.........)

அமெரிக்க நாட்டில் கலிஃபோர்னியாவில் ஷேக்ஸ்பியர் இல்லத்தில்
சுவாமிவிவே கானந்தர் (1)900 ஜனவரி ஒன்றில்  பேசியதறிவாயோ?

You will astonish if I tell you that according to Old Ceremonials,
He is not a good Hindu who does not eat Beef. On certain occasions.
He must sacrifice a Bull and eat it!
விவேகானந்தர் கூறுகிறார் -  
நான் சொன்னால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், பழைய சம்பிரதாயங்களின்படி
மாட்டிறைச்சியைச் சாப்பிடாதவன் ஒரு நல்ல இந்து அல்ல என்று.  
குறிப்பிட்ட நேரங்களில் அவன் ஒரு மாட்டைப்பலியிட்டுச் சாப்பிடவேண்டும்

வியப்பாக இருக்கிறதா? விரித்துப் பாருங்கள்.
விவேகானந்தர் நூல்தொகுதி 3-பக்கம் 596
நரேந்திரனாகப் பிறந்து சுவாமிவிவேகானந்தரானவர் கூறுகிறார்
(நரேந்திரதாஸ் தாமோதர்தாஸ் மோடி -பிரதமரானவர்? )
அவனிடத்தில் நான் கேட்டேன்: இப்போதுசொல் உனதுநிலை சரிதானா?

                                           (அதெல்லம் தெரியாது.........)

பாரதி ராஜாவின் பதினாறு வயதினிலே
படத்தைப்பார்த் திருப்பீர்கள் பரட்டை,சப்பாணி
நினைவில் நிற்பார்கள்: சப்பாணி கூறுகிறான்:
“ஆத்தா வையும்: காசைக் குடு. ஊட்டுக்குப் போவோணும்
 “ஆத்தா வையும்: காசைக் குடு. ஊட்டுக்குப் போவோணும்

கவிஞனா ‘இந்துத்வா? கதறுகிறான், கூறுகிறான்:
-அதெல்லாம் தெரியாது, ஆரெஸ்ஸெஸ் வையும்
 மாட்டிறைச்சி சாப்பிட்டா எல்லாரையும் கொல்லோனும்

சப்பாணி ஓர் அப்பாவி! இவனோ ஒருகொடும்பாவி!

இவனுக்கு சாகாவில் ஆரெஸ்ஸெஸ் சொன்னதெல்லாம்
இனிமேல் நீயென்றும் சிந்திக்கக் கூடாது
இங்கே சொல்வதைச் செய்வதுதான் உன்வேலை
இந்து ராஷ்ட்ரத்தை இங்கே அமைப்பதற்கு
எல்லார்க்குமாய்த் தலைமை சிந்திக்கும் வழிகாட்டும்!

அந்தவழி காட்டுதல்தான் இக்லக்கின் கூட்டுக்கொலை!
அங்குவந்த சங்கீத்சோம் (பி.ஜே.பி. எம்.எல்.ஏ.)யாரென்று தெரிகிறதா?
மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி!
அண்மையிலே சீனாவில் மோடி செய்த ஒப்பந்தம்
இரண்டு இலட்சம்டண் மாட்டிறைச்சி அனுப்புவதாய்!
இவரது ஆட்சியில்தான் இருநூற்று நாற்பது
இலட்சம்டண் மாட்டிறைச்சி இந்தியாவின் ஏற்றுமதி!
இங்கேயும் சாதனைதான் உலகத்து நாடுகளில்!

அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ், அராபியன் எக்ஸ்போர்ட்ஸ்,
ஃப்ரோஸர்ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ், பிஎம் இண்டஸ்ட்ரீஸ்
இவற்றில்   மாட்டிறைச்சி உயர்சாதி பிராமணரே
ஏற்றுமதி செய்கின்றார்! இந்தியா முதலிடத்தில்!!

உண்ணுவதும், உடுத்துவதும் ஒவ்வொருவர் தன்னுரிமை
இங்கே குறுக்கிட எவருக்கும் உரிமையில்லை!
உரத்துக்குரல் கொடுப்போம் உரிமைகளைக் காத்திடுவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகக் கலாச்சாரம்
மதசார்பற்ற இந்தியா! சமத்துவ இந்தியா!!

இதையெதிர்க்கும் சக்திகளை வேரறுக்க வழியமைப்போம்

எப்படி? எங்கிருந்து? இதோ
  “ ஆஹார் மே பீஃப் நஹீ?
 பீஹார் மே வோட் நஹீ!

புரிகிறதா?

அறுபத்தேழு துடைப்பங்கள் டெல்லியில் குப்பைகளாய்
அகற்றியதைப்போல காஷ்மீர்முதல் குமரிவரை
 சுவாச் பாரத் (மோடியின் விருப்பம்போல்)
 இந்தியா சுத்தமாகட்டும்