Friday, 9 July 2021

’பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள் பகுதி 3

 

  பரந்தமுன்னணியா? அல்லது இடதுமுன்னணியா?

 

 

வலேரியோஆர்கெரி, போல்ஸனோரோவைத் தூக்கி எறியும் நோக்கத்துக்கான சூழல்கள் சுகாதார அமைப்புமுறையில் வீழ்ச்சிக்கு நடுவே மிகவும் கனிந் திருந்தது எனவும், ஏற்கனவே அழுகத்தொடங்கியிருந்தன இந்த நிலைமைகள்   அகநிலை நிலைமைகளைவிட மிகவேகமாக  வளர்ச்சியடைகின்றன என்றும் விவாதிக்கிறார். இருந்தபோதிலும், தீவிர வலதுசாரி அரசை எதிர்க்கும் துறை களான இடது மற்றும் தாராளவலதுக்கும் இடையே கூட்டாட்சி அரசில் மேலாதிக்கம் யாருக்கு என்பதில் ஒரு சர்ச்சை இருக்கிறது.’தீவிர வலதுகளுக்கு எதிரான 100 ஆண்டுகால போராட்டங்களின் அனுபவங்கள், குறிப்பாக, எப்பொழுதெல்லாம் தீவிரவலது பாஸிச குணாம்சங்களோடு அரசியல் நீரோட்டத்தில் வழி நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் விரிவ டைந்த இடது முன்னணி தான் மிக்ச்சிறந்த தந்திரோபாயம் என்பதை நிரூபித் துள்ளது’ என்று ஆர்கெரி நம்புகிறார். இது, தீவிர வலதுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, தாராளவலதுகளுடன் தங்கள் படைகளை இணைக்க இடதுகள் விரும்பமாட்டார்கள் என்பதால் அல்ல: ஏனென்றால் சமூக நெருக்கடிகள் ஓர் இடதுசாரி அரசுக்கான துவக்கத்தை அளித்துவிடுமோ, என்று தாராள வலதுகள் மிகச்சரியாகவே அச்சம்கொள்வதால்’.

 

  ஜாண்ட்ரியா உயெஹரா(CUT)வைப் பொருத்தவரை ’போல்ஸனோரோவை வெளியேற்று’ என்ற முழக்கம், நெருக்கடி மிகவும் மோசமாகிக்கொண்டிருப் பதால், இடது மற்றும் மத்திய வலது(தாராளவலது)களில் உள்ள துறைகளை ஒன்று சேர்த்துவிடும். ஆனால் தற்போதைய பாஸிசத்தன்மைகொண்ட கொடும்தாக்குதலுக்கு எதிராக உள்ள எல்லாரையும் – இடது மற்றும் மத்திய இடதுகளின் சில துறைகள் முன்வைப்பதுபோல - ஒரு பரந்த கூட்டணியில் கொண்டுவருவது  ஜாண்ட்ரியாவின் கருத்துப்படி, இந்த சக்திகளை சமூக-வரலாற்று வழிமுறைகளில் இரண்டுகட்ட அணுகுமுறைகளை மேற்கொள்ள வழிவகுத்துவிடும். இந்த அணுகுமுறை, ஜனநாயக சுதந்திரங்களுக்கான போராட்டங்களை உரிமைகளுக்கான மற்றும் தேசிய இறையாண்மைக்கான போராட்டத்திலிருந்து பிரித்துவிடும் இந்த அணுகுமுறை மேலோங்குமானால், இடதுசாரிகள், தாராளவலதுகளின் பிணைக்கதிகளாக ஆகிவிடுவார்கள்:, அண்மைக்காலங்களில் நிறைவேற்றப்பட்ட புதியதாராளமய திட்டங்களை மாற்றியமைப்பது அவர்களுக்கு இன்னும் கடினமானதாகஆக்கிவிடும்’ என்று உயெஹராகணிக்கிறார்.‘எங்களதுபார்வையில் அவர்களிடமிருந்துமுழுமையாக முறித்துக்கொள்ளாமல் இந்தத்திட்டங்களுக்கு முடிவு கட்டுவதற்கு சாத்தியம் எதுவும்இல்லை: மேலும்,கொடுக்கவேண்டிய விலைகள் மக்களை இழப்புக்குள் ளாக்கியிருக்கும்நிலையில் கொடூரமானசுரண்டல்ஆட்சி மற்றும் முதலாளித்து வத்தின் புறஎல்லையின்கீழ் சமத்துவமின்மைகள் ஆழமாக நிறுவபடும்போது அங்கே தேசிய ஐக்கியமும் இருக்காது’

 

 இந்தப்பார்வை க்லெய்ஸி ஹோஃப்மன் கனவுகாணும் உத்தியோடு முரண்படுகிறது: அவர், பிரேஸிலில் அனுபவித்துவரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள.ஒரு பரந்த அரசியல் கூட்டணி தேவைப்படுகிறது – அது தேர்தலுக்கான கூட்டணியாக அவசியம் இருக்கவேண்டியதில்லை: ஆனால்,, தடுப்பு ஊசிகளு,க்காக, அவசரகால உதவிகளுக்காக,, வேலைகளுக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அந்த எல்லா அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத்துறைகளில் உள்ள அனைவரையும், அதேபோல, ‘போல்ஸனோரோ வைவெளியேற்று’ என்ற முழக்கத்தோடு, போல்ஸனோரோவைத் தோற்கடிக் கப்போராடுபவர்களையும் ஒன்றாக சேர்க்கவேண்டும்’’ என்கிறார்.

 

இந்த விளக்கம் எலிடா எலனா(UNE)வால் தரப்பட்ட பகுப்பாய்வுகளோடு ஒத்துப்போகிறது: அவர், இரண்டு முன்னணிகளின் இணைப்பை ஆதரிக்கிறார்: மக்களால் விரும்பப்படும் ஒரு இடதுமுன்னணி மற்றும் ஒரு ஜனநாயக முன்னணி. ‘அடிப்படையான பாடமாக இங்கே இருப்பது, ஜனநாயகப் பிரச்சனை சமூகப்பிரச்சனையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதுதான்: அது, முதலாளித்துவத்தின் கடுமையான நெருக்கடியின் விளைவாக இன்னும் மோசமாகியிருக்கிறது. அது ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றியது, அது சீர் கெட்ட ஜனநாயகமாக இருந்தாலும்கூட. ஏனென்றால், இதுதான் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கான மிகவும் பொருத்தமான தளம். எங்கே உழைக்கும் வர்க்கப்போராட்டங்களுக்கும், அமைப்புக்களுக்கும் நிலைமைகள் சாதகமாக இல்லையோ, அங்கே, போலீஸ் ராஜ்யமோ அல்லது பாஸிச அரசியல் ஆட்சியோகூட வரவிடாமல் தவிர்ப்பதற்கு இது அவசியமாகும்.’ இதன் பொருள், ஒரு ஜனநாயக முன்னணியைக் கட்டமைப்பது, மேலும், ஜனநாயகத்தைப் பாதுக்காப்பதற்கும், புதிய பாஸிசத்தை அரிப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் மற்றும் தோற்கடிப்பதற்கும் சமூகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றாகக்கொண்டு வருவது என்பதாகும்.

 

 ’பிரேஸிலை நெருக்கடியிலிருந்து வெளியேகொண்டுவர, ஜனநாயக மற்றும் மக்கள் சக்திகளையும் ஒன்றுதிரட்டும் போர்த்தந்திர குணாம்சங்களோடு உழைக்கும் வர்க்க இடது முன்னணியை கட்டுவதையும், வலுப்படுத்துவதை யும் தொடரவேண்டும்’ என்று எலெனா நம்புகிறார். இது, மக்களின் சமூக உரிமைகளை, நிறவெறிக்கு எதிரான கறுப்பின மக்களின் போஈராட்டங்களைப் பாதுகாப்பதையும், பிரேஸிலின் தொழிலாளர்களை கீழே இறக்கிவிட்ட வரலாற்றுபூர்வமான எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, பொருளாதார அமைச்சர் பாவ்லோக்யூடெஸ்-ன் புதிய தாராளமய கொள்கைகளுக்கு எதிரான தொய்வில்லாத போராட்டங்களை நடத்துவதையும் உள்ளடக்கியிருக்கிறது.’

 

  ‘பிரேஸில் மக்கள் முன்னணி (Frente Brasil Popular 9Popular Brazil Front)மற்றும் ‘அச்சமற்ற மக்கள் முன்னணி Frente Povo Sem Medo (People Without Fear) ஆகிய இரண்டு முன்னணிகளும் 2015ல் அமைக்கப்பட்டன: ஒவ்வொன்றும் பற்பல இடதுசாரி ப்ரிவு அரசியல் அமைப்புக்களை இணைத்துக்கொண்டிருந்தது.  ‘பிரேஸில் மக்கள் முன்னணி (Frente Brasil Popular 9Popular Brazil Front அதன் இயல்பில் பரவலானது: அரசியல் கட்சிகளை வளுப்படுத்துவதில் கவனம் செலுத்திவந்தது. அதேவேளையில் அச்சமற்ற மக்கள் முன்னணி Frente Povo Sem Medo (People Without Fear சமூக மற்றும் தொழிலாளர் இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு முன்னணிகளும் அரசியல் திட்டத்தை யும், தேசத்துக்கான திட்டத்தையும் கட்டமைப்பதற்கு அவசியமானவை இரண்டும் உழைக்கும்வர்க்கத்தில் புதியதாராளமயசீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய இடதுசாரிகளோடு ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும், கட்டமைப்பதிலும் முக்கியப் பாத்திரத்தை வகிக்கின்றன.

 

 கெல்லி மாஃபோர்ட் சுட்டிக்காட்டுவதுபோல, எந்த உத்தி பயன்படுத்தப்படு கிறது என்பதைக் கருதாமல், மேலும்மேலும் முன்னேறிச்செல்லவும், யதார்த்தத்தின் கைகளின் தாக்குதல்களை மென்மைப்படுத்தவும் பாதைகளை கட்டமைக்கவேண்டிய தேவைபற்றிய கருத்தொற்றுமை அங்கே இருந்தது. ’அவர்களுடைய அரசியல் திட்டம் மற்றும் கண்ணோட்டத்தைச் சூழ்ந்து ஒற்றுமையைக் கட்டும் முயற்சிகள்மீது இப்போதைக்கு கவனத்தைக் குவிப்ப தில்லை’என்பதை MST தேர்வு செய்தது என்று கெல்லி மாஃபோர்ட் கூறுகிறார். ’ஏனென்றால் மக்கள்திரள் போராட்டங்கள் குறைந்துவரும் நேரங்களில் அவ்வாறு செய்வது, மிகவும் படித்த அறிவாளிகளின் கண்ணோட்டத்தில் தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் அல்லது யார் மேலாதிக்கம் செலுத்துவது என்பதன்மீதான போராட்டங்கள் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல எந்தஒரு பங்களிப்பையும் அளிக்காது. ஆகையால்,எங்களது கணக்கீடுகளுக்கு எப்போதும் எதார்த்தத்தையே முதன்மைத்தளமாகக்கொண்டு, அரசியல் கோரிக்கைகளைச் சூழ்ந்தே ஒற்றுமையை கட்டமைப்பதில் ஈடுபட நாங்கள் விரும்பினோம்..

 

 மிகஅதிகமாக உடனடி அரசியல் கோரிக்கைகளைச்சுற்றி எழுந்த ஒற்றுமை, பிரேஸிலின்இடதுசாரிகளிடையே செயல்பாட்டில் ஒற்றுமையை உருவாக்கி யது. எடுத்துக்காட்டாக மூன்று முக்கியமான கோரிக்கைகளாக இருந்தவை: மக்களுக்குதடுப்புஊசிகள் கிடைப்பது: அவரசகால உதவியாக மாதம்ஒன்றுக்கு 600R$, மற்றும் போல்ஸனோரோவை பதவி நீக்கம் செய்வது.

 

‘கெல்லி மாஃபோர்ட் கூறினார்:’ நாங்கள் அரசியல் பிரதிபலிப்புக்களின் தருணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்: அதனால், எங்களால் போர்த் தந்திர ஏற்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும், மேலும் இது, சமூக இயக்கங்கள், அமைப்புக்கள்(campopopular) மற்றும் இடதுசாரிகள் சிதறுண்டு போவதை எதிர்கொள்வதையும்,அதேபோல, மேலாதிக்கத்துக்கான போராட்டம் மற்றும் நீண்டகால போர்த்தந்திரம் பற்றிய உத்திகள் மீது அதிகப்படியான கவனத்தைக் குவித்தலை எதிர்கொள்வதையும் உள்ளடக்கியுள்ளது.

 

சந்தேகமில்லாமல், ஒற்றுமையைஅடைவது நீண்டகாலமாகவே ஒட்டுமொத்த இடதுசாரிகளுக்கும் ஒரு சவாலாகவும், வரலாற்றுத்தேவையாகவும் இருந்து வருகிறது. இந்த உணர்வில் எலிடா எலனா(UNE) இடதுசாரிகளின் சிதறல் அதற்கு தீங்கு விளைவிப்பதாகும் என நம்புகிறார். இது இரண்டு காட்சிகளுக்கு வழிவகுக்கும்: ஒருபுறத்தில் போல்ஸனோரோவிசத்துக்கு ஒரு தேர்தல் வெற்றியையும், சமுதாயத்தில் விரைவான பாஸிசத்தின் எழுச்சியையும் அல்லது மறுபுறத்தில் அதற்கு மாற்றாக தாராள வலதுகளின் உருவாக்கமும் – இந்த உருவாக்கம் புதிய தாராளமய பொருளாதாரத் திட்டங்களை தொடரும்.

 

 நமக்குள்ளேயே நாம் சிதறிப்போவோமானால், எந்தவொரு இடதுசாரி சக்தியும் வெற்றிபெறாது. மேலாதிக்கத்துக்காக போராடிக்கொண்டிருக்காமல், கருத்து வேறுபாடுகளுக்கு மரியாதை அளித்து, திட்டவட்டமான அமைப்பு ரீதியிலான கோரிக்கைகளைவிட, எது மிக அதிகமாக பொருத்தமானதோ அதைச்சூழ்ந்து  நம்மை ஒற்றுமைப்படுத்தும் ஒரு உத்தியின்மூலம் நாம் ஒரு சாதகமான சுற்றுச்சூழலை பெற்றாகவேண்டும்:-மேலும் அது பிரேஸிலில் புதிய பாஸிசத்தின் எழுச்சியைத் தோற்கடிக்கும் என்கிறார் எலிடா எலனா.

R$600  

 

2020ல் 6கோடியே 80 இலட்சம் மக்கள் அவசரகால உதவியாக மாதம் ஒன்றுக்கு R$600 பெற்றார்கள்.2021ல் இந்த உதவி மேலும் கட்டுப்படுத்தப்பட்டது, மேலும், R$150 முதல்

R$375 வரை என குடும்பத்தைச் சார்ந்திருப்பவர்களுக்கு நான்குமுறை வழங்கப்படும்.

 

 

Adriana Vespa(#adriana.vespa) / Design Ativista / 2021

 

 

 

அடித்தளத்தை கட்டுதல்

 

 

பிரேஸிலில் – 2021ல் 100 வயதை அடையும் பாவ்லோ ஃப்ரெய்ரின் நாட்டில் – நீண்ட பல ஆண்டுகளாக பெரும்பாலான இடதுசாரி அமைப்புக்கள், வார்த்தை களில் மட்டும் முற்போக்கு துறைகள் என்று இருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையை மீண்டும் திரும்ப நிலைநாட்டுவதிலும், சமூகத்திலுள்ள சக்திகளின் தொடர்புகளை மாற்றியமைக்கும் ஆற்றலுடைய அடித்தளத்தை ஒன்றுதிரட்டுவதற்கும், வலுப்படுத்துவதற்கும், கட்டமைப்பதற்கும் போராடி வந்தன. இருந்தபோதும் கிட்டத்தட்ட இடதுசாரிகளின் எல்லாக்கூறுகளும் ஒரு அடித்தளத்தைக் கட்டுவதற்கான புரிதலை மீண்டும் பெறுவது அவசியமான ஒரு தந்திரோபாயம் என்பதையும், அத்துடன்கூடவே ஒரு தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்துவதும்,ஒரு நிரந்தரமான வழியில் சமுதாயச் செயல் பாடுகளில் தொடர்புகொண்டிருப்பதும் தேவை என்பதையும் ஒப்புக்கொண் டுள்ளன. மக்களிடையே வலிமையை மீண்டும் கட்டமைப்பதற்கும், போல்ஸனோரோவிஸத்தைத் தோற்கடிப்பதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையில் கட்டமைப்பு  சீர்திருத்தங்க:ளைச் செய்வதற்கும். இதுதான் மையக்கூறாகப் பார்க்கப்பட்டது.

 

 வெலேரியோஆர்கெரியின் கூற்றுப்படி, இடதுசாரிகளின் சமூக அடித்தளமான பெரும்பாலான செயல்படும் துறைகள் வலுவடைந்துகொண்டிருக்கின்றன. மக்களின் போராடும் விருப்பங்களுக்கு, அவர்களது மனநிலைகளுக்கு, நன்னடத்தையின் வலிமைக்கு மேலும் தன்னம்பிக்கைக்கு மக்களின் உணர்வு நிலையில் மாற்றம்தான் மையமானது. வர்க்க நிலைபாடுகள் மாறுவதற்கு முன் மக்களின் உணர்வுநிலைகள் மாற்றப்படுவது தேவைப்படுகிறது. சாத்தியமற்றவை என்று தோன்றும் சில விஷயங்கள் சாத்தியமாகும்போதும், அவை ஆச்சரியமாக வரும்போதும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகின்றன.’

 

  எலிடா எலெனா(UNE) ’இந்தத் தருணத்துக்கு தயாராவதற்காக, நாங்கள் செயல்படும் தற்காப்பு உத்திகளைக் கட்டுவதை எண்ணிக்கொண்டிருக்கிறோம்: அது, தாக்குதல் நிலைக்கு முன்னேறிச்செல்லும் சூழல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, ஏற்படும் பின்னடைவுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இன்று எங்களது வேலை போல்ஸனோரோவிஸத்தை தனிமைப்படுத்துவது, அரிப்பது மற்றும் தோற்கடிப்பதாகும். உழைக்கும் வர்க்கத்துடன் எங்களதுபந்தங்களை விரிவுபடுத்துவது அவசியமானது. இதைச் செய்வதற்கு எங்களது எதிர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக நாங்கள் அரசியல் ஒருமைப்பாட்டைச் சார்ந்திருக்கிறோம்.’ என்று குறிப்பிடுகிறார்.

 

 “ஏனென்றால் வாழ்க்கை எப்பொதும் ரோஜாக்களின் படுக்கையாக இருப்பதில்லை’, எலிடாஎலெனா(UNE)  சமுதாயஎல்லைகளில் ஒர் அடித்தளம் நிறுவவதை மிகவும்கடினமாக ஆக்கும் எண்ணற்ற எதார்த்தங்களை சுட்டிக் காட்டுகிறார் .உழைக்கும்வர்க்கப்பகுதிகளில் வலிமையைக் கட்டமைப்பதை சாத்தியமாக்கும் ஓர்அடித்தளத்தைக்கட்டுவதில்முன்னேறிச்செல்ல அவர்களை ஏற்றுக்கொள்வது அடிப்படையாகும். இந்த எதார்த்தங்களில், திட்டமிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் அடித்தளத்தைக் கட்டமைக்கும் வேலைகளை எடுத்துச்செல்வதில் ஆய்வுமுறைகளை கட்டமைப்பதை சிரமத்துக்குள்ளாக்கு கின்றன : மிகவும் பழமைவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு.   

செயல்படும் எவாஞ்சலிக்கல் தேவாலயங்கள் மக்களின் பொருளியல் வாழ் நிலைகளுக்கு உதவிகளை அளிக்கின்றன: மேலும் இந்தப் புறஎல்லைகளில் மிகவும் பாதிக்கப்பட்ட வாழ்நிலைகள் உழைக்கும்வர்க்கத்தை ஒருங்கிணைப் பதற்கு முன்னால் அன்றாட உயிர்வாழ்தலுக்கான போராட்டங்களை முன் வைக்கின்றன. இந்த சவால்களோடு தொழிலாளர்களின் வேலைசெய்யும் உரிமை இழப்பு, ஒருங்கிணைப்பதற்கான உழைக்கும்வர்க்கத்தின் கருவிகள் அகற்றப்படுவது, உரிமைகள் நீக்கப்படுவது, சமூகம், இனம்.மற்றும் பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட பிரித்துவைத்தல்களும் சேர்கின்றன.

 

’ வாழ்நிலைகள் மோசமடைவதால், இடதுசாரிகளின் ஒரு துறை, கொரோனா நோய்த்தொற்று பரவலையும், அதேபோல பசி பரவுவதையும் எதிர்த்துப் போராட ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவுசெய்தது, மேலும், மீண்டும் ஒருமுறை அடித்தளத்தைக் கட்டுவது எடுத்துக் கொள்ளப்பட்டது. செயல்பாட்டாளர்கள் எண்ணற்ற ஆதரவு முன்னெடுப்புக் களாக சமுதாய உணவுக்கூடங்களை அமைத்தல், உணவை நன்கொடையாக வழங்குதல், தனிநபர்உடல்நலப்பெட்டி, முகக்கவசங்கள் மற்றும் இரத்தம் தருவது போன்றவற்றில் ஈடுபட்டார்கள்: இந்த நடவடிக்கைகளில் ஒன்று ‘புற எல்லை உயிர்கள்’ Periferia Viva (The Periphrry Lives) ’வர்க்க ஆதரவை கட்டமைக்கும் பல்வேறு உழைக்கும்வர்க்க இயக்கங்கள் ஒன்றுசேர்க்கும் மேடை’ என அறியப்பட்டது. ‘புற எல்லை உயிர்கள்’ Periferia Viva (The Periphrry Lives) –ன் வேலைஒருமைப்பாட்டு எண்ணத்தின் அசைவுகளை அடித்தளத்தைக் கட்டமைக்கும் வேலையுடன் இணைக்கிறது.: அது, சமுதாய முகவர்கள் Agentes Populares –(Community Agents) மூலம் குடியிருப்புகளுக்கு இடையே உயிரோட்டமான உறவுகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியது.. சமுதாய முகவர்கள் திட்டத்தின் வழிமுறை அந்த சமுதாயத்திலுள்ள மக்களை ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட பயிற்சி அளிப்பது: அந்த முகவர் குடியிருப்புகளின் ஒரு தொகுப்புடன், அவர்கள் குடியிருக்கும் இடங்களில் அவர்களை செயலில் ஈடுபடுபவர்களாக உருவாகவேண்டும், ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு பொறுப்பானவர்களாக ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலை செய்கிறார். இந்த ‘முகவர்கள்’ உடல்நலம்பேணுதல், மற்றும் உணவு அளிக்கவும்,அதேபோல, சமுதாயத்தின் உரிமைகள் மதிக்கப்படவும் வேலை செய்கிறார்கள். அது,கூட்டுறவையும், பரஸ்பர உதவியையும் வளர்க்கிறது. “நாங்கள் ஆதரவு நடவடிக்கை அரசியலை ஒவ்வொருநாளும் புற எல்லைகளில் அடித்தளத்தைக் கட்டமைக்கும்  முதன்மையான போர்த் தந்திரங்களில் ஒன்றாக புரிந்துகொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த சரியான சந்தர்ப்பத்தில் இது ஒரு முக்கியமான அரசியல் எதிர்வினை மற்றும் பாதுகாப்பு செயல்பாட்டு அணுகுமுறையின் ஒருபகுதி: இது, புதிய தாராள வாதத்தின் முன்னேற்றத்துக்கு உறுதியான பதிலடியை முன்வைக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment