Friday, 15 May 2020

காலம்தோறும் கம்யூனிச பூதம்’ -பகுதி 2


கொரோனாவும் இன்றைய கம்யூனிச எதிர்ப்பும் 
    
சீனாவிலுள்ள வூஹான் நகரில் உருவாகி உலகெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தக்கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா? அல்லது வூஹான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா?

 ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது: அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கு பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும், அவரது வெளியுறவுத்துறை அமைச்சரும் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சீனாவுக்கு எதிரான அவதூறுகளை செய்தியாளர் கூட்டங்களில் அள்ளிவீசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? சீனாவின் வூஹான் ஆய்வுக்கூடம் சீனாவும், ஃப்ரான்ஸும் அமைத்துள்ள ஒரு கூட்டுநிறுவனம் சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சீனா இங்கே தன்னிச்சையாக எதுவும் செய்துவிட முடியாது.

 . கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வுக்கூடத்தில் உருவானதல்ல: இயற்கையாக உருவானதுதான்  என்று புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் காட்டுகிறார்கள். வவ்வால்களில் சார்ஸ்கோவ் -2ன் நெருங்கிய உறவுவைரஸை (ஆர் எம் ஒய் என் 02) அடையாளம் கண்டிபிடித்துள்ளனர்.  கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ். ஆய்வுக்கூடத்தில் உருவாகாமல் இயற்கையாக உருவானதற்கு இதுதான் ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷாண்டாங் முதல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை, கரண்ட் பயாலஜி’    இதழில் வெளியாகியுள்ளது. அதில் ’சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02) சார்ஸ்கோவ்-2 வைரஸின் நெருங்கிய உறவு வைரஸ். அதில் இதற்கான மரபணு வரிசைகாணப்படுகிறது’ எனக்கூறப்பட்டுள்ளது.
 இந்த வைரஸின் ஸ்பைக் புரதத்தின்  எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில் சார்ஸ்கோவ்-2 ஐப்போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன .கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுபற்றி ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி .”எஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகல் மிகவும் அசாதாரனமானது. இது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஆராய்ச்சியில் இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில் இயற்கையாகவே நடக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது, இது சார்ஸ்கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து தப்பியது என்பதற்கு எதிரானது” என்று ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்.

  ’வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரஸில் இதுபோன்ற செருகும் நிகழ்வு இயற்கையான தோற்றம் கொண்டவை என்று உறுதியாகக்கூறுகின்றன.  உண்மையில் விலங்குபீட்டா  கொரோனா வைரஸ் இயற்கையாகவே ஏற்படலாம். எங்கள் ஆய்வு சார்ஸ்கோவ்-2ன் பரிமாணமான வம்சாவளியைப்பற்றி மேலும் வெளிச்சம் தந்துள்ளது’ என்றும் கூறியுள்ளார். ஆர்எம்ஒய்என்-2  வைரஸ் வவ்வால்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உலகை இப்போது படாதபாடு படுத்தும் நாவல்கொரோனா என்னும் கோவிட்-19 வைரஸும் இயற்கை யாகவேதான் தோன்றியிருக்கிறது.: பரிசோதனைக்கூடத்தில் இருந்து அல்ல’ என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்து.
  இதுபற்றி உலகசுகாதார அமைப்பின் தலைவர் சௌம்யா சாமிநாதன் அளித்துள்ள ’டிரம்ப் குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ என்றபேட்டி மிகவும் முக்கியமானது.

கே: இந்தத்தொற்று சீனாவால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மையா?
ப: அப்படிச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அது அத்தனையும் கட்டுக்கதை, பொய். இதுவரை ஏற்பட்ட இந்த நோய்ப்பரவல், இறப்புக்கள் எல்லாவற்றையுமே சரியானமுறையில் சீனாவில் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்தநோய் உருவானது குறித்து ஆய்வுகளை தீவிரமாக நடத்திவருகிறார்கள்.

கே: அமெரிக்க அதிபர் தினம் தினம் ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டுவருகிறாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அவரைப்பற்றி நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. உலகசுகாதார அமைப்பு மெத்தனமாக இருந்துவிட்டது: சீனாவுக்கு சப்போர்ட் செய்தது என்று சொல்லியிருக்கிறார். பொதுவாக எந்த ஒரு பேரிடர் வந்தாலும் எங்கள் அமைப்பில் உடனே  ஒரு டீம் உருவாகிவிடும். அந்தவகையில் டிசம்பர்31 ஆம் தேதி சீனா சொன்னதுமே உடனே ஒரு குழுவை அமைத்தோம். அதன்மூலம் எங்கள் தலைமை யகமான ஜெனீவா மற்றும் 6 பிராந்திய அலுவலகங்கள், , தில்லியில் உள்ள தென்கிழக்கு அலுவலகம் என எல்லாருக்குமே உடனடியாக எச்சரிக்கை அனுப்பி யுள்ளோம். சீனாவில் ஏதோ ஆபத்தான வைரஸ் கிருமி உருவாகியிருக்கிறது. அதனால், எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று தெரிவித்திருந்தோம்.

  ஜனவரி 7-ஆம் தேதி இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது என்று எங்களுக்கு ரிப்போர்ட் வந்ததும் எங்கள் இணையதளம் மூலம்  எல்லா உறுப்பு நாடுகளுக்கும் மீண்டும் தெரிவித்தோம். ஜனவரி 11 ஆம் தேதி அது கொரோனா வைரஸ் என்று தெரிந்தவிட்டது. அது தெரிந்ததுமே இதற்குமுன்னால் இருந்த கொரோனா வைரஸை வைத்து , இது இருமல்,தும்மல் மூலம் பரவும்தன்மை உடையது.மூச்சுத்திணறல், நிமோனியா வரும் என ஒவ்வொரு தகவலாக வரவர நாங்களும் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்துக்கொண்டே இருந்தோம்.

கே: நீங்கள் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யா?

ப: நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்காததால்தான் இது மாதிரி ஆயிற்று என்கிறார் அதிபர் டிரம்ப். அடுத்து எங்கள்அமைப்பு சீனாவுக்கு அதரவாக இருப்பதாக சொல்கிறார்.ஆனால் சீனா இதுபோன்று நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடனேயே உடனடியாக ஊரடங்கை அறிவித்து என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். அதனால்தான் அங்கு விரைவில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. அதுபோன்று தகவல்களையும் அவ்வப்போது பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மற்றநாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்புவது, உபகரணங்கள், சோதனைக்கருவிகள் கொடுப்பது என உதவினார்கள் .எங்களைப் பொருத்தவரை 194 நாடுகளுமே ஒன்றுதான்.தனியாக யாருக்கும் எந்த சலுகையும் தருவதில்லை.

கே: உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை ,அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?

ப: தற்போது 20 சதவீதம் நிதியை நிறுத்திவிட்டார். இதனால், உலகத்துக்கே பாதிப்பு இருக்கும். ஏனென்றால், போலியோ சிகிச்சைநோய் எதிர்ப்புத்திறன் வளர்த்தல், எமர்ஜென்ஸி போன்றவற்றுக்குத்தான் அவர் அளித்துவரும்நிதி உதவுகிறது. இதனால் எல்லாமேபாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் இப்படி பேசியதற்கு பிறகு  மற்றநாடுகள் எல்லாமே எங்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார் கள். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு அமெரிக்காவுடன் ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது உலகசுகாதார அமைப்பு மிகமிக தேவையான ஒன்று. அதுவும் இப்போதைய சூழலில் இப்படி குற்றம் சாட்டுவதும், நிதியை குறைப்பதும் செய்யாமல் இருந்தால் நல்லது. எங்களுடைய கடமையை நாங்கள் செய்துகொண்டுதான் இருப்போம்
.
இந்தப்பேட்டி  அமெரிக்கஅதிபர் டொனால்ட் .ஜெ.டிரப்பின் பொய்களை மிகவிரிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது டிரம்ப்பின்கோமாளித்தனங்கள் இவைமட்டுமா? இன்னும் தொடர்கின்றன..

மே14வரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 14,32,08 பேருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக ,அமெரிக்காவில் இறந்துபோனவர்கள் எண்ணிக்கை 85,2680ஐ தண்டியள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மக்களில் பலரது மின்னஞ்சலில் ,அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து’ உங்களால் ஒரு இரகசியத்தைப் பாதுகாக்க முடியுமா?’ என்ற ஒருசெய்தி அனுப்பப்பட்டது.. ”அமெரிக்.காவின் முதல்பெண்மணி யான மெலினா டிரம்ப்புக்கு “ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனுப்பப்படவேண்டும்” இதுதான் அந்தச்செய்தி. இது டிரம்பின் வியாபாரத்தந்திரங்களில் ஒன்று. இதைக்கண்ட பெரும்பாலான அமெரிக்கர்கள் கோபம்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

  டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, பதவிவிலகிய முன்னாள் அதிபர் ஒபாமாவின்  நிர்வாகம் ‘வரப்போகும் உலகளாவிய நோய்த்தொற்றுபற்றி எச்சரித்ததையும், அதைக்கட்டுப்படுத்த படிப்படியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய வழிகாட்டலையும் புறக்கணித்தார். 2017ல் அமெரிக்காவின் உள்நாட்டுப்பாதுகாப்புத்துறை அமெரிக்காவின் மிகமுக்கியமான உள்கட்டமைப்பிலிருந்து உலகளாவிய நோய்த்தொற்று ஏற்படுவது பற்றிய தகவல்களைப் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டது. 2018 மே மாதத்தில் அமெரிக்காவின்  உலகளாவிய நோய்த்தொற்றுத் தகவலை அளிக்கும் குழு கலைக்கப்பட்டது: ஏனென்றால் அது ஒபாமாவால் உருவாக்கப்பட்டதாம்.

 2019 நவம்பரில் அமெரிக்க இராணுவம் சீனாவிலிருந்து உலகளாவிய நோய்த்தொற்று பரவுவதாக அளித்த தகவலை டிரம்ப் நிராகரித்தார். கடந்தஆண்டு உலகசுகாதார நிறுவனத்திலுள்ள அமெரிக்க மருத்துவநிபுணர்கள் உடனடியாக நிகழப்போகும் கொரோனா   நோய்த்தொற்று பெருமளவில் பரவும் என வழங்கிய ஆலோசனையை  எற்கமறுத்தார். டிரம்ப்பின் நிர்வாகம் தேசியப்பாதுகாப்பு அமைப்பை மூடி, பல்வகை நெருக்கடி நிதியை 300 மில்லியன் டாலரிலிருந்து 150 மில்லையன் டாலராக குறைத்தது.

 அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை நோய்க்கட்டுப் பாட்டுமையம் ஜனவரி 20ல்  உறுதிப்படுத்திய இரண்டு நாட்களுக்குப்பிறகு, கவனிக்க ஆரம்பித்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்று நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றும் வெள்ளைமாளிகை அலுவலரின் பெயரை அவர் தெரிவிக்கவே இல்லை. ஜனவரி 29 அன்று பொருளாதார ஆலோசகர் பீட்டர்  நவர்ரொ 5,43, 000 அமெரிக்கர்கள் இறந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கை குறிப்பை தந்தபோதும் டிரம்ப் ‘இது எனக்கு சீனாவால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என  முழுப்பொய்யைக்கூறி எந்த நடவடிக்கையையும் எடுத்தவில்லை.  பிப்ரவரி 14 அன்று   கொரோனாமரணங்கள் ஆயிரத்துக்கும் மேல் என்ற எண்ணிக்கையைத் தொட்டபோது, அதிபர் டிரம்ப் தேசிய எல்லைக்கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கு 12 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும், அவர்களில் பலர் குணமடைந்துவருகிறார்கள். எனவே நாம் மிக நல்ல நிலையில் உள்ளோம்’ என்று பொய்கூறினார்.

  மார்ச் 4 அன்று கூன்விழுந்த ஒரு நிபுணரின் மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு கோவிட் 19ன் இறப்புவீதங்கள் தவறானவை என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்து நாட்டை திக்குமுக்காட வைத்தார். சுகாதாரம் மற்றும் மனிதசேவைகளின் செயலாளர் அலெக்ஸ் அஸார் நோய்த்தொற்றின் வீச்சைப்பற்றி எச்சரித்தபோது அவரை,’’பீதியை ஏற்படுத்துபவர்” என்று அழைத்தார். நோய்த்தொற்றுப்பரவல் வேகம் எடுத்தபோது, ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்ட ஐரோப்பா விலிருந்து விமானங்கள் வருவதைத்தடுக்க விமான நிலையங்களை மூட மறுத்தார். அதன்பிறகு நோயைக் கண்டறியும் தவறான சோதனைக்கருவிகளை சிடிசி யிலிருந்து திருப்பியனுப்பி, சோதனைக்கருவிகள் பற்றாக்குறையை ஏற்படுத்தினார். அந்த குறைபாடு இன்னும் நீடிக்கிறது. ஒருங்கிணைந்த கொரோனா வைரஸ் நிலைமை பற்றிய அறிக்கையை வெளியிட்டதற்காக சுகாதாரம் மற்றும் மானுடசேவைகளின் ஆய்வாளர் ஜெனரல் கிறிஸ்டி கிரிம்மை ‘அது ஒரு போலியான ஆவணம்’ என்று டிரம்ப் திட்டித்தீர்த்தார். கொரோனா நோய் நிவாரணப்பணிகளைச் செய்துவந்த தலைமை ஆய்வாளர் கிளென் ஃபைன் –ஐ பணியிலிருந்து நீக்கினார்.

 அதிபர் டிரம்ப்பின் இந்தப்பைத்தியக்காரத்தனங்களால் கொரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களும் அமெரிக்கர்களே என்ற அவல நிலையை அந்த நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. இவற்றை மறைப்பதற்காகவும், அமெரிக்க மக்களின் இழப்புக்களுக்கு சீனாவே காரணம்என்று நம்பவைக்கவும் சீனமற்றும் கம்யூனிச எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிரம்ப்! கொரோனா வைரஸை சீன கம்யூனிச வைரஸ் என்று பெயரிட்டுள்ள அதிபர் டிரம்ப் இந்த வைரஸை சீனாதான் பரப்பியது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக பலமுறை கூறிவிட்டார், அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் மிக்கேல் பாம்பினோவும் இதையே கூறுகிறார் அந்த ஆதாரங்களை வெளியிடுமாறு அமெரிக்க அதிகாரிகளும், சீனாவும் வலியுறுத்திய போதும் அவர்கள் வெளியிடவே இல்லை..இருந்தால்தானே வெளியிட? இதனால் அமெரிக்க மருத்துவத்துறை ஆய்வாளர் மட்டுமல்ல, உலக நாடுகளின் விஞ்ஞானி களும் இவர்கள் பொய்யை நம்ப மறுக்கிறார்கள்!

    சீனா, கியூபா, வியட்நாம் முதலான சோசலி,ச நாடுகள் கொரோனாவுக்கு எதிராக அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தங்கள் நாட்டுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உலகிலுள்ள பல நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நூற்றுக்கணக்கான மருத்துவர்களையும், ஆயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்களையும், மருந்துகளையும் கப்பல்களில் அனுப்பி மனிதநேயத்தோடு பாதுகாத்துவருகிறார்கள்.
  சீனாவில் கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பட்டதற்கு சோசலிச அரசியல் கட்டமைப்பே காரணம். நாடு எதிர்கொள்ளும் எத்தகைய சவாலையும் ஆளும்கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமை திறம்பட எதிர் கொள்ளும் என்பதை கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி நிரூபித்துள்ளது என்கிறார் சீன அதிபர்பிங் ஷி ஜின் பிங்.! சோசலிச நாடுகள் தங்கள் நாட்டுமக்களின் நல்வாழ்வை, சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதோடு, நெருக்கடிநேரங்களில், உலகிலுள்ள மற்றமுதலாளித்துவ நாடுகளிலுள்ள மக்களையும்  பாதுகாக்கிறார்கள் இன்று இவற்றையெல்லாம் அனுபவபூர்வமாக காணும் மக்கள் உலகம் முழுவதும் சோசலிச அரசியல் கட்டமைப்பு  ஏற்படுமானால் இந்தப்பூவுலகம் சொர்க்கமாகிவிடும் என்று விரும்புவார்கள் .இதுதான் முதலாளித்துவ ஆளும்வர்க்கங்களை ‘கம்யூனிச பூதம்’ கதைகளைப் பிடித்துத்தொங்க வைக்கின்றன.   .

No comments:

Post a Comment